மஹாவலி கங்கையில் நீராடச் சென்ற 18 வயது மாணவி நீரில் மூழ்கி உயிரிழப்பு

மஹாவலி ஆற்றில் நீராடச் சென்ற 18 வயதுடைய மாணவி ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக கட்டுகஸ்தோட்டை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கண்டி பல்லேகலை பிரதேசத்தைச் சேர்ந்த இந்த மாணவி உறவினர் வீடொன்றுக்கு வந்திருந்த போது உறவினர்களுடன் மஹாவலி ஆற்றில் நீராடச் சென்றுள்ளார்.

கன்னோருவ பிரதேசத்தில் உள்ள இந்த மஹாவலி கங்கையில் நீராடியபோதே இந்த மாணவி நீரில் மூழ்கியுள்ளார்.

அவ்வேளை, உறவினர்கள் அவரை காப்பாற்ற முயன்றபோதும் முடியாமல் போயுள்ளது. பின்னர், அயலவர்களின் உதவியுடன் மாணவியை மீட்டு பேராதனை வைத்தியசாலையில் அனுமதித்த நிலையிலேயே அங்கு அவர் உயிரிழந்துள்ளார்.

பல்லேகலை பிரதேசத்தைச் சேர்ந்த அருன்திகா பிரசாதினி என்ற 18 வயதுடைய மாணவியே உயிரிழந்தவர் ஆவார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளில் கட்டுகஸ்தோட்டை பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply