ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கூட்டு வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டதை ஈரானிய அரசு அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது. 1989 முதல் ஈரானை வழிநடத்தி வந்த 86 வயதான கமேனியின் மறைவு, அந்நாட்டில் ஒரு மிகப்பெரிய அரசியல் வெற்றிடத்தை உருவாக்கியுள்ளது. இந்த இக்கட்டான சூழலில், கமேனியின் நம்பிக்கைக்குரிய ஆலோசகரும், தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் செயலாளருமான அலி லாரிஜானி (Ali Larijani), ஈரானின் அதிகார மையமாகத் தற்போது உருவெடுத்துள்ளார். மார்ச் 1, 2026 அன்று நாட்டு மக்களுக்கு உரையாற்றிய 67 வயதான லாரிஜானி, புதிய உச்ச தலைவர் தேர்ந்தெடுக்கப்படும் வரை நாட்டை நிர்வகிக்க ஒரு ‘இடைக்காலக் குழு’ (Interim Council) அமைக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார்.
மேலும் வாசிக்க >>>