பிள்ளையானுக்கு 90 நாட்கள் தடுப்புக்காவல் உத்தரவு

Saturday, April 12th, 2025 at 12:41 (SLT)

கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் சுப்பிரமணியம் ரவீந்திரநாத் கடத்தப்பட்டு காணாமல் போன சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான ‘பிள்ளையான்’ கடந்த 8 ஆம் திகதி கைது செய்யப்பட்டார். 

மேலும் வாசிக்க >>>

சஜித்தை டெல்லிக்கு அழைத்த மோடி

Saturday, April 12th, 2025 at 12:38 (SLT)

எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவை டெல்லிக்கு விஜயம் மேற்கொள்ளுமாறு இந்திய பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார். கடந்த வார இறுதியில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த பிரதமர் நரேந்திர மோடி, கொழும்பில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவை சந்தித்து இருதரப்பு கலந்துரையாடல்களை முன்னெடுத்திருந்தார். இதன் போதே டெல்லி விஜயத்திற்கான அழைப்பு விடுக்கப்பட்டது.

மேலும் வாசிக்க >>>

ஜனாதிபதி செயலகத்தில் பாதுகாப்புத் துறை, அபிவிருத்தி நடவடிக்கைகளை நெறிப்படுத்துவதற்கான கலந்துரையாடல்

Saturday, April 12th, 2025 at 12:36 (SLT)

பாதுகாப்புத் துறை தொடர்பான ஆய்வு மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகளை நெறிப்படுத்துவதற்காக, ஆய்வு மற்றும் அபிவிருத்தி வணிகமயமாக்கலுக்கான தேசிய அணுகுமுறை ஏற்பாடு செய்த சந்திப்பு வியாழக்கிழமை (10) ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.

மேலும் வாசிக்க >>>

குடும்பத் தகராறில் மனைவியைக் கொன்ற கணவன்

Saturday, April 12th, 2025 at 7:33 (SLT)

அளுத்கம பொலிஸ் பிரிவின் குருந்துவத்த தர்கா நகரப் பகுதியில் பெண் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.கொலை செய்யப்பட்ட நபர் குருந்துவத்த தர்கா டவுன் பகுதியைச் சேர்ந்த 42 வயதுடையவர் ஆவார்.

மேலும் வாசிக்க >>>

வடக்கு மக்கள் எம்மீது கொண்டுள்ள நம்பிக்கையை நிச்சயமாக பாதுகாப்போம் : பிரதமர்

Saturday, April 12th, 2025 at 7:30 (SLT)

மாகாணசபைத் தேர்தலை வெகுவிரைவில் நடத்துவதற்கு முனைப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம். வடக்கு மண் பல பிரச்சினைகளையும் இரத்தத்தையும் கண்டுள்ளது. அவற்றை ஆற்றுப்படுத்துவதற்கான பொறுப்பு எமக்குள்ளது. அதற்கான நடவடிக்கைகளை சிறந்த முறையில் வெளிப்படையான தன்மையுடன் மேற்கொள்வோம். வடக்கு மக்கள் எம்மீது கொண்டுள்ள நம்பிக்கையை நிச்சயமாக பாதுகாப்போம் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய உறுதியளித்தார்.

மேலும் வாசிக்க >>>

ஈஸ்டர் தாக்குதல் இரகசியங்களை அம்பலப்படுத்திய பிள்ளையான் : பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர்

Friday, April 11th, 2025 at 7:42 (SLT)

சி.ஐ.டியினர் மேற்கொண்ட விசாரணையில் சிவனேசத்துறை சந்திரகாந்தனிடம் (பிள்ளையான்) உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சில விடயங்கள் அம்பலமாகியுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

நியுயோர்க்கின் ஹட்சன் ஆற்றில் விழுந்து நொருங்கிய ஹெலிக்கொப்டர் : சிறுவர்கள் உட்பட ஆறு பேர் பலி

Friday, April 11th, 2025 at 7:38 (SLT)

அமெரிக்காவின் நியுயோர்க்கின் ஹட்சன் ஆற்றுப்பகுதியில் ஹெலிக்கொப்டர் விழுந்து நொருங்கியதில் அதில் பயணம் செய்த ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று சிறுவர்கள் உட்பட ஆறுபேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் வாசிக்க >>>

மேர்வின் சில்வாவுக்கு ஏப்ரல் 21 ஆம் திகதிவரை விளக்கமறியல்

Thursday, April 10th, 2025 at 7:58 (SLT)

கிரிபத்கொடையில் உள்ள அரசுக்குச் சொந்தமான காணியை போலி ஆவணங்களை தயாரித்து தனியார் ஒருவருக்கு விற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க >>>

வரவு செலவுத் திட்ட யோசனைப்படி 30,000 பட்டதாரிகளை அரச துறையில் இணைத்துக் கொள்ள நடவடிக்கை : சந்தன அபேரத்ன

Thursday, April 10th, 2025 at 7:55 (SLT)

வரவு செலவுத் திட்டத்தில் முன்வைக்கப்பட்டுள்ள யோசனைகளின் பிரகாரம் 30,000 பட்டதாரிகள் அரசாங்க சேவையில் இணைத்துக் கொள்ளப்படுவர் என பொது நிர்வாக, மாகாண சபைகள், உள்ளூராட்சி சபைகள் அமைச்சர் சந்தன அபேரத்ன தெரிவித்தார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை (9) விசேட கூற்றொன்றை முன்வைத்து உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் வாசிக்க >>>

சுமார் 5 கோடி 50 இலட்சம் ரூபா பெறுமதிமிக்க கேரள கஞ்சாவுடன் இரு சந்தேகநபர்கள் கைது

Thursday, April 10th, 2025 at 7:50 (SLT)

மீன்களை ஏற்றிச் சென்ற லொறியில் 5 கோடி 50 இலட்சம் ரூபா மதிப்புள்ள கேரள கஞ்சாவை மறைத்து கடத்தி சென்ற சந்தேகநபர்கள் இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் வாசிக்க >>>

தற்போதைய அரசாங்கக் கொள்கைகள் காரணமாக வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இலங்கைக்குத் திரும்புகின்றனர் : அகியோ இசமோட்டோ

Thursday, April 10th, 2025 at 7:45 (SLT)

முந்தைய ஆட்சியாளர்களின் தவறான முடிவுகளால் இலங்கையிலிருந்து தூரமான முதலீட்டாளர்கள் தற்போதைய அரசாங்கத்தின் திட்டங்கள் காரணமாக தற்போது இலங்கையை நெருங்கி வருவதாக இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் அகியோ இசமோட்டோ தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல சி.ஐ.டியில் முன்னிலை

Wednesday, April 9th, 2025 at 10:45 (SLT)

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல இன்று (09) காலை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார்.

மேலும் வாசிக்க >>>

ஜனாதிபதிக்கும் ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்தின் உயர் அதிகாரிகளுக்கும் இடையில் சந்திப்பு

Wednesday, April 9th, 2025 at 10:43 (SLT)

ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்தின் உயர் அதிகாரிகளுக்கும், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் இடையிலான சந்திப்பு நேற்று (08) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.

மேலும் வாசிக்க >>>

பிள்ளையான் கைது செய்யப்பட்டதை பட்டாசு கொளுத்தி கொண்டாடிய மக்கள்

Wednesday, April 9th, 2025 at 10:39 (SLT)

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவர் பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் கைதுசெய்யப்பட்டமைக்கு மகிழ்ச்சி தெரிவிக்கும் வகையில் மட்டக்களப்பு களுவாஞ்சிகுடியில் பட்டாசு கொழுத்தி மகிழ்ச்சி தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க >>>

டொமினிகன் குடியரசில் இரவு விடுதில் கூரை இடிந்து விழுந்து 79 பேர் பலி

Wednesday, April 9th, 2025 at 10:37 (SLT)

டொமினிகன் குடியரசின் தலைநகர் சாண்டோ டொமிங்கோவில் உள்ள ஒரு இரவு விடுதியில் கூரை இடிந்து விழுந்ததில் குறைந்தது 79 பேர் உயிரிழந்துள்ளதுடன் 150 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் வாசிக்க >>>