கட்டுநாயக்க விமான நிலையத்தில் ரூ.60 இலட்சம் பெறுமதியான சிகரெட்டுகளுடன் 3 சீனர்கள் கைது

Tuesday, May 26th, 2026 at 7:37 (SLT)

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சுமார் 60 இலட்சத்து 60 ஆயிரம் ரூபா பெறுமதியான சீனாவில் உற்பத்தி செய்யப்பட்ட சிகரெட்டுகளை சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் கொண்டுவர முயன்ற மூன்று வெளிநாட்டு வர்த்தகர்கள் நேற்று (25) அதிகாலை சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் சீனாவைச் சேர்ந்த வர்த்தகர்கள் மூவர் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மேலும் வாசிக்க >>>

அரசாங்கத்தின் ஆயுட்காலம் முடிவடையப் போகின்ற காரணத்தினாலேயே பழிவாங்கல் நடவடிக்கைகள் : விமல் வீரவன்ச

Tuesday, May 26th, 2026 at 7:33 (SLT)

தற்போதைய அரசாங்கத்தின் ஆயுட்காலம் முடிவடையப் போகின்ற காரணத்தினாலேயே இவ்வாறான பழிவாங்கல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

ஈரான் பேச்சுவார்த்தை வெற்றிபெற ஆபிரகாம் உடன்படிக்கை கட்டாயம்: டொனால்ட் டிரம்ப்

Tuesday, May 26th, 2026 at 7:30 (SLT)

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் (Donald Trump), ஈரான் அரசுடன் தற்போது நடைபெற்று வரும் அமைதிப் பேச்சுவார்த்தைகள் மிகவும் “சிறப்பாகவும் சாதகமாகவும்” (Proceeding nicely) நகர்ந்து வருவதாகப் பகிரங்கமாக அறிவித்துள்ளார். தனது சமூக வலைதளப் பக்கமான ‘ட்ரூத் சோஷியல்’ (Truth Social) தளத்தில் நீண்ட பதிவு ஒன்றை வெளியிட்டுள்ள அவர், ஈரானுடன் எட்டப்படவுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த அமைதி ஒப்பந்தமானது, மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள பிற இஸ்லாமிய நாடுகள் இஸ்ரேலுடன் தங்களது உறவை அதிகாரப்பூர்வமாக நிலைநிறுத்துவதைப் பொறுத்தே அமையும் என ஒரு புதிய புவி அரசியல் நிபந்தனையை விதித்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

தெற்கு ஈரானின் பந்தர் அப்பாஸ் நகர் மீது அமெரிக்க ராணுவம் தாக்குதல்

Tuesday, May 26th, 2026 at 7:24 (SLT)

தெற்கு ஈரானின் பந்தர் அப்பாஸ் நகர் மீது அமெரிக்க ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது. பந்தர் அப்பாஸ் நகரில் ஏவுகணைகள் வைக்கப்பட்டுள்ள பகுதி மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ளது. கடலில் கண்ணி வெடி வைக்கும் படகு மீதும் அமெரிக்க ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது.


நான் சிறைச்சாலை மதிலேறி பிள்ளையானை சந்திக்கவில்லை; சட்டப்படி அனுமதி பெற்று சந்தித்தேன் : நாமல் ராஜபக்ஷ

Monday, May 25th, 2026 at 9:49 (SLT)

தமிழ் மக்களுடன் எமக்கு எவ்வித பிரச்சினையும் கிடையாது. முரண்பாடு இருப்பதாக காண்பிக்கும் முயற்சியை அரசாங்கம் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.தமிழ் மக்களின் உரிமைகளை பற்றி பேசுபவர்கள் மாகாணசபைத் தேர்தலை நடத்தவில்லை. வடக்கு மாகாணத்துக்கு மாத்திரம் முடிந்தால் மாகாணசபைத் தேர்தலை நடத்துங்கள் என்று அரசாங்கத்துக்கு சவால் விடுக்கிறேன் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும்,பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

மேலும் வாசிக்க >>>

களுவாஞ்சிகுடி கடலில் மீன்பிடிக்க சென்றவர் மாயம்

Monday, May 25th, 2026 at 9:47 (SLT)

களுவாஞ்சிகுடி கடலில் சிறிய படகில் மீன் பிடிக்க சென்றவர் காணாமல் போயுள்ளார்.இது தொடர்பில் காணாமல் போனவரின் உறவினர்களால் நேற்று (24) களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் வாசிக்க >>>

சிறுமி கொலைக்கு பின்னால் தி.மு.க: அடுத்தடுத்து நடக்கும் திருப்பங்கள்

Monday, May 25th, 2026 at 9:43 (SLT)

கோவையில் 10 வயதுச் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, பின்னர் கொலை செய்யப்பட்ட வழக்கில் திடீர் திடீரென பல திருப்பங்கள் ஏற்பட்டு வருகின்றன. தனது மகளின் உடலைத் தாம் சரியாகப் பார்க்கவில்லை என்றும், அதனை அவசர அவசரமாக எரித்து விட்டார்கள் என்றும் பெற்ற தாயே ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

விஜய்யின் வீரவசனம் என்ன ஆனது? டிடிவி தினகரன் சரமாரி கேள்வி

Monday, May 25th, 2026 at 9:38 (SLT)

தமிழகத்தில் தமிழக வெற்றிக் கழகம் (தவேக) ஆட்சியமைத்து அக்கட்சியின் தலைவர் சி. ஜோசப் விஜய் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள சூழலில், மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு மற்றும் பெண் குழந்தைகளின் பாதுகாப்பு மிகவும் மோசமடைந்துள்ளதாக அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் (அமமுக) பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கடுமையாகக் குற்றம்சாட்டியுள்ளார். விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள வண்டிப்பாளையம் பகுதியில் 11 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக அவர் தனது கண்டனத்தை எக்ஸ் (X) தளத்தில் பதிவு செய்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

ராணுவ வீரர்களை குறிவைத்து தாக்குதல் பாக்.கில் பயணிகள் ரயிலில் குண்டுவெடித்து 24 பேர் பலி: பலூசிஸ்தானில் பயங்கரம்

Monday, May 25th, 2026 at 9:31 (SLT)

ராணுவ வீரர்களை குறிவைத்து பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் பயணிகள் ரயில் மீது நடத்தப்பட்ட குண்டுவெடிப்பில் 24 பேர் பலியாகினர். 70 பயணிகள் படுகாயமடைந்தனர். பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் குவெட்டா கன்டோன்மென்ட்டில் இருந்து குவெட்டா ரயில் நிலையம் நோக்கி குறுகிய தூர பயணிகள் ரயில் நேற்று காலை 8 மணி அளவில் சென்று கொண்டிருந்தது. பக்ரீத் பண்டிகையை கொண்டாட சொந்த ஊர்களுக்கு செல்ல இணைப்பு ரயில்களை பிடிப்பதற்காக பொதுமக்கள் பலரும் இந்த ரயிலில் பயணித்தனர். மேலும், கன்டோன்மென்ட்டில் இருந்து ராணுவ வீரர்களும் ரயிலில் சென்று கொண்டிருந்தனர்.

மேலும் வாசிக்க >>>

ஹார்முஸ் ஜலசந்தி திறக்கப்படும் அமெரிக்கா-ஈரான் இடையே விரைவில் அமைதி ஒப்பந்தம்: அதிபர் டிரம்ப் தகவல்

Monday, May 25th, 2026 at 9:27 (SLT)

ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறப்பது உள்ளிட்ட அம்சங்களுடன் அமெரிக்கா-ஈரான் இடையே விரைவில் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாக இருப்பதாக அதிபர் டிரம்ப் கூறி உள்ளார். அமெரிக்கா-ஈரான் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் எட்டப்படுவதற்கான முயற்சிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இந்நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது ட்ரூத் சமூக ஊடக பதிவில், ‘‘அமெரிக்கா, ஈரான் மற்றும் பிராந்திய வல்லரசுகளுக்கு இடையே இறுதி வடிவம் பெறுவதற்கு உட்பட்ட வகையில் ஒரு ஒப்பந்தம் பெருமளவில் பேசி முடிக்கப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க >>>

உலக சந்தையில் மசகு எண்ணெய் விலையில் பாரிய மாற்றம்

Monday, May 25th, 2026 at 9:24 (SLT)

அமெரிக்கா – இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான போரை முடிவுக்குக் கொண்டு வரக்கூடிய ஒரு ஒப்பந்தம் எட்டப்படும் என்ற எதிர்பார்ப்புக்கு மத்தியில், சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலைகள் வீழ்ச்சியடைந்துள்ளன.

மேலும் வாசிக்க >>>

வித்தியா கொலை வழக்கின் மரண தண்டனை கைதி ஒருவர் தற்கொலை

Monday, May 25th, 2026 at 9:19 (SLT)

புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதியான பூபாலசிங்கம் ஜெயக்குமார் தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்.

மேலும் வாசிக்க >>>

வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள்: முதலமைச்சர் விஜய் அதிரடி அறிவிப்பு

Sunday, May 24th, 2026 at 10:10 (SLT)

தமிழகத்தில் நியாய விலைக் கடைகள் மூலம் வழங்கப்படும் அத்தியாவசியப் பொருட்களைப் பொதுமக்கள் தங்களின் இல்லங்களிலேயே நேரடியாகப் பெற்றுக்கொள்ளும் வகையில் “வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள்” வழங்கும் புதிய திட்டத்தை முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் அதிரடியாக அறிவித்துள்ளார். தமிழக வெற்றிக் கழகம் (தவெக) ஆட்சிப் பொறுப்பேற்றது முதலே பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை முடுக்கிவிட்டு வரும் நிலையில், தற்போது நுகர்வோர் மற்றும் பொது விநியோகத் துறையில் கொண்டு வரப்பட்டுள்ள இந்தச் சீர்திருத்தம் பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

மேலும் வாசிக்க >>>

மருத்துவமனைகளுக்கு தடையில்லா மின்சாரம் வழங்க ஊழியர்களுக்கு மின்வாரியம் உத்தரவு

Sunday, May 24th, 2026 at 10:01 (SLT)

மருத்துவமனைகளுக்கு தடையில்லா மின்சாரம் வழங்க ஊழியர்களுக்கு மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது. கடந்த சில நாட்களாக மருத்துவமனைகளும் மின்வெட்டால் பாதிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.

மேலும் வாசிக்க >>>

பொலிஸ் தடுப்புக்காவலில் கைதியொருவர் உயிரிழப்பு

Sunday, May 24th, 2026 at 9:57 (SLT)

மட்டக்களப்பு மாவட்டத்தின் கரடியனாறு பொலிஸ் நிலையத்தில், நேற்று இரவு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த கைதியொருவர் உயிரிழந்துள்ளார்.கரடியனாறு, கித்துள் பிரதேசத்தைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான 50 வயதுடைய சுப்பையா வசந்தகுமார் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் வாசிக்க >>>