இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கை ஜனாதிபதி மஹிந்த சந்திக்க ஏற்பாடு

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்தியாவிற்கு விஜயம் செய்யவுள்ளார். பொதுநலவாய நாடுகளின் விளையாட்டுப் போட்டிகளின் இறுதி நாள் நிகழ்வு நாளை இடம் பெறவுள்ளது. இதில் கௌரவ விருந்தினராக கலந்து கொள்வதற்காகவே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ புதுடில்லி செல்லவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. இன்று மாலை ஜனாதிபதி புதுடில்லி நோக்கி பயணமாகவுள்ளார்.
இவருடன் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸும் செல்கின்றார். புதுடில்லியில் தங்கியிருக்கும் காலத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்தியப் பிரதமர் கலாநிதி மன்மோகன் சிங்கைச் சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து கலந்துரையாடவுள்ளார்.
இதேவேளை வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா, உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் பி. சிதம்பரம், வெளிநாட்டு இந்திய அலுவல்களுக்கான அமைச்சர் ஸ்ரீ வாயலர் ரவி, வர்த்தக மற்றும் கைத்தொழில் அமைச்சர் ஸ்ரீ ஆனந்த சர்மா, மற்றும் மனிதவள அபிவிருத்தி அமைச்சர் ஸ்ரீ கபில் சிபால், உட்பட பலரையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். நாளை மறுதினம் புதுடில்லியில் உள்ள ஒக்சேவர் றிசேச் பவுண்டேசனில் தர்மஸ்தாபன நாள் எனும் தலைப்பிலும், அமைச்சர் பீரிஸ் உரையாற்றவுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply