நாம் அமெரிக்காவுக்கே எமது பூரண ஒத்துழைப்பை வழங்குகிறோம் – பத்தரமுல்ல சீலரத்ன தேரர்

Tuesday, March 10th, 2026 at 9:11 (SLT)

இலங்கை அரசாங்கத்துக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் கையெழுத்திடப்பட்டுள்ள உடன்படிக்கைகள் தொடர்பில் நாட்டு மக்களுக்கோ அல்லது அரசியல் கட்சித் தலைவர்களுக்கோ எவ்வித தெளிவும் இல்லை எனவும் அவற்றை உடனடியாக பகிரங்கப்படுத்த வேண்டும் எனவும் பத்தரமுல்ல சீலரத்ன தேரர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் வாசிக்க >>>

கொழும்பு மற்றும் கம்பஹாவின் சில பகுதிகளில் மின் தடை

Tuesday, March 10th, 2026 at 9:09 (SLT)

கொழும்பு 9, 14 மற்றும் கம்பஹாவின் சில பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மின்சார தொழிற்சங்கங்களின் தொடர்ச்சியான வேலைநிறுத்தப் போராட்டம் காரணமாக, இந்த மின் தடைகளை வழமைக்குக் கொண்டு வருவதற்குச் சற்று காலதாமதம் ஏற்படக்கூடும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

மேலும் வாசிக்க >>>

ஈரான் போர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது

Tuesday, March 10th, 2026 at 8:25 (SLT)

திட்டமிட்ட நேரத்தை விட விரைவாக ஈரான் போர் முடிவுக்கு வரும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். CBS News செய்தி நிறுவனத்திற்கு கருத்து தெரிவிக்கும் போது, போர் பெரும்பாலும் முடிவுக்கு வந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் வாசிக்க >>>

தேசிய நிறுவனங்களை பாதுகாப்பதாக கூறிய தற்போதைய அரசாங்கம் இன்று மின்சார சபையின் இறுதி ஊர்வலத்தை அறிவித்துள்ளது : சஜித் பிரேமதாச

Tuesday, March 10th, 2026 at 8:22 (SLT)

நமது நாட்டின் தேசிய நிறுவனங்களை பாதுகாத்து தனியார்மயமாக்கலை தடுக்க வேண்டும் என்பதே தேர்தலுக்கு முன்பு மக்கள் விடுதலை முன்னனியின் நிலைப்பாடாக அமைந்து காணப்பட்டன. இன்று அரசாங்கம் இலங்கை மின்சார சபையின் இறுதி ஊர்வலத்தை அறிவிப்புச் செய்துள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச திங்கட்கிழமை (09) விசேட கூற்றை முன்வைத்து கருத்துத் தெரிவித்தார்.

மேலும் வாசிக்க >>>

ஈரான் கப்பலிலிருந்து மீட்கப்பட்டவர்களை அவர்களின் தாய்நாட்டுக்கு அனுப்ப அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் : ரோஹித்த அபேகுணவர்த்தன

Tuesday, March 10th, 2026 at 8:19 (SLT)

ஈரான் கப்பலில் இருந்து மீட்கப்பட்டவர்களை அரசாங்கம் யாருடைய அழுத்தங்களுக்கும் அடிபணியாமல், சர்வதேச சட்டத்துக்கமைய அவர்களின் தாய் நாட்டுக்கு அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என புதிய ஜனநாயக முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித்த அபேகுணவர்த்தன தெரிவித்தார்.

மேலும் வாசிக்க >>>

நாட்டின் கச்சா எண்ணெய் மையமான ‘கர்க் தீவை’ கைப்பற்ற அமெரிக்காவின் அதிரடி திட்டம்?

Tuesday, March 10th, 2026 at 8:14 (SLT)

ஈரான் மற்றும் அமெரிக்கா-இஸ்ரேல் படைகளுக்கு இடையே நடைபெற்று வரும் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், ஈரானின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் ஏற்றுமதி மையமான கர்க் தீவை (Kharg Island) கைப்பற்றுவது குறித்து அமெரிக்க நிர்வாகம் தீவிரமாக ஆலோசித்து வருகிறது. ஈரானின் ஒட்டுமொத்த கச்சா எண்ணெய் ஏற்றுமதியில் சுமார் 90 சதவீதத்திற்கும் மேல் இந்தத் தீவு வழியாகவே நடைபெறுகிறது. எனவே, இந்தத் தீவைக் கட்டுப்படுத்துவதன் மூலம் ஈரானின் பொருளாதாரத்தை முற்றிலுமாக முடக்க முடியும் என்றும், அதன் மூலம் அந்நாட்டின் போர்ச் செலவுகளைக் கட்டுப்படுத்த முடியும் என்றும் அமெரிக்க உயர் அதிகாரிகள் கருதுகின்றனர்.

மேலும் வாசிக்க >>>

போரில் வெற்றி பெற அமெரிக்கா எவ்வளவு தூரத்திற்கும் செல்லும்:பீட் ஹெக்செத்

Monday, March 9th, 2026 at 7:49 (SLT)

ஈரான் உடனான போரில் வெற்றி பெறுவதற்கு எவ்வளவு தூரம் செல்ல வேண்டுமோ, அவ்வளவு தூரம் செல்ல அமெரிக்கா தயாராக உள்ளதாக அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்செத் தெரிவித்துள்ளார். ஊடகம் ஒன்றுக்கு அவர் வழங்கிய செவ்வியிலேயே இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் வாசிக்க >>>

ஈரானின் புதிய அதி உயர் தலைவர் தொடர்பான அறிவிப்பு வௌியானது

Monday, March 9th, 2026 at 7:45 (SLT)

ஈரானின் புதிய அதி உயர் தலைவராக, அயதுல்லா அலி கமேனிக்குப் பதிலாக அவருடைய மகன் மொஜ்தபா கமேனியை அந்நாட்டு நிபுணர்கள் சபை தெரிவு செய்துள்ளதாக ஈரானிய அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய இராணுவ நடவடிக்கையின் போது கடந்த 28 ஆம் திகதி ஈரானிய அதி உயர் தலைவரான அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டார்.

மேலும் வாசிக்க >>>

மசகு எண்ணெய் விலை சடுதியாக அதிகரிப்பு

Monday, March 9th, 2026 at 7:43 (SLT)

மத்திய கிழக்கின் முக்கிய எரிசக்தி உற்பத்தியாளர்கள் உற்பத்தியைக் குறைத்ததைத் தொடர்ந்து, சர்வதேச சந்தையில் நேற்று மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 100 டொலருக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.

மேலும் வாசிக்க >>>

இஸ்ரேல் மற்றும் ஜோர்டான் தளங்கள் மீது ஈரானிய ஏவுகணைத் தாக்குதல்

Monday, March 9th, 2026 at 6:44 (SLT)

ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC), கடந்த மார்ச் 8, ஞாயிற்றுக்கிழமை அன்று இஸ்ரேலின் டெல் அவிவ் மற்றும் பியர்ஷேபா நகரங்களில் உள்ள இராணுவ இலக்குகள் மற்றும் ஜோர்டானில் உள்ள அல்-அஸ்ராக் (Al-Azraq) விமானப்படைத் தளம் மீது ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக அறிவித்துள்ளது.

மேலும் வாசிக்க >>>

ஈரானின் புதிய உச்சத் தலைவராக முஜ்தபா கமேனி

Monday, March 9th, 2026 at 6:39 (SLT)

ஈரானின் புதிய உச்சத் தலைவராக முன்னாள் உச்சத் தலைவர் அலி கமேனியின் இரண்டாவது மகனான மொஜ்தபா கமேனி அறிவிக்கப்பட்டுள்ளார். Kmஇந்தத் தீர்மானம், 88 உறுப்பினர்களைக் கொண்ட மூத்த மதத் தலைவர்கள் அடங்கிய நிபுணர் சபையினால் எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க >>>

தேசத்தை வழிநடத்திய இலங்கையின் முதல் பெண் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க

Sunday, March 8th, 2026 at 9:28 (SLT)

சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க (Chandrika Bandaranaike Kumaratunga) இலங்கை வரலாற்றில் மட்டுமல்லாது, உலக அரசியலிலும் ஒரு முக்கிய ஆளுமையாவார்.இலங்கையின் அரசியலில் ஒரு பெரும் பாரம்பரியம் மிக்க குடும்பத்தில் பிறந்த அவர், நாட்டின் மிக உயரிய பதவிகளை அலங்கரித்தவர்.

மேலும் வாசிக்க >>>

குருநாகல் மற்றும் பாதுக்கையில் ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் இருவர் கைது

Sunday, March 8th, 2026 at 9:22 (SLT)

நாட்டின் இருவேறு பகுதிகளில் முன்னெடுக்கப்பட்ட சோதனைகளின் போது, ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் இரண்டு சந்தேகநபர்களைக் கைது செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். குருநாகல், தித்தவெல்ல எலஸ்வத்தை பகுதியில் 126 கிராம் 500 மில்லி கிராம் ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் வாசிக்க >>>

பெண்களுக்கு உரிய மரியாதையை வழங்குவதே உண்மையான அஞ்சலி:சஜித் பிரேமதாச

Sunday, March 8th, 2026 at 9:19 (SLT)

“பெண்களுக்கு உரிய மரியாதையை வழங்குவதே இந்த மகளிர் தினத்தில் அவர்களுக்குச் செய்யக்கூடிய உண்மையான அஞ்சலியாகும்” என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு விடுத்துள்ள விசேட செய்தியில் தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

ஜனாதிபதியின் மகளிர் தின வாழ்த்துச் செய்தி

Sunday, March 8th, 2026 at 9:16 (SLT)

இலங்கை வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத வகையில் அரசியல் மற்றும் பொருளாதார ரீதியாகப் பெண்கள் பாரிய மாற்றங்களை நிகழ்த்தி வரும் சூழலில், “பெண்களின் தலைமைத்துவம் – செழிப்பான தேசத்தின் பெருமை” எனும் தொனிப்பொருளின் கீழ் இவ்வாண்டு சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுவதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>