பொதுத் தேர்தலை அரசாங்கம் உரிய நேரத்தில் நடத்தவேண்டும் : ரில்வின்

புதிய அரசாங்கம் மக்­க­ளுக்கு வழங்கிய தனது தேர்தல் வாக்­கு­று­தியின் அடிப்­ப­டையில் எதிர்­வரும் காலங்­களில் பொதுத்­தேர்­தலை உரிய நேரத்தில் நடத்­த வேண்டும். அத்துடன் அவ்வாறு தேர்தல் நடத்தி தெரி­வா­கின்ற உறுப்­பி­னர்­களின் ஊடா­கவே தேசிய அர­சாங்கம் உரு­வாக்­கப்­பட வேண்டும் என்று மக்கள் விடு­தலை முன்­னணி வலி­யு­றுத்தியுள்ளது. அதே­நேரம் அரசாங்கம் பொதுத்­தேர்­தலை ஒத்­தி­வைக்கும் செயற்­பா­டு­களை முன்­னெ­டுக்­கு­மானால் அது முன்­னைய அர­சாங்­கத்தின் கீழ் ஊழல் மோச­டி­களை மேற்­கொண்ட சில அர­சியல் பிர­மு­கர்கள் தமது கறுப்பு பணங்­களை பாது­காத்து கொள்­ளவும் சட்­டத்தின் பிடியில் இருந்து தம்மை பாது­காத்­துக்­கொள்­ளவும் வாய்ப்­பாக அமைந்து விடும் எனவும் சுட்­டிக்­காட்­டி­யது.மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் தலைமை அலு­வ­ல­கத்தில் நேற்று ஞாயிற்­றுக்­கி­ழமை இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் மாநாட்­டி­லேயே கட்­சியின் பொது செய­லாளர் ரில்வின் சில்வா மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அங்கு ரில்வின் சில்வா தொடர்ந்து குறிப்பிடுகையில்,

தற்­போ­துள்ள பாரா­ளு­மன்­றத்தின் ஊடாக தேசிய அர­சாங்­கம் உரு­வாக்­கப்­பட்டால், அதனை ஒரு­போதும் ஏற்றுக் கொள்ள முடி­யாது. எனவே புதிய அர­சா­னது தனது தேர்தல் விஞ்­ஞா­ப­னத்தின் அடிப்­ப­டையில் 100 நாள் வேலைத்­திட்­டத்தில் குறிப்­பிட்­ட­வாறு தேர்தல் முறைமை மாற்­றப்­பட்­டாலும் எதிர்­வரும் பொது தேர்­த­லா­னது பழைய முறைப்­ப­டியே நடத்­தப்­பட வேண்டும். அத­ன­டிப்­ப­டை­யி­லேயே தேசிய அரசாங்கம் அமைக்­கப்­பட வேண்­டும்.

இதே­வேளை புதிய அர­சா­னது பொது தேர்­தலைகாலம் தாமதித்தால் முன்­னைய அர­சாங்­கத்தின் கீழ் ஊழல் மோச­டி­களை மேற்­கொண்ட சில அர­சியல் பிர­மு­கர்கள் உள்­ளிட்ட சில தரப்­பினர் ஊழல் மோச­டிகள் மூலம் சேக­ரித்த கோடிக்­க­ணக்­கான கறுப்பு பணத்­தையும் தமது சட்­ட­வி­ரோத செயற்­பா­டுகள் மூலம் கைப்­பற்­றிய சொத்­துக்­களை தக்க வைத்து கொள்­ள வாய்ப்பாக அமைந்து விடும். இதனை கவ­னத்தில் கொண்டே சில கட்­சியை சேர்ந்த உறுப்­பி­னர்கள் எதிர்­வரும் பொது தேர்­தலை ஒத்­தி­வைப்­பது தொடர்பில் செயற்­பா­டு­களை முன்­னெ­டுத்து வரு­கின்­றனர்.

அண்­மைக்­கா­ல­மாக நிறை­வேற்று அதி­கார ஜனா­தி­பதி முறை­மையை நீக்­கு­வது தேர்தல் முறை­மையை மாற்­று­வது என இரண்­டையும் ஸ்ரீலங்கா சுதந்­திர கட்சி தலை­மைகள் குழப்பி கொண்­டுள்­ளன. தேர்தல் முறை­மையை மாற்­று­வதில் எமது கட்சி எவ்­வித எதிர்ப்­பையும் தெரி­விக்­காது. ஆனால் அதற்கு முன்னர் நாட்டில் அர­சியல் கலா­சாரம் மாற்­றப்­பட வேண்டும் என்­பதில் நாம் உறு­தி­யாக இருக்கின்றோம்.

அதற்கு அடுத்­த­ப­டி­யாக நிறை­வேற்று ஜனா­தி­பதி முறை­யுடன் தேர்­தலில் போட்­டி­யி­டு­ப­வர்கள் தொடர்­பான ஒழுக்க நெறி­யையும் உரு­வாக்க வேண்டும். இன்­றைய கால கட்­டங்­களில் அர­சியல் பாதையில் பய­ணிப்­ப­வர்கள் தமது ஊழல் செயற்­பா­டு­க­ளினால் சம்­பா­தித்த கறுப்பு பணத்­தையே செல­வ­ழிக்­கின்­ற­னரே தவிர தாம் உழைத்த பணத்தை செலவழிக்கவில்லை. எனவே இந்த முறையை மாற்­றி­ய­மைக்க வேண்டும். தொடர்ந்தும் ஒரு பல­மான கட்­சிக்கு வாக்­க­ளிக்கும் முறை இல்­லா­தொ­ழிக்­கப்­பட்டு சம அந்­தஸ்து பெறும் வகையில் அனைத்து கட்­சி­க­ளுக்கும் இட­ம­ளிக்க வேண்டும்.

புதிய அரசின் தேர்தல் விஞ்­ஞா­ப­னத்தின் அடிப்­ப­டையில் தேர்தல் முறைமை மாற்­றப்­பட்­டாலும் எதிர்­வரும் பொது தேர்­த­லா­னது பழைய முறைப்­ப­டியே நடத்தப்படவேண்டும். தேர்தல் முறை­யா­னது மக்­களின் பிரச்­சி­னை­களை இல­கு­வான முறையில் கலந்­து­ரை­யாடி தீர்ப்­ப­தற்­கான சந்­தர்ப்­பத்தை ஏற்­ப­டுத்தி கொடுத்தல் வேண்டும். குறிப்­பிட்ட இந்த விட­யங்­களில் எமது கட்சி உறு­தி­யாக உள்­ளது.

கடந்த ஜனா­தி­பதி தேர்­தலை எடுத்­தோ­மானால் மக்­க­ளி­டமும் சில கட்­சி­க­ளி­டமும் இரண்டு விட­யங்கள் கேள்­வி­யாக இருந்­தன.அதில் ஒன்று நாட்டில் நிறை­வேற்று ஜனா­தி­பதி அதி­கார முறையை நீக்­கு­வதா? அல்­லது நாட்டில் காணப்­ப­டு­கின்ற தேர்தல் முறையை நீக்­கு­வதா ? என்பதாகும்.

இந்த குறிப்­பிட்ட இரண்டு விட­யங்­களை கருத்­திற்­கொண்டே முன்­னைய ஜனா­தி­ப­தி­யினால் மேற்­கொண்ட மோச­மான செயற்­பா­டு­க­ளுக்கு முற்­றுப்­புள்ளி வைக்கும் நோக்­கத்தின் அடிப்­ப­டை­யி­ல் மூவின மக்­களும் ஒன்று சேர்ந்து புதிய அரசின் கீழ் புதி­ய­தொரு ஜனா­தி­ப­தியை ஆட்­சியில் அமர்த்­தினர். இவ்­வா­றான நிலையில் புதிய அர­சினால் தேர்தல் விஞ்­ஞா­ப­னத்தில் குறிப்­பிட்ட நிறை­வேற்று ஜனா­தி­பதி முறையை நீக்­கு­வது தொடர்பில் ஒரு மந்­த­மான போக்கின் அடிப்­ப­டை­யி­லேயே செயற்­ப­டு­வதை காணக்­கூ­டி­ய­தாக உள்­ள­து. மறு­புறம் இவர்கள் தேர்தல் முறையை மாற்­று­வது தொடர்­பி­லேயே கவனம் செலுத்­து­கின்­றனர்.

எனவே அர­சா­னது தமது 100நாள் வேலைத்­திட்­டத்தின் கீழ் மக்­க­ளுக்கு அளிக்­கப்­பட்ட வாக்­கு­று­தி­களை நிறை­வேற்­று­வது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும். நாட்டின் நல்­லாட்­சியின் முக்­கிய அங்­கங்­களே இவை என்­பதை அர­சா­னது புரிந்து கொள்ள வேண்டும்.

நாட்டில் தேசிய அர­சாங்­கத்தை அமைப்­பது தொடர்பில் பல்­வேறு கருத்­துக்கள் முன்­வைக்­கப்­பட்டு வரு­கின்­றன. தேசிய அரசு தொடர்பில் எமது கட்­சிக்கு எவ்­வித எதிர்ப்பும் கிடை­யாது. மக்­க­ளுக்­கான உயர்ந்த மட்ட சேவை­யினை வழங்கும் தேசிய அர­சாங்­கத்­தையே நாம் எதிர்­பார்க்­கின்றோம். மாறாக முன்­னைய அர­சாங்­கத்தில் பல்­வேறு மோச­டி­களை அரங்­கேற்றி அப்­பாவி மக்­களின் பணத்தை சுரண்டி சுக­போகம் அனு­ப­வித்த சில அர­சி­யல்­வா­திகள் தமது செயற்­பா­டு­களை தொடர்ந்து மேற்­கொள்­ளவும் சட்­டத்தில் இருந்து தம்மை பாது­காக்கும் நோக்கின் அடிப்­ப­டையில் தேசிய அரசு அமையப் பெறு­மானால் அது புதிய அர­சினால் மக்களுக்கு இழைக்கப்படும் அநீதியாகும். இதனை எமது கட்சி ஒருபோதும் அனுமதிக்காது.

முன்னிலை சோசலிச கட்சியின் அரசியல்துறை உறுப்பினர் குமார் குணரத்னத்தை நாட்டை விட்டு வெ யியேற்றுவது தொடர்பில் எமது கட்சியின் பங்களிப்பு இருப்பதாக சில தரப்பினரால் பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமையானது அர்த்தமற்றதாகும். இவரின் பிரச்சினையானது நாட்டின் குடியுரிமை சார்ந்த பிரச்சினையே தவிர எமக்கு எந்த தொடர்பும் இல்லை. இது தொடர்பில் நாம் கருத்து தெரிவிக்கவும் விரும்பவில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.

மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் அரசியலில் ஈடுபட முயற்சிக்கின்றார். ஆனால் ஜனவரி 8 ஆம் திகதி மக்கள் அவரை நிராகரித்துவிட்டனர். எனவே மீண்டும் அரசியலில் ஈடுபட அவருக்கு தார்மீக உரிமை இல்லை என்றார் அவர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply