அரசாங்கத்துக்கு எதிரான கூட்டணிக்கு எமது ஆதரவு : SLFP

அரசாங்கத்துக்கு எதிராக அமைக்கப்படும் எந்தவொரு கூட்டணிக்கும் ஒத்துழைப்பு வழங்க ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தயாரென அக்கட்சியின் பொதுச் செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஸ்ரீ லங்கா பொதுஜன​ பெரமுன ஆகியன இணைந்து புதிய கூட்டமைப்பு அமைப்பது தொடர்பில் கருத்துக்கள் வெளியாகியிருந்த நிலையில், தற்போது இருதரப்பினருக்கிடையில் சிக்கல் நிலை எழுந்துள்ளதாக, அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் தெரிவிலும், இருதரப்பினருக்கிடையில் எதிர்ப்புகள் எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply