ஹோர்முஸ் நீரிணையில் கப்பல்களை விடுவிக்க அமெரிக்கா அவதானம்

Monday, May 4th, 2026 at 7:19 (SLT)

ஹோர்முஸ் நீரிணையில் தடுக்கப்பட்டுள்ள கப்பல்களை விடுவிப்பது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

இலங்கையில் சைபர் மோசடி: வெளிநாட்டினர் 130 பேர் கைது

Monday, May 4th, 2026 at 7:15 (SLT)

இலங்கையில் இணையம் வழி மோசடிச் செயல்கள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், கொழும்பின் புறநகர்ப் பகுதியான தலங்கமவில் நேற்று முன்தினம் நடத்தப்பட்ட சோதனையில், 37 சீன நாட்டவர்களைப் போலீசார் கைது செய்தனர்.

மேலும் வாசிக்க >>>

தமிழகத்தில் 234 தொகுதிகளில் இன்று வாக்கு எண்ணிக்கை முன்னணி நிலவரம் காலை 10 மணிக்கு தெரியும்: வாக்கு எண்ணும் மையங்களில் 1 லட்சம் போலீசார் பாதுகாப்பு

Monday, May 4th, 2026 at 7:13 (SLT)

தமிழகத்தில் 234 தொகுதிகளில் இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது. முன்னணி நிலவரம் காலை10 மணிக்கு தொகுதி வாரியாக தெரிய வரும். வாக்கு எண்ணும் மையங்களில் சுமார் 1 லட்சம் போலீசார் பாதுகாப்பு பணிக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான தேர்தல் ஒரே கட்டமாக கடந்த ஏப்ரல் மாதம் 23ம் தேதி நடந்தது. தமிழகத்தில் திமுக தலைமையிலான அணியில் காங்கிரஸ், தேமுதிக, விசிக, மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மநீம, மனிதநேய மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படை மற்றும் தமிழர் தேசம் கட்சி ஆகிய கட்சிகள் அடங்கிய மெகா கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. அதிமுக தலைமையிலான அணியில் பாஜ, பாமக (அன்புமணி), அமமுக, தமாகா, ஐஜேகே, தமிழக மக்கள் முன்னேற்ற கழகம், புரட்சி பாரதம் உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றிருந்தன. நடிகர் விஜய்யின் தவெக, சீமானின் நாம் தமிழர் கட்சிகள் தனித்து தேர்தலை சந்தித்தன. மொத்தமுள்ள 234 தொகுதியிலும் 4023 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் 3,579 பேர் ஆண்கள், 443 பேர் பெண்கள், ஒருவர் திருநங்கை ஆவார்.

மேலும் வாசிக்க >>>

30 நாளில் அனைத்து பிரச்னைக்கும் தீர்வு ஈரானின் புதிய போர் நிறுத்த திட்டம்: அமெரிக்க அதிபர் டிரம்ப் பரிசீலனை

Monday, May 4th, 2026 at 7:08 (SLT)

அமெரிக்கா-ஈரான் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்படுவதில் கடும் இழுபறி நிலை நிலவி வருகிறது. ஈரானின் முந்தைய திட்டத்தை அதிபர் டிரம்ப் நிராகரித்த நிலையில், புதிதாக 14 அம்ச திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. இதை பாகிஸ்தான் மூலமாக அமெரிக்காவுக்கு ஈரான் அனுப்பி வைத்துள்ளது. இந்த புதிய திட்டம் அமெரிக்காவின் 9 அம்ச திட்டத்திற்கு பதிலளிக்கும் விதமாக இருப்பதாக ஈரானின் தஸ்னிம், பார்ஸ் ஆகிய செய்தி நிறுவனங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

மேலும் வாசிக்க >>>

34 ஆண்டுகளாக இயங்கி வந்த ஸ்பிரிட் ஏர்லைன்ஸ் நிறுவன செயல்பாடுகள் நிறுத்தம்

Sunday, May 3rd, 2026 at 9:50 (SLT)

அமெரிக்காவில் மிக குறைந்த கட்டணச் சலுகைகள் மூலம் கடந்த 34 ஆண்டுகளாக சேவையாற்றி வந்த ஸ்பிரிட் ஏர்லைன்ஸ் நிறுவனமானது மஞ்சள் நிற விமானங்களை கொண்டு தினமும் நூற்றுக்கணக்கான விமான சேவைகளை இயக்கியது. சுமார் 17ஆயிரம் பேருக்கு நிறுவனம் வேலைவாய்ப்பு வழங்கியது. இந்நிலையில் ஈரான் போரின் காரணமாக விமான எரிபொருள் விலைகள் கடுமையாக உயர்ந்ததால் இரண்டு ஆண்டுகளுக்குள் இரண்டாவது முறையாக இந்த நிறுவனம் திவால் நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேர்ந்தது.

