முன்னாள் இராணுவ சார்ஜன்ட் கடத்திச் செல்லப்பட்டு கொலை
தெபுவன பெங்கமுவ பிரதேசத்தில் முன்னாள் இராணுவ சார்ஜன்ட் ஒருவர் கடத்திச் செல்லப்பட்டுத் தாக்கி கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர் .
அதே பகுதியில் வசிக்கும் 51 வயதுடைய முன்னாள் இராணுவ சார்ஜன்ட் ஒருவரே கடத்தப்பட்டுக் கொல்லப்பட்டுள்ளார் .
இவர் இருவரிடமிருந்து பணத்தைப் பெற்றுக்கொண்டு மோசடியில் ஈடுபட்டதன் அடிப்படையிலேயே இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் .
இவரிடம் பணத்தை வழங்கிய இருவருமே இந்த கொலையைச் செய்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர் .
சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை பொலிஸார் மெற்கொண்டு வருகின்றனர் .
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply