மைத்திரிபால உடன் கைதுசெய்யப்படவேண்டும் : முஷாரப் எம்பி

குற்றச் செயலையும், குற்றவாளிகளையும் மறைத்த முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிரிசேன உடன் கைதுசெய்யப்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம் முஷாரப் தெரிவித்துள்ளார்.

ஈஸ்டர் குண்டு தாக்குதல் குறித்து முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன குறிப்பிட்டுள்ள தகவல்களால் இலங்கை அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கையின் அரசியல் இறையாண்மைக்கு மாபெரும் பங்கம் ஏற்பட்டுள்ளது.

அவர் குறிப்பிட்டுள்ள கருத்துக்கள் உண்மை எனில், குற்றச் செயலையும், குற்றவாளிகளையும் மறைத்த முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிரிசேன உடன் கைதுசெய்யப்பட வேண்டும்.

அத்துடன் அவரிடம் சரியான முறையில் விசாரனைகள் மேற்கொள்ளப்பட்டு உரிய சூத்திரதாரிகளுக்கு கடுமையான தண்டனையை வழங்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply