தெஹிவளை மிருகக் காட்சிசாலையை இன்று முதல் இரவில் பார்வையிட வசதி

தெஹிவளை மிருகக் காட்சிசாலை முதன் முறையாக இன்றிலிருந்து இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும் என வனவிலங்குகள் மற்றும் புத்தசாசன அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா தெரிவித்துள்ளார்.இன்றைய தினம் வரையறுக்கப்பட்ட சிலருக்கே பார்வையிட முடியும் எனவும் நாளை முதல் பொது மக்களுக்காக இரவு நேரத்தில் திறந்திருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மிருகக் காட்சிசாலைக்குள் பொலிதீன் பயன்பாடு, மதுபானம் அருந்துதல் என்பன முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது. இதனைத் தடுப்பதற்காக விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply