யாழில். பற்றைக்காடொன்றில் இருந்து 23 மில்லியன் ரூபாய் பெறுமதியான கஞ்சா மீட்பு

August 5th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

யாழ்ப்பாணத்தில் பற்றைக்காடொன்றில் இருந்து சுமார் 23 மில்லியன் ரூபாய் பெறுமதியான கேரளா கஞ்சாவை கடற்படையினர் மீட்டுள்ளனர். வடமராட்சி கிழக்கு , கட்டைக்காடு பகுதியில் உள்ள பற்றைக்காடொன்றில் கஞ்சா பொதிகள் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக கடற்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் அப்பகுதியில் கடற்படையினர் நேற்றைய தினம் திங்கட்கிழமை தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டனர்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

வவுனியாவில் 66 இலட்சம் ரூபா பெறுமதியான நகைகளுடன் இளைஞர் கைது

August 5th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

வவுனியாவில் இடம்பெற்ற திருட்டுச் சம்பவம் தொடர்பாக 33 வயது இளைஞர் ஒருவர் நேற்று (04) கைது செய்யப்பட்டதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர். வவுனியா, சோயா வீதியில் உள்ள வீடு ஒன்றில் ஒரு வாரத்திற்கு முன்னர் திருட்டுச் சம்பவம் நடைபெற்றது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

பொலிஸ் உயர் பதவிகளில் அதிரடி மாற்றம்

August 5th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியுடன், சில சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் உதயகுமார வுட்லர் தெரிவித்தார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

தேசபந்துவை பதவியிலிருந்து நீக்குவதற்கான யோசனை : நாடாளுமன்றில் இன்று விவாதம்

August 5th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

தேசபந்து தென்னகோனை, பொலிஸ்மா அதிபர் பதவியிலிருந்து நீக்குவதற்கான யோசனையை நிறைவேற்றுவது தொடர்பில் நாடாளுமன்றில் இன்று விவாதிக்கப்படவுள்ளது. 2002 ஆண்டின் 5ஆம் இலக்க அலுவலர்களை அகற்றுதல் சட்டத்திற்கு அமைய இந்த விவாதம் நடத்தப்படவுள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

இணைய சூதாட்டத்தில் ஈடுபட்ட 11 இந்தியர்கள் இலங்கையில் கைது

August 5th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

கொழும்பு – தலங்கம, அக்குரேகொட பகுதியில் இணைய சூதாட்டத்தில் ஈடுபட்ட 11 இந்தியர்கள் நேற்று (04) இரவு கைது செய்யப்பட்டதாக தலங்கம பொலிஸார் தெரிவித்தனர். பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து, நேற்று இரவு மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையில், இணைய சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த 8 ஆண்கள் மற்றும் 3 பெண்கள் உட்பட 11 இந்தியர்கள் கைது செய்யப்பட்டனர்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

யாழ்ப்பாணம் அருகே மீன்பிடித்த இந்திய மீனவர்கள் நால்வர் கைது

August 5th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

யாழ்ப்பாணம் நெடுந்தீவுக்கு அருகிலுள்ள இலங்கை கடற்பகுதியில், சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்ட நான்கு இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். முதலில் சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீன்பிடி படகொன்றை இலங்கை கடற்படையினர் கைப்பற்றினர்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

வவுனியாவில் 728 துப்பாக்கி ரவைகளளுடன் இருவர் கைது

August 4th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

கொழும்பில் துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்ட நபர் வழங்கிய தகவலின்படி வவுனியா, நேரியகுளம் பகுதியில் வீடு ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 728 துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டுள்ளதுடன் மேலும் இருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

முன்னாள் ஜனாதிபதிகளுக்கு பாதுகாப்பு தேவை:எஸ்.எம்.மரிக்கார்

August 4th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

முன்னாள் ஜனாதிபதிகளின் தேவையற்ற வரப்பிரசாதங்களை இரத்துச்செய்வதில் எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால் அவர்களுக்கு தேவையான பாதுகாப்பு தொடர்ந்து வழங்கப்பட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும் என ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்தார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

இலங்கையின் சட்டத்தை இந்திய தேவைக்கேற்ப திருத்த முடியுமா? : விமல் வீரவன்ச கேள்வி

August 4th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

இலங்கைக்கு டிஜிட்டல் அடையாள அட்டையை விநியோகிக்கும் கருத்திட்டத்துக்கு தரவு பாதுகாப்பு சட்டம் தடையாக இருப்பதாக இந்திய நிறுவனம் குறிப்பிட்டதை தொடர்ந்து அந்த சட்டத்தை திருத்தம் செய்யும் யோசனையை இன்றும் ஒருமாத காலத்துக்கு கொண்டு வருவதாக டிஜிட்டல் பொருளாதார அமைச்சு இந்திய நிறுவனத்துக்கு வாக்குறுதியளித்துள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

10 வருடங்களுக்குப் பிறகு தேசிய மீன்பிடி படகுகள் கணக்கெடுப்பு ஆரம்பம்

August 4th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

10 வருடங்களுக்குப் பிறகு தேசிய மீன்பிடிப் படகு கணக்கெடுப்பு இன்று (4) ஆரம்பமாகவுள்ளது. இதன் முதல் கட்டம் இன்று பாணந்துறை மீன்பிடி துறைமுகத்தில் ஆரம்பமாகி எதிர்வரும் 20 ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியாக செயல்படுத்தப்படும் என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை

August 4th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

மாரவில, முதுகடுவ கடற்கரையில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட தகராறில் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் இருவர் காயமடைந்த நிலையில், ஒருவர் மாரவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

சுற்றுலாப் பயணிகளின் வருகையால் 3.7 பில்லியன் டொலர் வருமானம்

August 4th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

கடந்த 6 மாதங்களில் சுற்றுலாப் பயணிகளின் வருகை மூலம் 3.7 பில்லியன் டொலர் வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

மலசலகூட குழியில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட சிறுவன்

August 4th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

பொகவந்தலாவ கிவ் கீழ்பிரிவு தோட்டத்தில் மலசலகூட குழியில் இருந்து எட்டு வயது சிருவன் ஒருவன் சடலமாக மீட்கப்பட்டதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் நேற்று (3) மாலை 05.30 மணியளவில் இடம் பெற்றதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

இலங்கைக்கு கடத்த முயன்ற ஐம்பொன் சிலையுடன் தமிழ்நாட்டில் இருவர் கைது

August 3rd, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

தமிழகம் தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ஐம்பொன் சிலையுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. தூத்துக்குடி கியூ பிரிவு குற்றப் புலனாய்வுத்துறை அதிகாரி விஜய் அனிதாவுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் திரேஸ்புரம், அண்ணா காலனியில் நேற்று (2) மாலை தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருந்தது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

புதிய கல்விச் சீர்திருத்தம் கூட்டாக நிறைவேற்றப்பட வேண்டிய பொறுப்பு : ஹரிணி அமரசூரிய

August 3rd, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

புதிய கல்வி சீர்திருத்தம் கல்வி அமைச்சின் அல்லது ஜனாதிபதி அனுரவின் அல்லது பிரதமர் ஹரிணியின் சீர்திருத்தம் அல்ல, மாறாக அனைவரின் புரிதல், யோசனைகள் மற்றும் பரிந்துரைகளுடன் நேர்மறையான மாற்றங்களைச் செய்வதன் மூலம் குழந்தைகளுக்கு கூட்டாக நிறைவேற்றப்பட வேண்டிய ஒரு பொறுப்பு என்று கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button