கொல்கத்தா ஆர்.ஜி. கர் மருத்துவமனையில் மருத்துவ மாணவி பாலியல் பலாத்கார கொலை வழக்கு விசாரணையில் குற்றச்சாட்டுக்கு உள்ளான மூன்று ஐபிஎஸ் அதிகாரிகளை மேற்கு வங்க பாஜ அரசு சஸ்பெண்ட் செய்துள்ளது. கொல்கத்தாவில் ஆர்.ஜி.கர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கடந்த 2024ல் பயிற்சி மருத்துவ மாணவி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டார். அந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆப்பிரிக்காவின் நோய் கட்டுப்பாட்டு மையம் காங்கோவில் எபோலா வைரஸ் பரவி உள்ளதாக உறுதி செய்துள்ளது. காங்கோவில் உள்ள இடுரி மாகாணத்தில் எபோலா வைரஸ் பரவத் தொடங்கி உள்ளது. உயர்மட்ட பொது சுகாதார அமைப்பான ஆப்பிரிக்கா நோய்க் கட்டுப்பாட்டு மையம் எபோலா வைரஸ் பரவல் ஏற்பட்டுள்ளதை உறுதி செய்துள்ளது.
அமெரிக்கா, சீனா இடையே பல ஆண்டுகளாக வர்த்தக போர் நீடித்து வருகிறது. மேலும், ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் நாடுகள் நடத்தி வரும் தாக்குதலுக்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்து வருகிறது. இந்த சூழலில் அமெரிக்க அதிபர் டிரம்ப் 3 நாள் அரசு முறை பயணமாக கடந்த புதன்கிழமை (மே.13) சீனா சென்றார். நேற்று முன்தினம் பீஜிங்கில் உள்ள கிரேட் ஹால் ஆஃப் தி பீப்பிள் என்ற அரசு கட்டிடத்தில் அமெரிக்க அதிபர் டிரம்பும், சீன அதிபர் ஜி ஜின் பிங்கும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
அதிபர் ட்ரம்ப் மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோர் கலாச்சாரப் பயணமாக பெய்ஜிங்கின் புகழ்பெற்ற ‘சொர்க்கக் கோவில்’ பகுதிக்குச் சென்றபோது இந்தச் சர்ச்சை வெடித்தது. அதிபருடன் வந்த அமெரிக்கப் பத்திரிகையாளர்கள் மற்றும் ரகசிய சேவை வீரர்களைச் சீனப் பாதுகாப்பு அதிகாரிகள் ஒரு அறையில் தடுத்து நிறுத்த முயன்றனர். “நாங்கள் வரலாற்றைத் தவறவிட்டுக் கொண்டிருக்கிறோம்” என்று அமெரிக்கப் பிரதிநிதிகள் ஆவேசமாகக் கத்தியும், சீன அதிகாரிகள் அவர்களை வெளியேற அனுமதிக்கவில்லை. இதனால் இரு நாட்டுப் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் மற்றும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
தைவான் விவகாரத்தை சரியாக கையாளாவிட்டால் அமெரிக்கா-சீனா இடையே போர் கூட ஏற்படலாம் என அமெரிக்க அதிபர் டிரம்புக்கு சீன அதிபர் ஜி ஜின்பிங் எச்சரிக்கை விடுத்துள்ளார். இரு நாட்டு தலைவர்களுக்கு இடையேயான சந்திப்பில் இருதரப்பு வர்த்தக முரண்பாடு, ஈரான் போர் உள்ளிட்ட பல்வேறு விவகாரம் குறித்து முக்கிய பேச்சுவார்த்தை நடந்தது. உலகின் இரு பெரும் வல்லரசு நாடுகளான அமெரிக்கா-சீனா இடையே நீண்டகாலமாக வர்த்தக போர் நிலவி வருகிறது. இந்நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப் 3 நாள் அரசு முறை பயணமாக சீனா சென்றிருப்பது உலகம் முழுவதும் உற்று கவனிக்கப்படுகிறது. நேற்று முன்தினம் இரவு பீஜிங் சென்றடைந்த அதிபர் டிரம்புக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, பயணத்தின் முக்கிய நிகழ்வான அதிபர் டிரம்ப் – சீன அதிபர் ஜி ஜின்பிங் இடையேயான பேச்சுவார்த்தை பீஜிங்கில் உள்ள கிரேட் ஹால் ஆப் தி பீப்பிள் எனும் அரசு கட்டிடத்தில் நேற்று நடந்தது. பேச்சுவார்த்தைக்காக வந்த டிரம்பை சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. அதிபர் ஜின்பிங் வரவேற்று அழைத்துச் சென்றார். சீன ராணுவ அணிவகுப்பு மரியாதையும், சீன குழந்தைகளின் உற்சாக வரவேற்பும் டிரம்புக்கு வழங்கப்பட்டது.
லாட்வியா நாட்டின் பிரதமரான எவிகா சிலினா நேற்று தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். ஆளும் கூட்டணியின் ஒரு பகுதியாக இருந்த இடதுசாரி முற்போக்கு கட்சி நேற்று முன்தினம் தனது ஆதரவை வாபஸ் பெறுவதாக அறிவித்தது. இதன் காரணமாக சிலினா பெரும்பான்மையை இழந்தார். இதனை தொடர்ந்து நேற்று அவரது ராஜினாமா அறிவிப்பு வெளியானது.
அமெரிக்க அதிபர் டிரம்ப், சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்திப்பதற்காகத் தனது 3 நாள் பயணமாக நேற்று சீனாவுக்கு புறப்பட்டு சென்றார். சீன தலைநகர் பீஜிங்கில் டிரம்புக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. சீன அதிபர் ஜின் பிங்கின் அழைப்பின் பேரில் அதிபர் டிரம்ப் 3 நாள் பயணமாக அங்கு சென்றுள்ளார். தலைநகர் பீஜிங்கில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் வந்திறங்கிய டிரம்புக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
ஹன்டா வைரசால் பாதிக்கப்பட்ட பிரான்ஸ் நாட்டு பெண் கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நெதர்லாந்து நாட்டை சேர்ந்த எம்.வி.ஹோண்டியாஸ் என்ற சொகுசு கப்பல் தென்அமெரிக்க நாடான அர்ஜென்டினாவில் இருந்து கடந்த 4ம் தேதி புறப்பட்டது. இதில் பல்வேறு நாடுகளை சேர்ந்த 150 சுற்றுலா பயணிகள், அன்டார்டிகா வழியாக ஆப்பிரிக்காவின் கேப் வெர்டே தீவு நாட்டுக்கு பயணித்தனர். மேலும் இந்த கப்பலில் 72 பணியாளர்கள் இருந்தனர். இந்த கப்பல் புறப்பட்ட சில தினங்களிலேயே 3 பயணிகள் ஹன்டா வைரஸ் பாதிப்பு காரணமாக உயிரிழந்தனர்.
அமெரிக்காவில் மாணவர் விசா திட்டத்தை தவறாக பயன்படுத்துவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில், இந்தியர் உள்பட 10,000 மாணவர்களுக்கு அமெரிக்க குடிவரவு துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்காவில் மாணவர் விசாக்களுடன் விருப்ப பயிற்சி திட்டம் இணைக்கப்பட்டுள்ளது. அங்கு படிக்கும் சர்வதேச மாணவர்கள் பட்டம் பெற்ற பிறகு 12 பட்டம் பெற்ற பிறகு 12 மாதங்கள் வரை அந்நாட்டில் பணிபுரிய இது அனுமதிக்கிறது.
பாகிஸ்தான் ராணுவ தளத்தில் ஈரானிய விமானங்கள் ரகசியமாக நிறுத்தப்பட்ட தகவல் வெளியாகி உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையிலான மோதலில் ஒரு நடுநிலையான நாடாக பாகிஸ்தான் தன்னை உலக நாடுகளுக்குக் காட்டி வந்தது. இந்தநிலையில் ஒருபுறம் அமெரிக்காவுடன் இணக்கமாக இருப்பது போலக் காட்டிக் கொண்டு, மறுபுறம் ஈரானுடன் ரகசிய ராணுவ உறவைப் பேணி வருவதாகப் புகார்கள் எழுந்தன.
அமெரிக்காவில் மிக அதிக வயதில் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டிரம்புக்கு 79 வயதாகிறது. இந்த நிலையில் வரும் 26ம் தேதி வால்டர் ரீட் தேசிய ராணுவ மருத்துவ மையத்தில் டிரம்புக்கு மருத்துவ பரிசோதனைகள் நடக்கிறது. அப்போது பல் மருத்துவரையும் அவர் சந்திக்க உள்ளார். இது வருடாந்திர உடல் பரிசோதனை என வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் கரோலின் லீவிட் தெரிவித்தார்.
உனவட்டுன பிரதேசத்தில் உள்ள ஆயுர்வேத மசாஜ் நிலையமொன்றில் அவுஸ்திரேலிய நாட்டுப் பெண் ஒருவரைத் துன்புறுத்தியதாகக் கூறப்படும் சந்தேக நபர் ஒருவரை உனவட்டுன சுற்றுலாப் பொலிஸார் நேற்று (12) கைது செய்துள்ளனர்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று (12) காலை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகவுள்ளார்.
2013ஆம் ஆண்டு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு விமானங்களைக் கொள்வனவு செய்தபோது, 2 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இலஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குமாறு இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு விடுத்த அறிவித்தலுக்கு அமைவாக அவர் அங்கு முன்னிலையாகவுள்ளார்.
தமிழ்நாட்டில் 717 டாஸ்மாக் கடைகளை மூட முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தால் 4,765 மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் தற்போது நடத்தப்பட்டு வருகிறது. அதில், வழிபாட்டுத்தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகிலிருந்து 500 மீட்டர் வரை அமைந்துள்ள கடைகளை ஆய்வு செய்து கண்டறியுமாறு முதலமைச்சர் ச. ஜோசப் விஜயால் உத்தரவிடப்பட்டது. மேற்படி ஆணைக்கிணங்க இந்த மூன்று இனங்களில் 717 மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் செயல்பட்டு வருவது கண்டறியப்பட்டது.