சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்புப் பணிகள் மீண்டும் ஆரம்பம்

Friday, May 24th, 2013 at 17:52 (SLT)

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்புப் பணிகள் இன்று மாலை முதல் ஆரம்பமாகவுள்ளதாக பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் சுசந்த சில்வா தெரிவித்தார். எரிபொருள் இன்மையினால் கடந்த சில நாட்களாக சுத்திகரிப்புப் பணிகள் இடை நிறுத்தப்பட்டிருந்ததாகவும் தற்போதைய நிலைமையின் கீழ் நாளாந்தம் 5000 மெட்ரிக் தொன் எண்ணெய்யை சுத்திகரிக்க எண்ணியுள்ளதாகவும்  பணிப்பாளர் மேலும் தெரிவித்தார். மேலும் வாசிக்க >>>


தமிழ், சிங்கள இன வேறுபாடுகள் இன்றி ஒற்றுமையாக வாழவேண்டும்!

Friday, May 24th, 2013 at 17:29 (SLT)

2009ஆம் ஆண்டுக்குப் பின்னர் பெற்றுக்கொண்ட சாமாதானத்தை ஒற்றுமையின் மூலமே பாதுகாக்க முடியும் என்று யாழ். பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க தெரிவித்தார்.   இன்று வெள்ளிக்கிழமை வெசாக் தினத்தையொட்டி பாதுகாப்பு படைகளின் ஏற்பாட்டில் நடைபெற்ற பசுமாடுகள் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே இதனை அவர் தெரிவித்தார். மேலும் வாசிக்க >>>


அவுஸ்திரேலியா தப்பிச் செல்ல முற்பட்ட 21 இலங்கை அகதிகள் கைது

Friday, May 24th, 2013 at 16:18 (SLT)

சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா தப்பிச் செல்ல முற்பட்ட 21 இலங்கை அகதிகள் இந்தியாவின் கேரளா மாநிலத்தின் ஏர்ணாகுளம் பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழக கியூ பிரிவு பொலிஸார் மற்றும் கேரள பொலிஸார் இணைந்து மேற்கொண்ட சுற்றி வளைப்பில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்திய புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைக்கப் பெற்ற தகவலின்படி இந்த சுற்றி வளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் வாசிக்க >>>


ரஷ்யாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

Friday, May 24th, 2013 at 14:21 (SLT)

ரஷ்யாவின் எஸோ நகர் அருகே 359 கிலோமீட்டர் தொலைவில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோலில் 8.2 ஆகப் பதிவாகி உள்ளது. பூமிக்கு அடியில் 601 கி.மீ ஆழத்தில் எற்பட்ட இந்த நிலநடுக்கம், ரஷ்யாவின் கிழக்கே உள்ள ஒகோட்ஸ்க் கடலில் மையம் கொண்டிருந்தது.  மேலும் வாசிக்க >>>


ஐநாவுடன் இணக்கங்கங்களை ஏற்படுத்திக் கொள்ள இலங்கை மறுப்பு

Friday, May 24th, 2013 at 14:03 (SLT)

தேசியப்பாதுகாப்பு தொடர்பாக ஐக்கிய நாடுகள் அமைப்புடன் எவ்விதமான இணக்கங்களையும் ஏற்படுத்தி கொள்வதை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளது. பலாலி விமான நிலையம், காங்கேசன்துறை துறைமுகம் ஆகியவற்றை விரிவுப்படுத்துவதற்காக 3 ஆயிரம் ஏக்கர் காணியை அரசாங்கம் கையகப்படுத்துவது குறித்து ஐக்கிய நாடுகள் அமைப்பு இலங்கை அரசாங்கத்திடம் கருத்து கேட்டிருந்ததே இதற்கு காரணமாகும். மேலும் வாசிக்க >>>


அவுஸ்திரேலியாவிலிருந்து மேலும் 16 பேர் நாடு திரும்புகின்றனர்

Friday, May 24th, 2013 at 13:08 (SLT)

புகலிடம் கோரி சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்குச் சென்ற மேலும் 16 இலங்கையர்கள் இன்று (24ம் திகதி) நாடு கடத்தப்படவுள்ளனர்.  அவுஸ்திரேலியாவின் சட்டதிட்டங்களுக்கு முகங்கொடுக்கத் தவறிய 16 பேரே இவ்வாறு நாடு கடத்தப்படுவதாக அவுஸ்திரேலிய குடிவரவு அமைச்சர் பிரன்டன் ஓ கொன்னர் தெரிவித்துள்ளார்.  மேலும் வாசிக்க >>>


மிருக வதைக்கு எதிர்ப்பு தெரிவித்து பௌத்த பிக்கு தீக்குளிப்பு

Friday, May 24th, 2013 at 12:46 (SLT)

வெசாக் தினமான இன்று கண்டி புனித தலதா மாளிகைக்கு அருகில் பௌத்த பிக்கு ஒருவர் தனக்கு தானே தீ வைத்துக் கொண்டுள்ளார்.  மிருக வதைக்கு எதிர்ப்பு தெரிவித்து குறித்த பிக்கு தனக்கு தீ வைத்துக் கொண்டுள்ளார்.  உடம்பில் பெற்றோல் ஊற்றி தீ வைத்துக்கொண்ட பிக்குவை அருகில் இருந்தவர்கள் பிடித்து தீயை அணைத்து கண்டி வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.   மேலும் வாசிக்க >>>


ஆளில்லாத இராணுவ விமான தாக்குதலில் அமெரிக்கர்கள் கொல்லப்பட்டனர்! ஒபாமா

Friday, May 24th, 2013 at 9:40 (SLT)

அமெரிக்க ஜனாதிபதி பாரக் ஒபாமா, செனட் உறுப்பினர்களிடம், பயங்கரவாத எதிர்ப்பு குறித்து அரசு எடுத்துவரும் நடவடிக்கைகள் குறித்து உரையாற்றியபோது, முதன்முதலாக இராணுவ நடவடிக்கையில் நான்கு அமெரிக்கர்கள் கொல்லப்பட்டதை ஒப்புக்கொண்டுள்ளார். எதிரிகளைத் தாக்கும் வண்ணம், முறைப்படுத்தப்பட்ட ஆளில்லாத இராணுவ விமானங்களைப் பயன்படுத்தி, கடந்த 2009ஆம் ஆண்டு முதல், நான்கு அமெரிக்கர்கள் பாகிஸ்தானிலும், ஏமனிலும் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் வாசிக்க >>>


மாகாண சபைகள் பற்றி சர்வஜன வாக்கெடுப்பு நடத்துமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை

Friday, May 24th, 2013 at 9:08 (SLT)

13 ஆவது திருத்தம் மற்றும் மாகாணசபைகளிடம் இருக்கின்ற நிலம் மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் பற்றிய விவாதங்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்ற நிலையில் இந்த பிரச்சினை தொடர்பாக சர்வஜன வாக்கெடுப்பை நடத்தவேண்டும் என ஸ்ரீலங்கா சுதந்திரகட்சியின் தமிழ் உறுப்பினர் ஒருவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் கோரிக்கைவிடுத்துள்ளார். மேலும் வாசிக்க >>>


கடந்த ஆண்டில் மட்டும் 20 காணாமல் போதல் சம்பவங்கள் பதிவு

Friday, May 24th, 2013 at 8:41 (SLT)

கடந்த ஆண்டில் 20 காணாமல் போதல் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது. 20 பலவந்த கடத்தல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக சர்வதேச மன்னிப்புச் சபையின் வருடாந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அரசியல் செயற்பாட்டாளர்கள், வர்த்தகர்கள் மற்றும் குற்றச் செயல்களுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் இவ்வாறு காணாமல் போயுள்ளனர், மேலும் வாசிக்க >>>


தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கட்சிகள் இணைந்து பேச்சுவார்த்தை நடத்த தீர்மானம்

Friday, May 24th, 2013 at 8:04 (SLT)

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஐந்து கட்சிகளும் இணைந்து கலந்துரையாடுவதற்கு நேற்றை கூட்டத்தின் போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.  தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுத்தலைவர் இரா. சம்பந்தன் தலைமையிலான குழுவினருக்கும் தமிழர் விடுதலை இயக்கத்தின் பிரதிநிதிகளுக்கும் இடையில் நேற்று நடைபெற்ற இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தையின் போதே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. மேலும் வாசிக்க >>>


நைஜீரிய தற்கொலை குண்டு தாக்குதலில் 12 பேர் பலி

Friday, May 24th, 2013 at 7:34 (SLT)

இராணுவ பாசறை மற்றும் பிரான்ஸ் அரசால் நடத்தப்படும் யுரேனியம் சுரங்கத்தின் மீது நைஜீரியாவில் இயங்கி வரும் இஸ்லாமிய தீவிரவாதிகளின் தற்கொலை படை நேற்று நடத்திய தாக்குதலில் 21 பேர் கொல்லப்பட்டனர்.  மாலியில் இஸ்லாமிய தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்திவரும் பிரெஞ்சு படைகளுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக முஜ்வா தீவிரவாத இயக்கம் தெரிவித்துள்ளது. மேலும் வாசிக்க >>>


லண்டனில் இராணுவ வீரரின் கொடூர கொலை குறித்து துரித விசாரணை

Thursday, May 23rd, 2013 at 21:06 (SLT)

லண்டனில் நேற்று புதன்கிழமை இராணுவத்தைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டதை அடுத்து, பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரன் அரசின் நெருக்கடி குழுவின் ஒரு அவசரக் கூட்டத்தை தலைமையேற்று நடத்துகிறார். பிரிட்டிஷ் இராணுவத்தைச் சேர்ந்த ஒருவர் மிகக் கொடூரமான முறையில் நேற்று மாலை கொல்லப்பட்டார்.  இச்சம்பவத்தை அடுத்து டேவிட் கேமரன் அவர்கள் தனது பிரெஞ்சு பயணத்தை அவசரமாக முடித்துக் கொண்டு நாடு திரும்பியுள்ளார். மேலும் வாசிக்க >>>


அவுஸ்திரேலியாவிலிருந்து 31 இலங்கையர்களை நாடு கடத்த திட்டம்

Thursday, May 23rd, 2013 at 20:38 (SLT)

31 இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்கள் அவுஸ்திரேலியாவிலிருந்து நாடு கடத்தப்பட்டுள்ளனர். படகு மூலம் சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியாவிற்குள் பிரவேசித்தவர்கள் இவ்வாறு நாடு கடத்தப்பட்டுள்ளனர்.  புகலிடக் கோரிக்கையாளர்கள் நிபந்தனைகளை உரிய முறையில் பின்பற்றத் தவறியதன் காரணமாகவே இவர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய மேலும் வாசிக்க >>>


பிரபாகரன், சீமான் குறித்து கருத்து: நாராயணசாமிக்கு எதிராக முறைப்பாடு

Thursday, May 23rd, 2013 at 20:31 (SLT)

விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் மற்றும் நாம் தமிழர் கட்சி தொடர்பாக பிரதமர் அலுவலகத்தின் இராஜாங்க யூனியன் அமைச்சரான வி.நாராயணசாமி வெளியிட்ட அறிக்கைபற்றி ஒரு முறைபாடு செய்யப்பட்டுள்ளது. அமைச்சர் வெளியிட்ட உத்தியோகபூர்வ அறிக்கையானது தமிழ்பேசும் இந்தியர்களுக்கும் தமிழர் அல்லாதோருக்கும் இடையில் பகைமையை தோற்றுவித்தது என, நியாயதுரந்திரர் சி.ரமேஷ் தெற்குவலய பொலிஸ் மா அதிபரிடம் மேலும் வாசிக்க >>>