விமான நிலை­யத்தில் சிக்கிய இந்திய பிரஜைகள் கைது.!

சட்­ட­வி­ரோ­த­மான முறையில் ‘ஐஸ்” என அழைக்கப்படும் போதைப்பொருள் வகையொன்றை உள்நாட்டிற்கு கொண்டு வந்த இந்திய பிரஜைகள் இருவரை விமான நிலைய சுங்­கத்­தினர் கைது செய்­துள்­ளனர்.இந்­நபர் நேற்று அதிகாலை தனது பய­ணப்­பையில் சுமார் 514 கிராம் போதைப்பொருளை சூட்­சு­ம­மாக மறைத்து வைத்து கொண்டு வந்த வேளையில் கட்­டு­நா­யக்க விமான நிலை­யத்தில் வைத்து, விமான நிலைய சுங்­கத்­தினர் மேற்­கொண்ட சோத­னையில் சிக்­கி­யுள்ளார்.

இதன் பெறுமதி சுமார் இரண்டு இலட்சத்துக்கும் அதிகம் என தெரியவந்துள்ளது.

மலேசியாவில் இருந்து நேற்று அதிகாலை காலை 4.55 மணியளவில் கட்டுநாயக்க வந்த விமானத்தில் குறித்த சந்தேகநபர்கள் வருகை தந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இச்­சம்­ப­வங்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை சுங்கத்தினர் ஆரம்பித்துள்ளதாக சுங்க ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply