திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் அக்ரஹாரம் பகுதியை சேர்ந்தவர் கருப்பையா (41). கொத்தனார். இவரது மனைவி சுதா (37). இவர்களுக்கு பிரவீனா (15), ஷிவானி (12) என, இரண்டு மகள்கள் உள்ளனர். இவர்கள் வசிக்கும் பகுதியில் நேற்று கன மழை பெய்தபோது, கருப்பையா வீட்டின் அருகே சென்ற உயரழுத்த மின்கம்பி அறுந்து விழுந்துள்ளது. அப்போது அங்கு நின்றிருந்த கருப்பையா மீது மின்சாரம் பாய்ந்ததால், அவர் அலறியுள்ளார். இந்த கூச்சல் கேட்டு மனைவி சுதா அவரை காப்பற்றச் சென்றுள்ளார். அப்போது அவர் மீதும் மின்சாரம் பாய்ந்தது. இதில் சம்பவ இடத்திலேயே இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும் வாசிக்க >>>














