கே-பாப் பார்த்தால் மரணம்? கோவிட் காலத்தில் அதிகரித்த கொடூரம் : உலகை அதிரவைக்கும் புதிய அறிக்கை

Wednesday, April 29th, 2026 at 8:02 (SLT)

தென்கொரியாவின் சியோலைத் தளமாகக் கொண்ட ‘டிரான்சிஷனல் ஜஸ்டிஸ் வொர்க்கிங் குரூப்’ (TJWG) வெளியிட்டுள்ள புதிய அறிக்கையின்படி, 2020-ஆம் ஆண்டு முதல் 2024-ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் வடகொரியாவில் மரண தண்டனைகள் நிறைவேற்றப்படுவது 117 சதவீதம் அதிகரித்துள்ளது. கோவிட் பெருந்தொற்று காலத்தில் நாடு தனது எல்லைகளை முழுவதுமாக மூடியிருந்ததைப் பயன்படுத்தி, கிம் ஜாங் உன் தலைமையிலான அரசு தனது அடக்குமுறைகளைத் தீவிரப்படுத்தியுள்ளது. இந்த காலகட்டத்தில் சுமார் 60 வழக்குகளில் 148 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக 880 வடகொரிய ஏதிலிகளிடம் நடத்தப்பட்ட நேர்காணல் மற்றும் செயற்கைக்கோள் படங்களின் அடிப்படையில் இந்த அறிக்கை உறுதிப்படுத்தியுள்ளது.

மேலும் வாசிக்க >>>

பாகிஸ்தானில் பயங்கரம் லஷ்கர் இ தொய்பாவின் தளபதி யூசுப் அப்ரிடி சுட்டு கொலை

Wednesday, April 29th, 2026 at 7:55 (SLT)

பாகிஸ்தானில் உள்ள கைபர் பக்துன்வாவில் லஷ்கர் இ தொய்பாவின் முக்கிய தளபதியும் ஹபீஸ் சையத்தின் நெருங்கிய கூட்டாளியுமான யூசுப் அப்ரிடி சுட்டு கொல்லப்பட்டார். மும்பை தீவிரவாத தாக்குதலுக்கு முக்கிய மூளையாக செயல்பட்பவர் ஹபீஸ் சையது. லஷ்கர் இ தொய்பாவின் நிறுவனர் ஹபீஸ் சையது. லஷ்கர் இ தொய்பாவை சேர்ந்த தீவிரவாதகள் இந்தியாவில் பல்வேறு இடங்களில் தீவிரவாத தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.

மேலும் வாசிக்க >>>

இந்தோனேஷிய ரயில் விபத்தில் 14 பேர் பலி

Wednesday, April 29th, 2026 at 7:49 (SLT)

இந்தோனேஷியாவில் ஜகார்த்தா நகருக்கு வெளியே பெகாசிதிமூர் நிலையத்திற்கு வெளியே தண்டவாளத்தில் பழுதாகி நின்ற வாகனத்தின் மீது பயணிகள் ரயில் மோதியது. அந்த பாதையில் வந்த மற்றொரு ரயில் நடுவழியில் நிறுத்தப்பட்டது.

மேலும் வாசிக்க >>>

எப்ஸ்டீனின் நண்பரை தூதராக நியமித்த விவகாரம் பிரிட்டிஷ் பிரதமர் ஸ்டார்மருக்கு கடும் எதிர்ப்பு

Wednesday, April 29th, 2026 at 7:44 (SLT)

அமெரிக்காவில் சிறுமிகளை கடத்தில் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதற்காக ஜெப்ரின் எப்ஸ்டீன் கைது செய்யப்பட்டார். எப்ஸ்டீன் சிறையில் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில், அவருடன் தொடர்புடைய பல நாடுகளின் தலைவர்கள், பிரபலங்கள் உள்ளிட்டோர் உரையாடிய மின்னஞ்சல்கள், வீடியோக்கள் ஆகியவை வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.

மேலும் வாசிக்க >>>

கனடாவில் சீக்கிய முதியவர் மீது தாக்குதல்

Tuesday, April 28th, 2026 at 7:04 (SLT)

கனடாவில் சீக்கிய முதியவர் மீது இளைஞர் தாக்குதல் நடத்திய சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். கனடாவின் ஒன்டாரியோவின் உட்ஸ்டாக் நகரில் கடந்த 22ம் தேதி சீக்கிய முதியவர் ஒருவர் நடைபாதையில் நடந்து சென்று கொண்டிருந்ததாக தெரிகின்றது. அப்போது அவரது அருகில் வந்த இளைஞர் ஒருவர், அவரை தள்ளிவிட்டுள்ளார். அவரது இன அடையாளத்தை அடிப்படையாக கொண்டு அவரை இனவெறி சார்ந்த கருத்துக்களையும் ஆபாச வார்த்தைகளையும் பேசியுள்ளார். அவரை என் நாட்டை விட்டு வெளியேறு என்றும் கூச்சலிட்டுள்ளார். பின்னர் அங்கிருந்து வெளியேறியுள்ளார்.

மேலும் வாசிக்க >>>

அமெரிக்காவுடன் போரை முடிக்க ஈரான் முன்வைத்த புதிய டீல்; ஹார்முஸ் ஜலசந்தியைத் திறக்க சம்மதம் : நிபந்தனை விதித்த ஈரானியத் தலைமை

Tuesday, April 28th, 2026 at 6:57 (SLT)

மத்திய கிழக்கில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான போர் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறப்பதற்கும் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கும் ஈரான் புதிய சமாதானத் திட்டம் ஒன்றை பாகிஸ்தான் தூதர்கள் வழியாக அமெரிக்காவிற்கு அனுப்பியுள்ளது. இந்தப் புதிய ‘இரண்டு கட்டத் திட்டத்தின்’படி (Two-stage plan), உலக வர்த்தகத்தின் முக்கியப் பாதையான ஹார்முஸ் ஜலசந்தியை உடனடியாகத் திறக்க ஈரான் முன்வந்துள்ளது. இதற்குப் பதிலாக, ஈரான் மீதான கடல்சார் முற்றுகையை அமெரிக்கா முழுமையாக நீக்க வேண்டும் என்றும், இரு நாடுகளுக்கும் இடையே நிரந்தரப் போர்நிறுத்தத்தை அறிவிக்க வேண்டும் என்றும் ஈரான் கோரிக்கை விடுத்துள்ளது.

மேலும் வாசிக்க >>>

400 நாட்களாகக் குவிந்த குப்பைகள்; “பூனை அளவுள்ள எலிகள்” : குப்பை மேடுகளால் நிலைகுலைந்த பர்மிங்காம் நகருக்கு விடிவுகாலம்

Tuesday, April 28th, 2026 at 6:53 (SLT)

பிரிட்டனின் பர்மிங்காம் நகரில் ஊதியம் மற்றும் வேலை இழப்பு தொடர்பான சர்ச்சையால், கடந்த 2025-ஆம் ஆண்டு மார்ச் மாதம் தொடங்கிய துப்புரவுத் தொழிலாளர்களின் போராட்டம் தற்போது 16 மாதங்களைக் கடந்துள்ளது. இதனால் நகரின் மூலைமுடுக்கெல்லாம் குப்பைகள் மலைபோலக் குவிந்துள்ளன. பல இடங்களில் 5 அடி உயரத்திற்கு மேலாகக் குப்பை மேடுகள் காணப்படுவதால், அந்தப் பகுதிகளில் “பூனை அளவு பெரிய எலிகள்” நடமாட்டம் அதிகரித்துள்ளதாகப் பொதுமக்கள் அச்சத்துடன் தெரிவித்துள்ளனர். தெருக்களில் வீசும் கடும் துர்நாற்றம் காரணமாக மக்கள் தங்கள் வீடுகளின் ஜன்னல்களைக் கூடத் திறக்க முடியாமல் தவித்து வந்தனர்.

மேலும் வாசிக்க >>>

சீனாவில் நடன நிகழ்ச்சியில் மாணவியை கட்டி பிடித்த ரோபோ

Monday, April 27th, 2026 at 7:14 (SLT)

சீனாவில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் நடந்த நடன நிகழ்ச்சியில் பங்கேற்ற ரோபோ, திடீரென ஒரு மாணவியை கட்டிப்பிடித்தது. இதனால் அந்த மாணவி அதிர்ச்சியடைந்தார். உடனடியாக பணியாளர்கள் அந்த ரோபோவை விலக்கினர். சீனாவில் உள்ள ஷான்ங்சி மாகாணத்தில் உள்ள பல்கலைகழகத்தில் நடன நிகழ்ச்சி நடந்தது. இதில் மனித உருவ ரோபோ ஒன்று பங்கேற்றது.

மேலும் வாசிக்க >>>

வங்கதேசத்தில் இந்து கோயில் பூசாரி கொலை

Monday, April 27th, 2026 at 7:05 (SLT)

வங்கதேசத்தின் சட்டோகிராம் மாவட்டத்தைச் சேர்ந்த நயன் சாது (40). இவர் காக்ஸ் பஜார் பகுதியில் உள்ள சிவகாளி கோயிலில் பூசாரியாக பணியாற்றி வந்தார். கடந்த 19 ஆம் தேதி அவர் திடீரென மாயமானார். மூன்று நாட்களுக்குப் பிறகு ஒரு மலைப்பகுதியில் இவரது உடல் சிதைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது.

மேலும் வாசிக்க >>>

தீவிரவாதிகள் நாசவேலை கொலம்பியாவில் பஸ்சில் குண்டு வெடித்து 13 பயணிகள் பரிதாப பலி

Monday, April 27th, 2026 at 7:02 (SLT)

கொலம்பியாவில் உள்ள கவுக்கா மாகாணத்தின் பான் அமெரிக்கன் நெடுஞ்சாலையில் நேற்று முன்தினம் பஸ் சென்று கொண்டிருந்தது. கஜிபியோ என்ற நகர் வழியாக சென்ற போது சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது. இதில் பஸ்சில் இருநு்த 13 பேர் உயிரிழந்தனர். 38 பேர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்களில் 5 குழந்தைகளும் அடங்குவர்.

மேலும் வாசிக்க >>>

லெபனான் வெளியேற்றம்: 7 கிராமங்களுக்கு இஸ்ரேல் ராணுவம் கடும் எச்சரிக்கை : எல்லையில் மீண்டும் வெடித்த போர் பதற்றம்

Monday, April 27th, 2026 at 6:53 (SLT)

லெபனானின் லிட்டானி ஆற்றிற்கு வடக்கே அமைந்துள்ள ஏழு முக்கியக் கிராமங்களில் வசிக்கும் மக்கள், தங்கள் வீடுகளை விட்டு உடனடியாக வெளியேறுமாறு இஸ்ரேல் பாதுகாப்புப் படை (IDF) இன்று (ஏப்ரல் 27, 2026) உத்தரவிட்டுள்ளது. ஹிஸ்புல்லா அமைப்பினர் போர்நிறுத்த ஒப்பந்தத்தை அப்பட்டமாக மீறி வருவதாகவும், அவர்களுக்கு எதிராக “வலுவான மற்றும் ஆக்ரோஷமான தாக்குதல்களை” நடத்தத் திட்டமிட்டுள்ளதாகவும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது. பாதுகாப்பு அமைச்சகம் விடுத்துள்ள எச்சரிக்கையில், மக்கள் தங்கள் உயிரைப் பாதுகாக்க வடக்கு நோக்கி இடம்பெயருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் வாசிக்க >>>

அமெரிக்க அதிபர் டிரம்ப் பங்கேற்ற நிகழ்ச்சியில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதால் பரபரப்பு

Sunday, April 26th, 2026 at 8:31 (SLT)

அமெரிக்க அதிபர் டிரம்ப் பங்கேற்ற நிகழ்ச்சியில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தாக்குதல் சம்பவத்தை அடுத்து அதிபர் டிரம்ப் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டார். வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் சுட்டுக்கொல்லப்பட்டார்.

மேலும் வாசிக்க >>>

ஹார்முஸ் ஜலசந்திக்குச் செல்லும் ஜெர்மனி கடற்படை வளைகுடாவில் சர்வதேசக் கூட்டணி தயார்

Sunday, April 26th, 2026 at 6:58 (SLT)

ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரான் புதைத்துள்ளதாகக் கூறப்படும் கடல் கண்ணிவெடிகளை அகற்றும் சர்வதேச முயற்சியில் பங்கேற்க, ஜெர்மனி தனது அதிநவீன ‘ஃபுல்டா’ (Fulda) என்ற கண்ணிவெடி வேட்டை (Minesweeper) கப்பலை அனுப்பத் தீர்மானித்துள்ளது. ஜெர்மனி பாதுகாப்புத் துறை அமைச்சர் போரிஸ் பிஸ்டோரியஸ் (Boris Pistorius) நேற்று (ஏப்ரல் 25, 2026) இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். முதற்கட்டமாக இந்தக் கப்பல் மற்றும் ஒரு கட்டளை வழங்கல் கப்பல் (Command and supply ship) ஆகியவை மத்திய தரைக்கடல் பகுதிக்கு (Mediterranean) மாற்றப்படும். அங்கு நிறுத்தப்பட்டு, முறையான நாடாளுமன்ற ஒப்புதல் கிடைத்தவுடன் அவை ஹார்முஸ் ஜலசந்திக்கு விரைந்து செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க >>>

பாக்.கில் இருந்து ஈரான் வெளியுறவு அமைச்சர் புறப்பட்டார் அமெரிக்காவுடன் நேரடி பேச்சுவார்த்தை இல்லை: ஈரான் அறிவிப்பு

Sunday, April 26th, 2026 at 6:52 (SLT)

அமெரிக்க பிரதிநிதிகளை சந்திக்காமலேயே ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி பாகிஸ்தானில் இருந்து நேற்று புறப்பட்டார். அமெரிக்காவுடன் நேரடி பேச்சுவார்த்தை நடத்த தயாராக இல்லை என ஈரான் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. அமெரிக்கா-ஈரான் இடையே கடந்த 8ம் தேதி 2 வார கால போர் நிறுத்தம் ஏற்பட்டதைத் தொடர்ந்து இரு தரப்பிலும் முதல்கட்ட அமைதி பேச்சுவார்த்தை பாகிஸ்தானில் நடந்தது. இந்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தததைத் தொடர்ந்து, போர் நிறுத்தத்தை காலவரையின்றி நீட்டித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்தரவிட்டார்.

மேலும் வாசிக்க >>>

பாகிஸ்தான் அதிபர் சர்தாரி சீனா பயணம்

Sunday, April 26th, 2026 at 6:48 (SLT)

பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி நேற்று சீனாவுக்கு நேற்று சென்றார். ஹூனான் மற்றும் ஹைனான் மாகாணங்களுக்கு அவர் செல்ல உள்ளார். இந்த பயணங்களின்போது அந்தந்த மாகாண தலைவர்களை சந்திக்க உள்ள சர்தாரி, பாகிஸ்தான், சீனா இருதரப்பு உறவுகள், பொருளாதாரம் மற்றும் வர்த்தக ஒத்துழைப்பு குறித்து விவாதிக்க உள்ளார்.

மேலும் வாசிக்க >>>