நிறைபோதையில் வீதியில் விழுந்து கிடந்தவர் வெய்யிலால் பலி யாழ்ப்பாணம் புன்னாலைக்கட்டுவனில் சம்பவம்

யாழ்ப்பாணம் – புன்னாலைக்கட்டுவன் பகுதியில் மதுபோதையில் வெயிலில் வீழ்ந்து கிடந்தவர் உயிரிழந்துள்ளார். புன்னாலைக்கட்டுவனைச் சேர்ந்த எஸ்.ஜெயக்குமார் என்ற 45 வயதானவரே உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் நேற்றைய தினம் மதியம் 1 மணி தொடக்கம் மாலை 4 மணி வரை வீட்டின் பின்புறம் வெயிலில் தன்னிலை மறந்து மதுபோதையில் கிடந்தாக கூறப்படுகிற நிலையில் உயிரிழந்தார்.

சட்ட மருத்துவ அதிகாரி தனது பரிசோதனையின பின்னர் குறித்த இறப்பு வெயில் வெப்பத்தினால் ஏற்பட்டது என அறிக்கையிட்டுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply