இந்தியத் தூதுவர் யாழ்ப்பாணம் வரவுள்ளார் : அமைச்சர் தேவானந்தா

Saturday, July 4th, 2009 at 1:52

இந்தியத் தூதுவர் யாழ்ப்பாணம் விரைவில் வரவுள்ளார். அப்போது நீங்கள் அவரைச் சந்திக்க விரும்பினால் அதற்கான வாய்பை நான் ஏற்படுத்தி தருவேன் என்றும் சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா யாழ். பல்கலைக்கழக மாணவர்களிடம் தெரிவித்தார். துணைவேந்தர் ஊடாக விண்ணப்பித்தால் இந்தியத் தூதரை சந்திக்க ஏற்பாடு செய்து தரப்படும் என்று அவர் மேலும் கூறினார். மேலும் வாசிக்க >>>


சர்வதேச ஊடகங்கள் முகாம்கள் தொடர்பில் பொய்யான பிரச்சாரங்கள்

Saturday, July 4th, 2009 at 1:13

இந்தியாவின் பிரபல ஆங்கில நாளிதழான இந்து பத்திரிகையின் ஆசிரியர் என் ராம் வவுனியா செட்டிக்குளம் பகுதியில் உள்ள இடம்பெயர்ந்தோர் முகாம்களுக்கு சென்று பார்வையிட்டுள்ளார். இம்மாதம் 2ஆம் திகதி அங்கு சென்ற அவர், முகாம்களை பார்வையிட்டுள்ளார். இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ள ராம், சர்வதேச ஊடகங்கள் முகாம்கள் தொடர்பில் பொய்யான பிரச்சாரங்களை மேற்கொண்டுள்ள என்பதை இதன் போது தன்னால் அறிந்து கொள்ள முடிந்துள்ளதாக கூறியுள்ளார். மேலும் வாசிக்க >>>


காப்புறுதிக் கூட்டுத்தாபனத்திற்கு ஜனாதிபதி திடீர் விஜயம்

Saturday, July 4th, 2009 at 0:06

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனத்திற்கு திடீர் விஜயமொன்றை மேற்கொண்டார். காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தை அரசா ங்கம் பொறுப்பேற்ற பின்னர் அதன் பணிகள் சம்பந்த மாக ஆராய்வதற்காக சென்ற ஜனாதிபதி, அங்குள்ள அதிகாரிகள் மத்தியில் உரையாற்றினார்.இங்கு, அரச துறையைப் பலப்படுத்த அரசாங்கம் பாரிய செயற்திட்டங்களை முன்னெடுத்துள்ளதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, தனியார்மயப்படுத்தல் என்ற வார்த்தையை தமது அரசு முழுமையாக இல்லாதொழித்துவருவதா கவும் தெரிவித்தார். மேலும் வாசிக்க >>>


டொலர்களாலும் பவுண்களாலும் மட்டும் நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது

Saturday, July 4th, 2009 at 0:05

“பவுண்களாலும், டொலர்களாலும் மட்டும் நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது. அதற்கு தூரநோக்குடனான கடின உழைப்பு முக்கியமானது” என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். கஷ்டமான விடயம் என எண்ணி அந்தந்த காலத்தில் செய்ய வேண்டியதைக் கைவிட்டு விடுவது தலைவனுக்குரிய இலட்சணமல்ல. கஷ்டமானது என்பதற்காக நல்ல இலக்குகளை கைவிடக் கூடாதெனவும் தெரிவித்த ஜனாதிபதி, பயங்கரவாதத்துக்கெதிரான நடவடிக்கையின் போது தற்கொலைத் தாக்குதலுக்கு உள்ளான போதும் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தமது கடமையைக் கைவிட்டுப் போகவில்லை என்பதை சுட்டிக்காட்டினார். மேலும் வாசிக்க >>>


`சம்பள உயர்வு` முடியாதென அடம்பிடிக்கிறது முதலாளிமார் சம்மேளனம்

Friday, July 3rd, 2009 at 22:35

ரூ.500 சம்பள உயர்வு வழங்க வேண்டுமென தொழிற் சங்கங்கள் முன் வைக்கும் கோரிக்கையை முதலாளிமார் சம்மேளனம் முடியாதென அடம்பிடிக்கிறது. தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பான கூட்டு ஒப்பந்தப் பேச்சுவார்த்தை நேற்று கொழும்பில் நடந்தது. முதலாளிமார் சம்மேளன கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. சம்பள கூட்டு ஒப்பந்தம் தொடர்பாக நேற்று நடை பெற்ற இந்தப் பேச்சுவார்த்தையில் முறுகல் நிலை தோன்றியதையடுத்து முடிவுகள் எடுக்கப்படாமல் கூட்டம் கலைந்தது. மேலும் வாசிக்க >>>


ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இந்தியப் பிரதமரை எகிப்தில் சந்திப்பார்

Friday, July 3rd, 2009 at 10:12

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இம் மாத நடுப்பகுதியில் இந்தியப் பிரதமர் கலாநிதி மன்மோகன் சிங்கை சந்தித்து பேசவிருப்பதாக அறியவருகிறது. எகிப்தில் இந்த சந்திப்பு நடைபெற விருக்கிறது. எகிப்தின் சார்ம் எல்ஷெய்க் நகரத்தில் எதிர்வரும் 11 ஆம் திகதி முதல் 16 ஆம் திகதி வரை நடைபெறவிருக்கும் அணிசேரா அமைய நாடுகளின் 15 ஆவது உச்சி மாநாட்டில் கலந்துகொள்ளவரும் சந்தர்ப்பத்திலேயே இருநாட்டுத் தலைவர்களும் சந்தித்து பேச ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் வாசிக்க >>>


மீள்குடியேற்ற இடங்களுக்கு அதிகாரிகள் விஜயம்

Friday, July 3rd, 2009 at 10:08

வடக்கின் வசந்தம் 180 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் அடையாளம் காணப்பட்ட மீள்குடியேற்ற பகுதிகளுக்கு உயர்அதிகாரிகள் புதன்கிழமை விஜயம் செய்து நிலைமைகளை அவதானித்துள்ளனர். வவுனியா வடக்கு பிரதேச செயலக அதிகாரிகள் குழு கனகராயன்குளத்திற்கும், வவுனியா பிரதேச செயலக அதிகாரிகள் குழு பாலமோட்டை நவ்வி போன்ற பகுதிகளுக்கும் விஜயம் செய்திருந்தனர். மேலும் வாசிக்க >>>


கப்டன் அலி கப்பலிலிருந்த பொருட்கள் வேறொரு கப்பல் மூலம் சென்னையில் இருந்து கொழும்புக்கு கொண்டுவரப்படும்

Friday, July 3rd, 2009 at 9:55

இலங்கைத் தமிழர்களுக்கான நிவாரணப் பொருட்களுடன் வந்த கப்டன் அலி (வணங்கா மண்) கப்பல் சென்னை துறைமுகத்துக்குள் நுழைய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பாவிலுள்ள தமிழர்கள் கப்டன் அலி என்ற கப்பலுக்கு வணங்காமண் என பெயர் சூட்டி சுமார் 884 தொன் எடை கொண்ட நிவாரணப் பொருட்களை அனுப்பிவைத்தனர்.

கடந்த மாதம் 4 ஆம் திகதி இலங்கை வந்த அந்த கப்பலை இலங்கை அரசு அங்கிருந்து வெளியேற்றியது. இதையடுத்து சென்னை நோக்கி வந்த கப்பலுக்கு இந்திய கப்பற்படையும் சோதனை கொடுத்தது. அந்த கப்பலை சென்னை துறைமுகத்துக்கு வெளியே நடுக்கடலில் நிறுத்தி வைத்தது. மேலும் வாசிக்க >>>


மன்னார், கொக்கிளாய், மயிலிட்டி மற்றும் பருத்தித்துறையில் புதிய மீன்பிடி துறைமுகங்கள் அமைக்கப்படும்

Friday, July 3rd, 2009 at 9:47

வடக்கின் வசந்தம் திட்டத்தின், 180 நாள் வேலைத் திட்டத்தின் கீழ் வடமாகாண மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கென அரசாங்கம் 869 மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளது. இத்திட்டத்தின் கீழ் வடமாகாணத்திலுள்ள குளங்கள் மற்றும் வாவிகளில் 37 இலட்சம் மீன்குஞ்சுகள் விடப்படவிருக்கின்றன என்று கடற்றொழில், நீரியல் வளத்துறை அமைச்சர் பீலிக்ஸ் பெரேரா நேற்றுத் (02) தெரிவித்தார். மேலும் வாசிக்க >>>


மீள்குடியேற்ற கால அட்டவணையை அரசு வெளியிடவேண்டும்

Friday, July 3rd, 2009 at 2:31

இலங்கையின் வடக்கே அரசாங்கத்தினால் நடத்தப்படுகின்ற முகாம்களில் உள்ள தமிழ் அகதிகளை, அங்கிருந்து விடுவிப்பதற்கு ஒரு கால அட்டவணையை அறிவிக்குமாறு தமிழர்களின் முக்கியஸ்தர்கள் குழு ஒன்று இலங்கை அரசாங்கத்தை கேட்டிருக்கிறது.

தம்மை சுற்றவரவுள்ள முட்கம்பி வேலிகளை விட்டு வெளியே வர தமிழ் மக்கள் மிகவும் ஏக்கத்துடன் இருப்பதாகவும், அவர்களை விடுவிப்பதற்கான ஒரு கால எல்லையை அறிவிப்பது, காலவரையற்று அங்கே முகாம்களில் தடுத்து வைக்கப்படுவோம் என்ற அச்சத்தை அவர்களது மனதில் இருந்து அகற்றும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர். மேலும் வாசிக்க >>>


ஈரானில் கைதான ஏழு இலங்கையருக்கு எதிராக இரு வழக்குகள் தாக்கல்

Friday, July 3rd, 2009 at 0:06

ஈரானில் வைத்துக் கைதான ஏழு இலங்கைப் பிரஜைகளையும் விடுதலை செய்வதற்கு பல்வேறு வழிகளிலும் தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வருவதாக வெளிவிவகார அமைச்சு கூறியது. இவர்களுக்கு எதிராக இரு வழக்குகள் தொடரப்பட்டுள்ளதாகவும் ஒரு வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டுள்ளதோடு அடுத்த வழக்கு இந்த வாரம் விசாரணைக்கு எடுக்கப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்படுகிறது. மேலும் வாசிக்க >>>


பொய்யான தகவல்களை கூறி சட்டவிரோத செயற்பாடுகள் தகவல் தெரிந்தால் பொலிஸாருக்கு அறிவியுங்கள்

Friday, July 3rd, 2009 at 0:05

பொய்யான தகவல்களை கூறி சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருபவர்கள் தொடர்பாக விபரங்கள் தெரியும் பட்சத்தில் உடனடியாக பொலிஸ் தலைமையக த்திற்கு அறியத்தருமாறு பொலிஸ் திணைக்களம் வேண்டுகோள் விடுக்கின்றது. அமைச்சர்களின் உறவினர்கள் என்று பொய்யான தகவல்களை கூறிக்கொண்டு சட்டவிரோத மண் அகழ்வு, மரம் வெட்டுதல், மாணிக்கக்கல் அகழ்வு மற்றும் போதைப் பொருட்கள் விற்பனை நடவடிக்கைகளில் நாடளாவிய ரீதியில் சிலர் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளன என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரஞ்சித் குணசேகர தெரிவித்தார். மேலும் வாசிக்க >>>


தாய் நாட்டின் நலனைக் கருத்திற் கொண்டு அனைத்து தரப்பினரும் ஒன்றுபட்டுச் செயற்பட வேண்டும்: கோத்தாபாய ராஜபக்ஷ

Thursday, July 2nd, 2009 at 20:33

சுயநல மனப்பான்மையின்றி தாய் நாட்டின் நலனைக் கருத்திற்கொண்டு அனைத்துத் தரப்பினரும் ஒன்றுபட்டுச் செயற்பட வேண்டும். நாட்டில் ஊடுருவியிருந்த பயங்கரவாதத்தை பாதுகாப்பு படையினர் தோற்கடித்ததன் மூலம் கிடைக்கப்பெற்ற வெற்றியை முன்கொண்டு செல்ல வேண்டுமாயின் அனைத்துத் தடைகளிலிருந்தும் சுதந்திரம் பெற வேண்டும் என்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தாபாய ராஜபக்ஷ தெரிவித்தார். மேலும் வாசிக்க >>>


சர்வகட்சிக் குழுவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கலந்துகொண்டது

Thursday, July 2nd, 2009 at 19:33

நாட்டின் அபிவிருத்தி மற்றும் நல்லிணக்க நடவடிக்கைகள் தொடர்பாக ஆராய்வதற்கு ஜனாதிபதி தலைமையில் இன்று காலை நடைபெற்ற  சர்வகட்சிக் குழுக் கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உட்பட அனைத்துக் கட்சிகளும் கலந்துகொண்டன. ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற இன்றைய முதலாவது கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் அதன் பாராளுமன்ற உறுப்பினர் சிறிகாந்தா தலைமையிலான குழுவொன்று கலந்துகொண்டது. மேலும் வாசிக்க >>>


எரிபொருட்களின் விலை அதிகரிப்பால் அரசாங்கம் மக்களை அசௌகரியத்துக்கு உட்படுத்தியுள்ளது: ஐ.தே.க

Thursday, July 2nd, 2009 at 16:57

எரிபொருட்களின் விலைகளை அரசாங்கம் அதிகரித்துள்ளமையை வன்மையாக கண்டிக்கின்றோம் என்று ஐக்கிய தேசிய கட்சி இன்று வியாழக்கிழமை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது அரசாங்கத்தின் ஊழல் மற்றும் அதிகரித்த அமைச்சர்களின் செலவுகளை சமாளிப்பதற்காக எரிபொருள்களின் விலைகள் அதிகரிக்கப் பட்டுள்ளன. கடந்த காலத்தில் யுத்தத்துக்காக மக்கள் பல அர்ப்பணிப்புக்களை செய்தனர். மேலும் வாசிக்க >>>