மத்திய கிழக்கில் ஈரான் மற்றும் அமெரிக்கா-இஸ்ரேல் படைகளுக்கு இடையே நடைபெற்று வரும் போர் எட்டாவது நாளை எட்டியுள்ள நிலையில், ஜோர்டானின் முவாஃபக் சால்டி விமானப் படைத்தளத்தில் நிலைநிறுத்தப்பட்டிருந்த அமெரிக்காவின் அதிநவீன ‘தாட்’ (THAAD) ஏவுகணை பாதுகாப்பு அமைப்பின் முக்கிய ரேடார் தொகுதியை ஈரான் படைகள் தாக்கி அழித்துள்ளன. சுமார் 300 மில்லியன் டொலர் (2,700 கோடி ரூபாய்) மதிப்பிலான இந்த AN/TPY-2 ரேடார் அமைப்பு, வான்வழி மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணை அச்சுறுத்தல்களை முன்கூட்டியே கண்டறிந்து வழிநடத்துவதில் மிக முக்கியப் பங்காற்றி வந்தது. ஈரான் நடத்திய இந்தத் தாக்குதலை அமெரிக்க அதிகாரிகளும் உறுதிப்படுத்தியுள்ளனர்.
மேலும் வாசிக்க >>>