பதுளை மாவட்டத்திலிருந்து நான்கு தமிழர்கள் தெரிவு செந்தில் தொண்டமான் கணேசமூர்த்தி வடிவேல் சுரேஷ் ருத்ர தீபன்
ஊவா மாகாண சபை தேர்தலில் பதுளை மாவட்டத்திலிருந்து இம் முறை நான்கு தமிழ் பிரதிநிதித்துவம் கிடைத்துள்ளது. இந்நிலையில் இம்முறை ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இ, தொ. கா. சார்பில் அ. செந்தில் தொண்டமான் 31858, ஆறுமுகம் கணேஷமூர்த்தி 19,262, பெருந்தோட்ட தொழிலாளர் காங்கிரஸ் சார்பில் அதன் தலைவர் வடிவேல் சுரேஸ் 21,967 வாக்குகளைப்பெற்று தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன் ஐ. தே. க. சார்பில் வேலாயுதம் ருத்திரதீபன் 30,457 தெரிவாகியுள்ளனர்.
இதற்கு முன்பிருந்த கடந்த ஐந்தாவது ஊவா மாகாண சபையில் மூன்று தமிழ் பிரதிநிதித்துவம் மாத்திரமே இருந்தது.
கடந்த மாகாண சபையில் இருந்த அ. அரவிந்தகுமார் 12721, இ.தொ.கா. ஆ. சிவலிங்கம் 18,695 எஸ். இராஜமாணிக்கம் 6333 வாக்குகளையும் ஐ. தே. கட்சியில் போட்டியிட்ட பொன்னுசாமி பூமிநாதன் 5899 எம். சச்சிதானந்தன் 16808, ஐ. தே. கட்சியில் போட்டியிட்ட இப்றாகீம் மொஹமட் நக்ர் 15686 அப்துல் கபூர் அமீர் 15003ம் வாக்குகளையும் பெற்று தோல்வியடைந்துள்ளனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply