சிறிய கட்சிகளிடம் கையேந்தாதவாறு அமைக்கப்படும் யாப்புக்கு ஆதரவு வழங்குவேன் : ஜனாதிபதி

ஆட்சியமைக்கும் போது சிறிய கட்சிகளிடம் கையேந்தும் நிலைமையை மாற்றி, பாராளுமன்றத்தின் அதிகாரத்தை உறுதிப்படுத்தும் வகையில் கொண்டுவரப்படும் புதிய அரசியலமைப்புக்கு தான் ஆதரவு வழங்குவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
விகாரையொன்றில் இடம்பெற்ற நிகழ்வின் பின்னர் உரையாற்றுகையில் ஜனாதிபதி இதனைக் கூறினார்.
பாராளுமன்ற பொதுத் தேர்தல் முடிந்த பின்னர் ஆட்சியமைக்க சிறிய கட்சிகளிடம் கையேந்த வேண்டிய நிலைமை காணப்படுகின்றது. சிறிய கட்சிகள் முன்வைக்கும் நிபந்தனைகளுக்கு கட்டுப்பட வேண்டிய துர்ப்பாக்கிய நிலைமை ஏற்படுகின்றது எனவும் ஜனாதிபதி தனது உரையில் குறிப்பிட்டார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply