மாந்தை மேற்கு பிரதேசத்தில் 5கிராம சேவகர் பிரிவுகளில் உள்ள சுமார் 10 கிராமங்களைச் சேர்ந்த 68 பேருக்கு சுய தொழிலுக்கான உபகரணங்கள் இன்று (17.08.2010) வழங்கப்பட்டிருக்கின்றது. அண்மையில் மீள் குடியேற்றம் செய்யப்பட்ட மாந்தை மேற்கு பிரதேச மக்களின் சுயதொழிலை மேம்படத்தும் பொருட்டு மன்னார் பிராந்தியத்திற்குப் பொறுப்பான தள்ளாடி படைத்தலமையகத்தின் கட்டளையிடும் அதிகாரி பிரிக்கேடியர் மைத்திரி டயஸ் அவர்களின் ஆலோசனைக்கமைவாக 215ஆவது படைப்பிரிவின் கட்டளை அதிகாரி கேணல் விக்கும் லியனகேயின் வழிகாட்டலில் 215ஆவது படைப்பிரிவின் சிவில் நிர்வாக அதிகாரி கேணல் நலிந்த மஹாவித்தாரணவின் ஏற்பாட்டில் இவ்வுபகரணங்கள் வழங்கப்பட்டிருக்கின்றது. Read the rest of this entry »














