ஒரு கோடி பெறுமதியான போதைப்பொருளுடன் இருவர் கைது
கிளிநொச்சி விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைவாக நேற்று (12) இரவு பளைப் பகுதியில் வாகனத்தில் கடத்தப்பட்ட ஒரு கிலோகிராம் ஹெரோயினுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.இப்போதைப் பொருளின் பெறுமதி சுமார் ஒரு கோடி ரூபாய் என அதிரடிப்படையினர் தெரிவிக்கின்றனர்.
கைது செய்யப்பட்ட இரு சந்தேக நபர்களையும் மேலதிக விசாரணைகளின் பின்னர் சான்றுப் பொருளையும் இன்று (13) கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்ய உள்ளதாக பளைப் பொலிசார் தெரிவிக்கின்றனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply