வெற்றிலைச் சின்னத்தில் வெற்றிக் கூட்டமைப்பு

June 23rd, 2009 admin Posted in TELOnews No Comments »

யாழ் மாநகரசபை மற்றும் வவுனியா நகரசபைத் தேர்தல்களில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வெற்றிலைச் சின்னத்தின் கீழ் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி (SLFP), ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (EPDP), சிறீ தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (Sri-TELO), ஈழப் புரட்சிகர அமைப்பு (EROS) ஆகியன இணைத்து போட்டியிடத் தீர்மானித்துள்ளன. Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

சன்டேலீடர் சார்பில் சட்டத்தரணிகள் மன்னிப்புக் கோரினாலும் மக்கள் மத்தியில் நான் குற்றவாளி அல்ல என்பதை நிருபித்தல் அவசியம்

June 23rd, 2009 admin Posted in TELOnews No Comments »

`மிக் 27 தாக்குதல் விமான கொள்வனவு` குறித்து அவதூறான செய்தி வெளியிட்டதாக குற்றஞ்சாட்டப்பட்ட சன்டேலீடர் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் தமது  தவறுக்காக மன்னிப்புக் கோரினாலும் மக்கள் மத்தியில் நான் குற்றவாளி அல்ல என்பதை நிருபிக்கவேண்டியது அவசியமென பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 30வது வருட யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்துள்ள பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கு எதிரான வழக்கில் ஆஜராவது அவருக்கு செய்யும் மற்றுமொரு அவதூறு என சன்டேலீடர் சார்பில் ஆஜரான சட்டத்திரணிகள் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர். Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

பிரபாகரன் செத்துப் போனதை ஒப்புக்கொண்டார் அறிவுழகன்

June 18th, 2009 admin Posted in TELOnews No Comments »

பிரபாகரன் செத்துப்போன பின்பு அவரின் சாவு தொடர்பான உறுதிப்படுத்தப்படாத ஒரு செய்தியை, பிரபாகரன் உயிருடன் இருக்கிறாரரென, மே, 22ம் திகதி வெளியிட்டமைக்காக வருத்தப்படுகின்ற அதே வேளையில் அவ்வாறான ஒரு செய்தியை வெளியிட்டு குழப்பகரமான ஒரு சூழ்நிலையை ஏற்படுத்தியதற்காக எமது அன்புக்குரிய மக்களிடம் புலிகளின் புலனாய்வுத்துறை மன்னிப்புக் கோருகின்றது என புலிகளின் புலனாய்வுத்துறையின் வெளியகப் பணிப் பிரிவு பொறுப்பாளர்ரென தன்னைக்கூறிக் கொள்ளும் கதிர்காமத்தம்பி அறிவழகன் ஊடக அறிக்கை ஒன்றை வெளியிடுள்ளார். Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

பசுமைப் புரட்சியின் தந்தையின் பாததூளி பட்ட இலங்கை

June 16th, 2009 admin Posted in TELOnews No Comments »

சர்வதேசம் முழுவதும் மரியாதையும் மதிப்புமுள்ள இந்திய பசுமைப்புரட்சியின் தந்தையான பேராசிரியர் எம்.எஸ். சுவாமிநாதனின் துணையை வடமகாணத்தின் விவசாய அபிவிருத்தியை மேற்கொள்வதற்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ்ச துணைநாடியது மிகமிகப் பொறுப்பு வாய்ந்த செயலாகும். பேராசிரியர் சுவாமிநாதன் 50 வருடங்களுக்கு மேலான விவசாய விஞ்ஞானத்ததின் தத்துவார்த்தத் தேட்டங்களைத் தலையிற் திரட்டியவர் மாத்திரமல்ல அவர் ஒரு நடைமுறை விஞ்ஞானி. தத்துவத்தையும் நடைமுறையையும் ஐக்கியப்படுத்தத் தெரிந்தவர். Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

வன்னி நலன்புரி முகாம்களில் உள்ள கிழக்கு மாகாண மக்களை முதல் கட்டமாக மீள் குடியேற்ற திட்டம்

June 15th, 2009 admin Posted in TELOnews No Comments »

வன்னி இடைத்தங்கள் முகாம்களில் வசிக்கும் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த மக்களை முதற் கட்டமாக மீள் குடியேற்றம் செய்ய அரசு ஆலோசித்து வருவதாக  ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் வன்னிப் பிராந்திய வட்டாரங்கள் ரெலோ நியூஸ்க்கு கருத்து தெரிவித்துள்ளன. யுத்த காலத்தில் வன்னிப் பிரதேசத்தில் வாழ்ந்த கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த மக்கள்பலர் தற்போது வவுனியாவை அண்டியுள்ள பல்வேறு நலன்புரி முகாம்களில் உள்ளனர். அவர்களை முதற்கட்டமாக  மீள் குடியேற்ற அரச உத்தேசித்துள்ளதாக தெரிகிறது. Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

பிரித்தானிய புலிகளின் பொறுப்பாளர் சாந்தனுக்கு சிறைத்தண்டனை

June 12th, 2009 admin Posted in TELOnews No Comments »

பிரித்தானிய புலிகளின் பொறுப்பாளர் ஏ.சி. சாந்தன் என்ற ழைக்கப்படும் அருணாச்சலம் கிருஸ்சாந்தகுமார், வயது 52, என்பவருக்கு ஆயுத தளபாடங்கள் பற்றிய ஆவணங்களை புலிகளுக்கு விநியோகம் செய்த குற்றத்துக்காக பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் லண்டன் ஓல்ட் பெய்லி நீதிமன்றம் இரண்டாண்டுகால சிறைத்தண்டனை விதித்துள்ளது. பிரித்தானியாவில் 2000ம் ஆண்டில் இருந்து தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கமான புலிகள் அமைப்புக்கு உதவியதாக அவர் மீது மூன்று குற்றச்சாட்டுகளை ஸ்கொட்லண்ட் யாட் பொலிசார் சுமத்தியிருந்தனர். Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

பிரபாகரன் மரணச் சான்றிதழை சமர்ப்பிக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவு

June 12th, 2009 admin Posted in TELOnews No Comments »

புலிகளால் `சினைப்பர்` தாக்குதல் மூலம் 2005 ஆகஸ்ட் மாதம் கொழும்பில் வைத்து கொல்லப்பட்ட இலங்கையின் முன்னாள் வெளிநாட்டமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமர் படுகொலைச் சம்பவம் குறித்த வழக்கை கொழும்பு உயர் நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துள்ளது. இவ் வழக்கில் முதலாம் பிரதிவாதியான புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் பெயர் உள்ளது. இதையடுத்து பிரபாகரனின் மரணச் சான்றிதழை நீதிமன்றில் சமர்ப்பிக்க வேண்டும் என்று நீதிபதி குமுதினி விக்கிரமசிங்க இன்று உத்தரவிட்டுள்ளார். Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

கூட்டமைப்பு பிரதமரை சந்திக்க நேரம் ஒதுக்கப்படவில்லை; இந்தியாவில் இலங்கைக்குப் பெரிய சந்தை வாய்ப்பு திறந்துள்ளது: சிவ்சங்கர் மேனன்

June 12th, 2009 admin Posted in TELOnews No Comments »

தமிழ் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் டெல்லி வந்துள்ளார்கள். அவர்கள் அவ்வப்போது இங்கு வந்து டெல்லியில் உள்ள பல்வேறு தலைவர்களுடன் பேசிக் கொண்டுதான் உள்ளனர். இருப்பினும் பிரதமரை சந்திக்க அவர்களுக்கு நேரம் ஒதுக்கப்படவில்லை என்பதை உறுதியாக கூறுகிறேன் என இலங்கையிலிருந்து வந்திருந்த பத்திரிக்கையாளர்கள் சிலரை இந்திய வெளியுறவுத் துறை செயலாளர் மேனன் சந்தித்து பேசிய போது குறிப்பிட்டார். அவர்கள் மத்தியில் மேனன் கருத்து தெரிவிக்கையில்;  Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

நலன்புரி முகாம்களில் பெற்றோரை இழந்த நிலையில் 850 குழந்தைகள்

June 11th, 2009 admin Posted in TELOnews No Comments »

புலிகள் தொடங்கிய நான்காவது ஈழப்போர், 850 பச்சிளம் குழந்தைகளின் பெற்றோரை காவு கொண்டுள்ளது. பெற்றோரின் அரவணைப்பு இல்லாமல் நிர்க்கதியற்ற நிலையில் அந்த குழந்தைகள் நலன்புரி முகாம்களில் வாழ்வதாக அண்மையில் வன்னியில் இடம்பெயர்ந்தோர் வாழும் முகாம்களுக்கு விஜயம் செய்த குழந்தைகள் மற்றும் பெண்கள் நல அமைச்சர் சுமேதா ஜெயசேன தெரிவித்துள்ளார். அவர்களின் எதிர்கால வாழ்வுக்கு சிறப்பு ஏற்பாடு செய்யவேண்டியதன் அவசியத்தை புலன்பெயர் தமிழ் சமூகம் இன்னும் உணராமல் மண்ணிலே கயிறு திரிக்கும் `அரசியல்` பேசுவதும் செயல்படுவதும்   வெட்கம் கெட்ட வேலையாகும்.

AddThis Social Bookmark Button

தற்செயலாய் ஏற்பட்ட விபத்து காரணமாக ஆயுத கிடங்கில் தீ

June 9th, 2009 Thulasi Posted in TELOnews No Comments »

வவுனியாவில் அமைந்துள்ள இராணுவ முகாமின் ஆயுத களஞ்சியசாலையில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தினால் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த பெருந்தொகையான ஆயுதங்கள் மற்றும் வெடிப்பொருட்கள் வெடித்து நாசமாகியுள்ளன. இந்த தீ விபத்து இன்று மாலை 5.15 மணியளவில் ஏற்பட்டதாகவும் தொடர்ச்சியாக அரை மணித்தியாலத்திற்கு வெடிச்சத்தங்கள் கேட்டதாகவும் இதனால் நகரமே அதிர்ந்ததாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவித்தன. Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

இலங்கை கடற்படையிடம் தலை வணக்கியது `வணங்கா மண்`

June 4th, 2009 admin Posted in TELOnews No Comments »

ஏப்பிரல் 20, 2009ல் பிரித்தானியாவில் உள்ள இப்ஸ்விச் எனும் துறைமுகத்தில் இருந்து கிளம்பிய `வணங்கா மண்` பிரான்ஸிலுள்ள ஃபேகம்ப் எனும் துறைமுகத்தில் வைத்து கப்பலில் உள்ள அனைத்துப் பொருட்களையும் தரையிறக்கியது. இறக்கப்பட்ட பொருட்கள் அனைத்தும் தரைமார்க்கமாக பிரான்ஸிலுள்ள இன்னொரு துறைமுகமான ஃபெஸ்-சூர்-மேர்க்கு எடுத்துச் செல்லப்பட்டு மீண்டும் கப்பலில் ஏற்றப்பட்டு, மே 7, 2009ல் அங்கிருந்து புறப்பட்ட ‘வணங்கா மண்’ இன்று (ஜூன். 4) காலை கொழும்பிலிருந்து 160 கடல் மைல்கள் தொலைவில் இலங்கை கடற்படையிடம் `தலைவணங்கி`யுள்ளதாக பாதுகாப்பு வட்டாரம் செய்தி வெளியிட்டுள்ளது. Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

நலன்புரி முகாம்களின் நிலவரத்தை அறியவும் மீள்குடியேற்ற பணிகளை துரிதப்படுத்தவும் இந்திய சிறப்புத் தூதரொருவர் இலங்கை வருவார்

June 3rd, 2009 admin Posted in TELOnews No Comments »

யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு நலன்புரி முகாம்களில் உள்ள தமிழர்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள், மீள்குடியேற்ற பணிகள் போன்றவை பற்றி அறிந்துகொள்வதற்கு சிறப்பு தூதர் ஒருவரை இலங்கைக்கு அனுப்பி வைப்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் பற்றி இந்தியா ஆய்வு செய்து வருவதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

புலிகளின் உளவுப்பிரிவில் வேலை செய்த `கனடியர்` வவுனியாவில் கைது

June 1st, 2009 admin Posted in TELOnews No Comments »

கொழும்பு மவுன்லேனியா பொலிஸ் கடந்த வெள்ளிகிழமை (மே. 29) புலிகளின் உளவுப்பிரிவில் வேலை செய்துள்ளாரென்ற குற்றச்சாட்டப்படும் தவராசா மதன் என்பவரின் மனைவியை கைது செய்துள்ளது. இவரின் மனைவி சிங்கள இனத்தைச் சேர்ந்தவர் ஆவார். தவராசா மதன் என்பவர் கொழும்பு, தெஹிவளவில் அச்சக தொழிற் கூடம் ஒன்றைத் தொடங்கிய போது அதில் வேலை செய்ய இணைந்த மேற்படி பெண்ணை திருமணம் செய்து கொண்டார். Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

பாரிஸில் புலிகளால் சுட்டுக்கொல்லப்பட்ட சபாலிங்கம் கொலை குறித்து இராணுவத்திடம் சரணடைத்த லோறன்ஸ் திலகரிடம் விசாரணை

May 31st, 2009 admin Posted in TELOnews No Comments »

தொன்னூறுகளின் பாரிஸில் இடம்பெற்றுள்ள மூன்று அரசியற் படுகொலைகள் புலம்பெயர்ந்த தமிழ் மக்களை பெரும் அச்சத்துக்குள் ஆழ்த்தியவை. மிகப்பெரிய தற்துணிவோடு இருந்த மிக சொற்பமான `மறுத்தோடி`களை தவிர புலிகளின் இந்தக் கொலைகளால் `மெளனம்` ஆகிப்போன புலம்பெயர் அரசியல், இலக்கிய கர்த்தாக்கள், வன்னி யுத்த முடிவில் புலிகளின் பெரும்புள்ளிகள் மக்களோடு மக்களாக கலந்து வந்தது போல், பத்தோடு பதினொன்று ஆனார்கள். Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

புலிகளின் தொலைக்காட்சி ஊழியர்கள் விசேட முகாமில் விசாரணை

May 31st, 2009 admin Posted in TELOnews No Comments »

வன்னியில் புலிகளின் ஆட்சிக் காலத்தில் புலிகளின் பிரச்சார பீரங்கியாக இருந்த ‘தமிழீழ தேசிய தொலைக்காட்சி` NTT (National Television of Tamil Eelam) ஊழியர்களாக இருந்த பலர் மக்களோடு மக்களாக பாதுகாப்பு வலையத்தில் இருந்து வெளியேறி படையினரிடம் சரணடைந்தனர். தமது அடையாளத்தை மறைத்து சாதாரண மக்களோடு இடைத்தங்கல் முகாம்களுக்கு வந்த இவர்கள் விசேட புலனாய்வுப் பிரிவினரால் இனங்காணப்பட்டு மேலதிக விசாரணைக்காக விசேட முகாம்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.  இவர்களில் `நிலவரம்` நிகழ்ச்சி நெறியாளர் வீரா, புலிகளின் கலை பண்பாட்டுத்துறை பொறுப்பாளர் புதுவை இரத்தினதுரை ஆகியோர் உள்ளனரா என்பதை அறியமுடியவில்லை.

AddThis Social Bookmark Button