கடலில் நீராடிய 3 இளைஞர்களில் ஒருவர் மூழ்கி உயிரிழப்பு

வெலிகம கடலில் நீராடிய மூன்று இளைஞர்கள் கடல் அலையில் சிக்குண்டு அள்ளுண்டு செல்லப்பட்டதுடன் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். நேற்று சனிக்கிழமை (04) வெலிகம, கந்துவ கடலில் அள்ளுண்டு செல்லப்பட்டப்போது இரு இளைஞர்கள் காப்பாற்றப்பட்டுள்ளனர்.

வெலிகம, பகுதியைச் சேர்ந்த 20 வயதுடைய இளைஞனே நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த இளைஞனின் சடலம் மீட்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெலிகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இம்மாதம் 6ஆம் திகதி வரை கடலில் நீராடுவதைத் தவிர்க்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மற்றும் அனர்த்த முகாமைத்துவ பிரிவினரால் எச்சரிக்கப்பட்டிருந்தும் இந்த இளைஞர்கள் நீராடச் சென்றமை குறிப்பிடத்தக்கது .

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply