Archive for July, 2025

தெஹிவளை துப்பாக்கிதாரி சுட்டுக் கொலை

Friday, July 25th, 2025 Posted in இணையத்தள செய்தி | No Comments »

தெஹிவளை ரயில் நிலையத்திற்கு அருகே கடந்த ஜூலை 18 ஆம் திகதி 11 மணியளவில் நபர் ஒருவரை குறிவைத்து துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேகநபர், இன்று (25) அதிகாலை விசேட அதிரடிப் படையினருடனான துப்பாக்கிச் சண்டையில் சுட்டுக் கொல்லப்பட்டார். Read more..

புதிய கல்விச் சீர்திருத்ததில் கல்வியை அடிப்படை உரிமையாக்க வேண்டும் : சஜித் கோரிக்கை

Friday, July 25th, 2025 Posted in இணையத்தள செய்தி | No Comments »

காலாவதியான, பழைய முறைகளைப் பின்பற்றும், பாரம்பரிய கட்டமைப்பிற்குள் மட்டுண்ட கல்வி முறையே காணப்படுகிறது. இது நம் நாட்டு மாணவர்களுக்கு செய்யும் மிகப்பெரிய அநீதியாகும். அதனால் உத்தேச புதிய கல்விச் சீர்திருத்ததில் கல்வியானது ஓர் அடிப்படை உரிமையாக அமைய வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் ... Read more..

WWE மல்யுத்த வீரர் ஹல்க் ஹோகன் காலமானார்

Thursday, July 24th, 2025 Posted in இணையத்தள செய்தி | No Comments »

WWE மல்யுத்த உலகில் முக்கிய வீரராகத் திகழ்ந்த ஹல்க் ஹோகன் (Hulk Hogan), உண்மையான பெயர் டெர்ரி ஜீன் பொல்லியா (Terry Gene Bollea), 71 வயதில் மாரடைப்பு (cardiac arrest) காரணமாக அமெரிக்காவில் காலமானார். Read more..

தாய்லாந்து – கம்போடியா எல்லையில் இராணுவ மோதல்

Thursday, July 24th, 2025 Posted in இணையத்தள செய்தி | No Comments »

தாய்லாந்துக்கும் கம்போடியாவுக்கும் இடையிலான சர்ச்சைக்குரிய எல்லைப் பகுதியில் இன்று 24 அதிகாலையில் ஆயுதமேந்திய மோதல்கள் வெடித்ததாக இரு நாடுகளின் இராணுவங்கள் தெரிவித்துள்ளன. Read more..

பிள்ளையானின் அடிப்படை மனுவை விசாரிக்க நீதிமன்றம் தீர்மானம்

Thursday, July 24th, 2025 Posted in இணையத்தள செய்தி | No Comments »

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும், தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தலைவருமான பிள்ளையான் என்று அழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன், தாக்கல் செய்த அடிப்படை உரிமைகள் மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் நேற்று (23) தீர்மானித்தது. தமது சட்டவிரோத கைது ... Read more..

சம்பூர் பகுதியில் காணப்பட்ட மனித எச்சங்கள் நீதிபதியின் உத்தரவு

Thursday, July 24th, 2025 Posted in இணையத்தள செய்தி | No Comments »

சம்பூர் பகுதியில் காணப்பட்ட மனித எச்சங்கள் தொடர்பாக எதிர்வரும் 30ஆம் திகதி அறிக்கை சமர்ப்பிக்குமாறு சட்ட வைத்திய அதிகரிக்கும், தொல்பொருளியல் திணைக்களத்திற்கும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார். Read more..

வவுனியா ரயில் நிலையம் அருகே திடீரென பற்றிய தீ துப்புரவுப் பணியில் கவனயீனம் : மக்கள் விசனம்

Thursday, July 24th, 2025 Posted in இணையத்தள செய்தி | No Comments »

வவுனியா - ரயில் நிலையத்திற்கு அருகாமையில் திடீரென தீப்பற்றியதில் அப்பகுதியில் சிலமணிநேரம் பதற்ற சூழல் உருவாகியது. இந்த தீ விபத்துச் சம்பவம் நேற்று(23) இரவு 7 மணியளவில் வவுனியா ரயில் நிலையம் அருகே இடம்பெற்றுள்ளது. Read more..

தாவடி பகுதியில் நபர் ஒருவர் மீது கூரிய ஆயுதத்தால் தாக்குதல்

Thursday, July 24th, 2025 Posted in இணையத்தள செய்தி | No Comments »

23ஆம் திகதி புதன்கிழமை கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நந்தாவில் அம்மன் ஆலயத்திற்கு அருகாமையில் இடம்பெற்ற தாக்குதலில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். Read more..

இலங்கையின் ‘மூன்றாவது பெரிய’ மனித புதைகுழியாக மாறியது செம்மணி

Thursday, July 24th, 2025 Posted in இணையத்தள செய்தி | No Comments »

நான்கு அல்லது ஐந்து வயது மதிக்கத்தக்க பிள்ளைகளின் எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்ட, போரினால் பாதிக்கப்பட்ட வடக்கில் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழி, அடையாளம் காணப்பட்ட மனித எச்சங்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் நாட்டின் மூன்றாவது பெரிய புதைகுழியாகும். Read more..

உணவகங்களில் சுகாதார பரிசோதகர்கள் திடீர் சோதனை நடவடிக்கை

Thursday, July 24th, 2025 Posted in இணையத்தள செய்தி | No Comments »

அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு உட்பட்ட கடற்கரையோர வீதியில் அமைந்துள்ள உணவகங்களில் சுகாதார பரிசோதகர்களால் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. Read more..

செம்மணி மனித புதைகுழி: இன்று 5 மனித எச்சங்கள் அடையாளம்

Wednesday, July 23rd, 2025 Posted in இணையத்தள செய்தி | No Comments »

யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் உள்ள இரண்டு மனித புதைகுழிகளில் இருந்தும் இன்றைய தினம் புதன்கிழமை 05 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் காப்பு போன்ற வளையம் ஒன்றும் அடையாளம் காணப்பட்டுள்ளது. Read more..

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை இரத்துச் செய்யப்படுமா? : கலாநிதி ஹரினி அமரசூரிய

Wednesday, July 23rd, 2025 Posted in இணையத்தள செய்தி | No Comments »

கல்வியை அளவிடும் பாரம்பரியப் பரீட்சை முறைக்கு மாற்றாக, தொகுதி முறை (module) கல்வித் திட்டத்தை அறிமுகப்படுத்தியிருப்பதாக கல்வி, உயர்கல்வி மற்றும் தொழில் கல்வி அமைச்சர் மற்றும் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார். Read more..

இலங்கை கடவுச்சீட்டுக்கு கிடைத்த இடம்

Wednesday, July 23rd, 2025 Posted in இணையத்தள செய்தி | No Comments »

இலங்கை கடவுச்சீட்டானது Henley கடவுச்சீட்டு குறியீட்டில் 5 இடங்கள் முன்னேறியுள்ளன. அதன்படி, இலங்கை கடவுச்சீட்டானது குறியீட்டு புள்ளிகளுக்கு அமைவாக 96ஆவது இடத்திலிருந்து 91ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இலங்கை கடவுச்சீட்டு கடந்த வருடத்தில் 4 இடங்கள் முன்னேறி இருந்தது. Read more..

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வுக்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும் : வே. இராதாகிருஷ்ணன்

Wednesday, July 23rd, 2025 Posted in இணையத்தள செய்தி | No Comments »

தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளுக்கமை சம்பளத்தை அதிகரிப்பதற்கு ஜனாதிபதியும் அரசாங்கமும் உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் இது தொடர்பில் தாம் பிரேரணையொன்றை கொண்டுவர எதிர்பார்க்கிறோம் அதற்கு சகலரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என எதிர்க்கட்சி உறுப்பினர் வே.இராதாகிருஷ்ணன் தெரிவித்தார். Read more..

அரச உறுப்பினர்களின் வீடுகளிலும் துப்பாக்கிச் சூடு அவர்கள் குற்றக் கும்பலுடன் தொடர்புடையவர்களா? : நாமல் ராஜபக்‌ஷ

Wednesday, July 23rd, 2025 Posted in இணையத்தள செய்தி | No Comments »

நாட்டில் நடக்கும் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் திட்டமிடப்பட்ட குற்றக் கும்பல்களுக்கு இடையிலேயே நடப்பதாக அரசாங்கம் கூறுகின்றது. ஆனால் அரச தரப்பு உறுப்பினர்களின் வீடுகள் மீதும் துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் நடக்கின்றன. அப்படியென்றால் அவர்களும் அந்தக் குற்றக்கும்பல்களுடன் தொடர்புடையவர்களா? என கேட்கிறோம் என ... Read more..