அமைச்சர் விஜயகலாவிடம் CID 5 மணி நேர விசாரணை

யாழ். வித்யா மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சிறுவர் அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனிடம் குற்றவியல் விசாரணைப் பிரிவு (CID) கடந்த 09 ஆம் திகதி சுமார் 05 மணி நேரம் வாக்குமூலம் பெற்றுள்ளனர்.பிரதான சந்தேகநபரான சுவிஸ்குமார் என்பவருக்கு தப்பிச்செல்ல உதவி செய்ததாக இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனுக்கு எதிராகக் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.

குறித்த விசாரணைகள் தொடர்பில் குற்றவியல் விசாரணைப் பிரிவு மேலதிக அறிக்கை ஒன்றை நீதிமன்றத்துக்கு வழங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply