லண்டனில் ஈரானுக்காக உளவு பார்த்ததாக 4 பேர் கைது: பயங்கரவாத தடுப்புப் பிரிவினரின் அதிரடி நடவடிக்கை

Saturday, March 7th, 2026 at 8:24 (SLT)

லண்டன் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் யூத சமூகத்தினர் மற்றும் அவர்களின் வழிபாட்டுத் தலங்களைக் குறிவைத்து ஈரானிய உளவு அமைப்பிற்காகத் தகவல்களைச் சேகரித்ததாக நான்கு நபர்களை பிரிட்டிஷ் பயங்கரவாத தடுப்புப் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை (மார்ச் 6) அதிகாலை ஒரு மணியளவில் மேற்கொள்ளப்பட்ட இந்தத் துரித நடவடிக்கையில், பார்னெட் (Barnet), ஹாரோ (Harrow) மற்றும் வாட்ஃபோர்ட் (Watford) ஆகிய இடங்களில் இவர்கள் பிடிபட்டனர். கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் ஈரானிய நாட்டவர், மற்ற மூவர் பிரிட்டிஷ்-ஈரானிய இரட்டைக் குடியுரிமை பெற்றவர்கள் என்று காவல்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.

மேலும் வாசிக்க >>>

ஈரானிய பணிக்குழாமை திருப்பி அனுப்ப வேண்டாம் : அமெரிக்கா

Saturday, March 7th, 2026 at 8:19 (SLT)

மூழ்கடிக்கப்பட்ட ஈரானியப் போர்க்கப்பலில் இருந்து மீட்கப்பட்ட பணிக்குழாமையும், இலங்கையின் பொறுப்பில் உள்ள இரண்டாவது ஈரானிய கப்பலில் உள்ள பணிக்குழாமையும் மீண்டும் ஈரானுக்கு அனுப்ப வேண்டாம் என கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் இலங்கை அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுத்து வருவதாக ரொயிட்டர்ஸ் (Reuters) செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும் வாசிக்க >>>

அவசரகால சட்டம் இந்த மூன்று மாத காலப்பகுதியில் எந்த அடக்குமுறைக்கு பயன்படுத்தப்பட்டது? : பிரதமர்

Saturday, March 7th, 2026 at 8:16 (SLT)

அவசரகால சட்டம் இந்த மூன்று மாத காலப்பகுதியில் எந்த அடக்குமுறைக்கு பயன்படுத்தப்பட்டது, யார் கைது செய்யப்பட்டார்கள். எந்த போராட்டம் மறுக்கப்பட்டது என்பதை எதிர்க்கட்சியினர் ஆதாரமாக குறிப்பிடவேண்டும். அவ்வாறு இடம்பெற்று எதிர்க்கட்சியினர் குறிப்பிட்டால் உரிய நடவடிக்கைகளை எடுக்க தயாராகவுள்ளோம். அரசியல் இலாபங்களுக்காக ‘அடக்குமுறை’ என்ற வார்த்தையைப் பயன்படுத்தாமல், பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக செயற்படுத்தப்படும் திட்டத்தை ஆதரிக்குமாறு எதிர்க்கட்சியிடம் கேட்டுக்கொள்கிறேன் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

மேலும் வாசிக்க >>>

அமெரிக்காவின் இரண்டு உளவுக் கப்பல்கள் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன : உண்மையை அரசு பகிரங்கப்படுத்த வேண்டும் : தயாசிறி

Saturday, March 7th, 2026 at 8:13 (SLT)

இலங்கை கடற்பரப்பில் மார்ச் 2ஆம் திகதியில் இருந்து அமெரிக்காவின் இரண்டு உளவுக் கப்பல்கள் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன. இது தொடர்பான உண்மையை அரசாங்கம் பகிரங்கப்படுத்த வேண்டும். அமெரிக்காவுடன் செய்துகொண்ட ஒப்பந்தங்களை இந்த அரசாங்கம் முழுமையாக செயற்படுத்துகிறது என ஐக்கிய மக்கள் சக்தியின் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

மேலும் வாசிக்க >>>

நிபந்தனையற்ற சரணடைதலைத் தவிர ஈரானுடன் வேறு எந்த ஒப்பந்தமும் இல்லை : ட்ரம்ப்

Saturday, March 7th, 2026 at 8:10 (SLT)

நிபந்தனையற்ற சரணடைதலைத் தவிர ஈரானுடன் வேறு எந்த ஒப்பந்தமும் இல்லை என ட்ரம்ப் தனது ட்ரூத் வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

மூன்றாவது ஈரான் யுத்தக் கப்பலுக்கு இந்தியா அடைக்கலம்

Saturday, March 7th, 2026 at 0:40 (SLT)

ஈரானுக்குச் சொந்தமான ‘IRIS Lavan’ எனும் யுத்தக் கப்பலுக்கு அடைக்கலம் வழங்க இந்தியா தீர்மானித்துள்ளது. இதற்கமைய, 183 ஊழியர்களைக் கொண்ட இக்கப்பல் கடந்த 4ஆம் திகதி முதல் கொச்சி துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க >>>

ஈரானின் அடுத்த தலைவரைத் தேர்வு செய்வதில் அமெரிக்கா தலையீடு? : மோஜ்தபா காமேனியை நிராகரித்த டொனால்ட் ட்ரம்ப்

Friday, March 6th, 2026 at 9:13 (SLT)

ஈரானின் உச்ச தலைவர் ஆயதுல்லா அலி காமேனி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, ஈரானின் அடுத்த தலைமைத்துவத்தைத் தேர்வு செய்வதில் தான் நேரடியாக ஈடுபடப் போவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். குறிப்பாக, காமேனியின் மகனும், அடுத்த தலைவராக முன்னிறுத்தப்படுபவருமான மோஜ்தபா காமேனியை (Mojtaba Khamenei) “ஏற்றுக்கொள்ள முடியாதவர்” என்றும், அவர் ஒரு “பலவீனமான நபர்” (Lightweight) என்றும் ட்ரம்ப் வெளிப்படையாகக் விமர்சித்துள்ளார். வெனிசுலாவில் தான் மேற்கொண்ட நடவடிக்கைகளைப் போலவே, ஈரானின் ஆட்சி மாற்றத்திலும் தான் முக்கியப் பங்கு வகிக்கப் போவதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

மத்திய கிழக்கு போர் இலங்கை மத்தியஸ்த நிலைப்பாடு : ஜனாதிபதி

Friday, March 6th, 2026 at 9:08 (SLT)

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் நிலைமையில் குறித்து , அரசாங்கம் மத்தியஸ்தமான நிலைப்பாட்டை பின்பற்றுவதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.

மேலும் வாசிக்க >>>

IRIS Bushehr கப்பலில் இருந்த பணியாளர்கள் கொழும்புத் துறைமுகத்திற்கு

Friday, March 6th, 2026 at 9:05 (SLT)

இலங்கை கடல் எல்லைக்கு அருகே நங்கூரமிட்டிருந்த ஈரானின் ‘IRIS Bushehr’ கப்பலில் இருந்த பணியாளர்களில் 204 பேரை இலங்கை கடற்படையினர் பாதுகாப்பாக கொழும்பு துறைமுகத்திற்கு அழைத்து வந்துள்ளதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

இலங்கை வசம் வந்த ஈரானியக் கப்பல் ‘ஐரிஸ் புஷேர்’: 208 மாலுமிகள் பாதுகாப்பாக மீட்பு

Friday, March 6th, 2026 at 9:01 (SLT)

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால், இலங்கையின் கடல் எல்லைக்கு அருகே பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு உள்ளான ஈரானிய கடற்படைக் கப்பலான ‘ஐரிஸ் புஷேர்’ (IRIS Bushehr) கப்பலையும், அதில் இருந்த 208 மாலுமிகளையும் இலங்கை அரசாங்கம் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளது. இயந்திரக் கோளாறு காரணமாக உதவி கோரிய இந்தக் கப்பல், கடந்த சில நாட்களாக இலங்கையின் பிரத்யேக பொருளாதார வலயத்திற்குள் (EEZ) நங்கூரமிட்டிருந்தது. பாதுகாப்பு நிலைமைகளைக் கருத்தில் கொண்டு, சர்வதேச சட்ட விதிகளின்படி மனிதாபிமான அடிப்படையில் இந்தப் பணியை மேற்கொண்டதாக ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

மத்திய கிழக்கு மோதல், இலங்கை சுற்றுலாத்துறைக்கு வாரத்துக்கு 12 மில்லியன் இழப்பு

Thursday, March 5th, 2026 at 10:41 (SLT)

மத்திய கிழக்கு பகுதிகளில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம் காரணமாக மத்திய கிழக்கு வான் பரப்புகள் மூடப்பட்டுள்ளமையால் இலங்கை சுற்றுலாத் துறை கடும் பாதிப்பை எதிர்கொண்டுள்ளது. இதன் காரணமாக இலங்கைக்கு வாரத்துக்கு சுமார் 10 தொடக்கம் 12 மில்லியன் அமெரிக்க டொலர் வரை இழப்பு ஏற்படும் என்று சுற்றுலாப் பிரதி அமைச்சர் ருவண் ரணசிங்க தெரிவித்தார்.

மேலும் வாசிக்க >>>

ஈரான் போரில் இலக்காகும் ஐரோப்பிய நாடுகள்: நேட்டோ (NATO) படைகள் தங்களின் வான் பாதுகாப்பு அமைப்புகளைத் தயார் நிலையில்

Thursday, March 5th, 2026 at 10:36 (SLT)

மத்திய கிழக்கில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் முன்னெடுத்து வரும் ‘ஆபரேஷன் எபிக் பியூரி’ (Operation Epic Fury) இராணுவ நடவடிக்கை ஆறாவது நாளை எட்டியுள்ள நிலையில், தங்களுக்கு எதிரான இந்த மோதலில் ஐரோப்பிய நாடுகள் இணைவது “போர் பிரகடனமாக” (Act of War) கருதப்படும் என ஈரான் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகள் ஈரானின் ஏவுகணை மற்றும் ட்ரோன் தளங்களை அழிக்கத் தற்காப்பு நடவடிக்கைகளை எடுக்கக்கூடும் எனத் தெரிவித்திருந்த நிலையில், ஈரானிய வெளியுறவு அமைச்சகம் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது. ஐரோப்பிய நாடுகள் இதில் தலையிட்டால், தாக்குதல்கள் ஐரோப்பிய நகரங்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என ஈரான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க >>>

ஈரானில் கடந்த 5 நாட்களில் 1,000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பலி

Wednesday, March 4th, 2026 at 8:03 (SLT)

இஸ்ரேலும், அமெரிக்காவும் இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தி இன்றுடன் (04) 5 நாட்கள் ஆகின்றன. கடந்த 28 ஆம் திகதி முதல் இன்று வரையான காலப்பகுதிக்குள் ஈரானில் 1,097 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாக அமெரிக்காவை தளமாகக் கொண்ட மனித உரிமைகள் ஆர்வலர்களின் செய்தி நிறுவனம் (HRANA) தெரிவித்துள்ளது.

மேலும் வாசிக்க >>>

கிருஷ்ணகிரியில் குழந்தை கொலை: திமுக இளைஞரணி செயலாளர் கைது தமிழகத்தை அதிரவைத்த கொடூரம்

Wednesday, March 4th, 2026 at 7:57 (SLT)

கிருஷ்ணகிரியில் இரண்டு வயது அரை குழந்தை கொலை மற்றும் பாலியல் வன்முறை வழக்கில் திமுக இளைஞரணி கிளைச் செயலாளர் பேரியநாயகம் கைது செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. குழந்தை திடீர் உடல்நலக்குறைவால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோது மரணம் ஏற்பட்டதாக முதலில் கூறப்பட்ட நிலையில், forensic report வெளிவந்ததும் உண்மை வெளிச்சத்துக்கு வந்தது. குழந்தையின் உடலில் உள்ளக காயங்கள் இருப்பது மருத்துவ பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது.

மேலும் வாசிக்க >>>

ஸ்பெயின் படைத் தளங்களை பயன்படுத்த அனுமதி மறுப்பு

Wednesday, March 4th, 2026 at 7:52 (SLT)

எமது நடவடிக்கைக்கு ஆதரவாக தனது படைத் தளங்களை பயன்படுத்த ஸ்பெயின் அனுமதி மறுத்துவிட்டது. பரவாயில்லை எந்த தளங்களையும் பயன்படுத்த நாங்கள் எவரிடமும் அனுமதி கேட்க தேவையில்லை. தேவைப்பட்டால் பயன்படுத்துவோம் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>