மைத்திரியிடம் வாக்குமூலம் பெறப்போகும் CID

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் குற்றப் புலனாய்வு திணைக்களம் வாக்குமூலம் பெற உள்ளதாக பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.

இதன்படி நாளை (25) குற்றப் புலனாய்வு திணைக்களம், இது குறித்த வாக்குமூலத்தை பெற்றுக்கொள்ளவுள்ளதாக பொலிஸ் மா அதிபர் குறிப்பிட்டுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை நடத்தியது யார் என்பது தனக்கு தெரியும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வௌியிட்ட கருத்து தற்போது சர்ச்சையாகியுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply