போதையெனும் சாக்கடையில் விழாதீர்கள் சங்கானையில் போராட்டம்

June 27th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு சங்கானை பேருந்து நிலையத்திற்கு முன்பாக கவனவீர்ப்பு போராட்டம் நேற்றைய தினம் வியாழக்கிழமை முன்னெடுக்கப்பட்டது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

கொலைக் குற்றச்சாட்டுகள் : பிள்ளையானுக்கு எதிராக விசாரணைகள் ஆரம்பம்

June 27th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

முன்னாள் அமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையான் ஐந்து கொலை வழக்குகளில் தொடர்புடையவரா என்பது குறித்து விசாரித்து வருவதாக குற்றப் புலனாய்வுத் துறை தெரிவித்துள்ளது.இது குறித்து தென்னிலங்கை ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

பொலிஸார் மீது தாக்குதல் நடத்திய 5 பேர் விளக்கமறியலில்

June 27th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

மட்டக்களப்பு, சின்ன ஊறணி (வன்னி) பகுதியில் திருடனை கைது செய்யச் சென்ற பொலிஸார் மீது கத்தியால் தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட இரு பெண்கள் உட்பட ஐந்து பேரையும் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் எதிர்வரும் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

துறைமுக நகர செயற்கை கடலில் பல்கலை மாணவர் மாயம்

June 27th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

கொழும்பு துறைமுக நகரில் உள்ள செயற்கை கடற்கரையைச் சேர்ந்த கடலில் நீந்திக் கொண்டிருந்த பல்கலைக்கழக மாணவர்களில் ஒருவர் காணாமல் போயுள்ளார். இது தொடர்பாக கொழும்பு துறைமுக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டதையடுத்து, விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

தென்னாபிரிக்க குடியரசின் முன்னாள் ஜனாதிபதிக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் சந்திப்பு

June 27th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் தென்னாபிரிக்க குடியரசின் முன்னாள் ஜனாதிபதி தபோ ம்பெக்கி (Thabo Mbeki) இடையிலான சந்திப்பு நேற்று (26) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

காருக்குள் இருந்து எரிந்த நிலையில் சடலம் ஒன்று கண்டுபிடிப்பு

June 27th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

மஹவ, தியபெடே பகுதியில் உள்ள காட்டில் எரிந்த நிலையில் காருக்குள் நபர் ஒருவரின் உடல் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் இந்த உடல் கண்டு பிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

நயினை நாகபூசணி அம்மன் கொடியேற்றம்

June 27th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

வரலாற்று பிரசித்தி பெற்ற நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்த மஹோற்சவத்திருவிழாவின் கொடியேற்றத் திருவிழா, வியாழக்கிழமை (26) வெகு சிறப்பாக நடைபெற்றது.நாகபூசணி அம்மனுக்கு ஈழத்தில் காணப்படும் முக்கிய ஆலயம் இதுவாகும். வியாழக்கிழமை (26) அம்பாளின் கொடியேற்றம் இடம்பெறுவதற்கு சில தினங்களுக்கு முன்னர் நாக பாம்பு ஆலயத்தின் முன்புறத்தே வந்து படமெடுத்தபடி பக்தர்களுக்கு காட்சியளித்தது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

ரணில் ஒரு பேயன். அவன் உலகம் சுற்ற செலவு செய்த கணக்கு வழக்கு எத்தனை கோடி:இளங்குமரன்

June 26th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

ரணில் ஒரு பேயன். அவன் உலகம் சுற்ற செலவு செய்த கணக்கு வழக்கு எத்தனை கோடியென தெரியுமாவென பொதுவெளியில் முன்னாள் ஜனாதிபதியான ரணில் விக்கிரமசிங்கவை திட்டித்தீர்த்துள்ளார் தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

செம்மணியில் ஏற்றப்பட்ட அணையா தீபம் தொண்டமனாற்று கடலில் விடப்பட்டது

June 26th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

செம்மணியில் கடந்த மூன்று நாட்களாக அணையா தீபமாக எரிந்து கொண்டிருந்த தீபம் நேற்றைய தினம் புதன்கிழமை தொண்டமனாற்று கடலில் விடப்பட்டது. செம்மணி புதைகுழிக்கு நீதி கோரி கடந்த திங்கட்கிழமை காலை 10 மணிக்கு , யாழ் , வளைவுக்கு அருகில் அணையா தீபம் ஏற்றப்பட்டு , தொடர்ச்சியாக மூன்று நாட்களாக தீபம் அணையாது போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

ஜனாதிபதியை சந்தித்த ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர்

June 26th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

இலங்கையில் தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை மேம்படுத்துவதற்கும் மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க் (Volker Türk) தனது முழு ஆதரவையும் தெரிவித்தார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

கிணற்றில் விழுந்து 10 வயது சிறுவன் பலி

June 26th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

யாழ்ப்பாணம், அச்சுவேலி, தோப்பு பகுதியில் கிணற்றில் விழுந்து 10 வயது சிறுவன் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்தச் சம்பவம் இன்று (26) மாலை 4:30 மணியளவில் நடைபெற்றுள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

அர்ச்சுனாவின் Mp பதவி தொடர்பில், இன்று நீதிமன்றில் கூறப்பட்ட விடயம்

June 26th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

யாழ்.மாவட்ட சுயேச்சைக்குழு பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராமநாதன் பாராளுமன்ற உறுப்பினராக தொடர்ந்து பதவி வகிப்பதற்கான தகுதியை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட குவோ வாரண்டோ ரிட் மனு மீதான விசாரணையை மேல்முறையீட்டு நீதிமன்றம் வியாழக்கிழமை (26) தொடங்கியது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

சியோனிச ஆட்சி இஸ்லாமிய குடியரசின் தாக்குதல்களால் நசுக்கப்பட்டு செயலிழந்துள்ளது : ஆயத்துல்லா அலி கொமய்னி

June 26th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

தனது தேசத்திற்கு இன்று (26) ஈரானின் உயர் தலைவர் ஆயத்துல்லா அலி கொமய்னி ஆற்றிய உரையின் ஒரு பகுதி

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

40,000 மெட்ரிக் தொன் அரிசியை இறக்குமதி செய்ய பரிந்துரை

June 26th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

உள்ளூர் சந்தையில் போதுமான அளவு கீரி சம்பா அரிசி கிடையாது என்று இலங்கை நுகர்வோர் விவகார அதிகாரசபையினால் முன்வைக்கப்பட்ட அறிவிப்பின் அடிப்படையில் , கீரி சம்பா அரிசிக்கு மாற்றீடாக 40,000 மெட்ரிக் டொன் அரிசியை இறக்குமதி செய்ய உணவு கொள்கை மற்றும் பாதுகாப்பு குழு பரிந்துரைத்துள்ளது. இதில் 5,000 மெட்ரிக் டொன் அரச நிறுவனங்கள் மூலமாகவும், ஏனைய அரிசியை தனியார் துறை மூலமாகவும் இறக்குமதி செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளருக்கு விளக்கமறியல்

June 26th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் ஜனக ஸ்ரீ சந்திரகுப்தா, எதிர்வரும் 8 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.வாக்குமூலம் அளிக்க இன்று (26) காலை இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் ஆஜரான பின்னர் அவர் கைது செய்யப்பட்ட பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

AddThis Social Bookmark Button