தசரா முடிந்த மறுதினம் வங்காளதேசத்தில் காளி சிலை சேதம் : பக்தர்கள் அதிர்ச்சி
இந்தியாவின் அண்டை நாடான வங்காள தேசத்தில் கடந்த சில வருடங்களாக ஹிந்து கோயில்கள் உட்பட சிறுபான்மையின வழிபாட்டு தலங்கள் மீது அடிக்கடி தாக்குதல் நடத்தப்படுகிறது. இந்நிலையில், வங்காள தேசத்தின் ஜெனைடாவில் காளி கோயில் அமைந்துள்ளது. தசரா விழா முடிந்து நேற்று காலை கோயில் நிர்வாகத்தினர் திறந்தனர்.
அப்போது அங்குள்ள காளி சிலை பல துண்டுகளாக உடைக்கப்பட்டு இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். கோயிலில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை சிலையின் துண்டுகளை மர்ம நபர்கள் வீசியிருந்தனர். தகவலறிந்து போலீசார் அங்கு வந்து விசாரணை நடத்தினர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தசரா விழா நிறைவடைந்த மறுநாள் காளி சிலை சேதப்படுத்தப்பட்டிருப்பது பக்தர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.


Leave a Reply