அனைவருக்கும் சமமான அபிவிருத்தித் திட்டங்களை அரசாங்கம் முன்னெடுக்கும்

அரசாங்கம் அனைவருக்கும் சமமான அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்கும் என நிதி மற்றும் ஊடக அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.மாத்தறை நூபே பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.

வீதி விபத்துக்களினால் தாய் அல்லது தந்தையை இழந்த குடும்பங்களின் பிள்ளைகளுக்கு புலமைப்பரிசில் வழங்குவதற்காக இந்த நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

வீதிப் பாதுகாப்பு தொடர்பான தேசிய சபை ஒழுங்கு செய்துள்ள இந்த நிகழ்ச்சித் திட்டம் நேற்று முதல் நாடு பூராகவும் அமுல்படுத்தப்பட்டுள்ளதுடன் நேற்றைய தினம் 14 சிறுவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply