யாழ்ப்பாணத்தில் சுமார் 305 கிலோ கிராம் கேரளா கஞ்சாவுடன் ஒருவர் கைது

Wednesday, April 9th, 2025 at 9:59 (SLT)

யாழ்ப்பாணத்தில் சுமார் 305 கிலோ கிராம் கேரளா கஞ்சாவுடன் ஒருவர் செவ்வாய்க்கிழமை (8) கைது செய்யப்பட்டுள்ளார். வடமராட்சி கிழக்கு உடுத்துறை கடற்பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் பயணித்த படகொன்றினை , கடல் சுற்றுக்காவல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த கடற்படையினர் அவதானித்து குறித்த படகினை கடலினுள் வழிமறித்து சோதனையிட்ட போது அதற்குள் கஞ்சா பொதிகள் காணப்பட்டன.

மேலும் வாசிக்க >>>

சீனாவிற்கு எதிராக 104 வீத வரி : டிரம்ப்

Wednesday, April 9th, 2025 at 9:52 (SLT)

அமெரிக்கா சீனாவிற்கு எதிராக 104 வீத வரியை விதிக்கவுள்ளதாக ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். சீனாவின் ஏற்றுமதிகளிற்கு  எதிராக 34 வீத வரியை விதிக்கவுள்ளதாக ஏற்கனவே தெரிவித்திருந்த டிரம்ப் இதற்கு எதிராக சீனா பதில் நடவடிக்கை எடுத்தால் மேலதிகமாக 50 வீத வரியை விதிக்கப்போவதாக எச்சரித்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

கண்டி – பேராதனை வீதியில் விபத்து : பலர் காயம்

Wednesday, April 9th, 2025 at 9:49 (SLT)

கண்டி – பேராதனை வீதியில் லொறி மற்றும் முச்சக்கரவண்டி பாதசாரிகளுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் 12 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க >>>

சோதனைச்சாவடி மீது வேன் மோதி விபத்து :பொலிஸ் அதிகாரி பலி

Wednesday, April 9th, 2025 at 9:41 (SLT)

நிக்கவரெட்டிய, ரஸ்நாயக்கபுரவில் உள்ள பொலிஸ் சோதனைச் சாவடியில் ஏற்பட்ட விபத்தில் பொலிஸ் அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

நாட்டின் மொத்த சனத்தொகை 21,763,170 பேர் என கணிப்பு

Tuesday, April 8th, 2025 at 11:01 (SLT)

நாட்டின் மொத்த சனத்தொகை தற்போது 21,763,170 பேர் என குடிசன மதிப்பீட்டு புள்ளி விபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. கடந்த 2012 ஆம் ஆண்டு மேற்கொண்ட குடிசன மதிப்பீட்டு அறிக்கையின்படி அப்போது காணப்பட்ட எண்ணிக்கையை விட இம்முறை மதிப்பீட்டு நடவடிக்கைகளில் 1,403,731 அதிகரிப்பு காணப்படுவதாக அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

மேலும் வாசிக்க >>>

அநுராதபுரம் விமான நிலையத்துக்கு ஒருநாள் சர்வதேச தர அந்தஸ்து

Tuesday, April 8th, 2025 at 10:58 (SLT)

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கான தமது மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை நிறைவு செய்து நாட்டிலிருந்து வெளியேறுவதற்கு வசதியாக, அநுராதபுரத்தில் உள்ள விமானப்படை தளத்தை சர்வதேச விமான நிலையமாக அரசாங்கம் கடந்த ஞாயிற்றுக்கிழமை தற்காலிகமாக ஏற்பாடு செய்திருந்தது.

மேலும் வாசிக்க >>>

பொலிஸ் மா அதிபர் ரி.எம்.டபிள்யூ.தேசபந்து தென்னக்கோனை அப்பதவியிலிருந்து நீக்குவதற் காக விசாரணைக் குழுவை நியமிப்பதற்கான தீர்மானம் இன்று

Tuesday, April 8th, 2025 at 10:54 (SLT)

பொலிஸ் மா அதிபர் ரி.எம்.டபிள்யூ.தேசபந்து தென்னக்கோனை அப்பதவியிலிருந்து நீக்குவதற் காக விசாரணைக் குழுவை நியமிப்பதற்கான தீர்மானம் இன்று (08) இடம்பெறவுள்ள சபை அமர்வில் நிறைவேற்றத்துக்காக சமர்ப்பிக்கப்பட வுள்ளது.

மேலும் வாசிக்க >>>

இந்தோனேசியாவின் வடக்கு சுமத்ராவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

Tuesday, April 8th, 2025 at 10:51 (SLT)

இந்தோனேசியாவின் வடக்கு சுமத்ராவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இது ரிக்டர் அளவுகோலில் 5.7ஆக பதிவாகியுள்ளது.

மேலும் வாசிக்க >>>

எரிபொருள் நிரப்பு நிலையத்தில் தீ : நால்வர் உயிரிழப்பு, நால்வர் காயம்

Tuesday, April 8th, 2025 at 10:49 (SLT)

குருணாகல், வெஹெகர சந்திப்பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் ஏற்பட்ட தீ பரவலில் நால்வர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இதேவேளை, குறித்த தீ பரவலில் சிக்கி மேலும் 4 பேர் காயமடைந்துள்ள நிலையில், சிகிச்கைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் வாசிக்க >>>

தனிப்பட்ட தகராறு காரணமாக நடந்த தாக்குதலில் ஒருவர் உயிரிழப்பு 

Tuesday, April 8th, 2025 at 10:47 (SLT)

தனிப்பட்ட தகராறு காரணமாக நடந்த தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் மானங்கட்டிய, மெகொடவெவ பகுதியைச் சேர்ந்த 60 வயதுடையவர் என தெரியவந்துள்ளது. இந்தக் கொலைச் சம்பவம் நேற்று (07) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மேலும் வாசிக்க >>>

வட, கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு சாணக்கியன் விடுத்துள்ள சவால் 

Tuesday, April 8th, 2025 at 10:40 (SLT)

தமிழ் மக்கள் முகம் கொடுக்கும் பிரச்சினைகள் தொடர்பில் முடிந்தால் பாராளுமன்றத்தில் பிரதமரிடம் கேள்வி கேளுங்கள் என வட, கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் சவால் விடுத்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

தெவிநுவர துப்பாக்கிச் சூடு : துப்பாக்கிதாரி உட்பட இருவர் கைது

Tuesday, April 8th, 2025 at 10:37 (SLT)

தெவிநுவர பகுதியில் விஷ்ணு கோயிலுக்கு முன்பாக உள்ள சிங்காசன வீதியில் இரண்டு இளைஞர்கள் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக தேடப்பட்டு வந்த துப்பாக்கிதாரி உட்பட இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் வாசிக்க >>>

சாமர சம்பத் மீண்டும் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார்

Tuesday, April 8th, 2025 at 10:34 (SLT)

ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள புதிய ஜனநாயக முன்னணியின் (NDF) பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க கொழும்பு நீதவான் நீதிமன்றில் இன்று செவ்வாய்க்கிழமை (08) காலை ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.

மேலும் வாசிக்க >>>

இந்தியாவில் மோடி கலந்துகொள்ளும் மாநாட்டில் இன்று உரையாற்றுகிறார் நாமல்

Tuesday, April 8th, 2025 at 10:30 (SLT)

இந்தியாவில் நடைபெறும் ‘ரைசிங் பாரதம்’ மாநாட்டில் இன்று செவ்வாய்க்கிழமை (8) ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உரையாற்றவுள்ளார்.

மேலும் வாசிக்க >>>

பிரதமர் மோடியின் இலங்கை பயணம் ஏமாற்றம் அளிக்கின்றது : தமிழக முதலமைச்சர்

Monday, April 7th, 2025 at 12:25 (SLT)

பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை பயணம் ஏமாற்றம் அளிப்பதாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சட்டசபையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று உரையாற்றிய போது இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் வாசிக்க >>>