மேலும் வாசிக்க >>>

மற்றுமொரு எரிபொருள் கப்பலை கடத்திய சோமாலிய கடற்கொள்ளையர்கள்

Sunday, May 3rd, 2026 at 9:46 (SLT)

யேமன் கடல் எல்லைக்கு அப்பால் பயணித்துக்கொண்டிருந்த எரிபொருள் கப்பலொன்றை சோமாலிய கடற்கொள்ளையர்கள் கடத்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

“எம்.டி. யுரேகா” (MT Eureka) எனும் பெயருடைய இந்தக் கப்பல் கடத்தப்பட்டுள்ளதாகவும், அது தற்போது சோமாலியாவை நோக்கி பயணித்துக்கொண்டிருப்பதாகவும் யேமன் கடலோர பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது.

மேலும் வாசிக்க >>>

ஹபராதுவவில் மின்னல் தாக்கி இளம் பெண் உயிரிழப்பு

Sunday, May 3rd, 2026 at 9:43 (SLT)

நிலவிய சீரற்ற வானிலை காரணமாக ஹபராதுவ, கொக்வத்த பிரதேசத்தில் உள்ள வீடொன்றின் மீது மின்னல் தாக்கியதில் அங்கிருந்த பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றொரு பெண் படுகாயமடைந்துள்ளார். இந்த விபத்தில் ஹபராதுவ, கொக்வத்த பிரதேசத்தைச் சேர்ந்த 26 வயதுடைய இளம் பெண்ணே உயிரிழந்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

யாழில் மரத்தில் ஏறியவர் தவறி விழுந்து உயிரிழப்பு

Saturday, May 2nd, 2026 at 9:36 (SLT)

யாழ்ப்பாணத்தில் நேற்று (01) கறிவேப்பிலை பறிப்பதற்காக மரத்தில் ஏறியவர் தவறி கீழே விழுந்து உயிரிழந்துள்ளார். காங்கேசன்துறை வீதி, நாச்சிமார் கோவிலடியை சேர்ந்த 64 வயதுடையவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

ஈரானில் விமான சேவை மீண்டும் ஆரம்பம்

Saturday, May 2nd, 2026 at 9:33 (SLT)

அமெரிக்க – இஸ்ரேல் கூட்டுப்படைகள் ஈரான் மீது தொடுத்த போர் காரணமாக, சுமார் 58 நாள்களாக இடைநிறுத்தப்பட்டிருந்த ஈரானின் வான்பரப்பு மற்றும் விமான சேவைகள் தற்போது மீண்டும் செயல்பாட்டுக்கு வந்துள்ளன.

மேலும் வாசிக்க >>>

தமிழக கடற்தொழிலாளர்களால் சிறைப்பிடிக்கப்பட்டவர் 10 வருடங்களாக கடற்கொள்ளையில் ஈடுபடுபவர் : ஊரவர்கள் பரபரப்பு குற்றச்சாட்டு

Saturday, May 2nd, 2026 at 9:28 (SLT)

தமிழக கடற்தொழிலாளர்களால் சிறைப்பிடிக்கப்பட்டு , தமிழக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட நபர் கடற்கொள்ளையர் எனவும், குறித்த நபருடன் இணைந்து சிலர் கடந்த 10 வருடங்களாக கடற்கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வருகிறார்கள் என பலாலி கடற்தொழிலாளர் கூட்டுறவு சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை குறித்த கடற்கொள்ளை கும்பலுக்கு எதிராக பொலிஸார் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடற்தொழிலாளர் கூட்டுறவு சங்கத்தின் கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டு , பலாலி பொலிசாரிடம் தீர்மானம் கையளிக்கப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க >>>

ஐரோப்பிய கார்களுக்கு 25% வரி விதித்த டிரம்ப் வர்த்தக ஒப்பந்தத்தை மீறியதாக ஐரோப்பிய ஒன்றியம் மீது குற்றச்சாட்டு

Saturday, May 2nd, 2026 at 5:47 (SLT)

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஐரோப்பிய ஒன்றியத்தில் (EU) இருந்து அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் கார்கள் மற்றும் டிரக்குகள் மீது 25 சதவீத இறக்குமதி வரி (Tariffs) விதிக்கப்படும் என்று அதிரடியாக அறிவித்துள்ளார். ஐரோப்பிய நாடுகள் அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தங்களைச் சரியாகப் பின்பற்றவில்லை என்றும், அமெரிக்கப் பொருட்களுக்குச் சமமான வாய்ப்புகளை வழங்க மறுப்பதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். “அவர்கள் வர்த்தக ஒப்பந்தங்களுக்கு இணங்கவில்லை; எனவே அமெரிக்கத் தொழிலாளர்களைக் காக்க இந்த நடவடிக்கை அவசியம்” என்று டிரம்ப் தனது எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டுள்ளார்.

மேலும் வாசிக்க >>>

போரை முடிவுக்கு கொண்டு வரும் ஒப்பந்தம் செய்து கொள்ள ஈரான் துடிக்கிறது

Saturday, May 2nd, 2026 at 5:41 (SLT)

தற்போது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ள போரை முடிவுக் கொண்டுவருவதற்காக ஒப்பந்தம் செய்து கொள்ள ஈரான் துடிப்பதாக அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து போர் நடத்தி வருகிறது. அதற்கு ஈரானும் பதிலடி கொடுத்து வருகிறது. இந்த போர் கடந்த பிப்ரவரி 28ம் தேதி தொடங்கியது. பதற்றமான சூழல் நிலவி வந்த நிலையில் இந்த தற்காலிக போர் நிறுத்தம் செய்வதற்கு இரு நாடுகளும் ஒப்புக்கொண்டன. வருகின்ற 8ம் தேதி வரை போர் நிறுத்தம் அமலில் இருக்கும்.

மேலும் வாசிக்க >>>

சர்வதேச உழைப்பாளர் தினம் இன்றாகும்

Friday, May 1st, 2026 at 7:30 (SLT)

இன்று நாம் அனுபவிக்கும் எட்டு மணி நேர வேலை மற்றும் வாராந்த விடுமுறை என்பது தானாகக் கிடைத்தவை அல்ல. 19-ஆம் நூற்றாண்டில் அமெரிக்காவின் சிகாகோ வீதிகளில் தொழிலாளர்கள் சிந்திய இரத்தத்திலிருந்து கிடைத்ததே இந்த சர்வதேச மே தினமாகும்.

மேலும் வாசிக்க >>>

மே தினத்தில் அரசாங்கத்துக்கு மக்கள் பதிலடி கொடுப்பார்கள் : சாமர சம்பத் தசநாயக்க 

Friday, May 1st, 2026 at 7:25 (SLT)

தற்போதைய அரசாங்கம் மக்களைக் குழப்பி, தனது அதிகாரத்தைத் தக்கவைத்துக்கொள்ளப் பல்வேறு சதித்திட்டங்களைத் தீட்டி வருவதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க கடுமையாகச் சாடியுள்ளார்.

மேலும் வாசிக்க >>>

கடையைக் கொள்ளையடித்த கும்பல் தடுக்க முயன்ற பெண் மீது காரை ஏற்றிச் சென்ற கொடூரம் : லண்டனில் அரங்கேறிய கொடூரச் சம்பவம்

Friday, May 1st, 2026 at 7:19 (SLT)

தெற்கு லண்டனின் க்ராய்டன் (Croydon) பகுதியில் உள்ள ஒரு சிறிய மளிகைக் கடையில் கடந்த செவ்வாய்க்கிழமை மாலை இந்த கொடூர சம்பவம் நிகழ்ந்தது. கடையினுள் புகுந்த மூன்று பேர் கொண்ட கும்பல், அங்கிருந்த பொருட்களைத் திருடிக்கொண்டு தப்ப முயன்றது. அப்போது கடையின் உரிமையாளரான 42 வயது பெண்மணி, திருடர்களைத் தடுத்து நிறுத்த கடையின் வாசலுக்கு ஓடி வந்துள்ளார். ஆனால், சிறிதும் இரக்கமில்லாத அந்தத் திருடர்கள், தாங்கள் வந்த காரை வேகமாக இயக்கி அந்தப் பெண் மீது நேருக்கு நேராக மோதிவிட்டு நிற்காமல் தப்பிச் சென்றனர்.

மேலும் வாசிக்க >>>