உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான நாடாளுமன்ற விவாதத்திற்கு மட்டும் 13 கோடி செலவு

கடந்த மூன்று ஆண்டுகளில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக மட்டும் 11 விவாதங்கள் நாடாளுமன்றத்தில் நடைபெற்றுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.மேற்கூறிய விவாதத்துக்காக 11 நாட்கள் நடைபெற்ற கூட்டத்திற்காக 13 கோடியே இருபது இலட்சம் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. இந்த நாட்டின் நாடாளுமன்ற வரலாற்றில் ஒரே விடயம் தொடர்பில் அதிகளவான விவாதங்கள் இடம்பெற்றமை இதுவே முதல் முறை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி குறித்த விவாதங்கள் 2019 ஆம் ஆண்டு மே மாதம் 7, 8, 10 ஆகிய திகதிகளிலும், 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 10, 25, 26 ஆம் திகதிகளிலும், 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் 7, 8, 9 ஆகிய திகதிகள் மற்றும் செப்டம்பர் 21, 22 ஆம் திகதிகளிலும் நடைபெற்றிருந்தன.

மேலும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான மற்றொரு மூன்று நாள் விவாதம் இந்த ஆண்டு ஏப்ரல் 24, 25 மற்றும் 26 ஆகிய திகளில் நடைபெற உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply