தமிழ்நாடு அமைச்சரவை பதவியேற்பு விழா தொடங்கியது

Thursday, May 21st, 2026 at 10:31 (SLT)

தமிழ்நாட்டில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அமைச்சரவை விரிவாக்கத்தின் புதிய அமைச்சர்களுக்கான பதவியேற்பு விழா இன்று (மே 21) காலை 10 மணிக்கு ஆளுநர் மாளிகையில் தொடங்கியது. தமிழ்நாடு அமைச்சரவையில் புதிதாக பதவியேற்க உள்ள 23 அமைச்சர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. அமைச்சரவையில் இதுவரை 33 பேருக்கு இடமளிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், 108 இடங்களில் வெற்றி பெற்ற விஜயின் தமிழக வெற்றிக் கழகம், காங்கிரஸ், இடதுசாரிகள், விசிக, ஐயுஎம்எல் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது.

மேலும் வாசிக்க >>>

போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட தம்பதியினர் கைது சொத்துகள், வங்கி கணக்குகள் முடக்கம்

Thursday, May 21st, 2026 at 10:27 (SLT)

உடனடிப் பணப்பரிமாற்ற முறைகளைப் பயன்படுத்தி போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்த தம்பதியினரின் சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன.சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினரால் பணச்சலவை தடுப்புச் சட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட நீண்டகால விசாரணைகளின் பின்னரே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் வாசிக்க >>>

ஆப்கானிஸ்தானில் வறுமையின் உச்சம்! 7 வயது மகளை திருமண சந்தையில் விற்கத் துணியும் தந்தை

Thursday, May 21st, 2026 at 7:22 (SLT)

தலிபான்களின் கட்டுப்பாட்டில் உள்ள ஆப்கானிஸ்தானின் கோர் (Ghor) மாகாணத்தில் நிலவி வரும் தீவிர வறுமை மற்றும் வேலையில்லாத் திண்டாட்டம் குறித்துப் புகழ்பெற்ற சர்வதேச ஊடகமான ‘பிபிசி’ (BBC) வெளியிட்டுள்ள களஆய்வு அறிக்கை உலகையே அதிரவைத்துள்ளது. அந்தப் பிராந்தியத்தில் கடுமையான உணவுப் பஞ்சம் நிலவி வருவதால், குடும்பத்தைக் காப்பாற்ற வேறு வழியின்றிப் பெற்ற தாயும் தந்தையும் தங்களது பச்சிளம் குழந்தைகளை விற்கும் கொடூரமான உறைபனி நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். குறிப்பாக, அங்குள்ள ஃபிரோஸ்கோ என்ற நகரின் வீதிகளில் தினக்கூலி வேலைக்காக நூற்றுக்கணக்கான ஆண்கள் காத்துக் கிடக்கும் அவலமும், உடைந்த ரொட்டித் துண்டுகளுக்காக மனிதர்கள் அடித்துக் கொள்ளும் காட்சிகளும் பதிவாகியுள்ளன.

மேலும் வாசிக்க >>>

இருதரப்பு உறவை மேம்படுத்த முடிவு; இத்தாலி பிரதமருடன் மோடி பேச்சுவார்த்தை: 20 பில்லியன் யூரோ வர்த்தக இலக்கு நிர்ணயம்

Thursday, May 21st, 2026 at 7:14 (SLT)

பிரதமர் மோடி, இத்தாலி பிரதமர் ஜியார்ஜியா மெலோனி இடையேயான சந்திப்பில் இருதரப்பு உறவை மேலும் மேம்படுத்த முடிவு செய்யப்பட்டது. 2029ம் ஆண்டுக்குள் இருதரப்பு வர்த்தகத்தை 20 பில்லியன் யூரோ டாலருக்கு உயர்த்தவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி கடந்த 15ம் தேதி 5 நாடுகளுக்கான சுற்றுப்பயணத்தை தொடங்கினார். இதில் ஐக்கிய அரபு அமீரகம், நெதர்லாந்து, ஸ்வீடன், நார்வே நாடுகளைத் தொடர்ந்து இறுதிகட்டமாக இத்தாலி நாட்டிற்கு நேற்று முன்தினம் இரவு சென்றடைந்தார். தலைநகர் ரோமில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இத்தாலி பிரதமர் ஜியார்ஜியா மெலோனி, பிரதமர் மோடிக்கு இரவு விருந்து அளித்தார்.

மேலும் வாசிக்க >>>

12 இலட்சத்திற்கு விட்ஸ் கார் கனவை நனவாக்குங்கள் அரசாங்கத்திற்கு சஜித் சவால்

Wednesday, May 20th, 2026 at 10:36 (SLT)

அரச வருவாய் அதிகரித்து திறைசேரி நிரம்பி வழிகிறது என்றால், எரிபொருள் மற்றும் மின்சாரக் கட்டணங்களைக் குறைத்து மக்களுக்கு நிவாரணம் வழங்குமாறும், தேர்தல் காலத்தில் வாக்குறுதியளித்தபடி 12 இலட்சம் ரூபாவிற்கு ‘விட்ஸ்’ (Vitz) ரக காரை வாங்கும் மக்களின் கனவை நனவாக்குமாறும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அரசாங்கத்திற்குச் சவால் விடுத்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

போதைப்பொருள் பயன்படுத்திய 08 பஸ் சாரதிகளும், நடத்துனர் ஒருவரும் கைது

Wednesday, May 20th, 2026 at 10:32 (SLT)

களுத்துறை பகுதியில் பொதுப்போக்குவரத்து பஸ்களில் கடமையில் ஈடுபட்டிருந்த போது, போதைப்பொருள் பயன்படுத்தியிருந்த குற்றச்சாட்டின் கீழ் 08 பஸ் சாரதிகளும் நடத்துனர் ஒருவரும் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் வாசிக்க >>>

87 கையடக்கத் தொலைபேசிகளுடன் 03 சீனப் பிரஜைகள் கைது

Wednesday, May 20th, 2026 at 10:30 (SLT)

உரிய இறக்குமதி ஆவணங்களின்றி சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் கடத்தி வரப்பட்ட பெருமளவிலான அதிநவீன கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் பற்றரிகளுடன் மூன்று சீனப் பிரஜைகளைக் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

மேலும் வாசிக்க >>>

மல்யுத்த போட்டியில் சாதித்த பலாலி மாணவர்கள்

Wednesday, May 20th, 2026 at 10:27 (SLT)

மல்யுத்தம் போட்டியில் பலாலி வடக்கு அரசினர் தமிழ் கலவன் பாடசாலை 4 பதக்கங்களை கைப்பற்றி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. வடமாகாண பாடசாலைகளுக்கு இடையிலான ஆண்கள் பெண்களுக்கான மல்யுத்தப் போட்டிகள் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை கிளிநொச்சி மாவட்ட உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற்றது.

மேலும் வாசிக்க >>>

யாழ். மாநகர சபைக்கு புதிய ஆணையாளர்

Wednesday, May 20th, 2026 at 10:24 (SLT)

யாழ்ப்பாண மாநகர சபையின் புதிய ஆணையாளராக டி.சி.அரவிந்தராஜ் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், மாநகர ஆணையாளரான கடமையாற்றிய எஸ்.கிருஸ்ணேந்திரன் வடக்கு மாகாண தொழிற்துறைத் திணைக்களத்தின் புதிய பணிப்பாளராக வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனால் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் வாசிக்க >>>

எல்லோரையும் எல்லா காலமும் ஏமாற்ற முடியாது: முதல்வர் விஜய்யை விமர்சித்த மு.க.ஸ்டாலின்

Wednesday, May 20th, 2026 at 7:14 (SLT)

எல்லோரையும் எல்லாக் காலமும் ஏமாற்ற முடியாது என்று முதல்வர் விஜய்யை மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். தமிழ்நாடு முதல்வராக பொறுப்பேற்றிருக்கும் தவெக தலைவர் விஜய், அலுவலகத்தில் அமர்ந்து மதிய உணவு சாப்பிடுவது போன்ற புகைப்படமும், ஆங்கில கால நடைமுறைப்படி, இருக்கையில் போடப்பட்டிருந்த வெள்ளை துண்டை அகற்றியது போன்ற செய்திகளும் இணையத்தில் வேகமாக பரவியது. இந்த நிலையில், அலுவலகத்தில் அமர்ந்து சாப்பிடுவது போன்று வெளியானது ஏஐ புகைப்படம் என்றும், தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர்களும் வெள்ளை துண்டு போடாமல்தான் இருக்கையில் அமர்ந்திருந்தார்கள் என்றும் எதிர்க்கட்சிகள் தரப்பில் இணையத்தில் பதிலடி கொடுக்கப்பட்டன.

மேலும் வாசிக்க >>>

அமெரிக்க மசூதியில் தாக்குதல் 3 பேரை சுட்டுக்கொன்று 2 இளைஞர்கள் தற்கொலை

Wednesday, May 20th, 2026 at 6:20 (SLT)

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தின் சான் டியாகோ கவுண்டியில் உள்ள மிகப்பெரிய இஸ்லாமிய மையமான சான் டியாகோ மசூதி வளாகத்தில், நேற்று முன்தினம் பயங்கர துப்பாக்கிச் சூடு நடந்தது. மசூதி மற்றும் அங்கு இயங்கி வரும் பள்ளி வளாகத்திற்கு வெளியே திடீரென புகுந்த 2 சிறுவர்கள் நடத்திய இந்த கொடூரத் தாக்குதலில், அங்கு பணியில் இருந்த பாதுகாப்பு காவலர் உட்பட 3 ஆண்கள் சம்பவ இடத்திலேயே குண்டுகள் பாய்ந்து உயிரிழந்தனர். தாக்குதல் நடந்தபோது பள்ளி வளாகத்திற்குள் ஏராளமான குழந்தைகளும் மாணவர்களும் இருந்ததால் அங்கு பெரும் பதற்றமும் அலறல் சத்தமும் நிலவியது.

மேலும் வாசிக்க >>>

புடின் குறித்து ட்ரம்பிடம் ஷி ஜின்பிங் ரகசியமாகப் பேசினாரா? சர்வதேச ஊடக அறிக்கைக்குச் சீனா மறுப்பு

Wednesday, May 20th, 2026 at 6:16 (SLT)

பிரபல சர்வதேச ஊடகமான ‘பைனான்சியல் டைம்ஸ்’ (Financial Times) வெளியிட்ட செய்திக்குறிப்பில், கடந்த வாரம் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் சீனாவிற்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்ட போது, இரு நாட்டுத் தலைவர்களுக்கும் இடையே உக்ரைன் போர் குறித்து மிக நீண்ட ரகசிய விவாதங்கள் நடைபெற்றதாகக் கூறப்பட்டது. அப்போது, 2022-இல் உக்ரைன் மீது முழு அளவிலான போரைத் தொடுத்த தனது முடிவிற்காக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் இறுதியில் ‘வருந்தக் கூடும்’ என்று ஷி ஜின்பிங் தனிப்பட்ட முறையில் ட்ரம்பிடம் தெரிவித்ததாக அந்த அறிக்கை குறிப்பிட்டிருந்தது. இது சர்வதேச அரசியல் அரங்கில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், சீனா இதற்கு உடனடியாகப் பதிலடி கொடுத்துள்ளது.

மேலும் வாசிக்க >>>

ஆத்தூரில் மின்சாரம் தாக்கி கணவன், மனைவி பரிதாப சாவு: காப்பாற்றச்சென்ற கல்லூரி மாணவரும் பலி

Tuesday, May 19th, 2026 at 6:54 (SLT)

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் அக்ரஹாரம் பகுதியை சேர்ந்தவர் கருப்பையா (41). கொத்தனார். இவரது மனைவி சுதா (37). இவர்களுக்கு பிரவீனா (15), ஷிவானி (12) என, இரண்டு மகள்கள் உள்ளனர். இவர்கள் வசிக்கும் பகுதியில் நேற்று கன மழை பெய்தபோது, கருப்பையா வீட்டின் அருகே சென்ற உயரழுத்த மின்கம்பி அறுந்து விழுந்துள்ளது. அப்போது அங்கு நின்றிருந்த கருப்பையா மீது மின்சாரம் பாய்ந்ததால், அவர் அலறியுள்ளார். இந்த கூச்சல் கேட்டு மனைவி சுதா அவரை காப்பற்றச் சென்றுள்ளார். அப்போது அவர் மீதும் மின்சாரம் பாய்ந்தது. இதில் சம்பவ இடத்திலேயே இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேலும் வாசிக்க >>>

ஈரானில் இருந்து எரிபொருள் இறக்குமதி அதானி மீதான வழக்கை கைவிட்டது அமெரிக்கா

Tuesday, May 19th, 2026 at 6:46 (SLT)

அமெரிக்காவின் பங்குச் சந்தை கண்காணிப்பு அமைப்பான எஸ்.இ.சி மற்றும் நீதித்துறை, அதானி குழுமம் இந்தியாவில் மிகப்பெரிய சூரிய மின்சார திட்டங்களைப் பெறுவதற்காக இந்திய அதிகாரிகளுக்கு ரூ.2,100 கோடி லஞ்சம் வழங்கியதாகக் குற்றம்சாட்டியது. இது தொடர்பான வழக்கில், 2024ல் அதானிக்கு பிடிவாரன்ட் உத்தரவு அமெரிக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. ஆனால் இந்த வழக்கை கடந்த வாரம் ரத்து செய்வதாக அமெரிக்க நீதிமன்றம் அறிவித்தது. இதே போல் அதானி நிறுவனம் மீதான மேலும் ஒரு வழக்கை அமெரிக்கா நேற்று தள்ளுபடி செய்துள்ளது. ஈரானில் இருந்து எரிபொருள் இறக்குமதி செய்ய விதிக்கப்பட்ட தடையை மீறி அதானிக்கு சொந்தமான நிறுவனம் குஜராத்தில் உள்ள முந்த்ரா துறைமுகம் வழியாக ஈரானிய எல்பிஜி இறக்குமதி செய்ததாக அமெரிக்காவில் குற்றம் சாட்டப்பட்டது.

மேலும் வாசிக்க >>>

சீனாவில் பயங்கர நிலநடுக்கம்: 2 பேர் பலி, 7000 பேர் வெளியேற்றம்

Tuesday, May 19th, 2026 at 6:40 (SLT)

தெற்கு சீனாவின் குவாங்சி மாகாணத்தில் உள்ள லியூசோ நகரில் நேற்று அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 5.2 ஆக பதிவாகி உள்ளது. இந்த நிலநடுக்கத்தினால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் புகுந்தனர். பல இடங்களில் கட்டிடங்களில் விரிசல் ஏற்பட்டது. சுமார் 13 கட்டிடங்கள் இடிந்து விழுந்தன.

மேலும் வாசிக்க >>>