காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் புதிய சமன்படுத்தும் நீர்த்தேக்கத்தை (Mekedatu Dam) கட்டுவதற்குப் பூமி பூஜை நடத்தப் போவதாகக் கர்நாடக அரசு அறிவித்துள்ளதற்குத் தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தனது கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளார். “தமிழகத்தின் நதிநீர் உரிமைகளில் தவெக அரசு எள்ளளவும் சமரசம் செய்து கொள்ளாது” என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ள முதல்வர் விஜய், இது தொடர்பாகச் சென்னை தலைமைச் செயலகத்தில் காவிரி நதிநீர் நிபுணர்கள் மற்றும் சட்ட வல்லுநர்களுடன் அவசர ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினார்.
மேலும் வாசிக்க >>>














