பல தடவைகள் பரீட்சித்து தோல்வி கண்ட நிலைப்பாடு

Saturday, September 4th, 2010 at 5:22 (SLT)

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கோரிக்கைகளும் தமிழ்க் கட்சிகளின் அரங்கத்தின் கோரிக்கைகளும் ஒருமித்தனவாகக் காணப்படுகின்ற நிலையில் இரு தரப்பினரும் ஏன் ஒன்றிணைய முடியாது?

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட இந் திய வெளிவிவகார செயலாளர் நிருபமா ராவ் இக்கேள் வியைக் கேட்டிருக்கின்றார். தமிழ்த் தேசியக் கூட்டமை ப்பும் தமிழ்க் கட்சிகளின் அரங்கமும் நிருபமா ராவ் வைத் தனித்தனியாகச் சந்தித்துப் பேசின. மேலும் வாசிக்க >>>


தமிழ்க் கூட்டமைப்பு, இடதுசாரிகள் திங்களன்று இறுதி முடிவு

Saturday, September 4th, 2010 at 5:14 (SLT)

உத்தேச அரசியலமைப்பு திருத்தத்திற்கு ஆதரவு வழங்குவதா? இல்லையா என்பது குறித்து தமிழ்த்தேசிய கூட்டமைப்பும் இடதுசாரிக் கட்சிகளும் திங்கட்கிழமை இறுதி முடிவு எடுக்க உள்ளன.

உத்தேச யாப்புத் திருத்தத்தில் உள்ளடங்கும் விடயங்கள் குறித்து தமது கட்சி ஆராய்ந்து வருவதாகவும் 6ம் திகதி நடைபெறும் கட்சியின் பாராளுமன்றக் குழுக் கூட்டத்தில் இது குறித்து இறுதி முடிவு எடுக்க உள்ளதாகவும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு செயலாளர் மாவை சேனாதிராஜா எம்.பி. தெரிவித்துள்ளார். மேலும் வாசிக்க >>>


இந்திய வெளியுறவுச் செயலர் நிரூபமா ராவிடம் தமிழ் கட்சிகளின் அரங்கம் ’12 அம்சங்கள்’ முன்மொழிவு

Friday, September 3rd, 2010 at 14:23 (SLT)

நேற்று காலை (செப், 2)தமிழ் கட்சிகளின் அரங்கம் இந்திய வெளிவிவகாரச் செயலர் திருமதி நிருபமா ராவ் அவர்களுடன் சந்திப்பொன்றை நடத்தியது. இந்திய உயர்ஸ்தானிகர் திரு அசோக் கே காந்தா, துணை ஸ்தானிகர் விக்ரம் மிஸ்றி அரசியல் செயலர் திரு அனுரக் ஸ்ரீவத்சவா ஆகியோரும் இக்கலந்துரையாடலில் பிரசன்னமாகியிருந்தனர். மேலும் வாசிக்க >>>


நல்லிணக்க ஆணைக்குழுவின் அமர்வில் அமைச்சர் டக்ளஸ் சாட்சியம்

Friday, September 3rd, 2010 at 4:24 (SLT)

கற்றறிந்த பாடங்கள், நல்லிணக்கம் பற்றிய ஆணைக் குழுவின் செப்டெம்பர் மாத அமர்வு இன்று (03) வெள்ளிக்கிழமை ஆரம்பமாகிறது. பாரம்பரிய கைத்தொழில், சிறு கைத்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்று பிற்பகல் இரண்டு மணிக்கு ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளிக்கின்றார்.

ஆணைக் குழுவின் தலைவர் சீ. ஆர். டி. சில்வா தலைமையில் கொழும்பு 7, ஹோட்டன் பிளேசிலுள்ள லக்ஷ்மன் கதிர்காமர் நிலையத்தில் நடைபெறும் விசாரணையில் இன்று மாலை 4 மணிக்கு எம். ஐ. எம். மொஹிதீன் சாட்சியமளிக்கின்றார். மேலும் வாசிக்க >>>


புனர்வாழ்வு பெற்ற 508 பேர் நாளை பெற்றோரிடம் ஒப்படைப்பு

Friday, September 3rd, 2010 at 4:12 (SLT)

புனர்வாழ்வளிக்கப்பட்ட 508 முன்னாள் புலி உறுப்பினர்கள் நாளை (4) தமது பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளதாக புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலை மறுசீரமைப்பு அமைச்சு கூறியது. இதன் போது தொழிற்பயிற்சியை பூர்த்தி செய்த 180 முன்னாள் புலி உறுப்பினர்களுக்கு சான்றிதழ்களும் உபகரணங்களும் வழங்கப்படவுள்ளன.

பல்வேறு புனர்வாழ்வு முகாம்களில் புனர்வாழ்வளிக்கப்பட்ட வயது குறைந்தோர், தாய்மார், உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றியோர் மற்றும் அங்கவீனமுற்றோரே இவ்வாறு விடுவிக்கப்பட உள்ளதாக அமைச்சின் சிரேஷ்ட ஆலோசகர் சிவலிங்கம் சதிஷ்குமார் கூறினார். மேலும் வாசிக்க >>>


தமிழ்க் கட்சிகளின் அரங்கம் இந்திய வெளியுறவுச் செயலருடன் சந்திப்பு

Thursday, September 2nd, 2010 at 18:43 (SLT)

இந்திய வெளியுறவுச் செயலர் நிரூபமா ராவ் இலங்கை தமிழ்க் கட்சிகளின் அரங்கப் பிரதிநிதிகளை இன்று காலை சந்தித்து கலந்துரையாடினார்.

எஸ்.ஜே.வி. சந்திரஹாசன் தலைமையில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில் ஈ.பி.டி.பி சார்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, ராஜ்குமார், ஜனநாயக மக்கள் முன்னணி சார்பாக நல்லையா குருபரன், த.தே.கூ.வி.மு. சார்பாக எம்.கே.சிவாஜிலிங்கம், புளோட் அமைப்பு சார்பாக சதானந்தன், நாபா. ஈ.பி.ஆர்.எல்.எப் சார்பாக ஸ்ரீதரன், ஸ்ரீ-ரெலோ அமைப்பு சார்பாக உதயராசா, சுரேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் வாசிக்க >>>


மன்னார் படுகொலைச் சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல்

Thursday, September 2nd, 2010 at 18:12 (SLT)

ஆண் ஒருவரைப் படுகொலை செய்து , சடலத்தை எரித்திருந்தனர் என்கிற சந்தேகத்தின் பேரில் மூன்று சந்தேகநபர்களை மன்னார் பொலிஸ் நிலையப் பொலிஸார் கைது செய்துள்ளார்கள்.

மன்னார் நீதவான் நீதிமன்ற நீதிவான் கே.ஜீவராணியின் உத்தரவின் பேரில் இம்மூவரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்கள். மேலும் வாசிக்க >>>


வடபகுதியில் உயிர் இரசாயனத்துறை அபாரவெற்றி; முழு நாட்டின் நலனுக்கும் பயன்படுத்தக் கோருகிறார் பேராசிரியர் நவரட்ணம்

Thursday, September 2nd, 2010 at 4:14 (SLT)

வட மாகாணத்தில் மூன்று தசாப்த காலமாக யுத்தமும் இடம்பெயர்வுகளும் இடம்பெற்ற போதிலும் உயிர் இரசாயனவியல் துறை (Biochemistry) தொடர்பான ஆராய்ச்சி தங்குதடையின்றி முன்னெடுக்கப்பட்டு வந்துள்ளதாக உயிர் இரசாயனவியல்துறை பேராசிரியரான பொன்னுச்சாமி நவரட்ணம் தெரிவித்தார்.

“சாவகச்சேரி, அல்லாரையில் பனங்கள்ளை பியராக மாற்றும் முயற்சியில் வெற்றி கண்டோம். கண்டாவளையில் பதநீரை போத்தலில் அடைக்கும் முயற்சியில் வெற்றி கிட்டியது. மேலும் வாசிக்க >>>


மீளக்குடியமர்த்தும் பணிகள் நிறைவடையும் தறுவாய்

Thursday, September 2nd, 2010 at 4:00 (SLT)

வன்னியில் இடம் பெயர்ந்த மக்களை மீளக்குடியமர்த்தும் பணிகள் நிறைவடையும் தறுவாயை எட்டி வரும் நிலையில், மீளக் குடியமரும் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த சகல உதவிகளும் பெற்றுக் கொடுக்கப்படுமென்று இந்தியா உறுதியளித்துள்ளது.

இதேவேளை, முகாம்களில் தங்கியுள்ள மக்களின் மீள்குடியேற்றப் பணிகள் நிறைவடைந்து வருவதால், உறவினர்கள், நண்பர்களுடன் தங்கியிருக்கும் இடம் பெயர்ந்தவர்கள் உடனடியாக வந்து மீள்குடியமர்வதற்கான பதிவை மேற்கொள்ள வேண்டுமென்று கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்தார். மேலும் வாசிக்க >>>


சஜித் பிரேமதாச ஆதரவானவர்கள் அரசமைப்பு திருத்தத்திற்கு ஆதரவு

Wednesday, September 1st, 2010 at 22:31 (SLT)

ஜனாதிபதியின் 18வது அரசியல் திருத்தம் தொடர்பாக தீர்மானமொன்றை எடுப்பதற்கு இன்று (01) முற்பகல் கூடிய ஐக்கிய தேசியக் கட்சியின் அரசியல் உயர் மட்டக் குழுக் கூட்டத்தில் நாடாளுமன்ற சஜித் பிரேமதாஸ கலந்துகொள்ளவில்லை தெரியவருகிறது.

எனினும், சஜித் பிரேமதாஸவிற்கு ஆதரவான லக்ஸ்மன் செனவிரத்ன, ரஞ்சித் மத்துமபண்டார, எர்ல் குணசேகர, தலதா அத்துகோரள ஆகிய நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான வஜிர அபேவர்தன ஆகியோர் ஜனாதிபதியின் அரசியலமைப்பிற்கு ஆதரவு வழங்கவேண்டுமென இன்று நடைபெற்ற அரசியல்சபைக் கூட்டத்தில் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும் வாசிக்க >>>


விடுதலைப் புலிகள் சந்தேகநபர்களுக்கு எதிராக ஜேர்மனில் சட்ட நடவடிக்கை

Wednesday, September 1st, 2010 at 17:53 (SLT)

ஜேர்மனியில் கைதுசெய்யப்பட்ட புலம்பெயர் தமிழர்கள் மூவருக்கு எதிராக அந்நாட்டின் சட்டத்தரணிகள் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளனர். இவர்கள் மூவரும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்காக நிதி சேகரித்ததோடு ஆயுதங்களையும் கொள்வனவு செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதத்தில் கைதான வி.எஸ். விஜிகணேந்திரா (35), எம்.சசிதரன் (33), ரி.கோணேஸ்வரன் (39) ஆகிய மூவருமே விடுதலைப் புலிகள் சந்தேகநபர்கள் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்கள் ஆவர். மேலும் வாசிக்க >>>


நிருபமா ராவ் இன்று முல்லைத்தீவு சென்று நிலைமைகளை ஆராய்ந்தார்

Wednesday, September 1st, 2010 at 17:39 (SLT)

இந்திய வெளியுறவுச் செயலர் நிருபமா ராவ் இன்று முல்லைத்தீவு பகுதியைப் பார்வையிட்டார். காலை 8.30 அளவில் முல்லைத்தீவு சென்று அங்குள்ள நிலைமைகள் குறித்து நிருபமா ராவ் ஆராய்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மீள் குடியமர்த்தப்பட்டவர்களின் நிலைமை மற்றும் இந்திய நிவாரண உதவியை அவர் ஆய்வு செய்தார். பின்னர் திருகோணமலைக்குச் சென்று முதல்வர் சிவநேசத்துரை சந்திரகாந்தனை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். மேலும் வாசிக்க >>>


முதலமைச்சர் சந்திரகாந்தன் - நிரூபமா இன்று சந்திப்பு

Wednesday, September 1st, 2010 at 13:12 (SLT)

இந்திய வெளியுறவுச்செயலாளர் நிரூபமா ராவ் இன்று காலை கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனை அவரது அலுவலகத்தில் வைத்து சந்தித்தார். இதன் போது கிழக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பாக கலந்துரையாடப்பட்டது. மேலும் வாசிக்க >>>


கட்டுநாயக்க விமான நிலையத்தில் யூரோக்கள் கடத்த முயன்றவர் கைது

Wednesday, September 1st, 2010 at 13:06 (SLT)

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 39 லட்சம் ரூபா பெறுமதியான யூரோக்கள் கடத்த முயன்ற ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என அங்குள்ள எமது செய்தியாளர் தெரிவித்தார்.மேற்படி யூரோக்களைச் சட்டவிரோதமாக சிங்கப்பூருக்குக் கடத்த முயன்ற போதே இவர் கட்டுநாயக்க விமா நிலைய பாதுகாப்பு பிரிவினரால் கைது செய்யபட்டுள்ளார் எனவும் அவர் தெரிவித்தார்.


புலி சந்தேகநபர்களை பிரித்து வைத்துள்ளதாக தகவல்

Wednesday, September 1st, 2010 at 13:02 (SLT)

சன் சீ கப்பல் மூலம் கனடாவை சென்றடைந்த இலங்கையர்களில் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் பிரித்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கனடாவை சென்றடைந்த 492 இலங்கை அகதிகளில் 36 பேர் தமிழீழ விடுதலைப் புலி சந்தேகநபர்கள் தனியாக தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக கனேடிய தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் வாசிக்க >>>