யாழில் பல்கலைக்கழக மாணவன் மீது தாக்குதல்

Friday, May 18th, 2012 at 13:15 (SLT)

யாழ் கொக்குவில் கலட்டிச் சந்தியில் இன்று காலை யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் முன்னாள் செயலாளர் தர்சானந்தன் இனந் தெரியாத நபர்களால் தாக்கப்பட்டுள்ளார்.

இவர் யாழ் பல்கலைக்கழகத்தின் இறுதியாண்டு கலைபீட மாணவன் ஆவர். மேலும் வாசிக்க >>>


ஆனைமடுவில் புதையல் தோண்ட முற்பட்ட இருவர் கைது

Friday, May 18th, 2012 at 12:30 (SLT)

ஆனைமடு, உப்பலாவத்தை பிரதேசத்தில் புதையல் தோண்ட முயற்சித்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆணைமடு பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது இவ்வர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மேலும் வாசிக்க >>>


சரத் பொக்சேகா பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்

Friday, May 18th, 2012 at 11:53 (SLT)

இராணுவத்தில் இருந்து தப்பிச் சென்றவர்களுக்கு அடைக்கலம் கொடுத்த குற்றச்சாட்டு தொடர்பான வழக்கில், முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுக்கு இன்று கொழும்பு மேல் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.
இதற்கமைய 10 இலட்சம் ரூபா ரொக்கப் பிணை, தலா 25 இலட்சம் ரூபா பெறுமதியான சரீரப் பிணைகளுடன் இருவர் அவரை விடுவிக்குமாறு, மேல் நீதிமன்ற நீதிபதி சுனில் ராஜபக்ஸ உத்தரவிட்டுள்ளார்.


தமிழக முதல்வரின் ஆதரவுடன் பழங்குடி இனத்தைச் சேர்ந்த குடியரசுத் தலைவர் போட்டியில்

Friday, May 18th, 2012 at 9:23 (SLT)

இந்தியக் குடியரசுத் தலைவர் தேர்தலில் பழங்குடி இன மக்களின் சார்பாக தான் போட்டியிடவுள்ளதாக பி ஏ சாங்மா உறுதிப்படுத்தியுள்ளார்.

நாட்டிலுள்ள பழங்குடி இனமக்கள் இம்முறை தமது இனத்தைச் சேர்ந்த ஒருவர் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை, அரசியல் கட்சிகள் மற்றும் நாட்டு மக்களுக்கு விடுத்ததாகவும் அவர் கூறுகிறார். மேலும் வாசிக்க >>>


வடமாகாணத்தில் மூன்றரை இலட்சம் மக்கள் மீள்குடியேற்றப்பட்டுள்ளனர்

Friday, May 18th, 2012 at 8:26 (SLT)

வட மாகாணத்தில் இடம்பெயர்ந்த மக்களில் 3 அரை இலட்சம் மக்கள் மீள்குடியேற்றத்தின் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளனர் என வட மாகாண ஆளுனர் ஐீ.ஏ.சந்திரசிறி தெரிவித்தார்.

நேற்று பலாலி படைத்தளத்தில் நாட்டை காத்த தேசிய வீரர்களின் நினைவு தின கொண்டாட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போது இவ்வாறு குறிப்பிட்டார்.

நாட்டில் நடைபெற்ற 30 வருட பேரானது படைவீரர்களின் அர்பணிப்பினால முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. இதனால் பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டு நாடு பலதுறைகளில் அவிபிருத்தி நடைபெற்றுள்ளது என வடமாகாண ஆளுனர் குறிப்பிட்டார். மேலும் வாசிக்க >>>


சரத் பொன்சேகாவை விடுதலை செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம்

Thursday, May 17th, 2012 at 20:56 (SLT)

முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகாவை விடுதலை செய்வதற்கு அமைச்சரவையின் அனுமதி இன்று வழங்கப்பட்டுள்ளது.

நேற்று அமைச்சரவை கூடியபோது ஜனாதிபதி இது தொடர்பான யோசனையை முன்வைத்ததாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் வாசிக்க >>>


கொழும்பு - களுத்துறை சிறைக் கைதிகள் உண்ணாவிரதம்

Thursday, May 17th, 2012 at 16:24 (SLT)

கொழும்பு மற்றும் களுத்துறைச் சிறைச்சாலைகளில் விசாரணைகள் எதுவும் இல்லாமல் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ்க் கைதிகளில் சுமார் 300 பேர் இன்று வியாழக்கிழமை காலை முதல் உண்ணாவிரதப் போராட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளார்கள்.

தம்மை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தே இந்தப் போராட்டத்தை இவர்கள் ஆரம்பித்திருக்கின்றார்கள். மேலும் வாசிக்க >>>


இனப்பிரச்சினை தீர்வு தொடர்பில் அரசு பதில் வழங்கிவிட்டது - ரணில்

Thursday, May 17th, 2012 at 14:41 (SLT)

இனப்பிரச்சினை தீர்வுக்கான நாடாளுமன்ற தெரிவுக்குழு விடையம் தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சிக்கு அரசாங்கம் பதில் ஒன்றை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த திங்கட்கிழமையன்று ஜனாதிபதி மகிந்த ராஸபக்ஸ தலைமையிலான தூதுகுழு, ரணில் விக்ரம சிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சியின் தூதுக்குழுவை சந்தித்தது. மேலும் வாசிக்க >>>


ஒபாமாவிடம் விவாகரத்து கேட்ட மிஷெல்

Thursday, May 17th, 2012 at 13:07 (SLT)

அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா கடந்த 2000ம் ஆண்டு சிகாகோ சட்டசபைக்கு நடந்ததேர்தலில் போட்டியிட்டார். தேர்தலில் போட்டியிட வேண்டாம் என்று அவரது மனைவி மிஷெல் அறிவுரை கூறியுள்ளார்.

அதை ஒபாமா கண்டு கொள்ளவில்லை. இதில் கோபம் அடைந்த மிஷெல், ஒபாமாவை விவாகரத்து செய்வதற்கு ஆவணங்களை தயார் செய்துள்ளார். மேலும் வாசிக்க >>>


முள்ளிவாய்க்கால் நினைவு தினம்! இலங்கைத் தூதரகத்துக்கு பலத்த பாதுகாப்பு

Thursday, May 17th, 2012 at 11:56 (SLT)

முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தையொட்டி, இலங்கைத் தூதரகத்துக்கு பலத்த பொலிஸ் பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது.

இதேபோல எழும்பூரில் உள்ள சிலோன் வங்கி, புத்த ஆலயம் உள்ளிட்ட இலங்கை நிறுவனங்களுக்கும், அலுவலங்களுக்கும் பலத்த பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் வாசிக்க >>>


ஆணைக்குழுவின் பரிந்துரைகளை செயற்படுத்த ஜனாதிபதி செயலகம் நடவடிக்கை

Thursday, May 17th, 2012 at 11:03 (SLT)

கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை செயற்படுத்தவென ஜனாதிபதி செயலகம் நடவடிக்கை எடுத்து வருவதாக வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு அமெரிக்கா சென்றுள்ள பீரிஸ் தனது விஜயத்தின் மேலும் வாசிக்க >>>


அரசாங்கம் உரிய பதிலை தர வேண்டும் - கூட்டமைப்பு

Thursday, May 17th, 2012 at 9:11 (SLT)

இனப்பிரச்சினை தீர்வு தொடர்பாக அரசாங்கத்திடமிருந்து உரிய பதிலை எதிர்பார்த்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் ஆர்.சம்பந்தன் இந்த கருத்தை வெளியிட்டார். மேலும் வாசிக்க >>>


இனப்படுகொலையில் ஈடுபட்ட இராணுவ கமாண்டருக்கு எதிராக வழக்கு

Thursday, May 17th, 2012 at 8:26 (SLT)

முன்னாள் பொஸ்னிய-சர்பிய இராணுவ கமாண்டர் ரட்ச்கோ மிலாடிச் பொஸ்னியாவில் திட்டமிட்டு ‘இன அழிப்பு’ நடவடிக்கையில் ஈடுபட்டார் என்று அவருக்கு எதிரான போர்க்குற்ற வழக்கின் முதல்-நாள் விசாரணையின்போது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

1992-95 காலப்பகுதியில் நடந்த பொஸ்னிய போரின்போது, இனப்படுகொலையில் ஈடுபட்டதாகவும் போர்க்காலக் குற்றங்கள் மற்றும் மனிதகுலத்துக்கு எதிரான மேலும் வாசிக்க >>>


பொன்சேகாவின் விடுதலை தொடர்பாக ஜனாதிபதி அனோமா பொன்சேகாவுடன் பேச்சு

Thursday, May 17th, 2012 at 7:15 (SLT)

சரத் பொன்சேகாவின் விடுதலை குறித்து ஜனநாயக தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் டிரான் அலஸ் மற்றும் அனோமா பொன்சேகா ஆகியோர் நேற்றிரவு ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். இந்த சந்திப்பு டிரான் அலஸ்ஸின் இல்லத்தில் இடம்பெற்றுள்ளது.

எதிர்வரும் இரு தினங்களுக்குள் சரத் பொன்சேகா விடுதலை செய்யப்படுவார் மேலும் வாசிக்க >>>


இலங்கை அகதிகளுக்கான நிதி உதவி அதிகரிப்பு

Wednesday, May 16th, 2012 at 19:46 (SLT)

தமிழ்நாட்டில் நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு சில நலன்புரி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக தமிழக அரசாங்கம் நேற்று அறிவித்துள்ளது.

இலங்கை அகதிகளின் இயற்கைக்கு மாறான மரணங்களின்போது வழங்கப்பட்ட 15,000 ரூபா நிதியுதவியை 25,000 ரூபாவாகவும் மரண செலவீனங்களுக்கான நிதியுதவியை 2,500 ரூபாவிலிருந்து 5,000 ரூபாவாகவும் அதிகரிக்கப்படவுள்ளதாக மேலும் வாசிக்க >>>