சிறிலங்காவின் புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்க பதவிப்பிரமாணம்
இலங்கையின் 8ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட அதிபராக ரணில் விக்ரமசிங்க சற்றுமுன்னர் நாடாளுமன்ற வளாகத்தில் பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.
1981 ஆம் ஆண்டு 02 ஆம் இலக்க அதிபர் தெரிவு உறுப்புரைகள் மற்றும் அரசியலமைப்பின் 40ஆவது உறுப்புரை ஆகியவற்றின் பிரகாரம் நாடாளுமன்றில் இடம் பெற்ற இரகசிய வாக்கெடுப்பின் ஊடாக 8ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட அதிபராக ரணில் விக்ரமசிங்க நேற்று தெரிவு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.


Leave a Reply