வவுனியா ஏ9 வீதியில் மது போதையில் தனியார் பேருந்தை செலுத்திய சாரதி கைது
வவுனியா, ஏ9 வீதியில் மது போதையில் தனியார் பேருந்தை செலுத்திய சாரதி ஒருவர் ஞாயிற்றுக்கிழமை (29) கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா, போக்குவரத்து பொலிசார் தெரிவித்தனர்.
வவுனியா தலைமைப் பொலிஸ் பிரிவுக்குட்ட பகுதியில் போக்குவரத்து பொலிசார் விசேட சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்த போது ஏ9 வீதியில் பயணித்த தனியார் பேருந்து ஒன்றின் சாரதி மது போதையில் பேருந்தை செலுத்தியமை கண்டு பிடிக்கப்பட்டது.
இதனையடுத்து பேருந்து சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், பேருந்தும் வவுனியா பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளின் பின் சாரதியை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply