தவெக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு: 12 நாள்களில் சிறுமி கடத்திப் படுகொலை தவெக அரசைச் சாடும் திமுக

Saturday, May 23rd, 2026 at 17:09 (SLT)

தமிழகத்தில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள தவெக கூட்டணி அரசின் கீழ் சட்டம்-ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்துவிட்டதாக முதன்மைக் எதிர்க்கட்சியான திமுக கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது. கோவையில் 10 வயது சிறுமி கடத்தப்பட்டு, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு ஏரியில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட கொடூர சம்பவத்தைத் தொடர்ந்து இந்த அரசியல் மோதல் வெடித்துள்ளது. புதிய அரசு பதவியேற்ற வெறும் 12 நாள்களுக்குள் தமிழகத்தின் வெவ்வேறு பகுதிகளில் சிறுமிகளுக்கு எதிராக அடுத்தடுத்து இத்தகைய கொடூர குற்றங்கள் அரங்கேறி வருவது பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது என தினமணி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும் வாசிக்க >>>

மன்னிக்க முடியாத குற்றச் செயல் சூலூர் துயரத்திற்கு முதல்வர் விஜய் இரங்கல்

Saturday, May 23rd, 2026 at 17:02 (SLT)

சூலூர் சிறுமி கொலை தொடர்பாக தமிழக முதல்வர் விஜய் அறிக்கை வெளியிட்டுள்ளார். கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி மாயமான நிலையில், குளம் அருகே உள்ள முட்புதரில் நேற்று அவரது சடலத்தை மீட்டுள்ளனர்.

மேலும் வாசிக்க >>>

தமிழ்நாட்டில் மூடப்படும் 717 டாஸ்மாக் கடைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு வேறு கடையில் பணி அமர்த்த உத்தரவு

Saturday, May 23rd, 2026 at 8:46 (SLT)

தமிழ்நாட்டில் மூடப்படும் 717 டாஸ்மாக் கடைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு வேறு கடையில் பணி அமர்த்த உத்தரவிடப்பட்டுள்ளது. கல்வி நிலையங்கள், வழிபாட்டு தலங்கள் அருகே உள்ள 717 டாஸ்மாக் கடைகள் மூடப்படுகின்றன. மூடப்பட்ட கடை அருகே விற்பனை அதிகமாக உள்ள கடைகளில் பணி நியமனம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க >>>

உக்ரைனுக்கு ரூ.1032 கோடி ஏவுகணைகள் விற்பனை: அமெரிக்க அரசு ஒப்புதல்

Saturday, May 23rd, 2026 at 8:43 (SLT)

உக்ரைனுக்கு ரூ.1032 கோடி மதிப்புள்ள ஹாக் ஏவுகணைகளை விற்பனை செய்வதற்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளது. கடந்த 4 ஆண்டுகளாக நீடிக்கும் உக்ரைன் – ரஷ்யா இடையேயான தொடர் சண்டையில், ரஷ்யாவின் தொலை தூர இலக்குகளைக் குறிவைத்து உக்ரைன் தாக்குதல்களை தொடங்கி உள்ளது இதற்காக உள்நாட்டில் வடிவமைக்கப்பட்ட டிரோன் மற்றும் ஏவுகணை தொழில்நுட்பத்தை உக்ரைன் பயன்படுத்தி வருகிறது.

மேலும் வாசிக்க >>>

எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை: 2 இந்திய வீரர்கள் பலி

Saturday, May 23rd, 2026 at 8:38 (SLT)

உலகின் மிக உயரமான எவரெஸ்ட் மலை சிகரத்தில் ஏறி சாதனை படைத்த 2 இந்திய வீரர்கள் கடும் சோர்வு காரணமாக பரிதாபமாக உயிரிழந்தனர். கடந்த 20ம் தேதி 274 மலையேற்ற வீரர்கள் உலகின் மிக உயரமான எவரெஸ்ட் மலை சிகரத்தில் ஏறி சாதனை படைத்தனர். தற்போதைய சீசனில் எவரெஸ்ட் சிகரத்தை ஏற 502 வீரர்களுக்கு நேபாள அரசு அனுமதி வழங்கியது. அதில், 3 இந்தியர்கள் உட்பட 274 பேர் ஒரே நாளில் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி உலக சாதனை படைத்தனர்.

மேலும் வாசிக்க >>>

ஜப்பானில் தீ விபத்து: பழமையான கோயில் நாசம்

Friday, May 22nd, 2026 at 11:52 (SLT)

ஜப்பானின் ஹிரோஷிமா மாகாணத்தில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ‘தைஷோயின்’ என்ற பௌத்த கோயிலின் ஒரு பகுதி நேற்று ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் முற்றிலும் எரிந்து சாம்பலாகியது.

மேலும் வாசிக்க >>>

21 பாதாள உலக குழு உறுப்பினர்கள் நாட்டுக்கு

Friday, May 22nd, 2026 at 11:46 (SLT)

டுபாயில் இருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டதாகக் கூறப்படும் 21 பாதாள உலகக் குழு உறுப்பினர்கள் இன்று (22) காலை அழைத்து வரப்பட்டுள்ளனர். நிலவும் மோசமான காலநிலை காரணமாக, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வருகை தரவிருந்த பல விமானங்கள் மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டிருந்தது.

மேலும் வாசிக்க >>>

நிலவும் காலநிலை காரணமாக கட்டுநாயக்க வந்த விமானங்கள் மத்தள விமான நிலையத்திற்கு

Friday, May 22nd, 2026 at 7:07 (SLT)

நிலவும் மோசமான காலநிலை காரணமாக, கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த பல விமானங்கள் மத்தள சர்வதேச விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டுள்ளன.

மேலும் வாசிக்க >>>

60 நாளில் வேலை கிடைக்காவிட்டால் அமெரிக்காவை விட்டு வெளியேற வேண்டும்: எச்1பி விசா பெற்றவர்கள் கலக்கம்

Friday, May 22nd, 2026 at 7:03 (SLT)

மெட்டா, அமேசான் போன்ற நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், 60 நாளில் வேறு வேலையில் சேராவிட்டால் அமெரிக்காவை விட்டு வெளியேற வேண்டிய இக்கட்டான நிலைக்கு எச்-1பி விசாதாரர்கள் தள்ளப்பட்டுள்ளனர். பல ஆண்டுகளாக இந்திய பொறியாளர்களும், சாப்ட்வேர் டெவலப்பர்களும் அமெரிக்காவில் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களை உருவாக்க உதவினர். நல்ல சம்பளம், வசதியான வாழ்க்கை காரணமாக அமெரிக்காவிலேயே நிரந்தரமாக குடியேற பலரும் முயல்கின்றனர். அந்த கனவில் அங்கேயே வீடு வாங்கினர். குடும்பத்துடன் குடிபெயர்ந்தனர். அமெரிக்காவிலேயே பலரும் குழந்தையையும் பெற்றுள்ளனர்.

மேலும் வாசிக்க >>>

ரஷ்ய சுத்திகரிப்பு நிலையம் மீது டிரோன் தாக்குதல்

Friday, May 22nd, 2026 at 6:56 (SLT)

ரஷ்யாவின் மற்றொரு முக்கிய சுத்திகரிப்பு நிலையத்தின் மீது டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, ‘‘ரஷ்யாவிற்குள் 800கி.மீக்கும் அதிகமான தொலைவில் அமைந்துள்ள சிஸ்ரான் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் மீது டிரோன் தாக்குதல்கள் நடத்தப்பட்டன” என்று தெரிவித்துள்ளார். இது குறித்த வீடியோவையும் அவர் பகிர்ந்து கொண்டுள்ளார்.

மேலும் வாசிக்க >>>

தமிழ்நாடு அமைச்சரவை பதவியேற்பு விழா தொடங்கியது

Thursday, May 21st, 2026 at 10:31 (SLT)

தமிழ்நாட்டில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அமைச்சரவை விரிவாக்கத்தின் புதிய அமைச்சர்களுக்கான பதவியேற்பு விழா இன்று (மே 21) காலை 10 மணிக்கு ஆளுநர் மாளிகையில் தொடங்கியது. தமிழ்நாடு அமைச்சரவையில் புதிதாக பதவியேற்க உள்ள 23 அமைச்சர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. அமைச்சரவையில் இதுவரை 33 பேருக்கு இடமளிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், 108 இடங்களில் வெற்றி பெற்ற விஜயின் தமிழக வெற்றிக் கழகம், காங்கிரஸ், இடதுசாரிகள், விசிக, ஐயுஎம்எல் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது.

மேலும் வாசிக்க >>>

போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட தம்பதியினர் கைது சொத்துகள், வங்கி கணக்குகள் முடக்கம்

Thursday, May 21st, 2026 at 10:27 (SLT)

உடனடிப் பணப்பரிமாற்ற முறைகளைப் பயன்படுத்தி போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்த தம்பதியினரின் சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன.சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினரால் பணச்சலவை தடுப்புச் சட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட நீண்டகால விசாரணைகளின் பின்னரே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் வாசிக்க >>>

ஆப்கானிஸ்தானில் வறுமையின் உச்சம்! 7 வயது மகளை திருமண சந்தையில் விற்கத் துணியும் தந்தை

Thursday, May 21st, 2026 at 7:22 (SLT)

தலிபான்களின் கட்டுப்பாட்டில் உள்ள ஆப்கானிஸ்தானின் கோர் (Ghor) மாகாணத்தில் நிலவி வரும் தீவிர வறுமை மற்றும் வேலையில்லாத் திண்டாட்டம் குறித்துப் புகழ்பெற்ற சர்வதேச ஊடகமான ‘பிபிசி’ (BBC) வெளியிட்டுள்ள களஆய்வு அறிக்கை உலகையே அதிரவைத்துள்ளது. அந்தப் பிராந்தியத்தில் கடுமையான உணவுப் பஞ்சம் நிலவி வருவதால், குடும்பத்தைக் காப்பாற்ற வேறு வழியின்றிப் பெற்ற தாயும் தந்தையும் தங்களது பச்சிளம் குழந்தைகளை விற்கும் கொடூரமான உறைபனி நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். குறிப்பாக, அங்குள்ள ஃபிரோஸ்கோ என்ற நகரின் வீதிகளில் தினக்கூலி வேலைக்காக நூற்றுக்கணக்கான ஆண்கள் காத்துக் கிடக்கும் அவலமும், உடைந்த ரொட்டித் துண்டுகளுக்காக மனிதர்கள் அடித்துக் கொள்ளும் காட்சிகளும் பதிவாகியுள்ளன.

மேலும் வாசிக்க >>>

இருதரப்பு உறவை மேம்படுத்த முடிவு; இத்தாலி பிரதமருடன் மோடி பேச்சுவார்த்தை: 20 பில்லியன் யூரோ வர்த்தக இலக்கு நிர்ணயம்

Thursday, May 21st, 2026 at 7:14 (SLT)

பிரதமர் மோடி, இத்தாலி பிரதமர் ஜியார்ஜியா மெலோனி இடையேயான சந்திப்பில் இருதரப்பு உறவை மேலும் மேம்படுத்த முடிவு செய்யப்பட்டது. 2029ம் ஆண்டுக்குள் இருதரப்பு வர்த்தகத்தை 20 பில்லியன் யூரோ டாலருக்கு உயர்த்தவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி கடந்த 15ம் தேதி 5 நாடுகளுக்கான சுற்றுப்பயணத்தை தொடங்கினார். இதில் ஐக்கிய அரபு அமீரகம், நெதர்லாந்து, ஸ்வீடன், நார்வே நாடுகளைத் தொடர்ந்து இறுதிகட்டமாக இத்தாலி நாட்டிற்கு நேற்று முன்தினம் இரவு சென்றடைந்தார். தலைநகர் ரோமில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இத்தாலி பிரதமர் ஜியார்ஜியா மெலோனி, பிரதமர் மோடிக்கு இரவு விருந்து அளித்தார்.

மேலும் வாசிக்க >>>

12 இலட்சத்திற்கு விட்ஸ் கார் கனவை நனவாக்குங்கள் அரசாங்கத்திற்கு சஜித் சவால்

Wednesday, May 20th, 2026 at 10:36 (SLT)

அரச வருவாய் அதிகரித்து திறைசேரி நிரம்பி வழிகிறது என்றால், எரிபொருள் மற்றும் மின்சாரக் கட்டணங்களைக் குறைத்து மக்களுக்கு நிவாரணம் வழங்குமாறும், தேர்தல் காலத்தில் வாக்குறுதியளித்தபடி 12 இலட்சம் ரூபாவிற்கு ‘விட்ஸ்’ (Vitz) ரக காரை வாங்கும் மக்களின் கனவை நனவாக்குமாறும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அரசாங்கத்திற்குச் சவால் விடுத்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>