திருட்டு பொருட்களுடன் சிக்கிய சந்தேக நபர்கள்

August 1st, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

கொழும்பு வடக்கு குற்ற விசாரணை பணியகத்தின் அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில், கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவில் 03 கிராம் 20 மில்லி கிராம் ஹெரோயின் வைத்திருந்த சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டார். நேற்று (31) பிற்பகல் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் தொடர்பில் முன்னெடுத்த விசாரணையின் போது, சந்தேக நபரின் வீட்டில் அடையாளத்தை உறுதிப்படுத்த முடியாத பல கையடக்க தொலைபேசிகள் மற்றும் மடிக்கணினிகள் கண்டுபிடிக்கப்பட்டன.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

இலங்கைக்கு கிடைத்த வெற்றி வரியை 20 வீதமாக குறைத்த டிரம்ப்

August 1st, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

இலங்கையில் இருந்து ஏற்றுமதியாகும் பொருட்களுக்கு அமெரிக்கா விதித்திருந்த தீர்வை வரியை 30 வீதத்திலிருந்து 20 வீதமாக ஆகக் குறைத்துள்ளது. இந்த வரி விதிப்பு 2025 ஆகஸ்ட் 7 ஆம் திகதி முதல் அமுலாகிறது. வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிக்கையின் படி, இலங்கை உட்பட பல நாடுகளில் தீர்வை வரி வீதம் இவ்வாறு குறைக்கப்பட்டுள்ளன.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

தேசிய ஊழல் எதிர்ப்பு செயல் திட்டப் பிரதானிகளுடன் கலந்துரையாடல்

August 1st, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

தேசிய ஊழல் எதிர்ப்பு செயல் திட்டம் 2025-2029 செயல்படுத்தப்படுவதை மேற்பார்வையிட நியமிக்கப்பட்ட தேசிய செயற் குழு மற்றும் அது குறித்து பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ள அரச மற்றும் தனியார் துறை நிறுவனங்களின் பிரதானிகளுடனான கலந்துரையாடல் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று முன்தினம் (30) பிற்பகல் நடைபெற்றது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

மிலிந்த மொரகொடவுடன் ஜேர்மன் தூதுவர் பெலிக்ஸ் நோமன் சந்திப்பு

August 1st, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

பாத் பைன்டர் பவுண்டேஷன் ஸ்தாபகர் மிலிந்த மொரகொடவுக்கும், இலங்கைக்கான ஜேர்மன் தூதுவர் கலாநிதி பெலிக்ஸ் நோமனுக்கும் இடையிலான சந்திப்பு அண்மையில் நடைபெற்றது.

இச்சந்திப்பின்போது இந்திய பசுபிக், இந்து சமுத்திர பிராந்திய பாதுகாப்பு மற்றும் வங்காள விரிகுடா நாடுகளுக்கிடையிலான ஒத்துழைப்பு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் இருதரப்பினரும் கருத்துக்களை பரிமாறிக்கொண்டதுடன் பரஸ்பர அக்கறைக்குரிய ஏனைய விடயங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

அதிவேக நெடுஞ்சாலைகளில் பின் இருக்கை சீட் பெல்ட் கட்டாயம் : போக்குவரத்து அமைச்சகம்

August 1st, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

1ஆம் திகதி வெள்ளிக்கிழமை முதல், அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் அனைத்து இலகுரக வாகனங்களின் பின் இருக்கைகளில் பயணிப்பவர்கள் சீட் பெல்ட் அணிவது கட்டாயம் என்று போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் அறிவித்துள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

வர்த்தக இடைநிறுத்தத்தை நீட்டிக்க அமெரிக்கா மற்றும் சீனா இணக்கம்

July 31st, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

அமுலில் உள்ள 90 நாள் வர்த்தக இடைநிறுத்தத்தை நீட்டிக்க தேவையான பணிகளைத் தொடர்வதற்கு அமெரிக்காவும் சீனாவும ஒப்புக்கொண்டுள்ளன.ஸ்வீடனின் ஸ்டாக்ஹோமில் இரு தரப்பு உயர் அதிகாரிகளும் வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக 02 நாட்கள் கலந்துரையாடினர்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

கொஸ்கொடவில் துப்பாக்கிச் சூடு

July 31st, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

கொஸ்கொட, தூவமோதர பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் இன்று (31) அதிகாலை 5.15 மணியளவில் இடம்பெற்றதாகவும், மோட்டார் சைக்கிளில் வந்த இருவரினால் குறித்த துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் எப்.யு. வுட்லர் தெரிவித்துள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

நாடு திரும்பினார் ஜனாதிபதி

July 31st, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, மாலைத்தீவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை வெற்றிகரமாக நிறைவு செய்துக்கொண்டு நேற்று (30) இரவு நாடு திரும்பினார். மாலைத்தீவு ஜனாதிபதி கலாநிதி மொஹமட் முய்சு அவர்களின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கடந்த 28ஆம் திகதி நாட்டில் இருந்து புறப்பட்டார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

யாழ். கந்தரோடையில் பௌத்த மத்திய நிலையமா?

July 31st, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

யாழ். கந்தரோடையில் பௌத்த மத்திய நிலையம் அமைப்பதற்கு முன்னெடுக்கப்படும் நடவடிக்கை தொடர்பில் வலிகாமம் தெற்கு பிரதேச சபையில் நேற்று கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

பலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்கும் பிரித்தானியாவின் முடிவு : உமா குமரன் வரவேற்பு

July 31st, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

செப்டெம்பரில் ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்திற்கு முன்பு பலஸ்தீனத்தை அங்கீகரிப்பதற்கான பிரதமரின் முடிவை வரவேற்பதாக பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் உமா குமரன் தெரிவித்துள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

யாழில். இளைஞன் மீது வன்முறை கும்பல் வாள் வெட்டு தாக்குதல்

July 30th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

யாழ்ப்பாணத்தில் வீதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த இளைஞன் மீது வன்முறை கும்பல் வாள் வெட்டு தாக்குதல் நடத்தியதில் , இளைஞன் படுகாயமடைந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மானிப்பாய் கட்டுடை பகுதியில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை மாலை இளைஞன் மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த வேளை, முச்சக்கர வண்டியில் பின் தொடர்ந்து சென்ற மூவர் அடங்கிய வன்முறை கும்பல் , இளைஞனை வழிமறித்து வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டு விட்டு தப்பி சென்றுள்ளனர்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

காசா போரை இஸ்ரேல் நிறுத்தாவிட்டால் பாலஸ்தீனத்தை ஒரு நாடாக அங்கீகரிக்கும் : பிரித்தானியா

July 30th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

காசாவில் போர் நிறுத்தத்திற்கு இஸ்ரேல் ஒப்புக்கொண்டு பிற நிபந்தனைகளை நிறைவேற்றாவிட்டால், இங்கிலாந்து இந்த நடவடிக்கையை மேற்கொள்ளும் என்று பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் கூறினார். இந்த அறிவிப்பை இஸ்ரேல் கடுமையாக விமர்சித்துள்ளது, இது ஹமாஸுக்கு பரிசு அளிப்பதாகக் கூறியுள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

புதிய அரசியலமைப்பை கொண்டு வருவதற்கு அநுர அரசாங்கம் முயற்சி எடுத்துள்ளதாக தோன்றவில்லை:சிவஞானம் ஸ்ரீதரன்

July 30th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

இந்த அரசாங்கமானது புதிய அரசியலமைப்பை கொண்டு வருவதற்கு முயற்சிகளை முன்னெடுத்து இருப்பதாக தோன்றவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

வடக்கு ஜப்பானை தாக்கியது முதல் சுனாமி பேரலைகள்

July 30th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

ரஷ்யாவின் தூர கிழக்கு பிராந்தியமான கம்சட்காவில் 8.8 ரிச்டர் அளவில் ஏற்பட்ட மிகப்பெரிய பூகம்பத்தை தொடர்ந்து ஜப்பானை சுனாமி பேரலை தாக்கியுள்ளது. இந்த சுனாமி அலை வடக்கு ஜப்பானில் சுமார் 30 சென்டிமீட்டர் (ஒரு அடி) உயரத்திற்கு மேலெழுந்துள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

ரஷ்யாவை தாக்கிய 13 அடி உயர சுனாமி அலைகள்

July 30th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

ரஷ்யாவின் கிழக்கு கடற்கரையில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்திற்குப் பிறகு கம்சட்கா தீபகற்பத்தில் 13 அடி உயர சுனாமி அலைகள் தாக்கியதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button