இதுபோன்ற நாய்த்தனமான அரசாங்கமொன்றை வரலாற்றில் கண்டதில்லை : இத்தேகந்தே தேரர்

இதுபோன்ற நாய்த் தனமாக செயற்படும் ஒரு அரசாங்கத்தை எமது வாழ்நாளில் இந்த நாட்டில் கண்டதில்லையென ராவணா பலய அமைப்பின் பொதுச் செயலாளர் இத்தேகந்தே சத்தாதிஸ்ஸ தேரர் தெரிவித்தார்.

ஹம்பாந்தோட்டையில் யார் கல் அடிப்பது என்பதை அறிந்த தனியார் ஊடகமொன்று, தனது கெமராவில் அதனை சரியான முறையில் ஒளிப்பதிவு செய்திருந்தது. இதனை அறிந்த பொலிஸார் குறித்த ஊடகவியலாளரை பாதுகாப்புக் காரணங்களுக்காகவெனக் கூறி அழைத்துச் சென்று, அவருடைய கெமெராவில் இருந்த காட்சிகளை அழித்துவிட்டு கொடுத்துள்ளது.

இதுதானா இந்த அரசாங்கம் சொல்லும் ஊடக சுதந்திரம்? எனவும் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில் தேரர் மேலும் குறிப்பிட்டார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply