அரசாங்கத்துக்கு எதிரான கூட்டணிக்கு எமது ஆதரவு : SLFP
அரசாங்கத்துக்கு எதிராக அமைக்கப்படும் எந்தவொரு கூட்டணிக்கும் ஒத்துழைப்பு வழங்க ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தயாரென அக்கட்சியின் பொதுச் செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன ஆகியன இணைந்து புதிய கூட்டமைப்பு அமைப்பது தொடர்பில் கருத்துக்கள் வெளியாகியிருந்த நிலையில், தற்போது இருதரப்பினருக்கிடையில் சிக்கல் நிலை எழுந்துள்ளதாக, அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் தெரிவிலும், இருதரப்பினருக்கிடையில் எதிர்ப்புகள் எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply