வளிமண்டலவியல் திணைக்களத்தின் எச்சரிக்கை

Saturday, November 2nd, 2024 at 12:24 (SLT)

நாட்டில் மாலை அல்லது இரவு வேளையில் தீவின் பெரும்பாலான பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology) இன்று (02.11.2024) வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளது.

மேலும் வாசிக்க >>>

வன்னியை ஊழலற்ற தேர்தல் தொகுதியாக மாற்றிக் காட்டுவதற்கு மக்கள் ஆணை வழங்க வேண்டும் : ப.உதயராசா

Saturday, November 2nd, 2024 at 10:23 (SLT)

வன்னியை ஊழலற்ற தேர்தல் தொகுதியாக மாற்றிக் காட்டுவதற்கு மக்கள் ஆணை வழங்க வேண்டும்: ஜனநாய தேசியக் கூட்டணியின் முதன்மை வேட்பாளர் ப.உதயராசா வன்னியை ஊழலற்ற தேர்தல் தொகுதியாக மாற்றிக் காட்டுவதற்கு மக்கள் ஆணை வழங்க வேண்டும் என ஜனநாய தேசியக் கூட்டணியின் வன்னி மாவட்ட முதன்மை வேட்பாளர் ப.உதயராசா தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

தேர்தல் செலவின சட்டத்தின் பிரகாரம் செயற்படத் தவறிய ரணில் : பொலிஸில் முறைப்பாடு

Friday, November 1st, 2024 at 12:27 (SLT)

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது, தேர்தல் செலவின சட்டத்தின் பிரகாரம் செயற்படத் தவறியுள்ளதாகக் குற்றச்சாட்டு முன்வைத்து நேற்று (31) பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஜனநாயகத்துக்கான பிரஜைகளின் அமைப்பால் இந்த முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க >>>

இனச்சுத்திகரிப்பின் 34 ஆவது வருட நினைவு கூறல்

Friday, November 1st, 2024 at 12:23 (SLT)

வடக்கு முஸ்லிம் மக்கள் வெளியேற்றத்தின் 34 ஆவது வருட நினைவு கூறல் நிகழ்வு யாழ்ப்பாணம் முஸ்லிம் கலாசார சபையின் ஏற்பாட்டில் யாழ். ஒஸ்மானியா கல்லூரி மஹ்மூத் மண்டபத்தில் கடந்த 30 ஆம் திகதி மாலை நடைபெற்றது.

மேலும் வாசிக்க >>>

மக்களை அழித்து தமிழ்த் தேசியம் வளர்க்கப்படுகிறது:அங்கஜன் இராமநாதன்

Friday, November 1st, 2024 at 12:19 (SLT)

தமிழ் மக்களை அழித்து தமிழ்த் தேசியத்தை வளர்ப்பதற்கு தமிழ் கட்சிகள் செயற்படுவதாக ஜனநாயக தேசிய கூட்டணியின் முதன்மை வேட்பாளர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

இஸ்ரேல் காசாவில் பொதுமக்களை கொலை செய்யவேண்டிய நிர்பந்தத்திற்குள்ளானது : பில்கிளின்டனின் கருத்திற்கு கடும் எதிர்ப்பு

Friday, November 1st, 2024 at 12:15 (SLT)

காசாவில் பொதுமக்களை கொலை செய்யவேண்டிய நிர்பந்தத்திற்கு இஸ்ரேல் தள்ளப்பட்டது என அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பில் கிளின்டன் தெரிவித்துள்ளமைக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

மேலும் வாசிக்க >>>

பிரதமரை சந்தித்தார் ஐ.நா.வின் சனத்தொகை நிதியத்தின் இலங்கைக்கான பிரதிநிதி

Friday, November 1st, 2024 at 12:08 (SLT)

ஐக்கிய நாடுகளின் சனத்தொகை நிதியத்தின் இலங்கைக்கான பிரதிநிதி குன்லே அடனி (Kunle Adeniyi) பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவை வியாழக்கிழமை (31) பிரதமர் அலுவலகத்தில் சந்தித்தார்.

மேலும் வாசிக்க >>>

லொஹான் ரத்வத்தவுக்குச் சொந்தமான மற்றுமொரு வாகனம் மீட்பு

Friday, November 1st, 2024 at 12:02 (SLT)

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த பயன்படுத்தியதாகக் கூறப்படும் போலி இலக்கத் தகடு பொருத்தப்பட்ட மற்றுமொரு ஜீப் வாகனம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெல்தெனிய பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் வாசிக்க >>>

மருமகனால் கீழே தள்ளிவிடப்பட்ட மாமியார் உயிரிழப்பு : கண்டியில் சம்பவம்

Friday, November 1st, 2024 at 11:54 (SLT)

கண்டி, அங்கும்புர பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கல்ஹின்ன பிரதேசத்தில் மருமகனால் கீழே தள்ளிவிடப்பட்ட மாமியார் காயமடைந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக அங்கும்புர பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் கடந்த 30 ஆம் திகதி புதன்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது.

மேலும் வாசிக்க >>>

பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குங்கள் – 13 வது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துங்கள் – ஜனாதிபதி தேர்தலின் போது வழங்கிய வாக்குறுதிகளை திரும்பிப்பாருங்கள் : அனுரகுமாரவிற்கு மாற்றுக்கொள்கைகளிற்கான நிலையம் கடிதம்

Friday, November 1st, 2024 at 11:45 (SLT)

ஜனாதிபதி அனுரகுமாரதிசநாயக்க தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டிருந்த முக்கிய வாக்குறுதிகள் குறித்து மீண்டும் அவரது கவனத்தை ஈர்ப்பதற்காக மாற்றுக்கொள்கைகளிற்கான நிலையம் அவருக்கு கடிதமொன்றை எழுதியுள்ளது.

மேலும் வாசிக்க >>>

வக்கிரபுத்தியுள்ளோரை அரசியலிலிருந்து ஓரங்கட்ட வன்னி மக்கள் தயாராகிவிட்டனர் மஸ்தானின் செயற்பாடுகள் கீழ்த்தரமானவை : ரிஷாட்

Thursday, October 31st, 2024 at 8:05 (SLT)

அரசியலில் நிலைப்பதற்காக மக்களுக்கு வரும் அபிவிருத்திகளைக் கூட தடைசெய்யும் வக்கிர மனநிலையில், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மஸ்தான் செயற்பட்டதை மறக்க முடியாதென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் வன்னி மாவட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் முதன்மை வேட்பாளருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

மேலும் வாசிக்க >>>

அஞ்சல் வாக்களிப்பிற்காக பலரையும் சிரமத்திற்குள்ளாக்கும் நுவரெலியா வலயம்

Thursday, October 31st, 2024 at 7:59 (SLT)

நடைபெறவிருக்கும் பாராளுமன்ற தேர்தலில் வாக்குப்பதிவுகள் எதிர்வரும் நவம்பர் 14ஆம் திகதி இடம்பெற உள்ள நிலையில் அஞ்சல் மூல வாக்குப் பதிவுகள் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

மேலும் வாசிக்க >>>

3 வருடங்களில் முழு நாட்டையும் டிஜிட்டல் மயமாக்க நடவடிக்கை

Wednesday, October 30th, 2024 at 13:34 (SLT)

எதிர்வரும் மூன்று வருடங்களில் முழு நாட்டையும் டிஜிட்டல் மயமாக்க நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். டிஜிட்டல் மயமாக்கல் ஊடாக இலங்கையை மற்றுமொரு நிலைக்கு உயர்த்த முடியும் எனவும், அதற்காக டிஜிட்டல் மயமாக்கலுக்கு அவசியமான தலையீட்டினை அரசாங்கம் ஏற்கெனவே ஆரம்பித்துள்ளதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

மேலும் வாசிக்க >>>

நாட்டு மக்களுக்கு சலுகைகளை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை

Wednesday, October 30th, 2024 at 13:29 (SLT)

டிஜிட்டல் மயமாக்கல் ஊடாக இலங்கையை மற்றுமொரு நிலைக்கு உயர்த்த முடியும் எனவும், அதற்காக டிஜிட்டல் மயமாக்கலுக்கு அவசியமான தலையீட்டினை அரசாங்கம் ஏற்கெனவே ஆரம்பித்துள்ளதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார். வணிகச் சபை பிரதிநிதிகளுடன் இன்று ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற சந்திப்பிலேயே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இதனைச் சுட்டிக்காட்டினார்.

மேலும் வாசிக்க >>>

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பலப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு

Wednesday, October 30th, 2024 at 13:26 (SLT)

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மக்கள் நடமாட்டம் அதிகமாக காணப்படும் பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தீபாவளி கொண்டாட்டங்கள் இடம்பெறும் பகுதிகளில் விசேட கவனம் செலுத்துமாறு பதில் பொலிஸ் மா அதிபரால், சகல பொலிஸாருக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க >>>