வீட்டுக்குள் நுழைந்து தாயை கட்டிவைத்துவிட்டு மகளை கடத்திச் சென்று துஷ்பிரயோகம்

உடுகம பகுதியில் 27 வயதுடைய பெண் ஒருவரைத் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக உடுகம பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட மூவரும் பெண்ணின் வீட்டிற்கு வந்து பெண்ணுடைய தாயாரின் கைகளைக் கட்டிவைத்து விட்டு காரில் பெண்ணை கடத்திச் சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பெண்ணை கடத்திச் சென்ற சம்பவத்துடன் தொடர்புடைய 58 வயதுடைய பிரதான சந்தேக நபர் செல்லகதிர்காமம் பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதுடன் இவர் ரயில் ஓட்டுநராவார்.

அவருடன் வந்த ஏனைய மூன்று சந்தேக நபர்களும் காலி குருந்த பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். கடத்தப்பட்ட பெண் ஒரு குழந்தையின் தாய் என்பதுடன் இவர் கணவரைப் பிரிந்து வாழ்வதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply