ஹலால் தொடர்பான இறுதி அறிக்கை அமைச்சரவையில் சமர்ப்பிக்க தீர்மானம்

ஹலால் சான்றிதழ் விநியோகம் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட பாராளுமன்றக் குழு, விரைவில் இறுதி அறிக்கையொன்றை அமைச்சரவையில் சமர்ப்பிக்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்தக் குழுவிற்கு முன்னாள் பிரதமர் ரட்ணசிறி விக்ரமநாயக்க தலைமை தாங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.அமைச்சரவையில் இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்படுவதற்கு முன்னதாக உறுப்பினர்கள் இது குறித்து கலந்தாலோசிக்க உள்ளதாக குழுவின் உறுப்பினர் ஏ.எச்.எம். பௌசீ தெரிவித்துள்ளார். எவ்வாறெனினும், அறிக்கையின் உள்ளடக்கங்கள் பற்றி தெரியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இறுதியாக கூடி ஆராய்ந்து இறுதி அறிக்கை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply