இந்திய மீனவர்கள் 23 பேர் பாகிஸ்தான் கடற்படையினரால் கைது

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளைச் சேர்ந்த மீனவர்கள் பரஸ்பரம் இரு நாட்டு கடற்படையினால் கைது செய்யப்பட்டு வருகின்றனர். இந்தியாவில் குறிப்பாக அரபிக் கடலில் மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்கள் தொடர்ச்சியாக பாகிஸ்தான் கடற்படையினால் கைது செய்யப்படுகின்றனர். 

 

இந்நிலையில், குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த 23 மீனவர்கள், பாகிஸ்தான் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களது படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

 

குஜராத் மாநிலத்தின் போர்பந்தர் அருகே ஜக்கு என்ற பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

 

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply