மன்னாரில் மீள் குடியேற்றம் தொடர்பான உயர்மட்ட கலந்துரையாடல்

May 24th, 2010 Thulasi Posted in TELOnews No Comments »

மன்னார் மாவட்டத்தில் மீள்குடியேற்றத்தை துரிதப்படுத்துவதை இலக்காகக் கொண்டு அது தொடர்பான சாத்தியப்பாட்டை ஆராயும் உயர் மட்டக்கலந்துரையாடல் இன்று(24.05.2010) மன்னாரில் இடம் பெற்றிருக்கின்றது. மன்னாரின் மாந்தை மேற்கு மடு மற்றும் முசலி பிரதேசங்களில் இருந்து இடம்பெயர்ந்து வசித்து வருபவர்களில் கனிசமானோர் மீள்குடியேற்றப்பட்டிருக்கும் நிலையில் எஞ்சியிருக்கும் மக்களையும் அவர்களது சொந்த இடங்களில் மீள்குடியேற்றம் செய்வதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது. Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

யாழ். மாவட்ட இணைப்புக் குழுவின் இணைத் தலைவர்களாக அமைச்சர் டக்ளஸ் மற்றும் வடமாகாண ஆளுநர்

May 20th, 2010 Thulasi Posted in TELOnews No Comments »

யாழ் மாவட்ட இணைப்புக்குழுவின் இணைத்தலைவர்களாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் வடமாகாண ஆளுநர் ஆகியோர் ஜனாதிபதியால் நியமனம். ஜனாதிபதியினால் முன்னெடுக்கப்படும் மஹிந்த சிந்தனையின் கீழ் “எதிர்கால நோக்கு” எனும் திட்டத்திற்கமைய அரசாங்க மற்றும் அரச சார்பற்ற அமைப்புக்களினால் முன்னெடுக்கப்படும் அனைத்து செயற்றிட்டங்களையும் அமுலாக்குதல், வழிநடத்துதல் மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற் கொள்ளும் இணைப்புக்குழுவின் இணைத்தலைவர்களாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களும் வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ.ஏ.சந்திரசிறி ஆகியோர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களினால் நியமிக்கப்பட்டுள்ளனர். Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

மன்னாரில் மீண்டும் ரோந்து நடவடிக்கைகளில் பொலிஸாரும் ,படையினரும்

May 12th, 2010 Thulasi Posted in TELOnews No Comments »

மன்னாரில் இடம் பெற்று வரும் கொள்ளை , கடத்தல் சம்பவங்களை கட்டுப்படுத்தும் பொருட்டு விசேட பாதுகாப்பு நடவடிக்கைகளை படையினரும் பொலிஸாரும் இணைந்து மேற்கொண்டு  வருகின்றனர். நாட்டின் வடக்கு கிழக்கு மற்றும் ஏiனைய பகுதிகள் உள்ளடங்களாக இடம் பெற்று வரும் கொலை கொள்ளை, கப்பம் மற்றும் ஆட்கடத்தல் சம்பவங்கள் வெகுவாக அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் அண்மைக் காலங்களாக மன்னார் மற்றும் புறநகர்ப்பகுதிகளிலும் இது போன்ற சம்பவங்கள் மீண்டும் ஆரம்பித்திருக்கின்றது. இவ்வாறான சம்பவங்களினால் மன்னார் நகரில் வழமைக்கு மாறான அச்ச நிலை ஏற்பட்டிருக்கின்றது. Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

ஜெர்மன் ஒபன்பூர்க்கில் தமிழர்களை அச்சுறுத்தி புலிகளுக்கு நிதி சேகரித்தவர் கைது

May 10th, 2010 Thulasi Posted in TELOnews No Comments »

ஜெர்மனியில் புலிகளுக்கு நிதி சேகரிதவர் ஒருவரை ஜெர்மனி காவல் துறையினர் கைது செய்துள்ளனர்,ஒபன்பூர்க் என்ற நகரத்தில் தமிழ் மக்களிடம் மிரட்டி நிதி சேகரிப்பில் ஈடுபட்டார் எனக் காவல்துறையினர் இவரை கைது செய்து விசாரணை நாடத்தி வருகிறர்கள்.மேலதிக செய்திகளுக்கு இங்கே அழுத்தவும்.

http://www.open-report.de/artikel/Mutma%DFlicher+Helfer+einer+Tamilen-Terrororganisation+festgenommen/56864.html
  
 
AddThis Social Bookmark Button

மன்னாரில் அமைச்சர் ரிஷாடடின் நன்றி தெரிவிப்பும் மக்களின் பாராட்டும்

May 9th, 2010 Thulasi Posted in TELOnews No Comments »

மன்னார் மாவட்டத்தின் பல பகுதிகளிலும் அமைச்சசர் றிஷாட் பதியூதினுக்கு மகத்தான வரவேட்புக்கள் இடம்பெற்று வருகின்றது. நடந்து முடிந்த ஏழாவது பொதுத்தேர்தலில் போட்டியிட்ட அமைச்சர் அவர்கள் அதி கூடியவாக்குகளைப்பெற்று பாராளுமன்றத்திற்கு தெரிவாகியிருக்கின்றார். இந்நிலையில் தமது வெற்றிக்காக உழைத்த மன்னார் மாவட்ட மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொருட்டு அமைச்சர் அவர்கள் மூன்று நாட்களை உள்ளடக்கிய விஜய மொன்றை மன்னாரிற்கு மேற்கொண்டுள்ளார்.

Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

மன்னாரிலிருந்து கொழும்பிற்கான போக்கு வரத்து சேவை மீண்டும் ஆரம்பம்

May 9th, 2010 Thulasi Posted in TELOnews No Comments »

மன்னார் மற்றும் கொழும்பிற்கான இருவழி அரச பேருந்து சேவைகள் மீண்டும் இம்மாதம் முதல் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது. நாட்டில் நிலவி வந்த யுத்தநிலை மற்றும் மதவாச்சி சோதனைச்சாவடியில் ஏற்படுத்தப்பட்டிருந்த தடைகள் தளர்த்தப்பட்ட பின் மன்னாரிலிருந்து நாட்டின் தென்பகுதிகளுக்கான போக்கு வரத்துக்கள் சுமுகமாக இடம் பெற்றுவருகின்றன. Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

நிறைமாத கர்ப்பிணியை கத்தியால் வெட்டி கொள்ளை மன்னார் மூர்வீதியில் சம்பவம்

May 7th, 2010 Thulasi Posted in TELOnews No Comments »

மன்னார் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மூர்வீதி பகுதியில் அமைந்துள்ள வீடு ஒன்றில் கொள்ளைச் சம்பவம் இடம் பெற்றிருக்கின்றது. நேற்று (06.05.2010) அதிகாலை 2.45 மணியளவில் வாகனம் ஒன்றில் வந்த இனம்தெரியாத நபர்களே வீட்டின் சமயலறை யன்னலை உடைத்து உள்நுழைந்து மேற்படி கொள்ளைச்சம்பவத்தை நிகழ்த்தியிருப்பதாக தெரிகின்றது.  Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

24 வது நினைவஞ்சலி

May 6th, 2010 Thulasi Posted in TELOnews No Comments »

படத்தை பெரிதாக்கி பார்பதற்கு படத்தின் மேல் அழுத்தவும்

24 வது நினைவஞ்சலி உண்மையான ஐக்கியத்தை தொடர்ந்து வலியுறுத்திய தன்னிகரில்லாத் தலைவர் சிறீ சபாரட்ணம் போன்ற ஆளுமையுள்ள பல தலைவர்களை சகோதர யுத்தம் பலிகொண்டதால் தமிழ் மக்கள் இன்று நிர்க்கதியான நிலைக்கு கொண்டு வரப்பட்டுள்ளனர்.
சகோதர யுத்தம் பலி கொண்ட முதல் தலைமகன் – தமிழ் ஈழ விடுதலை இயக்கம்-ரெலோவின் தலைவர் சிறீசபாரட்ணம் மற்றும் ரெலோ போராளிகளின் 24 வது நினைவஞ்சலியை உணர்வுபூர்வமாக நினைவேந்துகின்றோம்.

சிறீ ரெலோ- sritelo

AddThis Social Bookmark Button

மன்னாரில் அனாமதேய துண்டுப்பிரசுர விநியோகங்களில்; ஈடுபட்டு வந்தவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்

May 2nd, 2010 Thulasi Posted in TELOnews No Comments »

மன்னாரில் தேர்தல் காலங்களில் அனாமதேய துண்டுப்பிரசுர விநியோகங்களில் ஈடுபட்டு வந்தவர்கள் அடையாளம் காணப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. நடந்து முடிந்த பொதுத் தேர்தலுக்கான பிரச்சார நடவடிக்கைகளின் இறுதி காலப்பகுதியில் மன்னார் நகரம் முழுவதும் அணல் பறத்தும் பிரச்சார நடவடிக்கைகளில் அரசியல் கட்சிகளும் சுயேட்சைக் குழுக்களும் பெரும் முனைப்புடன் ஈடுபட்டு இருந்தன. இந்நிலையில் மக்கள் மத்தியில் குழப்பத்தையும் தெளிவற்ற தன்மையையும் தோற்றுவிக்கும் பொருட்டு இனவாதம், மதவாதம் சார்ந்த அனாமதேய துண்டுபிரசுர விநியோகங்களை சிலர் மேற்கொண்டிருக்கின்றனர். Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

மன்னாரில் மேதின நிகழ்வுகள் இடம் பெற்றிருக்கின்றது

May 2nd, 2010 Thulasi Posted in TELOnews No Comments »

மன்னாரின் பல பகுதிகளிலும் மே தினக்கொண்டாட்ட நிகழ்வுகள் சிறப்பாக இடம் பெற்றிருக்கின்றது. உலக தொழிலாளர் தினம் வெகு சிறப்பாக அணுஷ்டிகப்படும் நிலையில் மன்னார் மாவட்டத்திலும் அது சிறப்பாக இடம் பெற்றிருக்கின்றது. தொழிலாளர் தினத்தை ஒட்டி மன்னாரிலும் பல பொழுதுபோக்கு நிகழ்வுகள் இடம் பெற்றிருக்கின்றது. உலக தொழிலாளர் தினம் அணுஷ்டிக்கப்படும்; நிலையில் உலகம் வாழ் கத்தோலிக்க மக்கள் தமது தொழிலாளர்களது பாது காவலரான புனித சூசையப்பரின் தினத்தையும் நேற்றய தினம் (01.05.2010) நினைவு கூர்ந்திருக்கின்றனர். Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

நாடு கடந்த தமிழ் ஈழம் எங்கே புலம் பெயர்ந்த எமது உறவுகளே எமாறதீர்கள்

May 1st, 2010 Thulasi Posted in TELOnews No Comments »

வெளிநாடுகளில் வாழும் தமிழ் மக்களே இந்த நாடு இல்லாத ஒரு அரசாங்கம் அமைப்பது என்பது எமது உறவுகளை எமாற்றும் வேலையாகும்.இது வெறுமனே தமிழ்மக்களை எமாற்றும் புஸ்வானமாகும்.எமது தாயகத்தில் வாழும் எமது மக்களுக்கு இந்த அரசாங்கத்தால் என்ன நன்மை கிடைக்கப்போகிறது எம்மக்களே சிந்தியுங்கள். அண்மையில் நிகழ்ந்த யுத்தத்தினால் பல நெருக்கடிகளையும் இன்னல்களையும் எதிர் நோக்கியவர்கள் இலங்கையில் வாழும் எமது தமிழ் மக்களே. Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

அடம்பன் வைத்தியசாலையில் இராணுவத்தினர் மாபெரும் சிரமதானம்

May 1st, 2010 Thulasi Posted in TELOnews No Comments »

மன்னார் அடம்பன் வைத்தியசாலையினை மீள்திறக்கும் பொருட்டு அதனை மாபெரும்  சிரமதான வேலைத்திட்டம் ஒன்றின் மூலம் துப்பரவு செய்திருப்பதாக படைத்தரப்பினர் தெரிவித்திருக்கின்றனர். மாந்தை மேற்கின் அடம்பன் பிரதேசத்தில் அமைந்துள்ள அரச வைத்தியசாலை கடந்த மாதம் 28ம் திகதி வடமாகான ஆளுனரினால் திறந்து வைக்கப்படவிருப்பதாக அறிவிக்கப்பட்ட நிலையில் படைத்தரப்பினர் மேற்படி சிரமதானத்தினை மேற்கொண்டிருக்கின்றனர். Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

இறுதிக் கிரிகை பற்றிய அறிவித்தல்

April 26th, 2010 Thulasi Posted in TELOnews No Comments »

தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் முன்னாள் மத்திய குழு உறுப்பினரும்

சிறீ தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் ஐரோப்பிய இணைப்பாளருமான

சுப்பிரமணியம் சிறீஸ்கந்தராஜா (அழகன்) (வயது 50, ஜேர்மனி Dortmund)

வவுனியாவில் 25.04.2010 அன்று மாரடைப்பால் அகால மரணமானார்.

அவரின் பிரிவால் மீளாச்சோகத்தில் ஆழ்ந்த அவரது மனைவி,

பிள்ளைகள், தயார், சகோதரங்கள், உற்றார், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவருடன்

எமது ஆறாத் துயரை பகிர்ந்து கொள்கிறோம்.

இறுதிக் கிரிகைகள் நாளை (27.04.2010) அவரது வவுனியா இல்லத்தில் சமய கிரிகைகள் நடைபெற்ற பின்னர் பகல் 1 மணியளவில் தட்சணங்குளம் மயனத்தில் தகனம் செய்யப்படும் என அறியத்தரப்படுகிறது.

தொடர்புகளுக்கு

சசி

0094772200638

செந்தீசன்

0032488477905

AddThis Social Bookmark Button

கண்ணீர் அஞ்சலி

April 26th, 2010 Thulasi Posted in TELOnews No Comments »

                               கண்ணீர் அஞ்சலி

 

               சுப்பிரமணியம் சிறிஸ்கந்தராஜா (அழகன்)

                                                              

தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் முன்னாள் மத்திய குழு உறுப்பினரும்

சிறீ தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் ஐரோப்பிய இணைப்பாளருமான

சுப்பிரமணியம் சிறீஸ்கந்தராஜா (அழகன்) (வயது 50, ஜேர்மனி Dortmund)

வவுனியாவில் 25.04.2010 அன்று மாரடைப்பால் அகால மரணமானார்.

அவரின் பிரிவால் மீளாச் சோகத்தில் ஆழ்ந்த அவரது மனைவி,

பிள்ளைகள், தயார், சகோதரங்கள், உற்றார், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவருடன்

எமது ஆறாத் துயரை பகிர்ந்து கொள்கிறோம்.

 

           இறுதிக் கிரிகைகள் பற்றிய விபரம் விரைவில் அறிவிக்கப்படும்.

 

தொடர்புகளுக்கு                                                         BELGIUM

சசி                                                                                     செந்தீசன்

0094772200638                                               0032488477905

                                          

 

                                         சிறீ தமிழ் ஈழ விடுதலை இயக்கம்

 

 

AddThis Social Bookmark Button

கனடிய ஜனநாயக தமிழ் கலாசார மன்றம் நடாத்தும் ‘மாபெரும் இசை நிகழ்சி’

April 23rd, 2010 Thulasi Posted in TELOnews No Comments »

இலங்கையில் யுத்தம் நடைபெற்றுக்கொண்டிருந்த காலங்களிலேயே தமிழ் – சிங்கள மக்களுக்கிடையே புரிந்துணர்வு, சகவாழ்வை வலியுறுத்தி ஆண்டுதோறும் தமிழ் – சிங்களப் புத்தாண்டை கனடிய ஜனநாயக தமிழ் கலாசார மன்றம் நடாத்திவருகிறது. அந்தவகையில் இவ்வாண்டும் ‘மாபெரும் இசை நிழ்ச்சியாக கொண்டாடுகிறது.  (24.04.10) மாலை 5.00 மணிக்கு, 1133 லெஷ்லி வீதியிலுள்ள (எக்லிங்ரன் ரூ லெஷ்லி) ‘கொறியன்’ கலாசார மண்டபத்தில் நடைபெறும் இந்நிகழ்வுக்கு தமிழ் – சிங்கள நண்பர்களை, நண்பியரை பெருந்திரளாக வந்து கலந்துகொள்ளுமாறு அழைக்கப்படுகின்றனர். Read the rest of this entry »

AddThis Social Bookmark Button