இலங்கைக்கு ரூ.6673 கோடி கடன் ஐஎம்எப் ஒப்புதல்

Friday, May 29th, 2026 at 7:23 (SLT)

இலங்கைக்கு ரூ.6673 கோடி கடன் தவணை வழங்க சர்வதேச நாணய நிதியம்(ஐஎம்எப்) ஒப்புதல் அளித்துள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின், விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் கீழ் இலங்கைக்கு 3 பில்லியன் அமெரிக்க டாலர்(ரூ.23044 கோடி) நிதி வசதிக்கு கடந்த 2023 மார்ச்சில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

மேலும் வாசிக்க >>>

கென்யாவில் பள்ளி மாணவிகள் விடுதியில் பயங்கர தீ விபத்து: 16 பேர் பலி: 79 பேர் காயம்

Friday, May 29th, 2026 at 7:20 (SLT)

கிழக்கு ஆப்ரிக்க நாடுகளில் ஒன்றான மத்திய கென்யாவின் கில்கில் பகுதியில் 800க்கும் மேற்பட்ட மாணவிகள் பயிலும் உடுமிஷி பெண்கள் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு ஏராளமான மாணவிகள் விடுதியில் தங்கி படித்து வருகின்றனர். இந்த விடுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. அப்போது தூங்கி கொண்டிருந்த மாணவிகள் அச்சத்தில், அலறியடித்து கொண்டு சிதறி ஓடினர்.

மேலும் வாசிக்க >>>

ஒன்றிய அரசின் மிரட்டலுக்கு பணிந்தாரா? சோனியா, ராகுலுடன் விஜய் சந்திப்பு தவிர்ப்பு: டெல்லியில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

Friday, May 29th, 2026 at 7:15 (SLT)

காங்கிரஸ் தலைவர்களான சோனியா, ராகுல், மல்லிகார்ஜூன கார்கே ஆகியோரது சந்திப்பை ரத்து செய்து விட்டு அவசர அவசரமாக முதல்வர் விஜய் டெல்லியிலிருந்து சென்னை திரும்பியது காங்கிரசார் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஒன்றிய அரசு மிரட்டல் விடுத்ததே இந்த சந்திப்பு ரத்தானதற்கு காரணம் என தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் தேர்தல் நடந்து முடிந்து முதல்வராக விஜய் பதவி ஏற்றார்.

மேலும் வாசிக்க >>>

குதிரை பேரத்தை தமிழக மக்கள் விரும்பவில்லை இடைத்தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் பொதுவேட்பாளரை நிறுத்துவோம்: அன்புமணி பேட்டி

Thursday, May 28th, 2026 at 6:04 (SLT)

புதுச்சேரியில் பாமக தலைவர் அன்புமணி நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: தமிழ்நாட்டில் எதிர்க்கட்சியை சேர்ந்த 4 எம்எல்ஏக்களை ராஜினாமா செய்ய வைத்து உடனடியாக தவெகவில் இணைத்திருப்பது ஜனநாயக படுகொலையாகும். மக்கள் விருப்பத்துக்கு எதிராக எம்எல்ஏக்களை திடீரென ராஜினாமா செய்ய வைத்து தவெகவில் இணைத்திருப்பது ஒரு மோசடி. இதை தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை.

மேலும் வாசிக்க >>>

சூலூர் சிறுமி பலாத்கார கொலை 2 பேர் மீது குண்டாஸ் பாய்ந்தது: காவலில் எடுத்து விசாரிக்க முடிவு

Thursday, May 28th, 2026 at 6:01 (SLT)

கோவை அடுத்த சூலூர் பள்ளப்பாளையத்தை சேர்ந்த 10 வயது சிறுமி கடந்த 21ம் தேதி பாலியல் பலாத்காரம் செய்து கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக பக்கத்து வீட்டில் வசித்த நாகையை சேர்ந்த கார்த்தி (33) என்பவரை போலீசார் கைது செய்தனர். இவர் சிறுமியை கொலை செய்த விவரத்தை தனது நண்பர் மோகனிடம் தெரிவித்தார். ஆனால் அவர் போலீசாரிடம் இதனை தெரிவிக்காமல் மறைத்தார்.

