இலங்கை மழை, வெள்ள பாதிப்புக்கு 23 பேர் உயிரிழப்பு

இலங்கையின் பல்வேறு பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக கன மழை பெய்து வருகிறது. தொடர் மழை காரணமாக பல்வேறு இடங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.மலைப் பிரதேசங்களான கல்லே, கெகல்லே, ராத்னபுரா, கலுதரா, மதரா மற்றும் ஹம்பந்தோட்டா ஆகிய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. கீலனி ஆறு மற்றும் காலு கங்காவின் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இலங்கையில் இரண்டு நாட்களாக பெய்து வரும் மழை மற்றும் வெள்ள பாதிப்புகளுக்கு இதுவரை 23 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். பலர் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர்.

தொடர் மழை காரணமாக பெரும்பாலான ஆறுகளில் நீரின் மட்டம் அதிகரித்துள்ளதாக அந்நாட்டு தேசிய பேரிடர் மீட்பு மையம் தெரிவித்துள்ளது. மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் விமானப் படை மற்றும் கப்பல் படை துரிதமாக ஈடுபட்டு வருகிறது.

இலங்கையில் கடந்த ஆண்டு நிகழ்ந்த மிகப்பெரிய நிலச்சரிவில் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply