தேர்தல் முடிவுகளின் எதிரொலி : சு.க அமைச்சர்கள் பதவிவிலக தீர்மானம் ?

நடைபெற்று முடிந்த உள்ளூராட்சிமன்ற தேர்தலை தொடர்ந்து, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி அரசியல் நெருக்கடிக்கு முகம்கொடுத்துள்ளது. தேசிய அரசாங்கத்தில் உள்ள ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி சிரேஷ்ட அமைச்சர்கள் பலர் தமது அமைச்சுப் பதவிகளிலிருந்து இராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவர்கள் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான கூட்டு எதிர்கட்சியுடன் இணைய வாய்ப்புக்கள் காணப்படுவதாகவும் அரசியல் வட்டாரங்களிலிருந்து தெரியவருகிறது.

அதேவேளை, எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் விரைவில் கலந்துரையாட ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply