ஈரானில் உயிரிழப்பு 3100 ஐ கடந்தது

Friday, March 20th, 2026 at 11:17 (SLT)

அமெரிக்க – இஸ்ரேல் தாக்குதலை தொடர்ந்து ஈரானில் 3 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவை தளமாகக் கொண்ட மனித உரிமைகள் ஆர்வலர்களின் செய்தி நிலையம் இந்த புதிய அறிவிப்பை வௌியிட்டுள்ளது.

மேலும் வாசிக்க >>>

ஏற்றுமதிக்கு முன்னுரிமை அளித்து, இத்துறை எதிர்நோக்கும் சவால்களை வெற்றிகொள்ள அரசாங்கம் அதிகபட்சமாக தலையிடும் : ஜனாதிபதி

Friday, March 20th, 2026 at 11:15 (SLT)

ஏற்றுமதிக்கு முன்னுரிமை அளித்து, இத்துறை எதிர்நோக்கும் சவால்களை வெற்றிகொள்ள அரசாங்கம் அதிகபட்சமாக தலையிடும் என்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க வலியுறுத்தினார்.மத்திய கிழக்கில் உருவாகியுள்ள போர்ச் சூழல் காரணமாக இந்நாட்டின் ஏற்றுமதித் துறைக்கு ஏற்பட்டுள்ள சவால்களை வெற்றிகொள்வதற்கு எடுக்கப்பட வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதற்காக, இத்துறையின் பிரதான ஏற்றுமதியாளர்கள் மற்றும் இலங்கை வர்த்தக சபை பிரதிநிதிகளுடன் வியாழக்கிழமை (19) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் வாசிக்க >>>

IMF குழு 26ஆம் திகதி இலங்கை வருகை

Friday, March 20th, 2026 at 11:11 (SLT)

சர்வதேச நாணய நிதியத்தின் குழுவொன்று எதிர்வரும் 26 ஆம் திகதி இலங்கை வரவுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் தொடர்பாடல் திணைக்கள பணிப்பாளர் ஜூலி கோசாக் இதனைத் தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

நெருக்கடிக்கு மத்தியிலும் அத்தியாவசிய சேவைகள் முன்னெடுப்பு : ஹரிணி அமரசூரிய

Friday, March 20th, 2026 at 11:08 (SLT)

தற்போதைய நெருக்கடி நிலைமைக்கு மத்தியிலும் அத்தியாவசிய சேவைகள், அரச சேவைகள் மற்றும் கைத்தொழில்களைத் தடையின்றி முன்னெடுத்துச் செல்வதே அரசாங்கத்தின் இலக்காகும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். மக்கள் நலனுக்காக வழங்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு எதிர்க்கட்சியினரிடம் அவர் கோரிக்கை விடுத்தார்.

மேலும் வாசிக்க >>>

ஆப்கானிஸ்தானில் பிறை தென்பட்ட அடிப்படையில் இன்று வியாழக்கிழமை அங்கு பெருநாள் கொண்டாடப்படுகிறது

Thursday, March 19th, 2026 at 8:02 (SLT)

ஆப்கானிஸ்தானில் பிறை தென்பட்ட அடிப்படையில் இன்று வியாழக்கிழமை அங்கு பெருநாள் கொண்டாடப்படுகிறது. ஆப்கானிஸ்தானில் பல மாகாணங்களில் பிறை காணப்பட்டதாகவும், முஸ்லிம்களின் புனித மாதமான ரமலான் முடிவைக் குறிக்கும் ஈத் அல்-ஃபித்ர் பெருநாள் இன்று வியாழக்கிழமை அனுசரிக்கப்படும் என்றும் ஆப்கானிஸ்தான் புதன்கிழமை இரவு அறிவித்தது.

மேலும் வாசிக்க >>>

உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு மீது இஸ்ரேல் தாக்குதல் : கட்டார் கண்டனம்

Thursday, March 19th, 2026 at 7:57 (SLT)

ஈரானில் உள்ள உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளமைக்கு கட்டார் கண்டனம் வெளியிட்டுள்ளது. ஈரானின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க >>>

கடன் செலுத்தும் காலத்தை நீடிக்குமாறு கோரிக்கை : தயாசிறி

Thursday, March 19th, 2026 at 7:54 (SLT)

இலங்கை பெற்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் கடன்களை மறுசீரமைப்பதன் மூலம், கடன் திருப்பிச் செலுத்தும் காலத்தை 2029 ஆம் ஆண்டிற்கு அப்பால் நீடிக்குமாறு பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர கோரிக்கை விடுத்துள்ளார். இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து அவர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

லாரிஜானியின் மரணத்திற்குப் பழிவாங்கப்படும் என்று மொஜ்தபா கமேனி சபதம்

Thursday, March 19th, 2026 at 7:51 (SLT)

ஈரான் உயர்மட்டத் தலைவரான அயதுல்லா அலி கமேனியின் மகன் மொஜ்தபா கமேனி, ஈரானிய அதிகாரி லாரிஜானி கொல்லப்பட்டதற்கு அமெரிக்காவும் இஸ்ரேலும் கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று எச்சரித்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

இஸ்ரேல் வாழ் இலங்கையர்களுக்கு தூதுவர் விடுத்துள்ள விசேட அறிவிப்பு

Wednesday, March 18th, 2026 at 10:24 (SLT)

விடுமுறை மற்றும் இதர காரணங்களுக்காக இஸ்ரேலில் இருந்து வெளியேறியுள்ள பணியாளர்களின் விசா காலம் 2026 ஏப்ரல் 30 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

லஞ்ச ஊழல் ஆணைக்குழு அனைவரையும் ஒரேமாதிரி செயற்படுத்த வேண்டும் : முஜிபுர் ரஹ்மான்

Wednesday, March 18th, 2026 at 6:33 (SLT)

லஞ்ச ஊழல் ஆணைக்குழு அனைவரையும் ஒரேமாதிரி செயற்படுத்த வேண்டும். தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்களுக்கு ஒருமாதிரியும் ஏனையவர்களுக்கு வேறு மாதிரியும் செயற்பட முடியாது. அத்துடன் நாட்டில் மின் துண்டிப்பு மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டால் அதற்கான முழு பொறுப்பையும் அரசாங்கம் ஏற்றுக்கொள்ள வேண்டும். அரசாங்கத்தின் நிலக்கரி மோசடியே இதற்கு காரணமாகும் என முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.

மேலும் வாசிக்க >>>

அரசாங்கத்தின் மீதான மக்களின் நம்பிக்கைகள் இல்லாமல் போகின்றது : திலித் ஜயவீர

Wednesday, March 18th, 2026 at 6:27 (SLT)

அரசாங்கம் கடந்த காலங்களில் கூறிய விடயங்கள் இப்போது பொய்யென நிரூபனமாகி வருவதால், அரசாங்கத்தின் மீதான மக்களின் நம்பிக்கைகள் இல்லாமல் போகின்றது என சர்வஜன பலய கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான திலித் ஜயவீர தெரிவித்தார்.

மேலும் வாசிக்க >>>

கப்பலை அனுப்ப மாட்டோம்: போரை உடனே நிறுத்துங்கள் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் அதிரடி

Wednesday, March 18th, 2026 at 6:20 (SLT)

மத்திய கிழக்கில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் முன்னெடுத்து வரும் ‘ஆபரேஷன் எபிக் பியூரி’ (Operation Epic Fury) போர் தீவிரமடைந்துள்ள நிலையில், ஹார்முஸ் ஜலசந்தியைத் (Strait of Hormuz) திறப்பதற்கான இராணுவ நடவடிக்கைகளில் பிரான்ஸ் பங்கேற்காது என்று அதிபர் இம்மானுவேல் மேக்ரான் திட்டவட்டமாக அறிவித்துள்ளார். உலகளாவிய எரிசக்தி விநியோகத்தில் 20 சதவீதத்தைக் கொண்டுள்ள இந்த முக்கிய கடல்வழிப் பாதையை ஈரான் மூடியுள்ள நிலையில், அதனை மீட்டெடுக்க நேட்டோ (NATO) நாடுகளின் உதவியை அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கோரியிருந்தார். இருப்பினும், பிரான்ஸ் இந்தப் போரில் ஒரு தரப்பாக இல்லை என்றும், தற்போதைய சூழலில் தனது கடற்படையை அங்கு அனுப்பப் போவதில்லை என்றும் மேக்ரான் கூறியுள்ளார்.

மேலும் வாசிக்க >>>

யார் உதவியும் எங்களுக்குத் தேவையில்லை : டொனால்ட் ட்ரம்ப்

Wednesday, March 18th, 2026 at 6:15 (SLT)

மத்திய கிழக்கில் ஹார்முஸ் நீரிணையை (Strait of Hormuz) மீண்டும் திறப்பதற்கும், ஈரானுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைகளுக்கும் உதவி கோரிய அமெரிக்காவின் கோரிக்கையை நேட்டோ உறுப்பு நாடுகள் நிராகரித்துள்ளன. ஜெர்மனி, இத்தாலி மற்றும் ஸ்பெயின் போன்ற நாடுகள் தங்கள் நாட்டுச் சட்ட திட்டங்களைக் காரணம் காட்டி போர் கப்பல்களை அனுப்ப மறுத்துவிட்டன. இதனால் அதிருப்தியடைந்துள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், “அமெரிக்காவிற்கு யாருடைய உதவியும் தேவையில்லை; நாங்களே உலகிலேயே வலிமையான ராணுவத்தைக் கொண்டுள்ளோம்” என்று ஆவேசமாகத் தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

எரிசக்தி முகாமைத்துவத்துடன் அத்தியாவசிய சேவைகள் தடையின்றி தொடரும் : ஜனாதிபதி

Tuesday, March 17th, 2026 at 7:36 (SLT)

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச்; சூழலால் எழுந்துள்ள சவால்களுக்கு மத்தியில், எரிசக்தியை முறையாக முகாமைத்துவம் செய்து, நாட்டின் பொருளாதாரச் செயல்முறை மற்றும் அத்தியாவசிய சேவைகளைத் தடையின்றி முன்னெடுப்பதற்கான திட்டங்கள் செயல்படுத்த இருப்பதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

மூன்று மாதங்களில் 20 பில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள் மீட்பு : அருண ஜயசேகர

Tuesday, March 17th, 2026 at 7:33 (SLT)

இவ்வருடம் கடந்த 3 மாத காலப்பபகுதிக்குள் கடற்படையினரால் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனை மற்றும் சுற்றிவளைப்பு நடவடிக்கைகளில் மாத்திரம் 20 பில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், 7 மீன்பிடிப் படகுகளும் கடற்படையினரால் பொறுப்பேற்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) அருண ஜயசேகர தெரி்வித்தார்.

மேலும் வாசிக்க >>>