உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையான சூத்திரதாரிகள் யார் என்ற சந்தேகம் எழுந்துள்ளது சமூகம் மற்றும் மதத்திற்கான நிலையத்தின் ஆராய்ச்சி குழு அறிக்கை

உயிர்த்த ஞாயிறுதாக்குதல் குறித்த எச்சரிக்கைககள் புறக்கணிக்கப்பட்டமையும் தடையற்ற விதத்தில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமையும் நீதிவழங்குவது குறித்து அரசாங்கத்தின் அக்கறையின்மை அலட்சியமும் உண்மையான சூத்திரதாரிகள் யார் என்பது குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளதாக சமூகம் மற்றும் மதத்திற்கான நிலையத்தின்centre for society and religion ஆராய்ச்சி குழு தெரிவித்துள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் இன்னமும் நீதிக்காக காத்திருத்தல் பொருளாதார சமூக கலாச்சார பொருளாதார சட்ட கண்ணோட்டம் என்ற அறிக்கையை வெளியிட்டுள்ள சமூகம் மற்றும் மதத்திற்கான நிலையத்தின்ஆராய்ச்சி அமைப்பு மேலும் தெரிவித்துள்ளதாவது.

மூன்று கிறிஸ்தவ தேவாலயங்கள் மூன்று ஆடம்பர ஹோட்டல் ஒரு விடுதி மற்றும் வீடொன்றை இலக்குவைத்து 2019 ஏப்பிரல் 21ம் திகதி இடம்பெற்ற தாக்குதல்களை இலங்கையில் யுத்தத்தின் பின்னர் இடம்பெற்ற ஈவிரக்கமற்ற படுகொலை என தெரிவிக்கலாம்.

ஆண்டவனின் முழங்காலின் கீழ் நின்றுகொண்டிருந்த தங்களின் உயிர்த்த ஞாயிறு காலை உணவை அருந்திக்கொண்டிருந்த நூற்றுக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டனர் பலர் மிகவும் ஆபத்தான காயங்களினால் பாதிக்கப்பட்டனர்.உள உடல்காயங்கள்.

எண்ணிக்கை அடிப்படையில் அந்த தாக்குதல் 314 உயிர்களை பறித்தது 600 பேர் காயங்களால் பாதிக்கப்பட்டனர் இவர்களில் 45 சிறுவர்களும் உலகின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 40 வெளிநாட்டவர்களும் உள்ளனர்-வெளிநாட்டவர்கள் பாதிக்கப்பட்டதால் இது இந்த துயரம் குறித்து சர்வதேச சமூகத்தின் கவனத்தை ஈர்த்தது.

பாதிக்கப்பட்ட பலர் இன்னமும் சிகிச்சை பெற்றுவருகின்றனர் சத்திரசிகிச்சைக்கு தங்களை உட்படுத்திவருகின்றனர் அவர்கள் கடும் மன அழுத்தத்திற்குள்ளாகியுள்ளனர்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் கறுப்புபக்கங்களை என்றும் இலங்கையின் வரலாற்றிலிருந்து அழித்துவிடமுடியாது.

பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்தும் நீதிக்காக குரல்கொடுத்துவரும் அதேவேளை தங்களின் அளவிட முடியாத இழப்பை இன்னமும் துயருடன் நினைவுகூர்ந்தவண்ணமுள்ளனர்.

2024 ஏப்பிரல் 21ம் திகதி உயிர்த்தஞாயிறுதாக்குதல் இடம்பெற்று ஐந்து வருடங்களாகின்ற நிலையில் இன்னமும் நீதி நிலைநாட்டப்படவில்லை.

பாதிக்கப்பட்ட அனைவரும் நீதி நிலைநாட்டப்பவேண்டும் இந்த விவகாரத்திற்கு முடிவுகாணவேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.

இந்த தாக்குதல் இடம்பெற்ற மறுநாள்; ஜஹ்ரான் ஹாசிம் தலைமையிலான தேசிய தவ்ஹீத் ஜமாத் என்ற அமைப்பே இந்த தாக்குதலிற்கு காரணம் என இலங்கை அரசாங்கம் குற்றம்சாட்டியிருந்தது.

இந்த தாக்குதல் இடம்பெற்று ஒருவாரத்தின் பின்னர் அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேன என்டிஜே என்ற அமைப்பே இந்த தாக்குதலிற்கு முக்கிய காரணம் என தெரிவித்து அந்த அமைப்பையும் ஜமாத்தே மிலாத்து இப்ராஹிம் என்ற அமைப்பையும் தடை செய்தார்.

உயிர்த்த ஞாயிறுதாக்குதல் குறித்து ஆராயும்போது இலங்கையின் அரசாங்கம் எவ்வளவு பாரிய பாதுகாப்பு தவறை இழைத்தது என்பதை புறக்கணிக்க முடியாது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply