ஐரோப்பிய நாடொன்றில் பெருமளவு இலங்கையர்களுக்கு தொழில்வாய்ப்பு

Wednesday, July 2nd, 2025 at 7:21 (SLT)

இத்தாலியில் பெருமளவு இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்பு பெற்றுக்கொள்ள வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இத்தாலியில் 500,000 ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் அல்லாத புலம்பெயர் தொழிலாளர்களை பணிக்கமர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க >>>

இறுதி நாட்களை நோக்கி நகரும் தேசபந்துவின் பதவி காலம்

Wednesday, July 2nd, 2025 at 7:14 (SLT)

பதவி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோனுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை விசாரிக்கும் உயர் மட்ட குழு, தமது சாட்சியப் பதிவுகளை நிறைவு செய்துள்ளது.இந்த நிலையில், அவர், நிரந்தரமாக பதவியில் இருந்து நீக்கப்படுவாரா என்று தீர்மானிக்கும் செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மேலும் வாசிக்க >>>

கிண்ணியாவில் கோழி இறைச்சி கடைகள் சுற்றிவளைப்பு

Wednesday, July 2nd, 2025 at 7:08 (SLT)

திருகோணமலை மாவட்ட கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர்.ஏ.எம்.எம். அஜித் அவர்களின் வழிகாட்டலில் SPHI மற்றும் பொதுச் சுகாதார பரிசோதகர்களினால் கிண்ணியாவில் சில கோழி இறைச்சி கடைகள் சுற்றிவளைப்புக்கு செவ்வாய்க்கிழமை (01) உட்படுத்தப்பட்டது.

மேலும் வாசிக்க >>>

போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட கணவனும், மனைவியும் கைது

Wednesday, July 2nd, 2025 at 7:02 (SLT)

போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கணவனும், மனைவியும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள், செவ்வாய்க்கிழமை (1) வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிறைந்துறைச்சேனை பன்சால வீதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் வாசிக்க >>>

நான்காவது மீளாய்வுக்கு IMF அங்கீகாரம்

Tuesday, July 1st, 2025 at 23:32 (SLT)

இலங்கையின் கடன் மறுசீரமைப்பு தொடர்பான வேலைத்திட்டத்தின் நான்காவது மீளாய்வுக்கு சர்வதேச நாணய நிதியம் அங்கீகாரம் வழங்கியுள்ளது.  அதன் நிறைவேற்று சபை  இதற்கான அங்கீகாரத்தை வழங்கியுள்ளது.


திசைகாட்டி அரசு மக்களுக்கு பெரும் தீங்கு விளைவித்து வருகிறது:சஜித் பிரேமதாச

Tuesday, July 1st, 2025 at 23:26 (SLT)

பலவீனமான, வினைதிறனற்ற, பொய் சொல்லும், ஏமாற்றும் தற்போதைய அரசாங்கம் நாட்டு மக்களுக்கு பெரும் தீங்கு விளைவித்து வருகிறது. நேற்று திடீரென எரிபொருள்களில் விலை அதிகரிப்பைச் செய்தது.

மேலும் வாசிக்க >>>

வேட்பாளர்களுக்கு எதிராக பாயவுள்ள சட்டம் தேர்தல் ஆணையாளர் விடுத்த எச்சரிக்கை

Tuesday, July 1st, 2025 at 11:01 (SLT)

உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் போட்டியிட்ட சுமார் 2600 வேட்பாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார். தேர்தல் ஆணைக்குழுவில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

மேலும் வாசிக்க >>>

ஆகஸ்ட் 1 ஆம் திகதி முதல் அதிவேக நெடுஞ்சாலையில் Seat belt அணிவது கட்டாயம்

Tuesday, July 1st, 2025 at 10:58 (SLT)

2025 ஆகஸ்ட் 1 ஆம் திகதி முதல், அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கும் இலகுரக வாகனங்களில் அனைத்து பயணிகளுக்கும், 2025 செப்டம்பர் 1 ஆம் திகதி முதல் அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கும் அனைத்து வித வாகனங்களின் அனைத்து இருக்கைகளிலும் பயணிக்கும் பயணிகளுக்கும் ஆசனப்பட்டி அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.


சக ஊழியரால் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞன் கொ லை

Tuesday, July 1st, 2025 at 10:56 (SLT)

களுத்துறையில் மொரொன்துடுவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கோனதுவ, கவடயாகொடை பிரதேசத்தில் சக ஊழியரால் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞன் ஒருவன் கொலை செய்யப்பட்டுள்ளதாக மொரொன்துடுவ பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் வாசிக்க >>>

இலங்கை மத்திய வங்கி வௌியிட்டுள்ள தகவல்

Tuesday, July 1st, 2025 at 10:53 (SLT)

இந்த ஆண்டு மே மாதத்தில் வெளிநாட்டில் உள்ள இலங்கை ஊழியர்களிடம் இருந்து பணம் அனுப்புவது 17.9 சதவீத வளர்ச்சியைக் காட்டுவதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. அதன்படி, 2025 ஜனவரி முதல் மே வரை பெறப்பட்ட மொத்த பணப்பரிமாற்றங்கள் 3.1 பில்லியன் அமெரிக்க டொலர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க >>>

கச்சத்தீவை மீண்டும் கையகப்படுத்தவதற்கு நடவடிக்கை எடுக்க எவராலும் முடியாது : அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்

Tuesday, July 1st, 2025 at 8:27 (SLT)

” சர்வதேச சட்டத்தின் பிரகாரம் சட்டப்பூர்வமாகவே கச்சத்தீவு இலங்கைக்கு கையளிக்கப்பட்டது. எனவே, அதனை ஒருபோதும் மீள கையகப்படுத்த முடியாது” – என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.

மேலும் வாசிக்க >>>

வவுனியாவில் இடம்பெற்ற திருட்டுச் சம்பவம் தொடர்பில் மூவர் கைது

Tuesday, July 1st, 2025 at 8:24 (SLT)

வவுனியாவில் இடம்பெற்ற திருட்டுச் சம்பவம் தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் திங்கட்கிழமை (30) தெரிவித்தனர். வவுனியா, கற்குழி பகுதியில் உள்ள வீடு ஒன்றில் வசித்து வந்தவர்கள் வெளியில் சென்ற சமயம் பட்டப்பகலில் வீடு புகுந்து சிலிண்டர். லப்டொப், ரப், கைத் தொலைபேசி, தொலைகாட்சி போன்ற பெறுமதியான பொருட்கள் திருடப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க >>>

கடவுளின் எதிரிகள் பழிவாங்கப்படுவார்கள்’ : ட்ரம்ப், நெதன்யாகுவை கடுமையாக சாடும் ஈரான் மதகுரு

Monday, June 30th, 2025 at 20:29 (SLT)

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் மற்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆகியோர் கடவுளின் எதிரிகள் என்று அறிவித்து, அவர்களுக்கு எதிராக ஈரான் மதகுரு அயதுல்லா மகரேம் ஷிராசி பத்வா பிறப்பித்துள்ளார். பத்வா என்பது மத குருக்களால் வழங்கப்படும் மத தீர்ப்பு என்று அழைக்கப்படுகிறது. மேலும், “ட்ரம்ப் மற்றும் நெதன்யாகு சந்தேகத்திற்கு இடமின்றி பழிவாங்கப்படுவார்கள்.” என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

பிணைக் கைதிகளை விடுவிக்க வேண்டும்: ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு ட்ரம்ப் வலியுறுத்தல்

Monday, June 30th, 2025 at 20:26 (SLT)

காசா விவ​காரத்​தில் இஸ்​ரேல் – ஹமாஸ் தீவிர​வா​தி​கள் இடை​யில் போர் நிறுத்​தம் ஏற்பட வாய்ப்​புள்​ளது. பிணைக் கைதி​களை ஹமாஸ் விடுவிக்க வேண்​டும்’’ என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரி​வித்​து உள்​ளார்.

மேலும் வாசிக்க >>>

செம்மணி தொடர்பில் நீதியான விசாரணை உறுதி; கார்பன் பரிசோதனைக்கான ஆய்வுகூடத்தை கோரியுள்ளோம் : அமைச்சர் பிமல்

Monday, June 30th, 2025 at 10:22 (SLT)

செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பில் நீதியான விசாரணை நடத்துவோம் என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் தொடர்பில் கருத்துரைக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

மேலும் வாசிக்க >>>