லெபனானில் 58,000 இடம்பெயர்ந்தனர்: 50க்கும் மேற்பட்டோர் பலி

Wednesday, March 4th, 2026 at 7:44 (SLT)

லெபனான் மீதான இஸ்ரேலிய தாக்குதல்கள் காரணமாக கடந்த இரண்டு நாட்களில் 58,000 க்கும் மேற்பட்டோர் இடம்பெயர்ந்துள்ளதாக லெபனான் அரசாங்கத்தின் பேரிடர் மேலாண்மை பிரிவு தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.இதற்கிடையில், லெபனான் முழுவதும் தாக்குதல்களில் 50 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க >>>

பாகிஸ்தானில் உள்ள அமெரிக்க தூதரகம் தற்காலிகமாக சேவைகளை நிறுத்தி வைத்துள்ளது

Wednesday, March 4th, 2026 at 7:40 (SLT)

பாதுகாப்பு காரணங்களுக்காக பெஷாவரில் உள்ள அமெரிக்க துணைத் தூதரகத்தின் செயல்பாடுகள் மார்ச் 2 ஆம் தேதி முதல் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

மேலும் வாசிக்க >>>

அமெரிக்காவின் டெக்சாஸ் துப்பாக்கிச் சூட்டில் தமிழ் மாணவி பலி

Wednesday, March 4th, 2026 at 7:34 (SLT)

அமெரிக்காவின் டெக்சாஸ் ஆஸ்டினில், மார்ச் 2, 2026 அன்று பார் ஒன்றில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் சவிதா சண்முகசுந்தரம் (21) உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் வாசிக்க >>>

இராக்கில் பெண்ணுரிமை ஆர்வலர் யானார் முகமது சுட்டுக்கொலை

Tuesday, March 3rd, 2026 at 13:09 (SLT)

இராக்கில், பிரபல பெண்ணுரிமை ஆர்வலர் யானார் முகமது சுட்டுக்கொல்லப்பட்டார்.இராக் நாட்டைச் சேர்ந்தவர் பிரபல மனித மற்றும் பெண்கள் உரிமை ஆர்வலர் யானார் முகமது. இவர் கடந்த 2003 ஆம் ஆண்டு முதல் வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களின் மறுவாழ்விற்காக ஆர்கனைஸேஷன் ஆஃப் வுமன்ஸ் ஃபிரீடம் இன் இராக் எனும் அமைப்பை நடத்தி வந்தார்.

மேலும் வாசிக்க >>>

போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு

Tuesday, March 3rd, 2026 at 13:06 (SLT)

மத்திய கிழக்கில் நிலவும் போர்ப் பதற்றத்தால் அங்குள்ள நாடுகளில், மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளின் பொதுத் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகளின் தாக்குதல்களில், ஈரானின் தலைமை மதகுரு ஆயதுல்லா அலி கமேனி கடந்த சனிக்கிழமை (பிப். 28) அன்று கொல்லப்பட்டார்.

மேலும் வாசிக்க >>>

இலங்கையிலுள்ள வெளிநாட்டு தூதரகங்களுக்கு 24 மணித்தியால விசேட பாதுகாப்பு

Tuesday, March 3rd, 2026 at 13:01 (SLT)

இலங்கையிலுள்ள வெளிநாட்டுத் தூதரகங்கள், உயர்ஸ்தானிகரகங்கள் மற்றும் சுற்றுலாப்பயணிகள் தங்கியுள்ள இடங்களுக்கு 24 மணித்தியால விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி, காவல்துறை மாஅதிபரின் பணிப்புரைக்கு அமைய, அனைத்து காவல்நிலையங்களுக்கும் உரிய ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.

மேலும் வாசிக்க >>>

இக்கட்டான தருணத்தில் நாங்கள் ஈரான் மக்களுடன் நிற்கிறோம் மஹ்மூத் அஹ்மதிநெஜாத்தின் மறைவு அதிர்ச்சியளிக்கிறது : நாமல் ராஜபக்ச

Tuesday, March 3rd, 2026 at 8:12 (SLT)

ஈரானின் முன்னாள் ஜனாதிபதி மஹ்மூத் அஹ்மதிநெஜாத் வான்வழித் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டதாக வெளியான செய்திகள் குறித்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச அதிர்ச்சி வெளியிட்டுள்ளதுடன், நாங்கள் ஈரானுடன் நிற்கிறோம் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

பள்ளிப் பேருந்தின் உடைந்த தளம்: ஓட்டை வழியாக விழுந்த சிறுமி சக்கரத்தில் சிக்கி பரிதாப பலி

Tuesday, March 3rd, 2026 at 8:00 (SLT)

உத்தரப் பிரதேச மாநிலம் கஸ்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளிப் பேருந்தின் தளம் உடைந்ததால், ஓட்டை வழியாக கீழே விழுந்த 7 வயது சிறுமி பேருந்தின் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்த சோக சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்த விபத்து அனன்யா என்ற யுகேஜி (UKG) படித்து வந்த சிறுமிக்கு நிகழ்ந்துள்ளது. பள்ளி முடிந்து மற்ற மாணவர்களுடன் பேருந்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, பேருந்தின் பின்தளத்தில் இருந்த ஓட்டை வழியாகச் சிறுமி கீழே விழுந்ததாகக் கூறப்படுகிறது.

மேலும் வாசிக்க >>>

பிரிட்டனில் பள்ளி வளாகத்தில் கத்திக்குத்து: இருவர் படுகாயம்

Tuesday, March 3rd, 2026 at 7:56 (SLT)

பிரிட்டனின் லண்டன் பகுதியில் உள்ள பள்ளி வளாகத்திற்குள் கத்தியுடன் நுழைந்த நபர் இருவரை குத்திக் கொலை செய்ய முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தாக்குதலில் இருவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் நடந்தவுடன், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதியில் உள்ள பள்ளிகள் உடனடியாக மூடப்பட்டு (Lockdown) மாணவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் வாசிக்க >>>

தீவிரமடையும் டெங்கு: 2 நாட்களுக்கு மேல் காய்ச்சல் இருந்தால் கவனம்

Monday, March 2nd, 2026 at 8:17 (SLT)

இந்த வருடத்தில் இதுவரை 13,416 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகத் தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. அத்துடன், டெங்கு நோயினால் இதுவரை 4 மரணங்களும் பதிவாகியுள்ளதாக அப்பிரிவின் சமூக மருத்துவ நிபுணர் வைத்தியர் பிரஷிலா சமரவீர குறிப்பிட்டுள்ளார்.

மேலும் வாசிக்க >>>

அடுத்த ஈரான் தலைவர் Ali Larijani- முழு ஈரானையும் கட்டுப்படுத்தும் ஒரே நபர் இவர் தான்

Monday, March 2nd, 2026 at 8:15 (SLT)

ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கூட்டு வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டதை ஈரானிய அரசு அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது. 1989 முதல் ஈரானை வழிநடத்தி வந்த 86 வயதான கமேனியின் மறைவு, அந்நாட்டில் ஒரு மிகப்பெரிய அரசியல் வெற்றிடத்தை உருவாக்கியுள்ளது. இந்த இக்கட்டான சூழலில், கமேனியின் நம்பிக்கைக்குரிய ஆலோசகரும், தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் செயலாளருமான அலி லாரிஜானி (Ali Larijani), ஈரானின் அதிகார மையமாகத் தற்போது உருவெடுத்துள்ளார். மார்ச் 1, 2026 அன்று நாட்டு மக்களுக்கு உரையாற்றிய 67 வயதான லாரிஜானி, புதிய உச்ச தலைவர் தேர்ந்தெடுக்கப்படும் வரை நாட்டை நிர்வகிக்க ஒரு ‘இடைக்காலக் குழு’ (Interim Council) அமைக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

யுகே வணிக வளாகத்தில் பாதுகாவலர் குத்திக் கொலை: 50 வயது நபர் கைது

Monday, March 2nd, 2026 at 8:10 (SLT)

இங்கிலாந்தின் மில்டன் கெய்ன்ஸ் (Milton Keynes) பகுதியில் உள்ள பிரபல வணிக வளாகத்திற்குள் (Shopping Centre) பாதுகாவலர் ஒருவர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 52 வயதான அந்த பாதுகாவலர், தனது பணியில் இருந்தபோது இந்த கொடூரத் தாக்குதலுக்கு ஆளானார். இந்த சம்பவம் தொடர்பாக 50 வயது நபர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் வாசிக்க >>>

ஈரானின் புதிய தலைவர்களுடன் பேச்சுவார்த்தைக்குத் தயார்: ட்ரம்ப்

Monday, March 2nd, 2026 at 8:06 (SLT)

அயதுல்லா அலி காமேனியின் படுகொலையைத் தொடர்ந்து ஈரானில் புதிதாக நியமிக்கப்பட்ட தலைவர்கள் தன்னுடன் பேச்சுவார்த்தை நடத்த விரும்புவதாகவும், அதற்குத் தான் சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

அமெரிக்காவின் கொடூரமான அதிகாரப் போட்டிக்கு எதிராகக் குரல் கொடுக்க ஐக்கிய நாடுகள் சபைக்கு முதுகெலும்பு இல்லை : குமார் குணரத்னம்

Monday, March 2nd, 2026 at 8:03 (SLT)

உலக நாடுகளை தற்போது அச்சுறுத்தல்களுக்கு உள்ளாக்கியுள்ள அமெரிக்காவின் கொடூரமான அதிகாரப் போட்டிக்கு எதிராகக் குரல் கொடுக்க ஐக்கிய நாடுகள் சபைக்கு முதுகெலும்பு இல்லை எனவும் அவர்கள் மௌனமாகப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் எனவும் முன்னிலை சோசலிசக் கட்சியின் பொதுச் செயலாளர் குமார் குணரத்னம் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

எரிபொருள் சேகரித்து வைத்திருந்தால் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்:ஜனக்க ராஜகருணா

Monday, March 2nd, 2026 at 7:59 (SLT)

ஒரு மாதத்துக்கும் அதிகளவில் எரிபாெருட்கள் கைவசம் இருக்கின்றன. அதனால் மக்கள் தேவையற்ற வகையில் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு செல்ல வேண்டாம். அதேநேரம் யாராவது எரிபொருள் சேகரித்து வைத்திருந்தால் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஜனக்க ராஜகருணா தெரிவித்தார்.

மேலும் வாசிக்க >>>