உருத்திரகுமாரனை கைது செய்ய அமெரிக்கா கோரும் `சாட்சியங்கள்` மற்றும் புலனாய்வுத் தகவல்களை இலங்கை அரசு பரிமாறத் தயார்

December 10th, 2009 admin Posted in TELOnews No Comments »

புலம்பெயர் புலிகளின் தலைவர் விஸ்வநாதன் உருத்திரகுமாரனை கைது செய்ய அமெரிக்கா கோரும் `சாட்சியங்கள்` மற்றும் புலனாய்வு தகவல்களை இலங்கை அரசு பரிமாறத் தயாராக இருப்பதாக அமைச்சரும், பாதுகாப்புப் பேச்சாளருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் வசிக்கும் விஸ்வநாதன் உருத்திரகுமாரனுக்கு எதிராக எவ்வித சட்ட நடவடிக்கையும் எடுப்பதற்கு, அவர் அமெரிக்க மண்ணில் எவ்வித குற்றச்சாட்டுக்களுக்கும் உள்ளாகவில்லையென இலங்கைக்கு விஜயம் செய்திருக்கும் அமெரிக்காவின் தென்னாசிய மற்றும் மத்திய ஆசியாவுக்கான உதவி வெளிவிவகார அமைச்சர் றொபேட் ஓ பிளேக் தெரிவித்திருந்தார். Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

இலங்கை – இந்திய இணைப்புப் பாலமாகவும், தமிழ் – சிங்கள உறவுப்பாலமாகவும் விளங்கும் “ஏ-14” நெடுஞ்சாலை: மக்கள் காதர்

December 10th, 2009 admin Posted in TELOnews No Comments »

ஆங்கிலேயர் எம்மை ஆண்டபோது முதலில் நாட்டின் பாதைகளைத்தான் சீரமைத்தனர். அந்த திட்டத்தில் உருவானதுதான் தலைமன்னார் – மதவாச்சி `ஏ-14` நெடுஞ்சாலையாகும். சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்னர் இப்பாதை அவர்களால் உருவாக்கப்பட்டது.

ஆங்கிலேயர்கள் மன்னார் பட்டினத்தில் தளம் அமைத்து மாவட்டத்தை ஆண்டு வந்த போது முதலில் தரைவழிப் பாதையையும், பின்னர் தொடரூந்துப் பாதைகளையும் உருவாக்கினர். அதன்படி முதன் முதலில் உருவாக்கப்பட்டதுதான் இந்த ஏ-14 தரைவழிப் பாதையாகும். அதற்கு முன்னர் சிலாவத்துறை – புத்தளம் கரையோரப் பாதையே மன்னார் – புத்தளம் மக்களின் போக்குவரத்துப் பாதையாக இருந்து வந்தது. Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

புலிகளின் மூன்று கப்பல்கள் கொழும்புக்கு கொண்டுவரப்பட்டுள்ளன

December 9th, 2009 admin Posted in TELOnews No Comments »

கைது செய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டு வரும் கே.பியிற்கு சொந்தமான கப்பல்களில் 3 கப்பல்கள் இலங்கைக்கு கொண்டுவரப்பட உள்ளதாக பாதுகாப்பு விவகாரங்களுக்கான ஊடக மத்திய நிலையம் கடந்த வாரம் கருத்துத் தெரிவித்திருந்தது. கே.பியின் கட்டுப்பாட்டில் சுமார் 14 கப்பல்கள் இருப்பதாகவும் அவற்றில் 5 கப்பல்கள் அவருடையது என உறுதிபடுத்தப்பட்ட நிலையில் அதில் 3 கப்பல்களை இலங்கை கடற்படையினர் கொழும்பு கொண்டு வந்துள்ளதாக `தி ஐலண்ட்` செய்தி வெளியிட்டுள்ளது. Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே

December 5th, 2009 admin Posted in TELOnews No Comments »

அண்மையில் பல்வேறு ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுப் பிரயாணம் செய்து ஜே.வி.பி. தலைவர் சோமவன்ச அமரசிங்க இலங்கை திரும்பிய நிலையில், யு.என்.பி. தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஐரோப்பிய நாடுகளுக்குக்கான தனது சுற்றுப் பயணத்தை இன்று ஆரம்பித்திருப்பது ஜனவரி-26 ஜனாதிபதி தேர்தல் களத்தை மேலும் சூடாக்கியுள்ளது. Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

மனோ கணேசனின் கோரிக்கையை நல்லதம்பி ஸ்ரீகாந்தா நிராகரிப்பு

December 5th, 2009 admin Posted in TELOnews No Comments »

தென்னிலங்கையில் வாழும் தமிழ் மக்கள் எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் சரத் பொன்சேகாவுக்கு வாக்களிக்க வேண்டும் என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் அண்மையில் விடுத்த வேண்டுகோளுக்கு எதிராக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் நல்லதம்பி ஸ்ரீகாந்தா, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் முழு இலங்கைத் தீவிலும் வாழும் தமிழ் மக்களின் நலன்களைக் கருத்தில் கொண்டே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முடிவு அமைவது திண்ணமென தெரிவித்துள்ளார். Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

மடுத்திருத்தலத்தில் அமல உற்பவ திருவிழா

December 3rd, 2009 admin Posted in TELOnews No Comments »

மடுத்திருத்தலத்தில் இடம்பெற இருக்கும் அன்னையின் அமல உற்பவ திருவிழாவிற்கு பக்தர்கள் சென்று திரும்புவதற்கான விசேட போக்குவரத்திற்கான முன் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக திருத்தலத்தின் பரிபாலகர் தெரிவிக்கின்றார்.

கத்தோலிக்க திருச்சபையானது வருடம் தோறும் மார்கழி மாதம் 8ம் திகதியை அன்னையின் அமல உற்பவ திருவிழாவாக கொண்டாடிவருகின்றது. அன்னையின் திருவிழாவிற்கான விசேட அனுமதியினை பாதுகாப்பு அமைச்சு வழங்கி இருப்பதாக மடுத்திருத்தலத்திற்கு பொறுப்பான அருட்தந்தை டெஸ்மன் குலாஸ் அடிகளார் தெரிவித்திருக்கின்றார். Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

சரத் பொன்சேகா திடீர் இந்தியா விஜயம்

December 3rd, 2009 admin Posted in TELOnews No Comments »

ஐக்கிய தேசிய கூட்டமைப்பினதும் மக்கள் விடுதலை முன்னணியினதும் பொது வேட்பாளராக இலங்கை ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கியிருக்கும் முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா நேற்று (டிசெம்பர் , 2)  இரவு இந்தியா சென்றுள்ளார்.  அவரது இந்த திடீர் இந்திய பயணம் தனிப்பட்ட பிரயாணம் எனச்சொல்லப்பட்ட போதும் கொழும்பு ஊடகங்கள் பல்வேறு காரணங்களை ஊகித்தெழுதி உள்ளன. ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்யும் நாள் நெருங்கி வரும் நிலையில் புதிய திருப்பங்கள் நிகழ அதிக வாய்ப்புகள் இருப்பதாக மூத்த ஊடகவியாளர் ஒருவர் ரெலோ நீயூஸ்க்கு கருத்து தெரிவித்தார்.  ஜெனரல் சரத் பொன்சேகா தனது தனிப்பட்ட பயணத்தை முடித்துக் கொண்டு நாளை கொழும்பு திருப்புவாரென எதிர்பார்க்கப்படுகிறது.

AddThis Social Bookmark Button

மாந்தை மேற்குப் பகுதிகளுக்கு பேரூந்து சேவைகள் அதிகரிப்பு

December 3rd, 2009 admin Posted in TELOnews No Comments »

மாந்தை மேற்கு உதவி அரசாங்க அதிபர் பிரிவுகளில் மீள் குடியேற்ற நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படடிருக்கும் நிலையில் அப்பகுதிகளுக்கான பேரூந்து சேவைகள் தற்போது அதிகரிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. மன்னார் மாந்தை மேற்கில் ஆரம்பித்து வைக்கப்பட்டிருக்கும் மீள் குடியேற்ற நடவடிக்கையை அடுத்து மன்னாரில் இருந்து அடம்பன் பிரதேசத்திற்கான போக்கு வரத்து சேவையும் ஆரம்பித்து வைக்கப்பட்டிருந்தது. Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

மன்னார் விடத்தல்தீவு பகுதியில் நேற்று மீள் குடியேற்றம் ஆரம்பம்

December 3rd, 2009 admin Posted in TELOnews No Comments »

மன்னாரின் மாந்தை மேற்கு உதவி அரசாங்க அதிபர் பிரிவிற்குட்பட்ட விடத்தல்தீவு பகுதியில் மீள் குடியேற்ற நடவடிக்கைகள் நேற்று (02.12.2009) முதல் ஆரம்பிக்கப்படுகின்றது. கடந்த அக்டோபர் மாதம் முதல் வடமாகாணத்தின் மன்னார், வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி, மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் மீள் குடியேற்ற நடவடிக்கைகள் சம்பிரதாய பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டிருக்கின்றது. Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

17 தடுப்பு முகாம்களில் உள்ள 11,000 முன்னாள் புலி உறுப்பினர்கள் ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்க ஏற்பாடு

December 2nd, 2009 admin Posted in TELOnews No Comments »

கடந்த மே மாதம் 18ம் திகதி முடிவுக்கு வந்த யுத்தம் 11,000 புலி உறுப்பினர்களை தடுப்பு முகாம்களுக்குள் கொண்டுவந்தது. அவர்களில் 2,000க்கு அதிகமானவர்கள் பெண்கள் ஆகும். இவர்கள் அனைவரும் அடுத்த வருடம் ஜனவரி 26ல் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்க வழி செய்யவுள்ளதாக தேர்தல் திணைக்கள ஆணையகம் அறிவித்துள்ளது. Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

மீள் குடியேறிய மக்களுக்கு துவிச்சக்கர வண்டிகள்

November 30th, 2009 admin Posted in TELOnews No Comments »

மன்னார் மாந்தை மேற்கில் மீள் குடியேறிய மக்களின் உள்ளக போக்கு வரத்துகளுக்காக படைத்தரப்பினர் துவிச்சக்கர வண்டிகளை இன்று (30.11.2009) வழங்கியிருக்கின்றனர். மன்னார் மாவட்டத்தில் அண்மையில் மீள் குடியேற்றம் செய்யப்பட்டிருக்கும் மாந்தை மேற்கில் மக்களுக்குத தேவையான அடிப்படைத் தேவைகளை வழங்கும் பொருட்டு அரசாங்கம் பல வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது. Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

சம்பந்தனை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்த கூட்டமைப்பு ஆலோசனை

November 30th, 2009 admin Posted in TELOnews No Comments »

இலங்கையின் ஆறாவது ஜனாதிபதிக்கான தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வேட்பாளராக மகிந்த ராஜபக்ஷவும் எதிர் கட்சிகளின் பொது வேட்பாளராக சரத் பொன்சேகாவும் இடதுசாரி முன்னணியின் வேட்பாளராக விக்கிரமபாகு கருணாரட்னவும் தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சம்பந்தன் அவர்களை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்துவது தொடர்பில் தீவிரமாக ஆராயப்பட்டு வருவதாக கொழும்பில் உள்ள கூட்டமைப்பின் உள்வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக ஆங்கில ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

மன்னாரில் ”நெருடல்கள்” கவிதை நூல் வெளியீட்டு விழா

November 30th, 2009 admin Posted in TELOnews No Comments »

மன்னார் தமிழ் நேசன் அடிகளாரால் எழுதப்பட்ட “நெருடல்கள்” கவிதை நூல் தொகுதியினை மன்னார் மறைமாவட்ட ஆயர் அதி வணக்கத்திற்குரிய இராயப்பு ஜேசேப்பு ஆண்டகை நேற்று முன்தினம் (28.11.2009) வெளியிட்டு வைத்துள்ளார். மன்னார் தமிழ்ச் சங்கத்தின் ஏற்பாட்டில் மன்னார் நகர மண்டபத்தில் இன்று இடம்பெற்ற “நெருடல்கள்” கவிதை நூல் வெளியீட்டு விழாவின் முதற்பிரதியை மன்னார் ஆயர் வெளியீட்டு வைக்க அதனை கலாபூசணம் செபமாலை (குழந்தை) பெற்றுக்கொண்டார். Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

ஜனாதிபதி தேர்தலில் மகிந்த ராஜபக்சவுக்கு சிறீ-ரெலோ முழு ஆதரவு

November 28th, 2009 admin Posted in TELOnews No Comments »

இலங்கையின் 6வது ஜனாதிபதியை தேர்வு செய்யும் 5வது ஜனாதிபதி தேர்தலில் மகிந்த ராஜபக்‌ஷ அவர்களை தமது கட்சி முழுமையாக ஆதரிப்பதாக சிறீ-ரெலோ செயலாளர்  உதயராசா தெரிவித்துள்ளார். கடந்த வாரம் நடைபெற்ற மத்திய குழு கூட்டத்தில் மேற்படி தீர்மானம் ஏகமனதாக எடுக்கப்பட்டது. சிறீ-ரெலோ கட்சியின் இத் தீர்மானத்தை செவ்வாய் கிழமை (26, செப். 2009) ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷவை நேரில் சந்தித்த சிறீ-ரெலோ செயலாளர் உதயராசா தலைமையிலான குழுவினர் ஜனாதிபதி தேர்தலில் தொடர்பான தமது தீர்மானத்தை தெரிவித்தனர்.  Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

மன்னாரிலுள்ள வேலையற்ற பட்டதாரிகள் ஜனாதிபதிக்கு மகஜர்

November 27th, 2009 admin Posted in TELOnews No Comments »

மன்னாரிலுள்ள வேலையற்ற பட்டதாரிகள் தமக்கு நியமணங்கள் வழங்கக்கோரி மாவட்ட செயலகத்தின் ஊடாக ஜனாதிபதிக்கு மகஜர் ஒன்றை அனுப்பி வைத்துள்ளனர். நாடளாவிய ரீதியில் வேலையற்ற பட்டதாரிகள் தமக்கு அரச துறைகளில் நியமணங்களை வழங்குமாறு தொடர்ச்சியாக ஆர்பாட்டங்களை முன்னெடுத்து வரும் நிலையிலேயே மன்னாரிலும் மற்றுமொரு கவனயீர்ப்பு நடவடிக்கை நேற்றய தினம் (26.11.2009) முன்னெடுக்கப்பட்டிருக்கின்றது. Read the rest of this entry »

AddThis Social Bookmark Button