இலங்கை மண்ணை இந்தியாவுக்கு எதிராகப் பாவிப்பதற்கு எவரையும் அனுமதிக்க மாட்டேன்

May 31st, 2009 admin Posted in TELOnews No Comments »

இலங்கை ஜனாதிபதி மகிந்தா ராஜபக்ஸ இந்தியன் எக்ஸ்பிரெஸ் பிரதம ஆசிரியர் சேகர் குப்தாவுக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றில் “இலங்கை மண்ணை இந்தியாவுக்கு எதிராகப் பாவிப்பதற்கு எவரையும் அனுமதிக்க மாட்டேன். சீனா இலங்கையில் அபிவிருத்தி வேலைகளுக்கு மாத்திரமே வந்துள்ளது“ என்று கூறியுள்ளார். அந்த நேர்காணலின் ஒரு பகுதி வருமாறு; Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

எமக்கு நாமே உதவுவோம்

May 29th, 2009 admin Posted in TELOnews No Comments »

யுத்தத்தால் வன்னியில் இடம் பெயர்ந்தோர்க்கு உதவுமுகமாக இலங்கை வங்கி (Bank of Ceylon) இடம்பெயர்ந்து வந்த ஒவ்வொருவருக்கும் தனித்தனி வங்கிக் கணக்குகளை இலவசமாகத் திறப்பதற்கு உறுதி அளித்துள்ளது. இவர்களுக்கு வெளிநாடுகளில் உள்ள அவர்களது உற்றார்களும் உறவினர்களும் நண்பர்களும் தங்களது வங்கிகள் மூலம் நிதி உதவிகளை நேரடியாக அனுப்பி உதவலாம். அதிலும் ஜேர்மனியிலுள்ளவர்களுக்கு இது மேலும் இலகுவாகும். Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

இடைத்தங்கல் முகாமொன்றில் பிரபாகரனின் பெற்றோர்

May 28th, 2009 admin Posted in TELOnews No Comments »

வவுனியாவில் புதிதாக அமைக்கப்பட்ட இடைத்தங்கல் முகாமொன்றில் புலிகள் இயக்க மேல்மட்ட தலைமை உறுப்பினரது குடும்ப மற்றும் உறவினர்களுடன் பிரபாகரனின் பெற்றோரும் தங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.  திருவேங்கடம் வேலுப்பிள்ளை (77), வேலுப்பிள்ளை பார்வதி (71) ஆகியோரரின் நாலு பிள்ளைகளில் பிரபாகரன் கடைசி மகனாகும். Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

வடக்கு கிழக்கு மக்களின் எதிர்காலம்

May 27th, 2009 admin Posted in TELOnews No Comments »

புலிகளின் அழிவு மானிடத்திற்கு என்ன செய்தியை வெளிப்படுத்துகிறது என்றால் அரசியல் நெறிப்படுத்தல் அற்ற வெறும் மூர்க்கத்தனமான வீரமும் இராணுவ வீர சாகசங்களும் ஒரு போராட்டத்தை வெற்றி கொள்ளச் செய்யாது என்பதே. 70களில் இலங்கையில் தீவிர ஏகாதிபத்திய ஆதரவு வலதுசாரிகளின் அரசியல் வருகையானது சிறுபான்மை இனச்சிக்கலை வன்முறைக்கு இட்டுச்சென்றது.  முன்னைய அரசுகள் இனப்பிரச்சி்னையை எதிர்கொள்வதற்கு எப்படி 77லும் 83லும் அரச இயந்திரத்தை சண்டித்தன முறையில் கையாண்டதோ அதே முறையில் தமிழ் தரப்பில் தீவிர ஏகாதிபத்திய ஆதரவு வலதுசாரியான சர்வாதிகாரி பிரபாகரன் சிறுபான்மை இனத்தின் நியாயமான அரசியல் கோரிக்கையை  பாசிசப்போக்குடன் கையாண்டு பயங்கரவாத தளத்திற்கு இட்டுச்சென்றார். Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

தமிழ் மக்களின் சமகால அரசியல் திசைவழி

May 27th, 2009 admin Posted in TELOnews No Comments »

புலிகள் அரசியல் ரீதியிற் தோற்கடிக்கப்பட்டு வரலாற்றின் குப்பைக் கூடைக்குள் எறியப்பட்டதோடு அதன் உச்சியிலிருந்த யுத்தப் பிரபுக்கள் முற்றாகவே அழிக்கப்பட்டு அவ்வியக்கம் இராணுவரீதியில் தோற்கடிக்கப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் மிஞ்சிய புலி அங்கத்தவர்கள் மன்னிக்கப்பட்டு அவர்களுக்கு பொருத்தமான புனர்வாழ்வு அளிக்கும்படி அரசாங்கத்தைக் கோருவது எமது கடமையாகும். இந்த யுவதிகளும் இளைஞர்களும் ஒரு வரலாற்றுக் காலகட்டத்தில் இரண்டுபக்க இனவாதச் சூறாவளியால் புலி அமைப்புக்குள் தூக்கியெறியப்பட்டவர்கள். அவர்கள் ஒரு `தோல்வி யுத்தத்தில்` பகடைக்காய்களாய் போனதற்கு இலங்கையின் தமிழ் சிங்கள அரசியல் தலைமையே காரணமேயொழிய அந்த இளம் சமுதாயம் முழுப் பொறுப்பாளிகளும் அல்ல. Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

உடையத் தொடங்கும் புலம்பெயர்ந்த புலிகள்

May 24th, 2009 admin Posted in TELOnews No Comments »

கிட்டத்தட்ட புலிகளின் அனைத்து மேல்மட்ட தலைமைகள் உட்பட அந்த அமைப்பின் தலைவர் பிரபாகரன் போன்றோரின் மறைவுக்கு பின் புலிகளின் எதிர்காலம் என்ன என்பது இலகுவில் விடை சொல்லிவிடக் கூடிய ஒன்றுதான். ஆரம்பத்தில் பிரபாகரன் இறந்ததை மறுத்திருந்த புலிகளின் சர்வதேச பொறுப்பாளர் கே.பி. இன்று (மே 24) சர்வதேச ஊடகங்களுக்கு மே. 17ல் முல்லைத்தீவு பிரதேசத்தில் பிரபாகரன் இராணுவத்தால் கொல்லப்பட்டதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

சிறீ ரெலோ வவுனியாவில் மக்கள் தொடர்புக் காரியாலயம் திறப்பு.

May 23rd, 2009 admin Posted in TELOnews No Comments »

வவுனியா – வைரவபுளியங்குளத்தில் 20-05-2009 அன்று சிறீ ரெலோ மக்கள் தொடர்புக் காரியாலயம் ஒன்றை புதிதாகத் திறந்துள்ளது.  சிறீ ரெலோ வவுனியா மாவட்ட பொறுப்பாளர் அகிலன் ஏற்பாட்டில் சிறீ ரெலோ செயலாளர் உதயராசா தலைமையில் நிகழ்ந்த வைபவத்தில் பெருமளவு மக்கள் கலந்து கொண்டர். இந்நிகழ்வில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ராஜ குகனேஸ்வரன் சிறப்பு அதிதியாக கலந்து கொண்டார். Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

அந்த நாலு பேருக்கு நன்றி

May 21st, 2009 admin Posted in TELOnews No Comments »

தான் தலைமை தாங்கிய புலிகள் அமைப்புக்குள் 30,000 அதிகமாக மரணங்களைக் கண்ட பிரபாகரன், கடந்த கால் நூற்றாண்டாக தனது சடலத்தின் சாம்பல் கூட ‘எதிரி’க்கு கிடைக்கக் கூடாதென சபதம் எடுத்து வாழ்வதாக ’கதை’ அளந்த புலியூடகங்கள் அவரின் இறப்புக்கு ஒருவரி இரங்கல் எழுத மறுத்து நிற்பதும் ஒருவகை பாசிச அரசியல் மன நோயாகும். தனது இறுதிப் பயணத்தில் தன்னுடலத்தை தூக்க குறைந்தது நாலு பேர் கூட இல்லாமல் போகும் அவலத்தில் பிரபாகரன் விழுந்துவிடாமல் தூக்கிச் செல்லும் அந்த நாலு பேருக்கு நன்றி.

AddThis Social Bookmark Button

தமிழ் மக்கள் மிகப்பெரிய விலை கொடுத்து பெற்ற மிகச்சிறிய படிப்பனவு

May 19th, 2009 admin Posted in TELOnews No Comments »

 இன்றோ பிரபாகரன் ஓர் இறந்த கால மனிதன். ஆனால் பிரபாகரன் வாழ்ந்த ஒரு காலம் உண்டு. வரலாறும் உண்டு. எல்லா வகையாலும் ஆளுமை குறைந்த மிகப் பலவீன ஒரு சராசரி மனிதனை விட மிகக்கீழான மனிதனாக இருந்த போதும், இந்தப் பெரிய அரசியற் பொறுப்பை எடுத்து, கால்நூற்றாண்டு தலைமறைவு பங்கர் வாழ்க்கைகள் வாழ்ந்து, ஒவ்வொரு செக்கனும் ஆபத்தின் மத்தியில் வாழ்ந்து, மாபெரும் அதிகாரங்களோடு மோதி, மக்களையும் அழித்து, ஆளுமைமிக்க தமிழர் தலைமை களையும் அழித்து,  தானும் அழிந்து போன மனிதனாகும். இது தமிழ் மக்கள் மிகப்பெரிய விலை கொடுத்து பெற்ற மிகச்சிறிய படிப்பனவாகும். Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

பிரபாகரன்-பொட்டம்மான்-சூசை தப்பிச்செல்ல எடுத்த இறுதி முயற்சி தோல்வி

May 18th, 2009 admin Posted in TELOnews No Comments »

முள்ளிவாய்க்கால் பிரதேசத்தில் இருந்து இன்று (மே 18) காலை பிரபாகரன், பொட்டம்மான் மற்றும் சூசை ஆகியோர் அம்புலன்ஸ் வாகனங்களில் மோதல் பகுதியில் இருந்து கரையாமுள்ளி வாய்க்கால் நோக்கி தப்பிச்செல்ல முயன்றுள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால் அவர்களின் முயற்சி படையினரால் தோற்கடிப்பட்டதாகவும் அந்த மோதலில் பிரபாகரன் பொட்டம்மான் கொல்லப்பட்டதாக பிந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

இந்த போர் கசப்பான ஒரு முடிவுக்கு வந்திருக்கின்றது : கே.பி.

May 17th, 2009 admin Posted in TELOnews No Comments »

எமது மக்கள் இப்போது குண்டுகளாலும் எறிகணைகளாலும் நோய்களாலும் பட்டினியாலும் மரணமடைந்து கொண்டிருக்கின்றார்கள். எமது அப்பாவி மக்களுடைய இரத்தம் தொடர்ந்தும் சிந்தப்படுவதை எம்மால் சகித்துக்கொள்ள முடியாது. அவர்கள் மேலும் பாதிக்கப்படுவதை அனுமதிக்க முடியாது. எம்மிடம் இப்போது கடைசியாக ஒரே தெரிவுதான் இருக்கின்றது. எமது துப்பாக்கிகளை மெளனிக்கச் செய்வதற்கு நாம் தீர்மானித்திருக்கின்றோம் என புலிகளின் சர்வதேச பொறுப்பாளர் கே.பி. ஊடகங்களுக்கு ஈ-மெயில் மூலம் அறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

சுத்த சூனியமானது சூசையின் புலிக் கடற்படைகள்

May 16th, 2009 admin Posted in TELOnews No Comments »

முல்லைத்தீவு கடலோரமாக வட்டுவாகல் பகுதியில் இருந்து வடக்கு நோக்கி முன்நகர்ந்த பிரிகேடியர் பிரசன்ன சில்வா தலைமையிலான 59வது படையணியும், கரையமுள்ளி வாய்க்கால் பிரதேசத்தி இருந்து தெற்கு நோக்கி நகர்ந்த பிரிகேடியர் சவிந்திர சில்வா தலைமையிலான  58வது படையணியும் இன்று (மே 16) காலை இணைந்துள்ளதாக பாதுகாப்பு இணையம் செய்தி வெளியிட்டுள்ளது.  இதனால் புலிகள் முற்றுமுழுதாக கடல் பிராந்திய தொடர்பு எதுவும் இல்லாமல் துண்டிக்கப்பட்டுள்ளனர். புலிகளின் தலைவர்கள் கடல் மார்க்கமாக தப்பிச்செல்லக் கூடிய வாய்ப்புகள் மேலும் அருகியுள்ளதாக சொல்லப்படுகிறது. Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

பிரபாகரன் முள்ளிவாய்க்கால் பகுதியில் உள்ளார்: சூசையின் மனைவி

May 16th, 2009 admin Posted in TELOnews No Comments »

முல்லைத்தீவு கடற்பரப்பில் வைத்து நேற்று (மே 15) காலை கைது செய்யப்பட்ட சூசையின் மனைவி, இரு பிள்ளைகள் உட்பட 11 பேர் புல்மோட்டையில் உள்ள கடற்படை முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு நடந்த விசாரணையில், ’’பிரபாகரன், பொட்டு அம்மான், எனது கணவர் சூசை உட்பட பல புலிகளின் முக்கிய தலைவர்கள் இன்னும் முள்ளிவாய்க்கால் பகுதியில்தான் இருக்கிறார்கள்’’ என சூசையின் மனைவி சத்தியதேவி தெரிவித்துள்ளார். Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

புலிகளின் `கடற்தளபதி` சூசையின் மனைவி பிள்ளைகள் உட்பட ஐந்து குடும்ப உறுப்பினர்கள் கடற்படையினரிடம் பிடிபட்டனர்

May 15th, 2009 admin Posted in TELOnews No Comments »

பதினொரு பேர் கொண்ட படகு ஒன்றை இன்று (மே.15) காலை கடற்படையினர் கடலில் வைத்து காப்பாற்றியுள்ளனர். அவர்களில் புலிகளின் `கடற்தளபதி` சூசையின் மனைவி சத்தியதேவி, மகன் சுரேஸ் (வயது 16),  மகள் மதி (வயது 17)  என்போர் பிடிபட்டதாக படைதுறை செய்தி வெளியிட்டுள்ளது. இவர்களுடன் சூசையின் மனைவியின் சகோதரியும் அவரது மகனும் சேர்த்து மொத்தம் 11 பேர் கடற்படையினரிடம் சரண் அடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சூசையின் குடும்பத்தினரிடம் ஒரு தொகை பணமும் அதனுடன் நகைகளும்  இருந்தமை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. (corrected & updated)

AddThis Social Bookmark Button

புலித் தற்கொலைத்தாரி 7வது மாடியில் இருந்து குதித்து மரணம்

May 15th, 2009 admin Posted in TELOnews No Comments »

வெள்ளவத்தை 37வது லேனில் உள்ள ஒர் அடுக்குமாடி குடியிருப்பை நேற்று ( மே. 14) மாலை படையினர் தேடுதல் நடத்தியபோது 7வது மாடியில் இருந்து புலித் தற்கொலைத்தாரி ஒருவர் கீழே குதித்து தன்னைதானே மாய்த்துக் கொண்டுள்ளார். படையினருக்கு கிடைத்த நம்பகமான தகவலை அடுத்து வெள்ளவத்தை காவல்துறையுடன் இணைத்து குறிப்பிட்ட குடியிருப்பை சோதனையிடச் சென்றபோது தமோதரபிள்ளை சசிதரன், 23, என்ற இளைஞர் 7வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துள்ளார். Read the rest of this entry »

AddThis Social Bookmark Button