அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தனது பிரதிநிதிகள் இன்று (ஏப்ரல் 20, 2026, திங்கட்கிழமை) மாலை பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் நகருக்குப் பேச்சுவார்த்தைக்காகச் செல்வார்கள் என்று அறிவித்திருந்தார். ஆனால், ஈரானின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமான ஐ.ஆர்.என்.ஏ (IRNA), வாஷிங்டனின் “நிர்ணயிக்க முடியாத மற்றும் மிகையான கோரிக்கைகள்” (Excessive demands) காரணமாக இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தையில் ஈரான் பங்கேற்காது என்று அறிவித்துள்ளது. அமெரிக்காவின் நிலையில்லாத கொள்கைகள் மற்றும் தொடர்ந்து நீடிக்கப்படும் கடல்வழி முற்றுகை ஆகியவை இந்தப் பேச்சுவார்த்தைக்குப் பெரும் தடையாக இருப்பதாக ஈரான் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
மேலும் வாசிக்க >>>















