வடக்கு,கிழக்கில் பெரும்பான்மை சபைகள் தமிழ் கூட்டமைப்பு வசம்

வடக்கு, கிழக்கில் தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பு பெரும்­பான்­மை­யான சபை­களை வெற்­றி­கொண்­டுள்ள போதிலும் யாழ்.மாவட்­டத்தில் அகில இலங்கை தமிழ் காங்­கிரஸ் தலை­மை­யி­லான தமிழ் தேசிய மக்கள் முன்­னணி இரு சபை­களை கைப்­பற்­றி­யுள்­ள­துடன் பெரு­ம­ள­வான சபை­களில் கணி­ச­மான உறுப்­பி­னர்­களை தன்­வ­சப்­ப­டுத்­தி­யுள்­ளது.

வடக்கில் யாழ்ப்­பாணம், கிளி­நொச்சி, வவு­னியா, மன்னார், முல்­லைத்­தீவு ஆகிய மாவட்­டங்­களில் பெரும்­பான்­மை­யான சபை­களை தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பு கைப்­பற்­றி­யுள்­ளது. யாழ். மாந­கர சபையில் 16 உறுப்­பி­னர்­களை பெற்று அதி­கூ­டிய ஆச­னங்­களை கைப்­பற்­றிய கட்­சி­யாக கூட்­ட­மைப்பு உள்­ளது. இங்கு அகில இலங்கை தமிழ் காங்­கிரஸ் 13உறுப்­பி­னர்­க­ளையும் ஈ.பி.டி.பி. 10 உறுப்­பி­னர்­க­ளையும் தம்­வ­சப்­ப­டுத்­தி­யுள்­ளன. ஐக்­கிய தேசி­யக்­கட்சி 3 உறுப்­பி­னர்­க­ளையும் சிறி­லங்கா சுதந்­தி­ரக்­கட்சி 2 உறுப்­பி­னர்­க­ளையும் பெற்­றுள்­ளன.

இதே­போன்று நல்லூர் பிர­தேச சபை, சாவ­கச்­சேரி பிர­தே­ச­சபை, பருத்­தித்­துரை பிர­தேச சபை, வட­ம­ராட்சி தென்­மேற்கு பிர­தேச சபை, வல்­வெட்­டித்­துறை நக­ர­சபை, வலி வடக்கு பிர­தேச சபை, வலி தெற்கு பிர­தேச சபை, வலி கிழக்கு பிர­தேச சபை, வலி மேற்கு பிர­தேச சபை, வலி தென்­மேற்கு பிர­தேச சபை, வேலணை பிர­தேச சபை, காரை­நகர் பிர­தேச சபை என்­ப­வற்­றிலும் பெரும்­பான்­மை­யான உறுப்­பி­னர்­களை தமிழ்­தே­சி­யக்­கூட்­ட­மைப்பு பெற்­றுள்­ளது.

இந்த சபை­களில் அகில இலங்கை தமிழ் காங்­கிரஸ் இரண்­டா­வது அணி­யாக கூட்­ட­மைப்­பிற்கு அடுத்­த­தாக உறுப்­பி­னர்­களை தன்­ன­கப்­ப­டுத்­தி­யுள்­ளது. நெடுந்­தீவு, ஊர்­கா­வற்­றுறை பிர­தேச சபை­களை ஈ.பி.டி.பி. கைப்­பற்­றி­யுள்­ளது.

கிளி­நொச்சி மாவட்­டத்­தி­லுள்ள மூன்று சபை­க­ளையும் கூட்­ட­மைப்பு கைப்­பற்­றி­யுள்­ளது. கரைச்சி பிர­தேச சபையில் தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்­பிற்கு 17 உறுப்­பி­னர்கள் தெரி­வா­கி­யுள்­ளனர். இங்கு சுயேச்­சைக்­கு­ழு­வாக போட்­டி­யிட்ட முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் முரு­கேசு சந்­தி­ர­குமார் தலை­மை­யி­லான சுயேச்­சைக்­குழு 11 உறுப்­பி­னர்­களைப் பெற்­றுள்­ளது.

இதே­போன்று பூந­கரி பிர­தே­ச­ச­பை­களில் கூட்­ட­மைப்பு 11 உறுப்­பி­னர்­களை பெற்­றுள்­ள­துடன் சந்­தி­ர­குமார் தலை­மை­யி­லான சுயேச்­சைக்­குழு நான்கு உறுப்­பி­னர்­களை தன்­வ­சப்­ப­டுத்­தி­யுள்­ளது. பச்­சி­லைப்­பள்ளி பிர­தேச சபை­யிலும் கூட்­ட­மைப்பு ஆறு உறுப்­பி­னர்­களை பெற்­றுள்­ளதைப் போன்று சுயேச்­சைக்­குழு இரண்டு உறுப்­பி­னர்­களை தன்­வ­சப்­ப­டுத்­தி­யுள்­ளது.

மன்னார் மாவட்­டத்­திலும் தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பு உள்­ளூ­ராட்சி சபை­களில் பெரும்­பான்­மை­யான உறுப்­பி­னர்­களை பெற்­ற­போ­திலும் தனித்து ஆட்சி அமைப்­பது சிக்கல் நிலை நில­வி­வ­ரு­கின்­றது. வவு­னி­யா­விலும் பல உள்­ளூ­ராட்சி சபை­களில் கூட்­ட­மைப்பு அதிக உறுப்­பி­னர்­களை பெற்­றுள்­ளது.

வட­மா­கா­ணத்தில் பெரு­ம­ள­வான உள்­ளூ­ராட்சி சபை­களில் அதி­கூ­டிய உறுப்­பி­னர்­களை கூட்­ட­மைப்பு பெற்­றுள்­ள­போ­திலும் தனித்து ஆட்சி அமைப்பதில் சிக்கல் நிலை எழுந்துள்ளதால் ஏனைய கட்சிகளுடன் கலந்துரையாடி கூட்டாட்சி அமைக்கவேண்டிய நிலைப்பாடும் சில சபைகளில் காணப்படுகின்றது.

யாழ். மாவட்டத்தில் ஐக்கிய தேசியக்கட்சி 25 உறுப்பினர்களை உள்ளூராட்சி சபைகளில் பெற்றிருக்கின்றது. யாழ். மாநகரசபையில் மூன்று உறுப்பினர்களை பெற்றுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply