அ.தி.மு.க – தி.மு.க கூட்டணி ஆட்சியமைக்க தீவிர பேச்சு

Thursday, May 7th, 2026 at 8:25 (SLT)

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தாலும், பெரும்பான்மை எண்ணிக்கை கிடைக்காததால் ஆட்சியமைக்க முடியாமல் திணறி வருகிறது த.வெ.க. இந்த சூழலில், அ.தி.மு.க – தி.மு.க கூட்டணி ஆட்சியமைக்க உள்ளதாக வெளியான தகவல்கள் நாடு முழுவதும் பரபரப்பை உருவாக்கியுள்ளன.

மேலும் வாசிக்க >>>

விஜய்யின் பதவியேற்பு இன்று நடைபெறாது

Thursday, May 7th, 2026 at 8:21 (SLT)

தமிழக முதல்வராக பதவி ஏற்க ஆளுநரை நேற்று சந்தித்து உரிமை கோரினார் விஜய். ஆனால், ஆட்சி அமைப்பதற்குத் தேவையான பெரும்பான்மை எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கடிதம் வழங்காததால், இன்று நடைபெறு வதாக இருந்த பதவி ஏற்பு விழா தள்ளிப்போகிறது.

மேலும் வாசிக்க >>>

தற்காலிக சபாநாயகர் தேர்வு குறித்து சட்டப்பேரவை செயலாளருடன் செங்கோட்டையன் ஆலோசனை

Thursday, May 7th, 2026 at 8:17 (SLT)

தமிழக சட்டசபை தேர்தலில் தவெக 108 இடங்களிலும், திமுக கூட்டணி 73 இடங்களிலும், அதிமுக கூட்டணி 53 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. இதில், எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. பெரும்பான்மை என்பது, மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் பாதியான 117 தொகுதிகளைவிட ஒன்று கூடுதலாக இருக்க வேண்டும். அதாவது, 118 தொகுதிகள் வேண்டும்.

மேலும் வாசிக்க >>>

தென்னாப்பிரிக்காவில் சொகுசு சுற்றுலா கப்பலில் மேலும் 4 பேருக்கு ஹான்டா வைரஸ் பாதிப்பு

Thursday, May 7th, 2026 at 8:10 (SLT)

தென்னாப்பிரிக்காவில் சொகுசு சுற்றுலா கப்பலில் மேலும் 4 பயணிகளுக்கு ஹான்டா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. ஹான்டா வைரஸ் என்பது, உணவுகளை கொறித்து சாப்பிடும் எலிகள் போன்றவற்றின் சிறுநீர், மலம் ஆகியவற்றின் மூலம் பரவும் தொற்றாகும். இந்நிலையில் தென்அமெரிக்க நாடான அர்ஜென்டினாவில் இருந்து அன்டார்டிகா வழியாக ஆப்பிரிக்காவின் கேப் வெர்டே என்ற தீவு நாட்டுக்கு 150 பயணிகளுடன் எம்வி எம்வி ஹோன்டியஸ் என்ற நெதர்லாந்து நாட்டின் சுற்றுலா சொகுசு கப்பல் கடந்த 4ம் தேதி புறப்பட்டு சென்றது. இதில் பயணித்த சிலருக்கு ஹான்டா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.

மேலும் வாசிக்க >>>

ஈரானில் வணிக வளாகத்தில் தீ 8 பேர் பலி, 36 பேர் காயம்

Thursday, May 7th, 2026 at 7:05 (SLT)

ஈரானில் வணிக வளாகத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 8 பேர் பலியானார்கள். மேலும் 36 பேர் காயமடைந்தனர். ஈரான் தலைநகர் தெஹ்ரான் மாகாணத்தில் உள்ள அண்டிஷே நகரில் அர்கவான் என்ற வணிக வளாகம் அமைந்துள்ளது.

மேலும் வாசிக்க >>>

’ஹண்டா’ வைரஸ் பரவல்: மூவர் பலி, 144 பேர் அச்சம்

Wednesday, May 6th, 2026 at 10:35 (SLT)

கேப் வெர்தே (Cape Verde) கடலோரப் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள டச்சு நாட்டுச் சொகுசு கப்பல் ஒன்றில், ‘ஹண்டா’ (Hanta) எனப்படும் அரிய வகை வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. குறித்த கப்பலில் பயணம் செய்த 147 பயணிகளில், இந்த வைரஸ் பாதிப்பினால் இதுவரை மூவர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் வாசிக்க >>>

கள்ளக்காதலனின் பசிக்கு மகளைப் இரையாக்கிய கொடூர தாய்

Wednesday, May 6th, 2026 at 10:30 (SLT)

தனது கள்ளக்காதலன் மகளைத் துஷ்பிரயோகம் செய்தமையை மறைத்தமை மற்றும் அதற்கு உடந்தையாக இருந்தமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் கைது செய்யப்பட்ட தாய், எதிர்வரும் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

மேலும் வாசிக்க >>>

ஈரான் அணுசக்தி மர்மம்! ஒரு வருடத்திற்குள் அணு குண்டு தயாரிக்கும் திறன்? : அமெரிக்க உளவுத்துறை அறிக்கையால் உலக நாடுகள் அதிர்ச்சி

Wednesday, May 6th, 2026 at 6:03 (SLT)

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் கடந்த இரண்டு மாதங்களாக ஈரான் மீது “ஆபரேஷன் எபிக் பியூரி” (Operation Epic Fury) என்ற பெயரில் வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருகின்றன. இந்தத் தாக்குதல்கள் ஈரானின் அணுசக்தித் திட்டத்தைப் பல ஆண்டுகள் பின்னோக்கித் தள்ளியிருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ராய்ட்டர்ஸ் வெளியிட்டுள்ள அமெரிக்க உளவுத்துறை தகவல்களின்படி, ஈரான் ஒரு அணு ஆயுதத்தைத் தயாரிப்பதற்கான காலக்கெடு இன்னும் சுமார் ஒன்பது மாதங்கள் முதல் ஒரு வருடம் என்ற அளவிலேயே நீடிக்கிறது. ஜூன் 2025-ல் நடத்தப்பட்ட முந்தையத் தாக்குதல்களுக்குப் பிறகு கணிக்கப்பட்ட அதே காலக்கெடு இப்போதும் தொடர்வது குறிப்பிடத்தக்கது.

மேலும் வாசிக்க >>>

பாகிஸ்தானின் வெப்ப அலைக்கு 10 பேர் பலி

Wednesday, May 6th, 2026 at 5:58 (SLT)

பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு வெப்பஅலை அதிகமாக உள்ளது. இந்த வெப்ப அலையானது காலநிலை மாற்றத்துடன் தொடர்புடைய தெற்காசியா முழுவதும் அதிகரித்து வரும் அதிதீவிர வெப்ப நிலைகளின் பரந்த வடிவத்தின் ஒரு பகுதியாகும். இந்நிலையில் கராச்சியில் நேற்று முன்தினம் வெப்பத்தின் தாக்கத்தால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த நிலையில்,நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து 5 உடல்கள் மீட்கப்பட்டன.

மேலும் வாசிக்க >>>

சட்டசபையில் ‘தொங்குநிலை’ தவெகவிற்கு கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை: திருமாவளவன் அறிக்கை

Wednesday, May 6th, 2026 at 5:50 (SLT)

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.ஆட்சி அமைப்பதற்கு தேவையான தனி பெரும்பான்மை யாருக்கும் கிட்டாதவகையில் மக்கள் அளித்துள்ள இத்தீர்ப்பு மிகவும் நுட்பமான அரசியலை நமக்கு உணர்த்துகிறது.

மேலும் வாசிக்க >>>

இங்கிலாந்தில் ரூ.951 கோடி பரிசுக்கான குளோபல் பள்ளிகள் விருது பட்டியலில் இடம் பிடித்த 2 இந்திய பள்ளிகள்

Wednesday, May 6th, 2026 at 5:46 (SLT)

இங்கிலாந்தைச் சேர்ந்த வார்கி அறக்கட்டளை 2026 குளோபல் பள்ளிகள் பரிசு என்ற விருதுக்கு ஏற்பாடு செய்துள்ளது. இதில் வெற்றி பெறும் பள்ளிக்கு ஒரு மில்லியன் அமெரிக்க டாலர் (ரூ.951கோடி)பரிசுத்தொகையாக வழங்கப்படும். எதிர்காலத்திற்கான கல்வியைப் புதுமையான முறையில் மறுவடிவமைக்கும் உலகின் மிகவும் ஆக்கப்பூர்வமான மற்றும் அழுத்தமான செயல் விளைவை ஏற்படுத்தும் பள்ளிகள் 10 வெவ்வேறு பிரிவுகளின் கீழ் கவுரவிக்கப்படுகிறது.

மேலும் வாசிக்க >>>

கச்சதீவை மட்டுமல்ல, யாழ்ப்பாணத்தையும் தமிழகத்திற்குக் கொடுக்க வேண்டும் : அர்ச்சுனா இராமநாதன்

Tuesday, May 5th, 2026 at 23:59 (SLT)

கச்சதீவை மட்டுமல்ல, யாழ்ப்பாணத்தையும் தமிழகத்திற்குக் கொடுக்க வேண்டும் என்றும், அப்போது தமிழக மக்கள் எங்களைப் பாதுகாப்பார்கள் என்றும் யாழ். மாவட்ட சுயேச்சைக் குழு பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் தெரிவித்தார்.

மேலும் வாசிக்க >>>

கோப்பாயில் உந்துருளி விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழப்பு

Tuesday, May 5th, 2026 at 9:01 (SLT)

யாழ்ப்பாணம் கோப்பாய் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.பருத்தித்துறை வீதியில் கோப்பாய் நாவட்கட்டு பகுதியில் இன்று அதிகாலை உந்துருளி ஒன்று விபத்துக்குள்ளாகியதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

மேலும் வாசிக்க >>>

2026 சட்டமன்ற தேர்தல் முடிவுகள் – 108 தொகுதிகளில் த.வெ.க அமோக வெற்றி

Tuesday, May 5th, 2026 at 8:58 (SLT)

தமிழக சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணிகள் முழுமையாக நிறைவு பெற்றுள்ளன. இதைத் தொடர்ந்து இந்திய தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் வெற்றியாளர்களின் விவரங்கள் முழுமையாக பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.

மேலும் வாசிக்க >>>

ஈரானை உலக வரைபடத்தில் இருந்து அகற்றும் நிலை உருவாகும் : ட்ரம்ப்

Tuesday, May 5th, 2026 at 8:52 (SLT)

ஹோர்முஸ் நீரிணையிலோ அல்லது பாரசீக வளைகுடா பிராந்தியத்திலோ உள்ள அமெரிக்கக் கப்பல்களை இலக்கு வைக்க முயன்றால், ஈரானை உலக வரைபடத்திலிருந்து அகற்றும் நிலை உருவாகும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>