நெதர்லாந்து நாட்டிற்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடியிடம், அந்நாட்டின் லைடன் பல்கலைக்கழக (Leiden University) அதிகாரிகள் 11-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர் காலத்துச் செப்புப் பட்டயங்களை முறைப்படி ஒப்படைத்தனர். ‘லைடன் பட்டயங்கள்’ என்று அழைக்கப்படும் இந்த வரலாற்று ஆவணங்கள், சுமார் 100 ஆண்டுகளுக்கும் மேலாக நெதர்லாந்தில் பாதுகாக்கப்பட்டன. 21 பெரிய செப்புத் தகடுகள் மற்றும் 3 சிறிய தகடுகளைக் கொண்ட இந்தத் தொகுப்பு, ஒரு வெண்கல வளையத்தால் கோர்க்கப்பட்டு, அதன் மீது முதலாம் ராஜேந்திர சோழனின் அதிகாரப்பூர்வ முத்திரை பதிக்கப்பட்டுள்ளது. இது தமிழர்களின் வரலாற்று அடையாளங்களை மீட்பதில் ஒரு மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.
மேலும் வாசிக்க >>>













