2.5 மில்லியன் டொலர் சென்றது யாருடைய கணக்கிற்கு?

April 23rd, 2026 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

திறைசேரிக்குச் சொந்தமான 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி, போலியான மின்னஞ்சல் ஊடாக மோசடியான முறையில் பிறிதொரு வங்கிக் கணக்கிற்கு மாற்றப்பட்ட சம்பவம் தொடர்பில் ஜனாதிபதி உடனடியாகப் பதிலளிக்க வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

டிரம்பின் காலவரையற்ற போர் நிறுத்த அறிவிப்புக்கு பிறகு ஹார்முஸ் ஜலசந்தியில் 2 கப்பல்கள் சிறைபிடிப்பு: 3 கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தியது ஈரான்

April 23rd, 2026 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

அமெரிக்க அதிபர் டிரம்ப் காலவரையின்றி போர் நிறுத்தம் அறிவித்த நிலையில், ஹார்முஸ் ஜலசந்தியில் 3 கப்பல்கள் மீது தாக்குதல் நடத்திய ஈரான், ஜலசந்தியை கடக்க முயன்ற 2 கப்பல்களை சிறைபிடித்தது. இது இரு தரப்பு பேச்சுவார்த்தையை மேலும் சிக்கலாக்கி உள்ளது. அமெரிக்கா-ஈரான் இடையே கடந்த 8ம் தேதி 2 வார கால தற்காலிக போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. இப்போர் நிறுத்தம் இந்திய நேரப்படி இன்று அதிகாலை 5.30 மணியுடன் முடிவடைய இருந்த நிலையில், 2ம் கட்ட பேச்சுவார்த்தைக்கு ஈரான் சம்மதிக்கவில்லை. ஈரான் துறைமுகங்கள் மீதான முற்றுகையை அமெரிக்கா தொடரும் நிலையில் பேச்சுவார்த்தை நடத்த முடியாது என ஈரான் மறுத்தது. இந்த சூழலில் போர் நிறுத்தம் முடிய சில மணி நேரங்கள் இருந்த நிலையில், போர் நிறுத்தத்தை காலவரையின்றி நீட்டிக்க அமெரிக்க அதிபர் டிரம்ப் ஒப்புக் கொண்டார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

அமெரிக்கா – ஈரான் இடையே சமரசம்: பாகிஸ்தானின் முயற்சிக்குத் தலைவணங்கிய ஈரான்

April 23rd, 2026 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தை தற்போது முட்டுக்கட்டையில் உள்ள நிலையில், பாகிஸ்தானின் சமரசப் பங்களிப்பை ஈரான் அரசு வெகுவாகப் பாராட்டியுள்ளது. ஈரானின் பாராளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாப் (Mohammad Bagher Ghalibaf), பாகிஸ்தானின் ராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் ஆசிம் முனீர் மற்றும் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் ஆகியோரின் முயற்சிகள் பாராட்டுக்குரியவை என்று தெரிவித்துள்ளார். இரண்டு வார கால போர்நிறுத்தத்தை (Ceasefire) நீட்டிக்குமாறு பாகிஸ்தான் முன்வைத்த கோரிக்கையை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஏற்றுக்கொண்டதைத் தொடர்ந்து, ஈரான் இந்த நேர்மறையான கருத்தை வெளியிட்டுள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

‘Walk For Peace’ அமைதி நடைப்பயணம் தம்புள்ளையில் இன்று ஆரம்பம்

April 22nd, 2026 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

சர்வதேச ரீதியில் புகழ்பெற்ற ‘Walk For Peace’ (அமைதிக்கான நடைப்பயணம்), அரச அனுசரணையுடன் இன்று (22) தம்புள்ளையில் ஆரம்பமாகின்றது. இந்தப் பயணம் எதிர்வரும் ஏப்ரல் 28ஆம் திகதி வரை தொடர்ச்சியாக இடம்பெறவுள்ளது. இன்று காலை 6.30 மணிக்கு இந்த அமைதி நடைப்பயணம் ஆரம்பிக்கப்படவுள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

யுத்த நிறுத்தத்தை 4 நாட்களுக்கு நீடித்தார் ரம்

April 22nd, 2026 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

மத்திய கிழக்கில் போர் மேகங்கள் சூழ்ந்து, இன்னும் சில மணிநேரங்களில் ஈரான் மீது குண்டுமழை பொழியும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், உலகத்தையே அதிரவைக்கும் ஒரு அறிவிப்பை அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வெளியிட்டுள்ளார். பாகிஸ்தான் தூதுவர்களின் அவசரக் கோரிக்கையை ஏற்று, ஈரானுடனான தற்காலிக போர்நிறுத்தத்தை அவர் நீட்டித்துள்ளார். இருப்பினும், பாரசீக வளைகுடாவில் அமெரிக்கா விதித்துள்ள கடல்வழி முற்றுகை (Blockade) தொடர்ந்து நீடிக்கும் என்றும், ஈரான் அரசு ஒரு தெளிவான முடிவுக்கு வரும் வரை இந்த போர்நிறுத்தம் அமுலில் இருக்கும் என்றும் ட்ரம்ப் தனது ‘ட்ரூத் சோஷியல்’ பக்கத்தில் அதிரடியாகத் தெரிவித்துள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

இந்திய விமானங்களுக்கான பாக். வான்வெளித் தடை மே 24ம் தேதி வரை நீட்டிப்பு

April 22nd, 2026 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காமில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலை தொடர்ந்து இந்தியா-பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் ஏற்பட்டது. இதன் எதிரொலியாக இந்திய விமான நிறுவனங்களுக்கான வான்வெளியை பாகிஸ்தனான் மூடியது. பதிலடியாக இந்தியாவும் பாகிஸ்தான் விமான நிறுவனங்களுக்கான தனது வான்வெளியை மூடியது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

ஜெர்மனி குருத்வாராவில் மோதல் 4 பேர் காயம்

April 22nd, 2026 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

ஜெர்மனியின் மோயர்ஸ் நகரில் உள்ள குருத்வாராவில் நேற்று முன்தினம் பிற்பகல் நேரத்தில் அங்கு கூடியிருந்த இரண்டு குழுக்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதம் முற்றிய நிலையில் இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

ஆப்பிள் சிஇஓ டிம்குக் செப்டம்பரில் பதவி விலகல்

April 22nd, 2026 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பிள் தனது நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான டிம் குக், அந்த பதவியில் இருந்து விலக உள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

இலங்கை கடல் எல்லைக்கு அருகில் அமெரிக்காவின் பிடியில் மற்றொரு ஈரானிய கப்பல்

April 21st, 2026 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

இலங்கை கடல் எல்லைக்கு அருகாமையில் சிங்கப்பூர் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த, ஈரானுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் எரிபொருள் கப்பல் ஒன்று அமெரிக்காவினால் பொறுப்பேற்கப்பட்டுள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று இன்றுடன் 7 ஆண்டுகள்

April 21st, 2026 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் இடம்பெற்று இன்றுடன் (21) 7 ஆண்டுகள் நிறைவடைகின்றன. இதனை முன்னிட்டு இன்று நாட்டின் அனைத்து தேவாலயங்களிலும் விசேட மத வழிபாடுகளை முன்னெடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

சரக்கு கப்பலை அமெரிக்கா சிறைபிடித்ததால் பேச்சுவார்த்தையில் பங்கேற்கும் திட்டமில்லை: ஈரான் அறிவிப்பு இருதரப்பை சமாதானப்படுத்த பாக். தீவிர முயற்சி

April 21st, 2026 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க முயன்ற சரக்கு கப்பலை அமெரிக்க கடற்படை சிறைபிடித்ததால், 2ம் கட்ட பேச்சுவார்த்தையில் பங்கேற்கும் எந்த திட்டமும் இல்லை என ஈரான் கூறி உள்ளது. தற்காலிக போர் நிறுத்தம் நாளையுடன் முடிவுக்கு வருவதால், இரு தரப்பையும் சமாதானப்படுத்த பாகிஸ்தான் தீவிர முயற்சி செய்து வருகிறது. அமெரிக்கா-ஈரான் இடையே கடந்த 8ம் தேதி 2 வார கால போர் நிறுத்தம் ஏற்பட்டதைத் தொடர்ந்து பாகிஸ்தானில் நடந்த முதல்கட்ட இருதரப்பு அமைதி பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

நரகமாகும் ரஷ்ய ராணுவம்: நாயைப் போல் ஊர்ந்து செல்ல கட்டளை கசிந்த சித்திரவதை 

April 21st, 2026 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

உக்ரைன் போரில் முன்னணி வரிசையில் நின்று போரிட மறுக்கும் ரஷ்ய வீரர்களை, அவர்களது சொந்த அதிகாரிகளே மிகக் கொடூரமான முறையில் தண்டிக்கும் காட்சிகள் அடங்கிய வீடியோ தந்தி (Telegram) உள்ளிட்ட சமூக வலைதளங்களில் கசிந்துள்ளது. அதில், ஒரு கமாண்டர் தனது வீரரை தரையில் நாயைப் போல் ஊர்ந்து செல்லுமாறு கட்டாயப்படுத்துவதும், அவரது முதுகில் ஏறி மிதிப்பதும் பதிவாகியுள்ளது. மேலும், அந்த வீரரை வலுக்கட்டாயமாக மண்ணைத் தின்னச் சொல்லியும், கடுமையான வார்த்தைகளால் அவரை அவமதித்தும் அந்த அதிகாரி சித்திரவதை செய்துள்ளார். “நீ ஒரு கோழை” என்று கத்திக் கொண்டே அந்த வீரரைச் சீண்டும் காட்சிகள் பார்ப்போரை உறைய வைக்கின்றன.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

ஹோர்முஸ் நீரிணையில் ஈரான் கப்பலை சிறைபிடித்த அமெரிக்கா

April 20th, 2026 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

ஹோர்முஸ் நீரிணைக்கு அருகில் அமெரிக்காவின் கடற்படைத் தடையை மீறிச் செல்ல முற்பட்ட ஈரானியக் சரக்குக் கப்பலை அமெரிக்கப் படைகள் சிறைபிடித்துள்ளதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

அமெரிக்க பேச்சுவார்த்தை குழு இன்று பாக். பயணம் ஒப்பந்தம் செய்யாவிட்டால் ஈரான் அழிக்கப்படும்

April 20th, 2026 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

அமெரிக்க பேச்சுவார்த்தை குழு இன்று பாகிஸ்தான் செல்வதாக அறிவித்த அதிபர் டிரம்ப், இதில் ஈரான் ஒப்பந்தம் செய்யாவிட்டால் அந்நாட்டின் மின் உற்பத்தி நிலையங்கள், பாலங்கள் அழிக்கப்படும் என மீண்டும் ஒருமுறை எச்சரித்துள்ளார். ஈரான் துறைமுகங்களை முற்றுகையிடும் அமெரிக்க கடற்படையின் நடவடிக்கை தொடர்வதால், தங்கள் தரப்பில் பேச்சுவார்த்தை குழு அனுப்பப்படவில்லை என ஈரான் கூறியிருக்கிறது. அமெரிக்கா-ஈரான் இடையேயான 2 வார கால போர் நிறுத்த ஒப்பந்தம் நாளை மறுதினத்துடன் முடிவடைகிறது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

பேச்சுவார்த்தைக்கு முற்றுப்புள்ளி: அமெரிக்காவின் நிபந்தனைகளை நிராகரித்தது ஈரான்

April 20th, 2026 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தனது பிரதிநிதிகள் இன்று (ஏப்ரல் 20, 2026, திங்கட்கிழமை) மாலை பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் நகருக்குப் பேச்சுவார்த்தைக்காகச் செல்வார்கள் என்று அறிவித்திருந்தார். ஆனால், ஈரானின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமான ஐ.ஆர்.என்.ஏ (IRNA), வாஷிங்டனின் “நிர்ணயிக்க முடியாத மற்றும் மிகையான கோரிக்கைகள்” (Excessive demands) காரணமாக இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தையில் ஈரான் பங்கேற்காது என்று அறிவித்துள்ளது. அமெரிக்காவின் நிலையில்லாத கொள்கைகள் மற்றும் தொடர்ந்து நீடிக்கப்படும் கடல்வழி முற்றுகை ஆகியவை இந்தப் பேச்சுவார்த்தைக்குப் பெரும் தடையாக இருப்பதாக ஈரான் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button