ஈரானுடன் உடன்படிக்கை செய்யத் தயாரில்லை: ட்ரம்ப் அறிவிப்பு

Sunday, March 15th, 2026 at 7:06 (SLT)

ஈரானுடன் உடன்படிக்கை ஒன்றைச் செய்துகொள்வதற்குத் தாம் தயாராக இல்லை என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்க ஊடக நிறுவனமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில், ஈரானுக்கு உடன்படிக்கை செய்துகொள்ளும் தேவை உள்ள போதிலும், அதற்கான நிபந்தனைகள் இன்னும் போதுமானதாக இல்லாததால் தாம் தற்போது அதனைச் செய்ய விரும்பவில்லை என்று ட்ரம்ப் கூறியுள்ளார்.

மேலும் வாசிக்க >>>

அனைத்து எரிபொருள் நிலையங்களிலும் QR முறையில் எரிபொருள் விநியோகம்

Sunday, March 15th, 2026 at 7:03 (SLT)

நாட்டிலுள்ள அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் QR குறியீட்டு (QR Code) முறைமையின் கீழ் எரிபொருள் விநியோகிக்கும் நடைமுறை இன்று (15) முதல் அமுலுக்கு வரும் என வலுசக்தி அமைச்சு அறிவித்துள்ளது.

மேலும் வாசிக்க >>>

18 நாள் பச்சிளம் குழந்தை கட்டிடத்திலிருந்து விழுந்து பலி : பெண் கைது

Sunday, March 15th, 2026 at 6:58 (SLT)

லண்டனின் மத்திய பகுதியில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் (Westminster) பகுதியில், 18 நாட்களே ஆன பெண் குழந்தை ஒன்று உயரத்தில் இருந்து விழுந்து பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சனிக்கிழமை காலை இந்தத் துயரச் சம்பவம் நிகழ்ந்ததாக லண்டன் பெருநகரக் காவல் துறை (Metropolitan Police) தெரிவித்துள்ளது. ஹார்ஸ்பெர்ரி சாலையில் (Horseferry Road) உள்ள குடியிருப்புப் பகுதியில் இருந்து குழந்தை விழுந்ததாக வந்த தகவலைத் தொடர்ந்து, காவல்துறையும் மருத்துவக் குழுவினரும் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

மேலும் வாசிக்க >>>

ஜேர்மன் பள்ளியிலிருந்து பொலிசாருக்கு வந்த அழைப்பு

Saturday, March 14th, 2026 at 7:05 (SLT)

நேற்று முன்தினம் காலை, ஜேர்மனியின் Osnabrück நகரிலுள்ள பள்ளி ஒன்றிலிருந்து வந்த அழைப்பைத் தொடர்ந்து, பொலிசார் அங்கு விரைந்துள்ளனர். விடயம் என்னவென்றால், வகுப்பு ஒன்றில் பாடம் நடத்திக்கொண்டிருந்த ஆசிரியை ஒருவர், பிள்ளைகள் தங்களுக்குள் ஏதோ ரகசியமாக பேசிக்கொண்டிருப்பதை கவனித்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

உயிரிழந்த ஈரான் மாணவர்களின் குடும்பங்களுக்கு சீனா நிதியுதவி

Saturday, March 14th, 2026 at 6:54 (SLT)

அமெரிக்கா, இஸ்ரேல் இரு நாடுகளும் இணைந்து ஈரானிலுள்ள பாடசாலை மீது நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்ட மாணவர்களின் குடும்பங்களுக்கு ரூபா 1.84 கோடி நிதியுதவி வழங்குவதாக சீனா தெரிவித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இத் தாக்குதலில் 150 இற்கும் அதிகமான மாணவர்கள் உயிரிழந்ததோடு, 100இற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

மேலும் வாசிக்க >>>

நாட்டின் பல பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு

Saturday, March 14th, 2026 at 6:49 (SLT)

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி, மாத்தறை, மன்னார் மற்றும் அனுராதபுர மாவட்டங்களிலும் மாலை 2.00 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மேலும் வாசிக்க >>>

மொஜ்தபா கமேனி பற்றிய தகவல் வழங்கினால் 10 மில்லியன் டொலர் பணப்பரிசு

Saturday, March 14th, 2026 at 6:47 (SLT)

ஈரானின் புதிய உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி மற்றும் அந்நாட்டின் இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படையின் (IRGC) உயர்மட்டத் தலைவர்கள் பற்றிய தகவல்களை வழங்குபவர்களுக்கு 10 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வரை நிதி வெகுமதி வழங்க அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் தீர்மானித்துள்ளது.

மேலும் வாசிக்க >>>

அவசர எரிபொருள் கொள்வனவு குறித்து ரஷ்யாவுடனும் பேச்சுவார்த்தை

Saturday, March 14th, 2026 at 6:44 (SLT)

அவசர எரிபொருள் கொள்வனவு குறித்து அரசாங்கம் ரஷ்யாவுடனும் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளது. இலங்கைக்கான ரஷ்யத் தூதுவர் லெவன் எஸ். ஜகார்யன் மற்றும் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோருக்கிடையில் வெள்ளிக்கிழமை (13) அமைச்சில் இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றது.

மேலும் வாசிக்க >>>

அவசர எரிபொருள் கொள்வனவு கோரிக்கைக்கு இந்தியாவிடமிருந்து நேர்மறையான பதில்

Saturday, March 14th, 2026 at 6:38 (SLT)

மத்திய கிழக்கில் நிலவி வரும் பதற்றமான சூழல் தொடருமானால், எரிபொருள் விநியோகத்தைப் பாதுகாப்பதில் உதவி கோரி இலங்கை விடுத்த கோரிக்கைக்கு இந்தியா சாதகமான பதிலை அளித்துள்ளதாக இலங்கை தெரிவித்துள்ளது.

மேலும் வாசிக்க >>>

இஸ்லாமாபாத்தில் ட்ரோன் அச்சுறுத்தல் : வான்பரப்பை மூடிய பாகிஸ்தான்

Saturday, March 14th, 2026 at 6:34 (SLT)

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் வான்பரப்பில் ட்ரோன்கள் ஊடுருவியதாகத் தகவல் வெளியாகியதைத் தொடர்ந்து, இஸ்லாமாபாத் சர்வதேச விமான நிலையம் வெள்ளிக்கிழமை (13) தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க >>>

ஈரானுக்கு உதவ ஓமன் கடற்பரப்பிற்கு வந்துள்ள சீனாவின் அதி சக்திவாய்ந்த உளவு கப்பல்

Friday, March 13th, 2026 at 8:36 (SLT)

வலைகுடா பிராந்தியத்தில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ள பின்னணியில், ஓமன் கடற்கரைக்கு அருகிலுள்ள சர்வதேச கடற்பரப்பில் நிலைநிறுத்தப்பட்டுள்ள சீனாவின் ‘Liaowang 1’ உளவு கப்பல், உலக அரசியல் மற்றும் இராணுவ சக்திகளின் பலத்த கவனத்தை ஈர்த்துள்ளது.Politics

மேலும் வாசிக்க >>>

ஏப்ரல் இறுதி வரை தடையின்றி எரிபொருள்: இந்த மாதத்திற்குள் மேலும் 4 கப்பல்கள் வருவது உறுதி

Friday, March 13th, 2026 at 8:32 (SLT)

இந்த மாதத்திற்குள் இலங்கைக்கு வருமென உறுதிப்படுத்தப்பட்டுள்ள எரிபொருள் கப்பல்கள் மூலம், எதிர்வரும் ஏப்ரல் மாத இறுதி வரை நாட்டுக்குத் தேவையான எரிபொருள் கையிருப்பு கிடைக்குமென இலங்கை கனிய எண்ணெய் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

மேலும் வாசிக்க >>>

பிற்பகல் வேளையில் ஆங்காங்கே இடியுடன் கூடிய மழை

Friday, March 13th, 2026 at 8:29 (SLT)

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

மேலும் வாசிக்க >>>

ஈரானின் அணுசக்தி வளாகம் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்: முக்கிய இலக்குகளை அழித்ததாக அறிவிப்பு

Friday, March 13th, 2026 at 8:26 (SLT)

ஈரானின் அணு ஆயுதத் திட்டங்களை முடக்கும் நோக்கில், தெஹ்ரானுக்கு அருகிலுள்ள தலேகான் (Taleghan) அணுசக்தி வளாகத்தின் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளதாக இஸ்ரேலிய பாதுகாப்புப் படை (IDF) வியாழக்கிழமை அறிவித்துள்ளது. இந்த வளாகம், ஈரானின் அணு ஆயுதங்களை உருவாக்கும் திறன் சார்ந்த நுணுக்கமான சோதனைகள் மற்றும் மேம்பட்ட வெடிபொருள் ஆராய்ச்சிக்காகப் பயன்படுத்தப்பட்டு வந்ததாக இஸ்ரேல் குற்றம் சாட்டியுள்ளது. ஏற்கனவே கடந்த 2024-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இந்தத் தளம் தாக்கப்பட்ட நிலையில், ஈரான் மீண்டும் அதனைச் சீரமைத்துச் செயல்பாட்டிற்குக் கொண்டு வந்ததைக் கண்டறிந்ததை அடுத்து, மீண்டும் இந்தத் துல்லியத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

மேலும் வாசிக்க >>>

பெருமளவிலான போதைப்பொருள் இன்று தீயிட்டு அழிப்பு: புத்தளத்தில் விசேட நடவடிக்கை

Friday, March 13th, 2026 at 8:22 (SLT)

பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புக்களின் போது கைப்பற்றப்பட்டு, கொழும்பு மேல் நீதிமன்றில் வழக்கு விசாரணைகள் நிறைவடைந்த பெருமளவிலான போதைப்பொருட்களை அழிப்பதற்கான நடவடிக்கைகள் இன்று வெள்ளிக்கிழமை (13) காலை முன்னெடுக்கப்படவுள்ளன.

மேலும் வாசிக்க >>>