ஈரானின் மறைந்த உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனியின் மறைவுக்குப் பிறகு, புதிய உச்சத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அவரது மகன் மொஜ்தபா கமேனி, லண்டனில் சுமார் 200 மில்லியன் பவுண்ட் (இந்திய மதிப்பில் சுமார் 2,000 கோடி ரூபாய்க்கும் மேல்) மதிப்புள்ள சொகுசு சொத்துக்களை ரகசியமாக வைத்திருப்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கன்சிங்டன், பிஷப்ஸ் அவென்யூ போன்ற லண்டனின் மிக விலையுயர்ந்த மற்றும் செல்வாக்கு மிக்கப் பகுதிகளில் இந்தச் சொத்துக்கள் அமைந்துள்ளதாக ஊடக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. குறிப்பாக, இஸ்ரேலிய தூதரகத்திற்கு மிக அருகிலேயே அமைந்துள்ள இந்த வீடுகள், ஈரானின் ரகசியக் கண்காணிப்பு மையங்களாகச் செயல்படலாம் என்ற அச்சத்தை உருவாக்கியுள்ளன.
மேலும் வாசிக்க >>>