வித்தியா படுகொலை வழக்கு: நீதிபதி இளஞ்செழியனின் வாகனம் மீது துப்பாக்கி சூடு

புங்குடுதீவு மாணவி வித்தியாவின் கொலைச் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் மூவர் அடங்கிய நீதிபதிகளுள் ஒருவரான யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியனின் வாகனம் மீது இனந்தெரியாத நபர்கள் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். இதனால் நீதிபதி இளஞ்செழியனிற்கு பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த இரண்டு பொலிஸார் காயமடைந்துள்ளனர்.

நீதிபதி இளஞ்செழியன் பயணித்த வாகனத்தை வழிமறித்து சென்ற அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக தெரியவருகிறது.

நல்லூர் – பின் வீதியில் வைத்து இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply