ஜனாதிபதியின் யாழ் விஜயத்தில் அரசியல் தீர்வு குறித்து முக்கிய உரை

Saturday, January 28th, 2012 at 5:50 (SLT)

மாசி மாதம் 6ம் திகதி ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ யாழ்ப்பாணம் வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சுதந்திர தினத்தை ஒட்டிய சிறப்பு நிகழ்வுகளில் கலந்து கொள்வதோடு அன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் அரசியல் தீர்வுத் திட்டம் குறித்து முக்கியத்துவம் வாய்ந்த ஓர் உரை ஒன்றினை ஆற்றுவார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் வாசிக்க >>>


நல்லிணக்க ஆணைக் குழுவின் பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்படும்

Saturday, January 28th, 2012 at 2:37 (SLT)

எத்தகைய தடைகள் அழுத்தங்களுக்கு முகங்கொடுக்க நேரிட்டாலும் மக்களுக்கான அபிவிருத்தியை ஒருபோதும் பின்போடப்போவதில்லை என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக் குழுவின் பரிந்துரை களை ஒரே நாளில் நடைமுறைப்படுத்த முடியாது. 30 வருட பிரச்சினைகளுக்கு உடனடியாகத் தீர்வுகாண்பது கடினம் எனினும் முறைப்படி அவை நடைமுறைப்படுத்தப்படும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார். மேலும் வாசிக்க >>>


டுவிட்டரில் புதிய தணிக்கை தொழில்நுட்பம்

Saturday, January 28th, 2012 at 0:54 (SLT)

ஒரு நாட்டில் ஆட்சேபணைக்குரியதாக அமைந்துள்ள குறுந்தகவல்களை அந்த நாட்டில் மட்டும் இணையத்தில் வரவிடாமல் செய்கின்ற தொழில்நுட்பத்தை தாங்கள் இப்போது பெற்றிருப்பதாக டுவிட்டர் இணைய குறுந்தகவல் பரிமாற்ற சமூக வலைத்தளம் அறிவித்துள்ளது.

குறிப்பிட்ட நபர்கள் வழங்கும் தகவல்களை குறிப்பிட்ட நாட்டில் மட்டும் தெரியவிடாமல் செய்ய இனி தங்களால் முடியும் என டுவிட்டர் தனது வலைப்பூ பதிவில் கூறியிருக்கிறது. மேலும் வாசிக்க >>>


இதுவரை இல்லாத அளவு வர்த்தகப் பற்றாக்குறையில் இலங்கை

Friday, January 27th, 2012 at 6:25 (SLT)

இலங்கையில் இறக்குமதிக்கும் ஏற்றுமதிக்கும் உள்ள இடைவெளியான வர்த்தகப் பற்றாக்குறை இதுவரை இல்லாத அளவுக்கு மிக அதிகமாகவுள்ளது என்று அந்நாட்டின் மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

2010 ஆம் ஆண்டுடன் ஒப்பிட்டு பார்க்கும் போது 2011 ஆம் ஆண்டு இலங்கையின் வர்த்தகப் பற்றாக்குறை 238 சதவீதம் அதிகரித்துள்ளது என்று மத்திய வங்கியின் அறிக்கை கூறுகிறது.
இலங்கையின் பொருளாதாரத்தை பொறுத்தவரையில் இது ஒரு அபாயகரமான நிலையையே காட்டுகிறது என்று பொருளாதார ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். மேலும் வாசிக்க >>>


வெளிநாடுகளிலுள்ள இலங்கை டொக்டர்களை அழைக்க விசேட திட்டம்

Friday, January 27th, 2012 at 4:05 (SLT)

வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கை டொக்டர்களின் சேவையை மீண்டும் நாட்டுக்குப் பெற்றுக் கொள்ளவென விசேட வேலைத்திட்டமொன்றை செயற்படுத்துவதற்கு இலங்கை மருத்துவர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது.

இத்திட்டத்தின் கீழ் இலங்கை டொக்டர்கள் அதிகளவில் பணி புரியும் நாடுகளில் இலங்கை மருத்துவர் சங்கத்தின் கிளைகள் அமைக்கப்படும் என்று சங்கத்தின் செயலாளர் டொக்டர் லசந்த மலவிகே நேற்று தெரிவித்தார். மேலும் வாசிக்க >>>


மாகாணசபைகளுக்கு காணி பொலிஸ் அதிகாரம் வழங்க வேண்டும்

Thursday, January 26th, 2012 at 22:54 (SLT)

புலிகளின் பயங்கரவாத செயற்பாடுகளுக்கு பின்னர் வடக்கு, கிழக்கு மக்கள் மத்தியில் நான் சேவையாற்றினேன். புலிகளின் பிடியிலிருந்து தப்பி வந்தவருக்கு மருந்துவ வசதிகளை செய்துகொடுத்து உபசரித்தேன்.

அந்த வகையில் வடக்கு, கிழக்கு மக்களுக்கு காணி, பொலிஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ தெரிவித்தார். மேலும் வாசிக்க >>>


இலங்கை விரித்த வலையில்தான் தொடர்ந்து இந்தியா சிக்கியிருக்கிறது

Thursday, January 26th, 2012 at 22:50 (SLT)

தமிழகத்தில் இருந்து சிலர், ‘ஐந்தாவது ஈழப் போர் வெடிக்கும்; பிரபாகரன் வருவார்’ என்கிறார்கள். இதை எல்லாம் துளியளவுகூட பாதிக்கப்பட்ட மக்கள் ரசிக்கவில்லை. ரசிக்கும் நிலையிலும் அவர்கள் இல்லை.

இவ்வாறு தமிழ்நாட்டிலிருந்து வெளியாகும் ஆனந்தவிகடன் வார இதழில் டி. அருள் எழிலனுக்கு வழங்கிய நேர்காணலில் ‘ஆறாவடு’ நாவலின் ஆசிரியர் சயந்தன் தெரிவித்துள்ளார்.

அந்த நேர்காணலின் முழுவிபரமாவது; மேலும் வாசிக்க >>>


இரட்டைக் கொலை சந்தேக நபர் ஓமந்தை பொலிசாரால் கைது

Thursday, January 26th, 2012 at 7:32 (SLT)

வவுனியா ஓமந்தை மீள்குடியேற்ற கிராமமான பன்றிக்கெய்தகுளம் பகுதியில் கணவனையும், மனைவியையும் வெட்டிக்கொலை செய்து விட்டு, தங்க மோதிரங்கள் உட்பட சுமார் 5 லட்சம் ரூபா பெறுமதியான தங்க ஆபரணங்களை கொள்ளையிட்டுச் சென்ற சம்பவத்தின் பிரதான ’இரட்டைக் கொலை’ சந்தேக நபர் நேற்று முன்தினம் ஓமந்தை காவற்துறையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். மேலும் வாசிக்க >>>


நெடுங்கேணி பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டம்

Thursday, January 26th, 2012 at 7:21 (SLT)

வவுனியா வடக்கு நெடுங்கேணி பிரதேச செயலக ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் கடந்த செவ்வாய்க்கிழமை வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாரூக் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிவசக்தி ஆனந்தன், வினோ நோகராதலிங்கம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். மேலும் வாசிக்க >>>


சம்பளத்தை 45 வீதத்தால் அதிகரிக்கும் வரை போராடுவோம்

Thursday, January 26th, 2012 at 7:14 (SLT)

கூட்டுத்தாபனங்கள் மற்றும் அதிகாரசபை ஊழியர்களின் சம்பளத்தை 45 வீதத்தால் அதிகரிக்கும் வரை போராடவுள்ளதாக தேசிய ஊழியர் சங்கம் தெரிவிக்கின்றது.

கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் சங்கத்தின் பிரதிநிதிகள் இதனைக் குறிப்பிட்டனர்.

இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட பாராளுமன்ற உறுப்பினர் டொக்டர் ஜயலத் ஜயவர்த்தன, ஊழியர்களுக்கு நியாயமான சம்பள அதிகரிப்பாக 45 வீத சம்பள அதிகரிப்பு வழங்கப்பட வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். மேலும் வாசிக்க >>>


என்ன செய்யவேண்டும்?

Wednesday, January 25th, 2012 at 22:03 (SLT)

பத்திரிகை செய்திகளை வைத்து பார்க்கும் போது, முன்னாள் இந்திய ஜனாதிபதி அப்துல் கலாமின் யாழ்ப்பாண விஜயம் உள்ளூர் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றதாகத் தோன்றுகிறது. இது, அவரது வருகைக்கு முன், அதனை எதிர்த்து தமிழ் நாட்டிலும் இலங்கையிலும் எழும்பிய விமர்சனங்களுக்கு விடையாகவும் அமைந்துள்ளது.

இலங்கை தமிழ் மக்களிடையே இந்திய ஆதரவு நிலைப்பாடு என்பது ஒரு விடயம். அதுவே, விடாமுயற்சியால் வாழ்கையின் ஒவ்வொரு படியிலும் வெற்றிபதித்து, ஓர் பெருமைக்குரிய, அதேசமயம் தமிழ் இனமே பெருமிதம் அடையவேண்டிய முன்மாதிரியாக டாக்டர் கலாம் அடையாளம் காணப்படுவது வேறொருவிடயம். மேலும் வாசிக்க >>>


கிழக்கு முதல்வரும் கூட்டமைப்பு தலைவரும் சந்திப்பு

Wednesday, January 25th, 2012 at 8:09 (SLT)

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்மந்தனுக்கும், கிழக்கு மாகாண முதல்வர் சி. சந்திரகாந்தனுக்கும் இடையே முக்கிய சந்திப்பு ஒன்று இன்னும் சில தினங்களில் இடம்பெறவுள்ளது.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் முதல்வர் சி. சந்திரகாந்தன் கூட்டமைப்பின் தலைவர் சம்மந்தனுக்கு எழுதிய கடிதத்தினை அடுத்தே இந்தச் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என கூட்டமைப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மேலும் வாசிக்க >>>


தமிழ் அரசியல் கைதிகளின் பாதுகாப்பை அரசு உறுதி செய்யவேண்டும்

Wednesday, January 25th, 2012 at 7:35 (SLT)

சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டியது அவசியமாகும். புதிய மகசின் சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலின் போது தமிழ் அரசியல் கைதிகள் மீது தாக்குதல் நடத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இவ்வாறான செயற்பாடு பாரதூரமான விடயமாகும் என்று சிறிரெலோ கட்சியின் தலைவர் ப.உதயராசா தெரிவித்துள்ளார். மேலும் வாசிக்க >>>


கிளிநொச்சி மாவட்டத்‌துக்கு ஜப்பான் 25 மில்லியன் நன்கொடை

Wednesday, January 25th, 2012 at 7:09 (SLT)

கிளிநொச்சி மாவட்டம் கண்டாவளை பிரதேச செயலகப்பிரிவில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு மீளக்குடியேறிய மக்களுக்கு ஜப்பான் அரசாங்கம் 25 மில்லியன் ரூபாவை நன்கொடையாக வழங்க முன்வந்துள்ளது

வட மாகாணத்தின் கிளிநொச்சி மாவட்டத்தில் மீளக்குடியமர்ந்துள்ள மக்களின் சமூக, பொருளாதார மீள்கட்டமைப்பு திட்டத்தின் கீழ் விவசாயத்துறையை அபிவிருத்தி செய்வதற்கும், கடற்றொழில் உற்பத்தியை சிறப்பாக மேற்கொள்வதற்கும் ஜப்பான் அரசாங்கம் இந்த நிதியை அன்பளிப்பாக வழங்கவுள்ளது. மேலும் வாசிக்க >>>


கொழும்பு சிறைச்சாலையில் கலவரம்

Tuesday, January 24th, 2012 at 23:01 (SLT)

இலங்கை தலைநகர் கொழும்பில் உள்ள நியூ மேகசின் சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரத்தில் குறைந்தபட்சம் 31 பேர் காயமடைந்துள்ளனர்.

இவர்களில் பெரும்பாலானவர்கள் துப்பாக்கி குண்டுகளாலேயே காயமடைந்துள்ளனர். கலவரத்தில் 3 கைதிகள் பலியாகிவிட்டதாக கைதி ஒருவர் கூறினார்.

சிறைச்சாலை துறையின் தலைவர், சிறைவாசிகளின் நடத்தப்பட்ட விதம் தேவைப்பட்ட தரத்தை விட குறைவாகவே இருப்பதாக கூறியுள்ளார். இந்த விளக்கமறியல் சிறைச்சாலையில் தற்போது நிலைமை கட்டுப்பாட்டில் உள்ளது. மேலும் வாசிக்க >>>