மேலும் வாசிக்க >>>

இஸ்ரேல் வான்வெளி தாக்குதல்: ஹமாஸ் புதிய ராணுவ தளபதி பலி

Thursday, May 28th, 2026 at 5:06 (SLT)

காசா நகரின் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித்தாக்குதல்களில் ஹமாஸ் புதிய ராணுவ தளபதி உள்பட மூன்று பேர் கொல்லப்பட்டனர். மேலும் 12 பேர் காயமடைந்தனர். கடந்த அக்டோபர் மாதம் இஸ்ரேலுக்கும், ஹமாசுக்கும் இடையே ஏற்பட்ட போர் நிறுத்தம் இன்னும் உறுதியற்றதாகவே உள்ளது. போர் நிறுத்தம் அமலுக்கு வந்த பின்னரும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் காசா நகரை குறித்து இஸ்ரேல் ராணுவம் நேற்று வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளது. இந்த தாக்குதல்களில் சுமார் 12 பேர் காயமடைந்தனர். மேலும் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் வாசிக்க >>>

ரூ.2 லட்சம் கோடியில் நிலவில் நிரந்தர ஆய்வு மையம்: நாசா 3 கட்ட திட்டம் வெளியீடு

Thursday, May 28th, 2026 at 5:01 (SLT)

அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா தற்போது நிலவில் மனிதர்கள் நிரந்தரமாக தங்கி ஆய்வு செய்வதற்கான பிரமாண்டமான ஆர்ட்டெமிஸ் திட்டத்தை முன்னெடுத்து வருகிறது. இதற்கான ஆரம்பகட்ட பணிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில், ஆர்ட்டெமிஸ் திட்டத்திற்காக நிலவில் நிரந்தர ஆய்வு மையம் அமைக்க நாசா முடிவு செய்துள்ளது. இதனை 3 கட்டங்களாக நிறைவு செய்வதற்கான புதிய திட்டத்தை நாசா நேற்று முன்தினம் வெளியிட்டுள்ளது. ரூ.2 லட்சம் கோடியில் நிலவில் நிரந்தர ஆய்வு மையம் 3 கட்டமாக அமைத்து முடிக்கப்படும் என நாசா நிர்வாகி ஜாரெட் ஐசக்மேன் தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

பெல்ஜியத்தில் பயங்கரம்: மாற்றுத்திறனாளி குழந்தைகள் சென்ற பள்ளி வேன் மீது ரயில் மோதி 4 பேர் மரணம்

Wednesday, May 27th, 2026 at 7:54 (SLT)

ஐரோப்பிய நாடான பெல்ஜியத்தின் வடக்கு பிளாண்டர்ஸ் பிராந்தியத்தில் உள்ள புக்கன்ஹவுட் (Buggenhout) நகரில் இன்று காலை ஒரு கோர ரயில் விபத்து நிகழ்ந்துள்ளது. கற்றல் குறைபாடுடைய மாற்றுத்திறனாளி குழந்தைகள் பயிலும் சிறப்புப் பள்ளிக்கு (Special Needs School) மாணவர்களை ஏற்றிச் சென்ற சிறிய ரக மினி பேருந்து ஒன்று, அங்குள்ள ரயில்வே கேட்டை கடக்க முயன்றபோது அதிவேகமாக வந்த பயணிகள் ரயில் அதன் மீது பயங்கரமாக மோதியது. இந்த மிகக் கொடூரமான விபத்தில் இரண்டு பள்ளிக் குழந்தைகள் உட்பட மொத்தம் 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேலும் வாசிக்க >>>

அமெரிக்காவில் கொள்ளையை தடுக்க முயன்ற இந்திய வம்சாவளிப்பெண் சுட்டுக்கொலை

Wednesday, May 27th, 2026 at 7:49 (SLT)

அமெரிக்காவின் வர்ஜீனியாவில் உள்ள ஒரு பல்பொருள் அங்காடியில் பணிபுரிந்து வந்த இந்திய வம்சாவளி பெண் சுட்டுக் கொல்லப்பட்டார். தகவல் கிடைத்தவுடன் உள்ளூர் பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து, அப்பகுதியைச் சுற்றி வளைத்து, விசாரணையைத் தொடங்கினர்.

மேலும் வாசிக்க >>>

கோவையில் மீண்டும் கொடூரம்: 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: ஒருவர் கைது

Wednesday, May 27th, 2026 at 7:46 (SLT)

கோவையில் ஏற்கனவே 10 வயது சிறுமி பலாத்காரம் செய்து படுகொலை செய்யப்பட்ட நிலையில், மேலும் ஒரு பத்து வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர் கைது செய்யப்பட்டார். கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் வசிப்பவர் முத்துக்குமார். இவரது மனைவிக்கு சமீபத்தில் குழந்தை பிறந்தது. அதனால், தூத்துக்குடியில் உள்ள அவரது பெற்றோர் வீட்டில் தங்கியுள்ளார். முத்துக்குமாரின் பக்கத்து வீட்டில் வசிக்கும் 10 வயது சிறுமி, கோவையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வருகிறார்.

மேலும் வாசிக்க >>>

ஈரான் மீது அமெரிக்கா மீண்டும் தாக்குதல்: தற்காப்புக்காக நடத்தியதாக அறிவிப்பு

Wednesday, May 27th, 2026 at 7:40 (SLT)

ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து நடத்திய தாக்குதலை தற்காலிகமாக நிறுத்துவதாக கடந்த மாதம் அமெரிக்கா அறிவித்தது. இதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் தலைமையில் அமெரிக்கா, ஈரான் இடையே பல கட்டங்களாக பேச்சுவார்த்தை நடந்து வருகின்றது.

மேலும் வாசிக்க >>>

கட்டுநாயக்க விமான நிலையத்தில் ரூ.60 இலட்சம் பெறுமதியான சிகரெட்டுகளுடன் 3 சீனர்கள் கைது

Tuesday, May 26th, 2026 at 7:37 (SLT)

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சுமார் 60 இலட்சத்து 60 ஆயிரம் ரூபா பெறுமதியான சீனாவில் உற்பத்தி செய்யப்பட்ட சிகரெட்டுகளை சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் கொண்டுவர முயன்ற மூன்று வெளிநாட்டு வர்த்தகர்கள் நேற்று (25) அதிகாலை சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் சீனாவைச் சேர்ந்த வர்த்தகர்கள் மூவர் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மேலும் வாசிக்க >>>

அரசாங்கத்தின் ஆயுட்காலம் முடிவடையப் போகின்ற காரணத்தினாலேயே பழிவாங்கல் நடவடிக்கைகள் : விமல் வீரவன்ச

Tuesday, May 26th, 2026 at 7:33 (SLT)

தற்போதைய அரசாங்கத்தின் ஆயுட்காலம் முடிவடையப் போகின்ற காரணத்தினாலேயே இவ்வாறான பழிவாங்கல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

ஈரான் பேச்சுவார்த்தை வெற்றிபெற ஆபிரகாம் உடன்படிக்கை கட்டாயம்: டொனால்ட் டிரம்ப்

Tuesday, May 26th, 2026 at 7:30 (SLT)

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் (Donald Trump), ஈரான் அரசுடன் தற்போது நடைபெற்று வரும் அமைதிப் பேச்சுவார்த்தைகள் மிகவும் “சிறப்பாகவும் சாதகமாகவும்” (Proceeding nicely) நகர்ந்து வருவதாகப் பகிரங்கமாக அறிவித்துள்ளார். தனது சமூக வலைதளப் பக்கமான ‘ட்ரூத் சோஷியல்’ (Truth Social) தளத்தில் நீண்ட பதிவு ஒன்றை வெளியிட்டுள்ள அவர், ஈரானுடன் எட்டப்படவுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த அமைதி ஒப்பந்தமானது, மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள பிற இஸ்லாமிய நாடுகள் இஸ்ரேலுடன் தங்களது உறவை அதிகாரப்பூர்வமாக நிலைநிறுத்துவதைப் பொறுத்தே அமையும் என ஒரு புதிய புவி அரசியல் நிபந்தனையை விதித்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

தெற்கு ஈரானின் பந்தர் அப்பாஸ் நகர் மீது அமெரிக்க ராணுவம் தாக்குதல்

Tuesday, May 26th, 2026 at 7:24 (SLT)

தெற்கு ஈரானின் பந்தர் அப்பாஸ் நகர் மீது அமெரிக்க ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது. பந்தர் அப்பாஸ் நகரில் ஏவுகணைகள் வைக்கப்பட்டுள்ள பகுதி மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ளது. கடலில் கண்ணி வெடி வைக்கும் படகு மீதும் அமெரிக்க ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது.