களுத்துறையில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை : சந்தேக நபர் கைது

Sunday, November 3rd, 2024 at 10:09 (SLT)

களுத்துறை தெற்கு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் நேற்று சனிக்கிழமை (02) இரவு கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக களுத்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்தனர். களுத்துறை , பொலொஸ்ஸகம பிரதேசத்தைச் சேர்ந்த 65 வயதுடைய நபரொருவரே கொலை செய்யப்பட்டுள்ளார்.

மேலும் வாசிக்க >>>

ஜே.வி.பிக்கு இலங்கைத் தமிழரசுக்கட்சி தேர்தல் விஞ்ஞாபனம் மூலம் பதிலளிப்பு

Sunday, November 3rd, 2024 at 10:06 (SLT)

ஜே.வி.பி.யின் அதிகாரப்பகிர்வு, 13ஆவது திருத்தச்சட்டம் நிராகரிப்புக்கு மற்றும் பயங்கரவாத தடைச்சட்டம் சம்பந்தமான நிலைப்பாடு ஆகியவற்றுக்கு இலங்கைத் தமிழரசுக்கட்சி தனது தேர்தல் விஞ்ஞாபனம் மூலம் பதிலளித்துள்ளது.

மேலும் வாசிக்க >>>

பயணிகளிடம் அதிக வரவேற்பு உள்ளதால் நாகை இலங்கை கப்பல் சேவை: வாரத்துக்கு 5 நாட்களாக அதிகரிப்பு

Sunday, November 3rd, 2024 at 10:01 (SLT)

நாகப்பட்டினம்: இரு நாட்டு பயணிகளிடம் அதிக வரவேற்பு இருப்பதால், நாகையில் இருந்து இலங்கை காங்கேசன் துறைக்கு வாரத்தில் 5 நாட்களுக்கு பயணிகள் கப்பல்இயக்கப்படும் என்று கப்பல் போக்குவரத்து நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி, வரும் 8-ம் தேதி முதல்வெள்ளிக்கிழமைகளிலும் கப்பல் சேவை இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க >>>

இலங்கை வானிலை தொடர்பான முன்னறிவிப்பு

Sunday, November 3rd, 2024 at 9:57 (SLT)

நாட்டில் இன்று பல பகுதிகளில் மாலை வேளைகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வகையில் வளிமண்டல நிலைமைகள் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

மேலும் வாசிக்க >>>

வாக்காளர் அட்டை விநியோகிக்கும் விசேட தினம் இன்று

Sunday, November 3rd, 2024 at 9:54 (SLT)

இலங்கையின் பொதுத் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் விசேட தினமாக இன்று (03) கருதப்படும் என தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது. உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை விநியோகம் இன்று காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை இடம்பெறும் என பிரதி தபால் மா அதிபர் ராஜித ரணசிங்க குறிப்பிட்டுள்ளார்.

மேலும் வாசிக்க >>>

வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலைக்கு சென்ற மகிந்த

Saturday, November 2nd, 2024 at 13:14 (SLT)

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவின் உடல்நலம் குறித்து விசாரிப்பதற்காக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மற்றும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம ஆகியோர் வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலைக்கு விஜயம் செய்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

கொழும்பு மாவட்ட தமிழ் மக்கள் ஒன்றிணைந்து செயற்பட்டால் மூன்று தமிழ் பிரதிநிதிகளை பெறலாம் : ஈ.பி.டி.பியினர்

Saturday, November 2nd, 2024 at 13:10 (SLT)

கொழும்பு மாவட்ட தமிழ் மக்கள் ஒன்றிணைந்து செயற்பட்டால் மூன்று தமிழ் பிரதிநிதிகளை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் யாருடைய வாக்குகளையும் சிதறடித்து வாக்குகளை பெற வேண்டிய தேவை எமக்கில்லை என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் தேசியப்பட்டியல் உறுப்பினர் பாபு சர்மா தெரிவித்தார்.

மேலும் வாசிக்க >>>

அநுர அரசில் சுமந்திரனுக்கு வெளிவிவகார அமைச்சர் பதவி : உதய கம்மன்பில

Saturday, November 2nd, 2024 at 13:03 (SLT)

இலங்கை தமிழரசுக் கட்சி பொதுத்தேர்தலின் பின்னர் தேசிய மக்கள் சக்தியுடன் இணையும். எம். ஏ. சுமந்திரனுக்கு வெளிவிவகாரத்துறை அமைச்சு பதவியை வழங்கவும், சமஷ்டியாட்சி முறைமையிலான புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கும் ஜனாதிபதி தமிழ் தரப்புக்கு உத்தரவாதமளித்துள்ளார். நாட்டுக்கு எதிராக இச்செயற்பாடுகளுக்கு இடமளிக்க முடியுமா? என பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

மேலும் வாசிக்க >>>

கால்வாயில் இருந்து சடலம் மீட்பு

Saturday, November 2nd, 2024 at 12:56 (SLT)

பொகவந்தலாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொட்டியாகலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் தண்ணீர் தாங்கிக்கு, தண்ணீர் கொண்டு செல்லும் நீர் போக்குவரத்து அமைப்பின் பாதுகாப்பு வலையில் இருந்து, இன்று (2) காலை ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டு உள்ளது.

மேலும் வாசிக்க >>>

ஜனாதிபதி – இந்திய தூதுவர் சந்திப்பு

Saturday, November 2nd, 2024 at 12:52 (SLT)

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கும் இலங்கைக்கான இந்திய தூதுவர் சந்தோஷ் ஜாவுக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று (01) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. இந்திய உதவியின் கீழ் இலங்கையில் அமுல்படுத்தப்பட்ட அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் இங்கு விரிவான மீளாய்வு மேற்கொள்ளப்பட்டதுடன், அந்தத் திட்டங்களின் முன்னேற்றம் மற்றும் அவற்றை நடைமுறைப்படுத்துவதில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் மற்றும் சவால்கள் குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.

மேலும் வாசிக்க >>>

கொழும்பில் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞன் கைது

Saturday, November 2nd, 2024 at 12:46 (SLT)

கொழும்பு , முகத்துவாரம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கல்வல சந்திக்கு அருகில் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞன் ஒருவன் நேற்று வெள்ளிக்கிழமை (01) கைது செய்யப்பட்டுள்ளதாக முகத்துவாரம் பொலிஸார் தெரிவித்தனர். முகத்துவாரம் பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர் கைது செய்யபட்டுள்ளார்.கொழும்பு 15 பிரதேசத்தைச் சேர்ந்த 25 வயதுடைய இளைஞனே கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் வாசிக்க >>>

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள லொஹான் ரத்வத்த சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதி

Saturday, November 2nd, 2024 at 12:42 (SLT)

பதிவுசெய்யப்பட்ட இலக்கத்தகடு இல்லாத சொகுசு கார் ஒன்றை வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பில் தெரியவருவதாவது,

மேலும் வாசிக்க >>>

அனைத்து நிறுவனங்களின் தலைவர்களுக்கும் தேர்தல் ஆணைக்குழுவின் முக்கிய அறிவித்தல்

Saturday, November 2nd, 2024 at 12:39 (SLT)

நிறுவனங்களில் புதிய நியமனங்கள் மற்றும் பணி இடமாற்றங்களை செய்வதற்கு முன்னர் தேர்தல் ஆணைக்குழுவுக்கு அறிவிக்க வேண்டும் என அனைத்து நிறுவனங்களின் தலைவர்களுக்கும் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு மேலும் தெரிவிக்கையில்,

மேலும் வாசிக்க >>>

அம்பாறை – அக்கரைப்பற்று வீதியில் விபத்து : இளைஞன் பலி

Saturday, November 2nd, 2024 at 12:34 (SLT)

அம்பாறை – அக்கரைப்பற்று வீதியில் 15ஆவது மைல்கல் அருகில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக எரகம பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து நேற்று வெள்ளிக்கிழமை (01) இடம்பெற்றுள்ளது. செலுத்துநரின் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் வீதியை விட்டு விலகிக் கவிழ்ந்து எதிர்த்திசையில் பயணித்த கெப் வாகனத்துடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க >>>

கல்கிஸ்ஸையில் போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது

Saturday, November 2nd, 2024 at 12:28 (SLT)

கல்கிஸ்ஸை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட படோவிட்ட பிரதேசத்தில் போதை மாத்திரைகளுடன் சந்தேக நபரொருவர் நேற்று வெள்ளிக்கிழமை (01) இரவு கைது செய்யப்பட்டுள்ளதாக கல்கிஸ்ஸை பொலிஸார் தெரிவித்தனர். கல்கிஸ்ஸை பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் வாசிக்க >>>