அணு ஆயுதங்களை திருப்பித்தர முன்வந்தால் வடகொரியாவுக்கு நிதியுதவி செய்வோம் – மைக் பாம்ப்யோ
தொடர் ஏவுகணை சோதனைகள், அணு ஆயுத பரிசோதனை என சர்வதேச நாடுகளை மிரட்டி வந்த வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன், தற்போது தனது சேட்டைகளை மூட்டை கட்டி வைத்து மற்ற நாடுகளுடன் இணக்கமான போக்கை கடைப்பிடிக்க விரும்புகிறார். கடந்த மாதம் தென்கொரியா அதிபர் மூன் ஜேஇன் உடன் கிம் நடத்திய வரலாற்று சிறப்புமிக்க பேச்சுவார்த்தை உலக நாடுகளிடையே வரவேற்பை பெற்றுள்ள நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப் உடன் நடத்த உள்ள பேச்சுவார்த்தை அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
இதற்கிடையே, ஜூன் 12-ம் தேதி சிங்கப்பூரில் அமெரிக்க அதிபர் டிரம்ப் – வட கொரிய அதிபர் கிம் ஜாங் அன் சந்திப்பு நடக்கவுள்ளது இந்நிலையில், வடகொரியா அணு ஆயுதங்களை திருப்பித்தர முன்வந்தால் அந்த நாட்டுக்கு தேவையான நிதியுதவி செய்ய்ப்படும் என அமெரிக்க வெளியுறவு துறை செயலாளர் மைக் பாம்ப்யோ தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக மைக் பாம்ப்யோ கூறுகையில், வடகொரியா தங்களிடம் உள்ள அணு ஆயுதங்களை திருப்பித்தர முன்வரவேண்டும். அப்படி செய்யும் பட்சத்தில் அந்த நாட்டுக்கு தேவையான பொருளாதார உதவிகளை நாங்கள் செய்வோம் என தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply