யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இன்று (09) அதிகாலை வேளையில் தீ பரவல் ஏற்பட்டுள்ளது. வைத்தியசாலையின் மருந்து களஞ்சியசாலையிலேயே இந்தத் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
மேலும் வாசிக்க >>>Saturday, May 9th, 2026 at 8:09 (SLT)
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இன்று (09) அதிகாலை வேளையில் தீ பரவல் ஏற்பட்டுள்ளது. வைத்தியசாலையின் மருந்து களஞ்சியசாலையிலேயே இந்தத் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
மேலும் வாசிக்க >>>Saturday, May 9th, 2026 at 6:17 (SLT)
சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த பேளூர் பெருமாள்பாளையம் பகுதியை சேர்ந்த 6 வயது சிறுவன், அங்குள்ள பள்ளியில் 1ம் வகுப்பு படித்து வருகிறான். நேற்று முன்தினம் மதியம் வீட்டில் இருந்த சிறுவன் திடீரென மாயமானான். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள், சிறுவனை பல்வேறு இடங்களில் தேடினர். அப்போது வீட்டின் அருகே மற்றொரு வீட்டில் சந்தேகத்தின் பேரில் தேடியுள்ளனர். இதில், சிறுவனை அந்த வீட்டை சேர்ந்த பிளஸ் 1 மாணவன், அறையில் அடைத்து வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும் வாசிக்க >>>Saturday, May 9th, 2026 at 6:11 (SLT)
கடந்த 2025ம் ஆண்டு ஏப்ரல் மாதம் சர்வதேச அவசரகால பொருளாதார அதிகாரச் சட்டத்தைப் பயன்படுத்தி அதிபர் டிரம்ப் விதித்த பரஸ்பர வரிகளை, கடந்த பிப்ரவரி 20ம் தேதி அமெரிக்க உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது. இதனால் தனது வரி விதிப்பு வியூகத்தை மாற்றிய டிரம்ப், 1974ம் ஆண்டு வர்த்தகச் சட்டத்தின் 122வது பிரிவைப் பயன்படுத்தி, இந்தியா உள்பட உலக நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 10% வரி விதிக்க உத்தரவிட்டார்.
மேலும் வாசிக்க >>>Saturday, May 9th, 2026 at 6:07 (SLT)
தவெக அமைச்சரவையில் 2 இடங்கள், 1 மாநிலங்களவை உறுப்பினர் வேண்டும் என கேட்டு உள்ளோம். என்று செல்வப் பெருந்தகை தெரிவித்துள்ளார்.சென்னையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: தேர்தலில் பெரும்பான்மை பெற்ற கூட்டணியை ஆட்சியமைக்க ஆளுநர் உடனடியாக அழைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியே இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. எங்கள் போராட்டத்திற்கும், கூட்டணித் தலைவர்களின் கோரிக்கைக்கும் செவிசாய்த்து, ஆளுநர் தற்போது தவெக தலைவர் விஜய் ஆட்சியமைக்க அழைக்க வேண்டும். ஆளுநரின் நடவடிக்கைகளில் பாஜவின் தலையீடு இருந்ததால் ஆட்சியமைப்பதில் இரண்டு நாட்கள் தாமதம் ஏற்பட்டது.
மேலும் வாசிக்க >>>Saturday, May 9th, 2026 at 6:00 (SLT)
ஈரான் – இஸ்ரேல், அமெரிக்கா இடையே கடந்த ஏப்ரல் 8ம் தேதி முதல் தற்காலிக போர் நிறுத்தம் அமலில் உள்ளது. இந்த சூழலில் நேற்று முன்தினம் இரவு ஹார்முஸ் ஜலசந்தியில் மூன்று கடற்படை கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதாகவும் அதனை இடைமறித்து தாக்குதல் நடத்தியதாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது. மேலும் ஈரான் ராணுவ தளங்களை குறிவைத்து பதிலடி கொடுத்தாகவும் அமெரிக்கா அறிவித்துள்ளது பதற்றம் ஏற்பட்டுள்ளது.
மேலும் வாசிக்க >>>Friday, May 8th, 2026 at 7:16 (SLT)
ஹோர்முஸ் நீரிணையில் இரண்டு கப்பல்களை இலக்கு வைத்தும், பொதுமக்கள் வசிக்கும் பகுதிகள் மீது தாக்குதல் நடத்தியும் அமெரிக்கா போர் நிறுத்தத்தை மீறியுள்ளதாக ஈரானின் உயர்மட்ட இராணுவக் கட்டளையகம் குற்றம் சாட்டியுள்ளது.
மேலும் வாசிக்க >>>Friday, May 8th, 2026 at 7:13 (SLT)
ரஷ்யாவின் மிக முக்கியமான நாளாகக் கருதப்படும் மே 9 ‘வெற்றி தின’ கொண்டாட்டங்களை முன்னிட்டு, மே 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் ரஷ்யா தற்காலிகப் போர் நிறுத்தத்தை அறிவித்துள்ளது. இருப்பினும், இந்த அணிவகுப்பை உக்ரைன் ட்ரோன்கள் மூலம் சீர்குலைக்க முயன்றால், உக்ரைன் தலைநகர் கீவ்வில் உள்ள அரசு நிர்வாக மையங்கள் மீது “மிகப்பெரிய ஏவுகணைத் தாக்குதல்” (Massive Missile Strike) நடத்தப்படும் என ரஷ்யப் பாதுகாப்பு அமைச்சகம் எச்சரித்துள்ளது. இதனால் கீவ் நகரில் உள்ள பொதுமக்கள் மற்றும் வெளிநாட்டுத் தூதரக அதிகாரிகள் உடனடியாக வெளியேற வேண்டும் என்றும் ரஷ்யா அறிவுறுத்தியுள்ளது.
மேலும் வாசிக்க >>>Friday, May 8th, 2026 at 7:09 (SLT)
சீனாவில் லஞ்சம் தொடர்பான குற்றச்சாட்டுகளில் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர்கள் 2 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சீனாவில் அதிபர் ஜி ஜின்பிங்கின் அமைச்சரவையில் கடந்த 2018ம் ஆண்டு முதல் 2023ம் ஆண்டு வரை பாதுகாப்பு அமைச்சராக பதவி வகித்து வந்தவர் வெய் ஃபெங்கே. இவர் மீது லஞ்சம் வாங்கியதாக புகார் எழுந்த நிலையில் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து அந்த பதவியில் லீ ஷங்ஃபு என்பவர் நியமிக்கப்பட்டார்.
மேலும் வாசிக்க >>>Friday, May 8th, 2026 at 7:04 (SLT)
போரை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பான சமீபத்திய அமெரிக்க முன்மொழிவுகளை ஆய்வு செய்து வருவதாக ஈரான் தெரிவித்துள்ளது. ஈரானின் துறைமுகங்கள் மீதான அமெரிக்க முற்றுகையை மீறுவதற்கு முயன்ற ஈரான் எண்ணெய் கப்பல்கள் மீது நேற்று முன்தினம் அமெரிக்க ராணுவம் துப்பாக்கிச்சூடு நடத்தியது. எனினும் ஈரான் -அமெரிக்கா இஸ்ரேல் இடையேயான இரண்டு மாத கால மோதல் விரைவில் முடிவுக்கு வரக்கூடும் என்ற நம்பிக்கையே சர்வதேச சந்தைகளை உற்சாகப்படுத்தியுள்ளது. ஹார்முஸ் ஜலசந்தி மீண்டும் திறக்கப்பட்டு பாரசீக வளைகுடாவில் இருந்து எண்ணெய் கப்பல்கள் மீண்டும் எண்ணெய் விநியோகம் அனுமதிக்கப்படுமா என்பதை முதலீட்டாளர்கள் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், பிரென்ட் கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு சுமார் 100டாலர் என்ற அளவில் நிலைபெற்றது.
மேலும் வாசிக்க >>>Thursday, May 7th, 2026 at 8:25 (SLT)
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தாலும், பெரும்பான்மை எண்ணிக்கை கிடைக்காததால் ஆட்சியமைக்க முடியாமல் திணறி வருகிறது த.வெ.க. இந்த சூழலில், அ.தி.மு.க – தி.மு.க கூட்டணி ஆட்சியமைக்க உள்ளதாக வெளியான தகவல்கள் நாடு முழுவதும் பரபரப்பை உருவாக்கியுள்ளன.
மேலும் வாசிக்க >>>Thursday, May 7th, 2026 at 8:21 (SLT)
தமிழக முதல்வராக பதவி ஏற்க ஆளுநரை நேற்று சந்தித்து உரிமை கோரினார் விஜய். ஆனால், ஆட்சி அமைப்பதற்குத் தேவையான பெரும்பான்மை எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கடிதம் வழங்காததால், இன்று நடைபெறு வதாக இருந்த பதவி ஏற்பு விழா தள்ளிப்போகிறது.
மேலும் வாசிக்க >>>Thursday, May 7th, 2026 at 8:17 (SLT)
தமிழக சட்டசபை தேர்தலில் தவெக 108 இடங்களிலும், திமுக கூட்டணி 73 இடங்களிலும், அதிமுக கூட்டணி 53 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. இதில், எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. பெரும்பான்மை என்பது, மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் பாதியான 117 தொகுதிகளைவிட ஒன்று கூடுதலாக இருக்க வேண்டும். அதாவது, 118 தொகுதிகள் வேண்டும்.
மேலும் வாசிக்க >>>Thursday, May 7th, 2026 at 8:10 (SLT)
தென்னாப்பிரிக்காவில் சொகுசு சுற்றுலா கப்பலில் மேலும் 4 பயணிகளுக்கு ஹான்டா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. ஹான்டா வைரஸ் என்பது, உணவுகளை கொறித்து சாப்பிடும் எலிகள் போன்றவற்றின் சிறுநீர், மலம் ஆகியவற்றின் மூலம் பரவும் தொற்றாகும். இந்நிலையில் தென்அமெரிக்க நாடான அர்ஜென்டினாவில் இருந்து அன்டார்டிகா வழியாக ஆப்பிரிக்காவின் கேப் வெர்டே என்ற தீவு நாட்டுக்கு 150 பயணிகளுடன் எம்வி எம்வி ஹோன்டியஸ் என்ற நெதர்லாந்து நாட்டின் சுற்றுலா சொகுசு கப்பல் கடந்த 4ம் தேதி புறப்பட்டு சென்றது. இதில் பயணித்த சிலருக்கு ஹான்டா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.
மேலும் வாசிக்க >>>Thursday, May 7th, 2026 at 7:05 (SLT)
ஈரானில் வணிக வளாகத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 8 பேர் பலியானார்கள். மேலும் 36 பேர் காயமடைந்தனர். ஈரான் தலைநகர் தெஹ்ரான் மாகாணத்தில் உள்ள அண்டிஷே நகரில் அர்கவான் என்ற வணிக வளாகம் அமைந்துள்ளது.
மேலும் வாசிக்க >>>Wednesday, May 6th, 2026 at 10:35 (SLT)
கேப் வெர்தே (Cape Verde) கடலோரப் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள டச்சு நாட்டுச் சொகுசு கப்பல் ஒன்றில், ‘ஹண்டா’ (Hanta) எனப்படும் அரிய வகை வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. குறித்த கப்பலில் பயணம் செய்த 147 பயணிகளில், இந்த வைரஸ் பாதிப்பினால் இதுவரை மூவர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் வாசிக்க >>>