சங்கு, சைக்கிள் கூட்டணி மற்றும் இலங்கை தமிழ் அரசுக் கட்சி ஆகிய தரப்புக்கள் உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் ஆதரவு கோரின : டக்ளஸ் தேவானந்தா

Thursday, June 5th, 2025 at 8:38 (SLT)

சங்கு, சைக்கிள் கூட்டணி மற்றும் இலங்கை தமிழ் அரசுக் கட்சி ஆகிய தரப்புக்கள் தம்மை தொடர்பு கொண்டு உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் ஆதரவு கோரியதாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

மேலும் வாசிக்க >>>

குண்டுகள் செயலிழக்கச் செய்வதால் யேர்மனி கொலோன் நகரில் 20 ஆயிரம் பேர் வெளியேற்றம்

Wednesday, June 4th, 2025 at 20:48 (SLT)

யேர்மனியில் இரண்டாம் உலகப் போரின் குண்டுகள் செயலிழக்கச் செய்யப்பட்டதால், கொலோனில் (கேளின்) 20,000 பேர் வெளியேற்றப்பட்டனர். இரண்டாம் உலகப் போரின் மூன்று குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, நோட்ரைன் வெஸ்பாலியாவின் மேற்கு நகரமான கோலோனின் மையத்தில் உள்ள கட்டிடங்களிலிருந்து மக்கள் வெளியேற்றப்பட்டனர். இந்த நடவடிக்கை நகரத்தில் இதுவரை இல்லாத மிகப்பெரிய நகர்த்தலாகும்.

மேலும் வாசிக்க >>>

ஐக்கிய மக்கள் சக்திக்கு சஜித் தலைவராக இருக்கும் வரை மு.கா ஆதரவை வழங்கும் : ஹக்கீம்

Wednesday, June 4th, 2025 at 20:40 (SLT)

சஜித்தின் தலைமை தொடர்பாக ஏதேனும் சிக்கல் இருந்தால், அதை முதலில் ஐக்கிய மக்கள் சக்திக்குள் தீர்க்க வேண்டும். ஐக்கிய கூட்டணியில் ஒரு பங்காளிக் கட்சியாக, அவர் அதன் தலைவராக இருக்கும் வரை முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவை வழங்கும். என தேசிய முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

இலங்கைக்கு 12 மில்லியன் ரூபா பெறுமதியான உயர் தர கண்காணிப்பு ட்ரோன்கள்

Wednesday, June 4th, 2025 at 20:37 (SLT)

இலங்கையின் கடல்சார் பாதுகாப்பு முயற்சிகளை ஆதரிக்க, அவுஸ்திரேலிய அரசாங்கம் உயர் செயல்திறனுடைய ஒரு Stabicraft ரக ரோந்துப் படகை வழங்கியுள்ளதுடன் 12 மில்லியன் ரூபா பெறுமதியான உயர் தர கண்காணிப்பு ட்ரோன்கள், கடல் கண்காணிப்பு உபகரணங்களையும் வழங்க திட்டமிட்டுள்ளது.

மேலும் வாசிக்க >>>

ஆற்றில் மிதந்த சடலத்தை மீட்க சென்றவர் பலி

Wednesday, June 4th, 2025 at 12:33 (SLT)

வாரியபொல ஆற்றில் மிதந்த சடலத்தை மீட்க வாரியபொல ஆற்றின் நடுப்பகுதிக்கு நீந்தி சென்ற ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போனதாக வாரியபொல பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மேலும் வாசிக்க >>>

தென்கொரியாவின் புதிய ஜனாதிபதி பதவியேற்றார்

Wednesday, June 4th, 2025 at 12:31 (SLT)

தென்கொரிய ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற லீ ஜே-மியுங், ஜனாதிபதியாக பதவியேற்றுள்ளார். சியோலில் உள்ள தேசிய சபையில் அவர் பதவியேற்றதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும் வாசிக்க >>>

பேனா வடிவில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் ஒருவர் கைது

Wednesday, June 4th, 2025 at 12:28 (SLT)

பேனா வடிவில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் களுத்துறை குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகளால் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். களுத்துறை குற்றத்தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், பாணந்துறை ஹொரேத்துடுவ பாலம் அருகே சந்தேகத்திற்கிடமான முறையில் இருந்த ஒருவரை நேற்று மாலை சோதனை செய்தனர்.

மேலும் வாசிக்க >>>

புதிய ஏர்பஸ் A330-200 விமானம் இலங்கையை வந்தடைந்தது

Wednesday, June 4th, 2025 at 12:26 (SLT)

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸில் இணையும் புதிய ஏர்பஸ் A330-200 எனும் விமானம் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளது.இந்த விமானம் இன்று (04) காலை பிரான்சின் பாரிஸிலிருந்து இலங்கைக்கு வந்துள்ளது.

மேலும் வாசிக்க >>>

புலமைப்பரிசிலை தற்போது இரத்து செய்ய திட்டமில்லை : ஹரிணி அமரசூரிய

Wednesday, June 4th, 2025 at 12:23 (SLT)

ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசிலை இரத்து செய்வது குறித்து அரசாங்கம் இன்னும் முடிவு செய்யவில்லை என்று பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

அரசாங்கத்திடம் ஆறு கேள்விகளை முன்வைத்த சஜித்

Tuesday, June 3rd, 2025 at 18:17 (SLT)

சீனி உற்ப்பத்தி நிறுவனம் தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினைகள் சம்பந்தமாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் கைத்தொழில் அமைச்சரிடம் இன்று (03) எழுப்பிய கேள்விகள்.

மேலும் வாசிக்க >>>

ஜனாதிபதியை சந்தித்தார் ரிச்சர்ட் மார்லஸ்

Tuesday, June 3rd, 2025 at 17:44 (SLT)

இலஞ்சம் மற்றும் ஊழலை ஒழிப்பதற்கான இலங்கை அரசாங்கத்தின் வேலைத்திட்டத்திற்கு அவுஸ்திரேலிய புதிய அரசாங்கம் பாராட்டியது.மேலும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் அவுஸ்திரேலிய பிரதிப் பிரதமரும் பாதுகாப்பு அமைச்சருமான ரிச்சர்ட் மார்லஸுக்கும் (Richard Marles) இடையிலான கலந்துரையாடல் செவ்வாய்கிழமை (03) அன்று முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.

மேலும் வாசிக்க >>>

பிள்ளையானின் மட்டக்களப்பு அலுவலகத்தில் கண்டெடுக்கப்பட்ட சாட்டிலைட் தொலைபேசி , மொபைல் போன்கள்

Tuesday, June 3rd, 2025 at 17:41 (SLT)

பிள்ளையான் என்று அழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தனின் மட்டக்களப்பில் உள்ள அலுவலகத்தில் குற்றப் புலனாய்வுத் துறை (CID) மற்றும் சிறப்பு அதிரடிப்படை (STF) ஆகியவற்றின் மேற்பார்வையின் கீழ் விசாரணைகள் நடந்து வருகின்றன.

மேலும் வாசிக்க >>>

மனைவியின் தலையுடன் பொலிசில் சரணடைந்த கணவன் வவுனியாவில் சம்பவம்

Tuesday, June 3rd, 2025 at 17:39 (SLT)

தனது மனைவியை கொலை செய்ததாக சந்தேகிக்கப்படும் கணவர் மனைவியின் தலையுடன் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ள கொடூர சம்பவம் வவுனியா புளியங்குளம் பகுதியில் இடம்பெற்றுள்ளது. இன்று காலை புளியங்குளம் பொலிஸ் நிலையத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்ற இளம் குடும்பஸ்தர் ஒருவர் கையில் இருந்த பொலித்தீன் பையினுள் தனது மனைவியின் தலை இருப்பதாகவும் அவரை கொலைசெய்து காட்டுப்பகுதியில் எறிந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

சோகமயமாக முல்லைத்தீவு 17 பேர் நீரில் மூழ்கி உயிரிழப்பு ரவிகரன் எம்.பி சபையில் விடுத்த கோரிக்கை

Tuesday, June 3rd, 2025 at 17:35 (SLT)

முல்லைத்தீவு மாவட்டத்தில் இவ்வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் 17 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் சுட்டிக்காட்டியுள்ளார். அத்தோடு இம்மாதம் முதலாம் திகதி நால்வர் நீரில் மூழ்கி உயிரிழந்தமையால் முல்லைத்தீவு மாவட்டமே சோகமயமாக காணப்படுவதாகவும், அதில் மூவர் பாடசாலை மாணவர்கள் எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் வாசிக்க >>>

பொதுமக்களின் பாதுகாப்பிற்காக முப்படைகளை அழைக்க ஜனாதிபதி உத்தரவு

Tuesday, June 3rd, 2025 at 17:32 (SLT)

பொதுமக்களின் பாதுகாப்பிற்காக நாடு முழுவதும் முப்படைகளை அழைக்க ஜனாதிபதி சிறப்பு உத்தரவை பிறப்பித்துள்ளார்.பொது பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் 40வது அத்தியாயத்தின் பிரிவு 12ன் கீழ் வழங்கப்பட்ட அதிகாரங்களின்படி அவர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார் என்று சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன இன்று (03) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

மேலும் வாசிக்க >>>