இசை நிகழ்ச்சியில் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை

இசை நிகழ்ச்சியின் போது இரு இளைஞர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் உயிரிழந்துள்ளதாக பாணந்துறை பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று ஞாயிற்றுக்கிழமை (05) அதிகாலை இந்தச் சம்பவம் இடம்பெற்றறுள்ளதுடன் பழம் வெட்டும் கத்தியால் வெட்டப்பட்டு இளைஞர் கொலை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது .

பாணந்துறை பகுதியை சேர்ந்த சேர்ந்த 17 வயதுடைய இளைஞனே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்

தாக்குதலை நடத்திய இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளதுடன், தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட கத்தியும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது .

இந்த கொலை சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply