ஆத்தூரில் மின்சாரம் தாக்கி கணவன், மனைவி பரிதாப சாவு: காப்பாற்றச்சென்ற கல்லூரி மாணவரும் பலி

Tuesday, May 19th, 2026 at 6:54 (SLT)

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் அக்ரஹாரம் பகுதியை சேர்ந்தவர் கருப்பையா (41). கொத்தனார். இவரது மனைவி சுதா (37). இவர்களுக்கு பிரவீனா (15), ஷிவானி (12) என, இரண்டு மகள்கள் உள்ளனர். இவர்கள் வசிக்கும் பகுதியில் நேற்று கன மழை பெய்தபோது, கருப்பையா வீட்டின் அருகே சென்ற உயரழுத்த மின்கம்பி அறுந்து விழுந்துள்ளது. அப்போது அங்கு நின்றிருந்த கருப்பையா மீது மின்சாரம் பாய்ந்ததால், அவர் அலறியுள்ளார். இந்த கூச்சல் கேட்டு மனைவி சுதா அவரை காப்பற்றச் சென்றுள்ளார். அப்போது அவர் மீதும் மின்சாரம் பாய்ந்தது. இதில் சம்பவ இடத்திலேயே இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேலும் வாசிக்க >>>

ஈரானில் இருந்து எரிபொருள் இறக்குமதி அதானி மீதான வழக்கை கைவிட்டது அமெரிக்கா

Tuesday, May 19th, 2026 at 6:46 (SLT)

அமெரிக்காவின் பங்குச் சந்தை கண்காணிப்பு அமைப்பான எஸ்.இ.சி மற்றும் நீதித்துறை, அதானி குழுமம் இந்தியாவில் மிகப்பெரிய சூரிய மின்சார திட்டங்களைப் பெறுவதற்காக இந்திய அதிகாரிகளுக்கு ரூ.2,100 கோடி லஞ்சம் வழங்கியதாகக் குற்றம்சாட்டியது. இது தொடர்பான வழக்கில், 2024ல் அதானிக்கு பிடிவாரன்ட் உத்தரவு அமெரிக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. ஆனால் இந்த வழக்கை கடந்த வாரம் ரத்து செய்வதாக அமெரிக்க நீதிமன்றம் அறிவித்தது. இதே போல் அதானி நிறுவனம் மீதான மேலும் ஒரு வழக்கை அமெரிக்கா நேற்று தள்ளுபடி செய்துள்ளது. ஈரானில் இருந்து எரிபொருள் இறக்குமதி செய்ய விதிக்கப்பட்ட தடையை மீறி அதானிக்கு சொந்தமான நிறுவனம் குஜராத்தில் உள்ள முந்த்ரா துறைமுகம் வழியாக ஈரானிய எல்பிஜி இறக்குமதி செய்ததாக அமெரிக்காவில் குற்றம் சாட்டப்பட்டது.

மேலும் வாசிக்க >>>

சீனாவில் பயங்கர நிலநடுக்கம்: 2 பேர் பலி, 7000 பேர் வெளியேற்றம்

Tuesday, May 19th, 2026 at 6:40 (SLT)

தெற்கு சீனாவின் குவாங்சி மாகாணத்தில் உள்ள லியூசோ நகரில் நேற்று அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 5.2 ஆக பதிவாகி உள்ளது. இந்த நிலநடுக்கத்தினால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் புகுந்தனர். பல இடங்களில் கட்டிடங்களில் விரிசல் ஏற்பட்டது. சுமார் 13 கட்டிடங்கள் இடிந்து விழுந்தன.

மேலும் வாசிக்க >>>

சட்டவிரோத சிகரெட்டுக்களுடன் சீனப் பிரஜை கைது

Monday, May 18th, 2026 at 8:41 (SLT)

கொள்ளுப்பிட்டி நிமல்கா கார்டன் பகுதியில் தீர்வை வரி இன்றி இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட 540 சிகரெட்டுகளுடன் வெளிநாட்டவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் வாசிக்க >>>

ஈரானுக்கு கடைசி எச்சரிக்கை! ரகசிய ‘AI’ புகைப்படத்தைப் பகிர்ந்த டொனால்ட் ட்ரம்ப்; போர் மேகங்கள் சூழ்வதால் உலக நாடுகள் அதிர்ச்சி

Monday, May 18th, 2026 at 8:38 (SLT)

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தனது ‘ட்ரூத் சோஷியல்’ (Truth Social) தளத்தில், தான் ஒரு நவீன போர் வீரரைப் போல கையில் ஆயுதத்துடன் நிற்பது போன்ற ஒரு விசித்திரமான AI புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். அந்தப் புகைப்படத்துடன், “ஈரானுக்குக் கொடுக்கப்பட்ட அவகாசம் முடிவுக்கு வருகிறது, கடிகாரம் ஓடத் தொடங்கிவிட்டது” என்ற வாசகத்தையும் அவர் பதிவிட்டுள்ளார். ஈரானின் அணுஆயுதத் தயாரிப்பு மற்றும் ஹார்முஸ் ஜலசந்தி முடக்கத்திற்குப் பதிலடியாக, அமெரிக்கா ஒரு மிகப்பெரிய ராணுவ நடவடிக்கைக்குத் தயாராகி வருவதையே இந்த ‘ரகசிய’ புகைப்படம் மற்றும் எச்சரிக்கை உணர்த்துவதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

மேலும் வாசிக்க >>>

கேரள முதல்வராக வி.டி.சதீசன் இன்று பதவி ஏற்கிறார்: 21 அமைச்சர்கள் அடங்கிய பட்டியலை கவர்னரிடம் வழங்கினார்

Monday, May 18th, 2026 at 8:30 (SLT)

கேரளத்தில் வி.டி. சதீசன் தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி அரசு இன்று பதவி ஏற்கிறது. 21 அமைச்சர்கள் அடங்கிய பட்டியலை நேற்று அவர் கவர்னரிடம் வழங்கினார். கேரள சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி மொத்தமுள்ள 140 தொகுதிகளில் 102 இடங்களில் அமோக வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. கடந்த தேர்தலில் 99 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்த இடதுசாரி கூட்டணிக்கு இம்முறை 35 தொகுதிகள் மட்டுமே கிடைத்தன.

மேலும் வாசிக்க >>>

ரஷ்யா மீது 500 டிரோன்களை ஏவி உக்ரைன் பயங்கர தாக்குதல்: 4 பேர் பலி

Monday, May 18th, 2026 at 8:27 (SLT)

உக்ரைன் ரஷ்யா போர் கடந்த 2022 பிப்ரவரி 22ம் தேதி தொடங்கிய நிலையில் நேற்றுடன் 1,544 நாள்கள் நிறைவடைந்து விட்டது. போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் டிரம்ப் பலமுறை முயன்றும் பலனளிக்கவில்லை. இதனால் இருநாடுகளும் தாக்குதலை தொடர்ந்து வருகின்றன. அந்த வகையில் நேற்று முன்தினம் இரவு ரஷ்யா மீது உக்ரைன் டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்தியது.

மேலும் வாசிக்க >>>

அமெரிக்காவில் நடைபெற்ற விமான கண்காட்சியின்போது 2 போர் விமானங்கள் நடுவானில் மோதி விபத்து

Monday, May 18th, 2026 at 8:24 (SLT)

அமெரிக்காவில் நடைபெற்ற விமான கண்காட்சியின்போது 2 போர் விமானங்கள் நடுவானில் மோதிக் கொண்டன. 2 போர் விமானங்களில் இருந்து 4 விமானிகளும் பத்திரமாக வெளியேறி உயிர்தப்பினர்.



காற்றழுத்தம் வலுவிழந்து வருகிறது பல பகுதிகளில் மழை

Sunday, May 17th, 2026 at 9:24 (SLT)

இலங்கையின் வடக்கே அமைந்துள்ள குறைந்த காற்றழுத்தப் பகுதி படிப்படியாக வலுவிழந்து வருவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.இத்தொகுதியின் தாக்கம் காரணமாக, இன்றையதினம் (17) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல், வடக்கு மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதுடன், இந்தப் பிரதேசங்களில் மேகமூட்டமான வானம் காணப்படும் என எதிர்பார்க்கப் படுகின்றது.

மேலும் வாசிக்க >>>

அமெரிக்க அதிபர் டிரம்பை தொடர்ந்து ரஷ்ய அதிபர் புடின் சீனா பயணம்

Sunday, May 17th, 2026 at 9:19 (SLT)

ரஷ்ய அதிபர் புடின் வரும் வாரம் சீனாவுக்கு 2 நாள் அரசு முறை பயணம் மேற்கொள்ள உள்ளார். 3 நாள் அரசு முறை பயணமாக கடந்த 13ம் தேதி சீனா சென்ற அமெரிக்க அதிபர் டிரம்ப் சீன அதிபர் ஜி ஜின் பிங்கை சந்தித்து பேசினார். அப்போது ஈரான் போர், இருநாட்டு வர்த்தக உறவு, சர்வதேச அரசியல் சூழல் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினர். சீன பயணத்தை முடித்து கொண்டு நேற்று முன்தினம் டிரம்ப் அமெரிக்கா திரும்பினார்.

மேலும் வாசிக்க >>>

1,000 ஆண்டுகள் பழமையான சோழர் கால செப்புப் பட்டயங்களை இந்தியாவிடம் ஒப்படைத்தது நெதர்லாந்து

Sunday, May 17th, 2026 at 9:15 (SLT)

நெதர்லாந்து நாட்டிற்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடியிடம், அந்நாட்டின் லைடன் பல்கலைக்கழக (Leiden University) அதிகாரிகள் 11-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர் காலத்துச் செப்புப் பட்டயங்களை முறைப்படி ஒப்படைத்தனர். ‘லைடன் பட்டயங்கள்’ என்று அழைக்கப்படும் இந்த வரலாற்று ஆவணங்கள், சுமார் 100 ஆண்டுகளுக்கும் மேலாக நெதர்லாந்தில் பாதுகாக்கப்பட்டன. 21 பெரிய செப்புத் தகடுகள் மற்றும் 3 சிறிய தகடுகளைக் கொண்ட இந்தத் தொகுப்பு, ஒரு வெண்கல வளையத்தால் கோர்க்கப்பட்டு, அதன் மீது முதலாம் ராஜேந்திர சோழனின் அதிகாரப்பூர்வ முத்திரை பதிக்கப்பட்டுள்ளது. இது தமிழர்களின் வரலாற்று அடையாளங்களை மீட்பதில் ஒரு மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.

மேலும் வாசிக்க >>>

நிதி முறைகேடுகள் குறித்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விளக்கம்

Sunday, May 17th, 2026 at 9:11 (SLT)

ஐக்கிய அரபு அமீரகத்தில் (UAE) உள்ள நிறுவனம் ஒன்றிற்கு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் மேற்கொண்ட பணச் செலுத்துகை மற்றும் நிறுவனத்தின் சென்னை காரியாலயத்தில் இடம்பெற்ற நிதி முறைகேடு குறித்து விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க >>>

வாகன இறக்குமதி சுங்க வரியின் மீது மேலதிக வரி

Sunday, May 17th, 2026 at 9:08 (SLT)

இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கான சுங்க இறக்குமதித் தீர்வை வரியின் மீது 50% மேலதிக வரியை (Surcharge) விதிப்பதற்கு நிதி அமைச்சு தீர்மானித்துள்ளது. ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ள விசேட வர்த்தமானி அறிவித்தலின்படி, இன்று (16) முதல் மூன்று மாத காலப்பகுதிக்கு இந்த 50% மேலதிக வரி வசூலிக்கப்படவுள்ளது.

மேலும் வாசிக்க >>>

லொறி மோதியதில் பௌத்த பிக்கு ஒருவர் உயிரிழப்பு

Sunday, May 17th, 2026 at 9:05 (SLT)

பேராதனைப் பகுதியில் லொறி ஒன்றுடன் மோதி பௌத்த பிக்கு ஒருவர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று (16) பேராதனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பேராதனை, ரஜவத்த வீதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

மேலும் வாசிக்க >>>

மருத்துவ மாணவி பலாத்கார கொலை 3 ஐபிஎஸ் அதிகாரிகள் சஸ்பெண்ட்: மேற்கு வங்க பாஜ அரசு அதிரடி

Saturday, May 16th, 2026 at 5:44 (SLT)

கொல்கத்தா ஆர்.ஜி. கர் மருத்துவமனையில் மருத்துவ மாணவி பாலியல் பலாத்கார கொலை வழக்கு விசாரணையில் குற்றச்சாட்டுக்கு உள்ளான மூன்று ஐபிஎஸ் அதிகாரிகளை மேற்கு வங்க பாஜ அரசு சஸ்பெண்ட் செய்துள்ளது. கொல்கத்தாவில் ஆர்.ஜி.கர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கடந்த 2024ல் பயிற்சி மருத்துவ மாணவி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டார். அந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் வாசிக்க >>>